சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 18, 2011

பருவ காலத்தில் சபலப்பட்டு வாங்கியது


அது புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடி எனது பெரியம்மா வீடு. நான் கோடை விடுமுறைக்காக செல்லும் வீடு. அங்கு என்னுடன் வயதையொத்த என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டு பையன் முத்துவீறு. நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலராக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது. வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம்.

அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். நாங்கள் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து என் பெரியம்மாவிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்..
அந்த பக்கம் நடைபெறும் கரகாட்டத்தில் கவர்ச்சி மிகத்தாராளமாக வே இருக்கும். அப்பொழுது தான் விடலைப்பருவம் என்பதால் அதைப் போன்ற கரகாட்டகங்ககளை கான்பதர்ர்காகவே செல்வோம்..

அந்த சிற்றூரில் திருவிழா நாங்கள் கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை உக்ஷார்பத்தினி ரெய்டு (அது சென்னையில் எங்கள் பகுதியில் உள்ள சங்கேத வார்த்தை) செய்யலாம் என்று பார்த்து அவளை சரி செய்யலாம் என்று, அங்ககிருந்து சிக்னல் பாஸ் செய்தால் அந்த பக்கம் இருந்தும் வந்தது. சரி என்று அருகில் சென்று தயங்கி கொண்டே மிக மெல்லிய குரலில் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள்.

முத்துவீறுவுக்கு இந்த செயல்களை எல்லாம் பார்த்தவுடன் நடுக்கம் ஏற்பட்டது. என்னிடம் வந்து வாடா நாம் வீட்டிற்கு செல்வோம் என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ என்றேன். முத்துவீறு சபலப்பட்டான் கூடவே பயமும் அவனுக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது கையால் சைகை செய்வது இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.

கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளிஏறினாள்.. முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். அவளை பின் தொடர்ந்தன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில என்னைப்பற்றியும் முத்துவீறுவைப்பற்றியும் கூறிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தன்.
ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் .

அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையறினாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உக்ஷராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த டேம் நோக்கி நகர்ந்தன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் நாங்கள் கணக்கு செய்ய துவங்கியதிலிருந்து வயல்காட்டிற்குள் உள்ளதுவரை அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.

அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குல்லேயே மண்டி போட்டு செல்ல ஆரம்பித்தோம் . விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை வரை வந்திருந்தோம் . பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம் . இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .

அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீர்று, அதேபோல் திருவிழா ஆனால் வேறொரு சிற்றூர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். ‘என்னடா முத்துவீறு ரெடியா’ என்று கேட்டு திரும்பிப் பார்த்தேன் . அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

(இது ஒரு மீள் பதிவு. பதிவு எழுதத்துவங்கிய காலத்தில் எழுதப்பட்ட பதிவு. இப்பொழுது அதிக பதிவர்கள் படிப்பதால் மறு பதிவு செய்கிறேன்.)

ஆரூர் முனா செந்திலு




7 comments:

  1. சின்ன வயசுல விளையாடியிருக்கிங்க

    ReplyDelete
  2. நல்லா தான் தேஞ்சிருச்சு போல

    ReplyDelete
  3. /// veedu said...

    சின்ன வயசுல விளையாடியிருக்கிங்க ///

    பின்ன, ஒரே விளையாட்டு தான் போங்க

    ReplyDelete
  4. /// suryajeeva said...

    நல்லா தான் தேஞ்சிருச்சு போல ///

    முட்டி தான் தேஞ்சிடுச்சி. ஆனால் அப்ப மருந்து தேச்சிவிடத்தான் ஆள் இல்ல.

    ReplyDelete
  5. பிஞ்சிலேயே பழுத்த பழம்...

    ReplyDelete
  6. // இப்பொழுது அதிக பதிவர்கள் படிப்பதால் மறு பதிவு செய்கிறேன் //

    அப்பூடியா...

    ReplyDelete
  7. /// Philosophy Prabhakaran said...

    பிஞ்சிலேயே பழுத்த பழம்... ///
    தம்பி இது வெடிச்ச பழம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...