சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்

ஆப்ரிக்க கடத்தல்காரர்களிடம் தனுஷூம் ஜெகனும் மாட்டி பசியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது பனிமலர் ஜெகனுக்கு சோறு போடு அப்படின்னு சொல்லுவார். ஒரு நிமிஷம் பதறிட்டேன் அடடா மயக்கம் என்ன, 3 வரிசையில் அடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் தனுஷூக்கு என்று.


ஆனால் அது கற்பனை காட்சி என்ற போது அப்பாடா என்று இருந்தது. அது போல் டிரெய்லரில் சிறுத்தையிடம் மாட்டிக் கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது. சரியான ஆக்சன் பேக் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதுவும் கற்பனை என்னும் போது அடச்சே என்று ஆகிவிட்டது.

இப்படி இரண்டு மனநிலையும் கலந்த விதத்தில் தான் படம் அமைந்துள்ளது. மிகச்சிறப்பான படம் என்று கொண்டாடவும் முடியாது. மொக்கைப்படம் என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது. கொஞ்சம் மாஸ், நிறைய கிளாஸ் கலந்த படம் இது.


படத்தின் முதல், மிகப்பெரும், ஆகச்சிறந்த பலம் சந்தேகமில்லாமல் ஏ.ஆர்.ரகுமான் தான். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டுப் பழகியிருந்ததால் பார்க்கும் போது அதற்கு ஏற்ப கொஞ்சம் கூட குறையில்லாமல் படமாக்கப்பட்டு இருக்கிறது.

தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் மீனவர் மரியான். அவர் அதே கிராமத்தில் வசித்து தன்னுடன் மீன்பிடித்து வரும் சலீம்குமாரின் மகள் பனிமலரை(பார்வதி) காதலிக்கிறார். அதே ஊரில் உள்ள ரவுடியிடம் சலீம் கடன் வாங்கியிருப்பதால் பணத்திற்கு பதில் பனிமலரை திருமணம் செய்து கொடுக்கும்படி ரவுடி கட்டாயப்படுத்துகிறார்.


அவரிடம் சண்டை போடும் தனுஷ் பணத்திற்காக இரண்டு ஆண்டுகள் கான்ட்ராக்ட்டில் ஆப்பிரிக்காவில் உள்ள சூடானுக்கு செல்கிறார். இரண்டு வருடம் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரம் அங்குள்ள கொள்ளையர்களால் தனுஷூம் அவருடன் வேலை பார்த்து வரும் ஜெகனும் கடத்தப்படுகிறார்கள்.

தனுஷ் அந்த கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்தாரா, பார்வதியை கைப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

தனுஷ் நடிப்பில் எங்கோ எங்கோ எங்கெங்கோ போய் விட்டார். இனி அவர் நடிப்புக்கு தீனி கொடுக்க இயக்குனர் ரூம் போட்டு யோசித்து தான் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் போல. இனிமேல் தனுஷை பாராட்டவெல்லாம் வேண்டாம். வந்தார் சென்றார் என்றாலே அது சிறந்த நடிப்பு என்றே பொருள்படும்.


பனிமலராக பார்வதி, பூ படத்தில் நடித்த சாயலோ வசன உச்சரிப்போ அழுகையோ ஒரு துளி கூட இந்த படத்தில் எட்டிப் பார்க்கவில்லை. எல்லாமே புதுசா இருக்கு. இது போல் நடிப்பில் வித்தியாசம் காட்டும் கதாநாயகிகள் தான் தமிழுக்குத் தேவை. ப்ராம்ப்ட் கொடுத்து நடிக்கும் மைதா மாவுகள் அல்ல.

சலீம் என்ற மகா கலைஞனை சும்மா வெறுமனே டம்மி கதாபாத்திரத்தை கொடுத்து வீணடித்திருக்கிறார்கள். அது போல் அவருக்கு தலைவாசல் விஜய்யின் டப்பிங்கும் பொருந்தவில்லை. ஒருவேளை இதற்கு முன்பு நான் அவரின் சொந்த குரலை கேட்டு கேட்டு பழகியதால் இருக்கலாமோ என்னவோ.

உமா ரியாஸ் மெளனகுரு படத்தில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருப்பார். ஆனால் இந்த படத்தில் நடிப்பது போல் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் காணமல் போயிருப்பார். மேக்கப்பும் வாயை சுழித்துக் கொண்டு தப்புத்தப்பாக நெல்லை ஸ்லாங் பேசுகிறேன் என்று கொன்று எடுக்கிறார்.

படத்தில் காமெடியன்கள் அறியப்படுபவர்கள் அப்புக்குட்டியும் ஜெகனும். ஆனால் இருவருமே படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் வந்து செத்துப் போகிறார்கள். அதற்கு அவர்கள் எதற்கு என்று தான் புரியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி சொல்லிக் கொள்வது போல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மொத்தத்தில் படம் மிகச்சிறந்த வெற்றியும் பெறாது. படுதோல்வியும் கிடையாது. தனுஷூக்கு இந்த படத்திற்காக சில விருதுகள் உறுதி. ஆவரேஜ் படம். ஒரு முறை பார்க்கலாம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : எங்கள் ராஜகுரு அறிவுரையின்படி இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது. யார் அந்த ராஜகுருன்னு எல்லாம் கேக்கப்பிடாது. முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கங்க.
 

39 comments:

  1. பூ பார்வதிக்கும் தனுஷிற்க்கும் ....................................... காட்சிகள் உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. அடங்கவே மாட்டியா மணி, ஒரு லிப் கிஸ் உண்டு போதுமா

      Delete
  2. எங்கோ எங்கோ எங்கெங்கோ போய் விட்டார்... நீங்களும் - ரசனையில்....!

    ரா..ரு - யாரு ? - மெ.ப...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். சிவா கிடையாது.

      Delete
  3. உங்களின் ஒரே ராஜகுரு வாஞ்சூர் :)

    ReplyDelete
    Replies
    1. அவரு ராஜதுரோகி ஆச்சே

      Delete
  4. ஓக்கே ரைட்டு. சினிமா விமர்சனமென்பதால் இந்த டெம்ப்ளேட் கமெண்ட்

    ReplyDelete
    Replies
    1. ரைட்டுக்கு ரைட்டு தான் பதில் கமெண்ட்டு

      Delete
  5. இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது.// புரியல மச்சி...

    ReplyDelete
    Replies
    1. எப்ப கிளம்பினேன், எந்த திரையரங்கம், எவ்வளவு கூட்டம் இந்த விவரங்கள்

      Delete
  6. ஓ... நீ சினிமாவிற்கு போன கதையா?// ரைட்டு..

    ReplyDelete
    Replies
    1. இப்ப புரிஞ்சதா மச்சி

      Delete
  7. அழக்கான , எளிய விமர்சனம் .

    எனது விமர்சனம் படிக்க :

    மரியான் : விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா, தங்களின் விமர்சனத்தையும் படிக்கிறேன்.

      Delete
  8. எனக்கு படம் பிடிசிருக்கு ன்னே, வித்தியாசமான பிரமாண்டா முயற்சி, பிரமாண்டம் என்பது ஒளிபதிவை சொல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரசனை என்பது மாறுதலுக்கு உட்பட்டதே

      Delete
  9. அட போங்க மாம்ஸ்...விமர்சனத்தை விட உங்க கதைதான் ரொம்ப நல்லா இருக்கும்...இந்த விமர்சனம் என்னை ஏமாத்திவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஜீவா, அதனை பஞ்சேந்தியாவில் தனி பகுதியாக போட்டு விட வேண்டியது தான்.

      Delete
  10. Thala night show pakalam nu irukan Kandipa pakavediya padama elaya nachunu oru varthaila solunga

    ReplyDelete
    Replies
    1. ஒளிப்பதிவு மற்றும் இசைக்காக கண்டிப்பாக பார்க்கலாம்

      Delete
  11. //இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது.//

    நல்ல விஷயம் ஆரூர் மூனா. வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
    Replies
    1. ஏகப்பட்ட பேரு காத்திருக்காங்கன்னு நினைக்கிறேன், இருந்தாலும் நன்றி லக்கி.

      Delete
  12. Unnga cinemakku ponna kathaiyum ernthathan nalla erukku... Innime podunga Senthil

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்

      Delete
  13. படம் ட்ரைலர் அப்பவே பார்க்க நல்ல இருந்துசு நான் திங்கள் போலன்னு இருக்கேன் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. டிரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு படத்தில் இல்லை தம்பி.

      Delete
  14. Cablet sankar dhana ungal guru?

    ReplyDelete
  15. சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். அது கேஆர்பி செந்தில் அண்ணன். ஞாயின்று நடந்த பதிவர் சந்திப்பில் பதிவெழுதுவது பற்றிய ஆலோசனைகள் சொன்னார். விமர்சனம் படிக்க வருபவர்கள் படத்தைப் பற்றி தான் படிக்கனும். நீ படத்திற்கு போன கதையை சொன்னால் படிப்பவர்கள் விரும்ப மாட்டார்கள் அதனால் படத்தை பற்றி மட்டும் எழுது என்று சொன்னார். ஆனால் மரியான் விமர்சனம் பதிவிட்டதிலிருந்து இப்பொழுது வரை படத்திற்கு போன கதையை கண்டிப்பாக எழுதுங்கள் என்று இது வரை 20க்கும் மேற்பட்ட போன்கால்கள் வந்து விட்டன. இரண்டு பின்னூட்டங்களும் ஆறு மின்னஞ்சலும் கூட. அதனால் அண்ணன் சொன்னதையும் மீறி இனி எல்லா விமர்சனங்களிலும் அதையும் எழுதுகிறேன். தனியாக கோடு போட்டு அதனை எழுதுகிறேன். பிடிப்பவர்கள் படிக்கட்டும், பிடிக்காதவர்கள் அதனை கடந்து விமர்சனத்திற்கு போகட்டும். கருத்துக்கு நன்றி நண்பர்களே. சாரி கேஆர்பி அண்ணே.

    ReplyDelete
  16. 8 மணி ஷோவிற்கு ஃப்ரெண்ட்டை கூப்பிட்டு இருந்தேன். ஆனால்,நான் 8.01 வரை வேலையில் மாட்டிக் கொண்டேன்.சரியென்று தியேட்டர் போனால்...டிக்கெட் இல்லை...அப்படியே வண்டியை திருப்பி...கோயம்பேடு போய்..இப்படி தானே சினிமா போன கதை...எப்பூடி.,,,

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆனா அது கற்பனை இல்லீங்க அமுதா மேடம். திட்டமிடுதல் இல்லாம ஒவ்வொரு படமும் இப்படி டென்சனோடு போய் பார்க்கிறது தான் வழக்கம்.

      ஆனா நீங்க சினிமா விமர்சனங்களை சரியா பாலோ பண்றீங்கன்னு தெரியுது.

      Delete
  17. இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது. #### ROMPA NANDRI RAJA GURUVUKKU :) Good Review....:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் குமார்

      Delete
  18. எனக்குப் பிடித்ததே நீங்கள் படத்துக்குப் போன கதை தான். என்னை போன்றவைகளுக்கு அதைத் தனியாக ஒரு சிறு பதிவாகப் போடலாமே????

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்கிறேன் நண்பா

      Delete
  19. // அவருக்கு தலைவாசல் விஜய்யின் டப்பிங்கும் பொருந்தவில்லை. //

    முற்றிலும் உண்மை.. அதுவும் அவரு ஏதோ ரகுவரன் மாதிரி பேச முயற்சி பண்ணியிருக்காரு.. ஏன்னு தெரியலே..

    அண்ணே, படம் மொக்கையா இருந்தாலும் நீங்க படத்துக்கு போன கதை படிக்க சுவாரஸ்யமா இருக்கும்.. உங்க முடிவை மறுபரிசீலனை செய்ததற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி. சீக்கிரம் உடல்நலம் தேறி சென்னை பதிவர் சந்திப்புக்கு வாங்க.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...