சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, August 21, 2013

பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்

இதுவரை வர உறுதி செய்துள்ளவர்களின் பட்டியல் இன்னும் அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல. இதில் எந்த பதிவரின் பெயர் விடுபட்டிருந்தாலும் அதற்கு என் கவனமின்மை தான் காரணம் பதிவர்கள் என்னை மன்னித்து தெரியப்படுத்தினால் சேர்த்து விடுகிறேன்.


தமிழ்வாசி பிரகாஷ், கோகுல் மனதில் கோகுல், திண்டுக்கல் தனபாலன், சதீஷ் சங்கவி, கோவை நேரம் ஜீவா தங்களின் கவனத்திற்கு : இந்த பட்டியலில் உள்ளவர்களில் தங்கள் பகுதியில் இருந்து வருபவர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.

இது இரண்டாம் கட்ட பட்டியல் மட்டுமே, இன்னும் வருவதாக வாய்வழி செய்தியாக சொல்லியிருப்பவர்கள் இன்னும் நூறு பேருக்கு மேல் உள்ளனர். அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வரவில்லை. வந்ததும் அவர்களின் பெயரையும் இணைத்து விடுவேன்.

கடைசி செய்தி : இதில் பெயர் விடுபட்டு இருப்பின் தவறை பொருட்படுத்தாமல் தெரியப்படுத்துங்கள். நான் இணைத்து விடுகிறேன். சனி காலை முதல் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதிவர்கள் குறிப்பிட்டால் நான் அவர்களுக்கு தங்கும் அறையின் விவரங்களை அனுப்பி விடுகிறேன்.

பதிவர்களின் பட்டியலை பார்க்க இங்கே அழுத்தவும்

-------------------------------------

பதிவர் சந்திப்பு திருவிழாவின் அழைப்பிதழ்


நன்றி

ஆரூர் மூனா செந்தில்
பதிவர் ஒருங்கிணைப்புக் குழு

டிஸ்கி : நமது தங்கும் அறையின் சாவி மற்றவர்களின் கைக்கு சென்று விடக்  கூடாது அல்லவா. அதற்கு ஒரு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தங்கும் அறையின் சாவி வாங்க வேண்டுமென்றால் லாட்ஜின் வரவேற்பறையில் ஒற்றை கண்ணுடன் ஒத்தை சோபாவில் அமர்ந்திருக்கும் நபரிடம் சென்று நீங்கள் "பிளாக்கர்" என்று சொல்ல வேண்டும். அதற்கு அவர் "பனை மரத்துல தென்னங்காய் இருக்கு"ன்னு சொல்லுவார். அதற்கு நீங்கள் "தென்னை மரத்துல பனங்காயா" என்று கேட்டால் சாவியை கொடுத்து விடுவார். நீங்கள் அறைக்கு சென்று விடலாம். # என்ன புரியலையா ஹியூமர் ஹியூமர்.

36 comments:

  1. ஏற்பாடுகள் எல்லாமே கன கச்சிதமா நடந்துட்டு இருக்குது போல! சிறப்பாக செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!


    கடைசி ஜோக் சூப்பர் :))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவன்

      Delete
  2. கொண்டாட்டம் ஆரம்பம்... வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். தங்கள் பக்கம் இருந்து வரும் பதிவர்களின் பட்டியல் இன்னும் வரவேண்டியிருக்கிறது.

      Delete
  3. கோட் வேர்டு எல்லாம் போட்டு கலக்குறேள் போங்கோ.. பதிவர் திருவிழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராபர்ட் நீங்க இந்தியாவுல தான் இருக்கீங்களா, இருந்தா பதிவர் சந்திப்புக்கு வரலாமே.

      Delete
    2. திரை கடலோடி திரவியம் தேட துபாய்க்கு வந்துட்டதால, திருவிழாவுக்கு வரமுடியாத நிலை நண்பா ... அதனால நீங்க ஜமாய்ங்க .....

      Delete
  4. அந்த ஒத்தை கண்ணு ஆசாமி யார்ன்னு எனக்கு தெரியும்!!

    ReplyDelete
    Replies
    1. ரகசியத்தை வெளியில் சொல்லி விடாதீர்கள் மேடம்

      Delete
  5. பாஸ், பதிவர்கள் சாப்பிட்ட பிறகு இலையை எப்படி மடிக்கனும்னு ரூல்ஸ் எல்லாம் கரெக்டா சொல்லிட்டீங்களா???

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டு அறையின் வாசலில் இது பற்றி விளக்கமாக போர்டு வைத்து விடுவோம் தலைவரே

      Delete
  6. Neengal seyyum samayal taste pannura engaukku idamillaya...Idhayathil idamirukku entra vaarthai vendam

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் பந்தியிலேயே இடமிருக்கு நண்பா. வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக.

      Delete


  7. தம்பி . . .


    சாப்பாடு சைவமா அசைவமா . . . ?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே அசைவம், சைவம் ரெண்டுமே இருக்கு. பிரியாணி ரகம் ரகமாய் இருக்கு.

      Delete
  8. My name is Umamaheswari . Blog name is Abayaaruna I have registered with Ms sasikala, and she has confirmed . Please include my name.

    ReplyDelete
    Replies
    1. விடுபட்டதற்கு சாரி. இப்பவே சேர்த்து விடுகிறேன்

      Delete
  9. நானும் வர்றேன்...
    என்னையும் ஆட்டையில சேத்துக்கோங்க நண்பர்களே...

    - அன்புடன்
    - மலர்வண்ணன்
    http://www.malarinninaivugal.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. சேர்த்து விடுகிறேன் நண்பரே

      Delete
  10. வாழ்த்துக்கள் நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. மாமா, இந்தியாவில் அந்த சமயம் இருந்தால் கலந்து கொள்ளலாமே

      Delete
  11. உங்களை எல்லாம் கண்டா பொறாமையா இருக்கு. வாழ்த்துக்கள், இவ்வாண்டும் என்னால் வர இயலவில்லை, நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாய் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்பா குடி, கடி, இடி, பிடி, முடி, தடி எல்லாவற்றுக்கும் இத்யாதி இன்ன இன்ன வரைமுறை வகுத்து சொல்லிடுங்கோ, அப்புறம் களோபரம் ஆகி விட போவுது. அதை கிளப்பவே ஒரு கூட்டம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வத்திகுச்சி எப்படி இருக்கிங்க , பத்த வைக்க பாக்கிறிங்களா. அதெல்லாம் நடக்காது நண்பா .

      Delete
    2. நன்றி இக்பால் செல்வன், நன்றி யுவனிகா

      புத்தம் சரணம் கச்சாமி

      Delete
    3. சென்ற ஆண்டே எதிர்பார்த்தேன் இக்பால் உங்களை. இந்த ஆண்டும் ஏமாற்றி விட்டீர்கள்.

      Delete
    4. "புத்தம் சரணம் கச்சாமி"
      இது சொல்லிக்கொண்டுதான் சிங்களர்கள் ஈழத்தில் தமிழர்களை அழித்தார்கள் .
      Why it is said buddham sharnam gachchami?
      Answer : It means 'Go to Buddha's Sharnam or feet.' It is said to mean something like "surrender yourself to Lord Buddha."
      சிங்களர்கள் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு ஈழத்தில் உயிர் பலி.

      Delete
    5. வேணாம்னு சொன்னீங்கன்னா வேணாம், அவ்வளவு தான் வாழ்க்கை

      Delete
  12. பதிவர் சந்திப்பு நடக்கும் ஹாலில் நுழைய எதாவது கேள்வி பதில் உள்ளதா?டிஸ்கியில் சொன்னது போல..

    ReplyDelete
    Replies
    1. அரங்கின் உள்ளே நுழைய "இஸ்கலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்புர கொய்யா" என்று சொல்ல வேண்டும்.

      Delete
    2. அப்போ உணவருந்தும் அறைக்கு போக வேண்டுமென்றால் "லோலாக்கு டோல் டப்பிமா " என்று பாஸ் வோர்டாக வைத்துக் கொள்ளலாமா ?

      Delete
    3. இல்லீங்க அங்கு செல்வதற்கு ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரகுதாத்தா என்று சொல்லவேண்டும்

      Delete

  13. Olipporu (U)
    the film is about the youth who are active on the social networking sites and blogs. These youngsters get together to put up an event in Bangalore. The cordinator of this event is a blog writer whose blog Olipporali is very famous.On the day of the event all have gathered except the cordinator himself! This puts the other bloggers in tension as now one is aware of Olipporali`s whereabouts. The rest story unfolds to make the film engaging

    ReplyDelete
  14. சென்ற தடவை நேரடி ஒளி, ஒலிபரப்பு இருந்தது போல்
    இந்த தடவையும் ஒளி/ஒலிபரப்பு செய்யப்படுமென நினைக்கிறேன்.

    பதிவர்கள் பெரும் திரளாக கூட்டம் கூட்டமாக வருவதைக் கண்டால்
    அன்று வட பழனி சிக்னலில் டிராபிக் ஜாம் ஆகி விடும்போல் இருக்கிறதே?

    சுப்பு ரத்தினம் என்கிற
    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா, இந்த தடவையும் நேரடி ஒளி / ஒலிபரப்பு உண்டு

      Delete
  15. சேகுவரா பொன்மொழியை எழுதிவிட்டு ....? குறைந்தபட்சம் அவரது படத்தையேனும் முதலில் போட்டிருக்கலாம் ! சாமான்யர்கள் தலைவர்களை நம்புவதை விடுத்துத் தன்னை- தங்களை நம்பிக் களத்தில் இறங்கினால்தான் தமிழகத்தின்-இந்தியாவின் தலைவிதி மாறும்

    ReplyDelete
  16. மந்திரி ஏற்பாடுகள் எல்லாமே கன கச்சிதமா இருக்க வேண்டு
    கதவை திறந்தவுன் தாக்குதல் தொடங்க வேண்டும் - உணவு அறைக்கு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...