சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

ஒரு பேமிலி எண்டர்டெயினர்னா என்ன வேணும், வயசுக்கு வந்த பொண்ணுங்க குடும்பத்துடன் அரங்கிற்கு போய் அமர்ந்தால் முகம் சுளிக்கவைக்காமல், தந்தைக்கு மகள் பக்கத்தில் இருந்தால் நெளிய வைக்காமல் இருக்க வேண்டும். 


நான் என் பதினைந்து வயதில் என் அப்பா, பெரியப்பா, அக்காக்கள், மாமன் பொண்ணுகள், அம்மா, பெரியம்மா, புதிதாய் திருமணமான அக்கா, அத்தான் சகிதம் பெரிய குடும்பமே திருவாரூர் தைலம்மை அரங்கிற்கு பெரிய குடும்பம் என்ற படம் பார்க்க சென்றிருந்தோம்.

படத்தின் காட்சிகளை பார்த்து பெரியப்பா நெளிய எங்கப்பா என்னை உட்டு ராவ பெரிய ஏழரையாகி விட்டது. குடும்பத்தினர் எல்லோரும் என்னை காறித்துப்பினர். ஏனென்றால் குடும்பமே ஆசை படத்துக்கு போகனும் என்று சொல்ல நான் தான் வற்புறுத்தி இந்த படத்திற்கு அழைத்து வந்தேன். எல்லாம் என் கெரகம்.


உதயநிதிக்கு அது சரியாக புரிந்திருக்கிறது. தன்னால் ஆக்சனோ, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடியோ, ரப்பர் டான்ஸோ, எக்ஸ்பிரசன் நிரம்பிய நடிப்போ வராது என்று தெரிந்த பின்னர் தன் வழியை பேமிலி எண்டர்டெயினர் சினிமா பக்கம் திருப்பி விட்டார். 

கண்களில் எக்ஸ்பிரசன் வராது என்று முடிவெடுத்த காட்சிகளில் ரேபன் கிளாஸை வைத்து சமாளித்தது கூட புத்தசாலித்தனமான ஐடியா தான்.


படம் அந்த வகையில் வெற்றிப்படம் தான். இன்று அரங்கிற்கு வந்த பெரும்பாலான காதலர்கள், சில குடும்பத்தினர் கைதட்டி ரசித்து சிரித்தனர். இந்த லெவல் படத்திற்கு இது போதும்.

படத்தின் கதை என்னன்னா, அக்காவின் குடும்ப பிரச்சனையை தீர்க்க மதுரையைச் சேர்ந்த ஆஞ்சநேய பக்தரான உதயநிதி கோவை வருகிறார். அங்கு நயன்தாராவை சந்தித்து காதல் கொள்கிறார். சில பல கலாட்டாக்களுக்கு பிறகு காதல் கைகூடுகிறது.


குடும்பத்தினரின் எதிர்ப்பை சமாளித்து காதலியை கைப்பிடிப்பதே படத்தின் கதை. ஆனால் சரியான விகிதத்தில் எல்லாவற்றையும் கலந்து சொன்ன விதத்தில் இயக்குனர் அசத்தியிருக்கிறார். சில நெருடல்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.

எனக்கு ஒரு திறமை உண்டு. அது எதுலனா சமையலில். நான் பெரிய கை தேர்ந்த சமையற்காரன் கிடையாது. பத்து வகை பதார்த்தங்களுக்கு மேல் சமைக்கத் தெரியாது. இன்னும் உப்புமாவுக்கு சரியான அளவில் தண்ணீர் ஊற்றத் தெரியாது. ஒன்னு கெட்டியாகிடும், இல்லைனா கஞ்சி மாதிரி இருக்கும்.

ஆனால் மற்ற பதார்த்தங்களில் சுவையை அடிச்சிக்கவே முடியாது. எந்த ஒரு தெரியாத வகை சமையலையும் அசத்தி விடலாம். இரண்டு மூன்று மசாலா பார்முலா, இதை புரிந்து கொண்டால் சுவையான சாப்பாட்டிற்கு நீங்கள் கியாரண்ட்டி. 

அது போல் இயக்குனருக்கு சினிமாவின் மசாலா பார்முலா கை வந்த கலையாக இருக்கிறது. எது எதை எந்த இடத்தில் வைத்தால் ரசிக்கும் படி கொடுக்கலாம் என்று தெரிந்திருக்கிறது. 

எனக்கு எப்படி உப்புமாவோ அது போல் இயக்குனருக்கு பாடல் வைக்கும் இடமும் படமாக்கும் விதமும். இன்னும் பார்முலா பழகவேண்டும். லேடீஸ் கூட தம்மடிக்க  வெளியில் கிளம்புகிறார்கள்.

உதயநிதிக்கு கண்டிப்பாக இது அடுத்த லெவல் தான். ஒரேடியாக ஐம்பதடி தாண்டிக் குதிக்காமல் ஐந்து அடியை தாண்டி குதித்து இருக்கிறார். நடனம், நடிப்பு, டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் உட்பட. ஆனால் இது பத்தாது. அடுத்த படத்திற்கு பத்து அடி தாண்டவும்.

நயன்தாரா எப்போதும் போல் அழகாக இருக்கிறார். ஆனால் சற்று முத்தலாக தெரிகிறது. முகத்தை மட்டும் தான் சொன்னேன்.  மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கு ஏக்கத்தை கொடுத்தவர் சாயாசிங் தான். ம்ம்ம். நம்மால் ஏக்கப் பெருமூச்சு மட்டும் தான் விட முடியும்.

சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் வழக்கம் போல் கஜகஜ தான். ஆனால் அடிக்கடி கண்ணாடியை நகர்த்தும் மானரிசம் கடுப்படிக்கிறது. இந்த படத்தில் மட்டும் ஐம்பது முறைக்கு மேல் பண்ணியிருப்பார். மற்றபடி காமெடி களை கட்டுகிறது. அதுவும் க்ளைமாக்ஸ்க்கு முன்பு மாத்திரை விழுங்கும் இடம் ஏஒன்.

படத்தின் துவக்கத்தில் வந்து மருத்துவமனையில் சேர்க்கும் இடத்தில் தெரிந்து விட்டது. இது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வருவது போல சந்தானமாகத்தான் இருக்கும் என. 

படத்தின் குறை என்று எனக்கு தெரிந்தது இசை தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி வெகு சுமார் தான். சரண்யா, நரேன், வனிதா, ஜெயப்பிரகாஷ் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

இது கதிர்வேலன் காதல் குடும்ப சென்ட்டிமெண்ட் நிரம்பிய காதல் படம். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

ஆரூர் மூனா

5 comments:

  1. விமர்சனம் அருமை !!!

    ReplyDelete
  2. ஒரு மட்டும் தெரிகிறது... படத்திற்கு போகும் முன் ஏதோ ஒரு மசாலா பார்முலா வெற்றி பெற்றுள்ளதென்று...! ஹா... ஹா...

    ReplyDelete
  3. லேடீஸ்கூட தம்மடிக்க வெளியே போகிறார்கள்... இப்படி பொம்பளப் புள்ளங்க பின்னால போய் என்ன பண்றாங்கன்னு பாத்தயின்னா ஒரு நேரம் போல இருக்காது. டின்னு கட்டிருவாங்க...! பாத்து சூதானமா இருந்துக்க லேய்!

    ReplyDelete
  4. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...