சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, January 30, 2011

ரயில்வே தேர்வின் லட்சணம்

நான் 12 வருடங்களுக்கு முன்பு ரயில்வேயில் அப்பரன்டிஸ் முடித்து அங்கு வேலை கிடைக்காமல் வேறு துறைக்கு சென்று விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் நுழைவு தேர்விற்கான அனுமதி சீட்டு வந்தது. சரி என்று என்று எழுத சென்றேன். ஆனால் என்ன கொடுமை பாருங்கள். நான் முடித்தது ரயில் கட்டுமான பயிற்சிக்கு. ஆனால் எனக்கு கேள்வித்தாளில் இருந்தது அதற்கு சம்மந்த மில்லாத கேள்விகள். மொத்தம் 90 கேள்விகள். அதில் பொது அறிவு சம்மந்தமாக 30 கேள்விகள், கணக்கு சம்மந்தமாக 30 கேள்விகள், மின்துறை சம்மந்தமாக 30 கேள்விகள். அவ்வளவு தான். எனக்கு பரவாஇல்லை. ஆனால் என்னுடன் என்னுடன் படித்த நண்பர்கள் ஒன்றுமே எழுதவில்லை, அவர்களுக்கு எழுதியதும் தெரிந்து விட்டது, தேர்வில் தோல்வி தான் என்று. நான் கணக்கு மற்றும் பொது அறிவு கேவிகள் அனைத்தும் சரியாக எழுதி விட்டேன். மின்துறை சம்மந்தமான கேள்விகளில் 20 சரியாக இருக்கும். இந்த லட்சணத்தில் கேள்வியை கேட்டால் மற்றவர்கள் எப்படி எழுதுவார்கள். இவர்களில் தேர்வானவர்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் எப்படி ரயில் பெட்டி செய்வார்கள். அவர்களுக்கே வெளிச்சம். அரசு துறை இப்படி உள்ளது.
வாழ்க கேள்வி தயார் செய்தவர்கள்.
செந்தில்

Thursday, January 27, 2011

இந்த அப்பாக்களுக்கும் பசங்களுக்கும் ஏன்டா ஒத்துக்க மாட்டேங்குது?

பின்னே இந்த மாதிரி காரியம் பண்ணா கொஞ்சுவாங்களா.




இந்த மாதிரி டி ஷர்ட் போட்டா அப்பாக்களுக்கு பிடிக்குமா?



இந்த மாதிரி நாய்குட்டி வளர்த்தா பிடிக்குமா.

விடுங்க பா இந்த அப்பாக்களே இப்படித்தான்
செந்தில்

Saturday, January 22, 2011

சென்னை பயங்கரம் உஷார்

நேற்று என் பழைய அலுவலகத்தின் நண்பன் அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரியும் வட இந்தியாவை சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 22. ஒரு வேலையாக சென்ட்ரல் வந்து வேலையை முடித்து மீண்டும் அலுவலகம் வர பார்க் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுஒரு பெண்மணி அவனை சைகை காட்டி அழைத்துள்ளார். அப்பொழுது மணி மாலை ஏழு. பையனும் சபலப்பட்டு அவரை நோக்கி சென்றுள்ளார். அந்த பெண்மணி அவரை ரயில்வே டிராக் பக்கம் அழைத்து சென்றுள்ளார். பையன் உணர்ச்சியில் இருக்க அந்த பெண்மணி நன்றாக இருட்டு பக்கம் அழைத்து அவனை மேலும் சிறிது உணர்ச்சிவசப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவனை பிடித்து அடித்து பின் பக்கம் கையை கட்டி இருக்கிறார்கள். அந்த பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்துள்ளார். பிறகு அவனிடமிருந்த பர்ஸ், பணம், செல் மற்றும் அவனது செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு . . . . . . . . . முதலில் அவ்வளவு தான் சொன்னான். ஆனால் அவன் அழுது கொண்டு பாத்ரூமில் இருக்க அவனை கொஞ்சம் தாக சாந்தி யில் கொஞ்சம் மூழ்க விட்டு பிறகு கிளறி கேட்டால் சொன்னான் பாருங்கள் - அய்யய்யோ இது சென்னை தானா.
இத்துடன் அவர்கள் விட்டிருந்தால் எந்த ப்ளாக் கிற்கே அவசியமில்லை. இது சாதாரண விஷயம் நகரத்தில் சபலத்தின் விலை என்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த வாலிபர்கள் அவனை . . . .
ஏங்க இது என்ன சரோஜா தேவி கதை புத்தகமா. . . இருங்க. . . டீன் எஜர்களே நீங்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
உண்மை என்னவெனில் அவன் வடஇந்திய பையன் அல்லவா. நல்லா சிகப்பு. அவனை பிடித்து வாயை கட்டி பேண்டை கழட்டி இருவரும் அவன் ஆசன வாயில் . . . . வேண்டாம் இதற்கு மேல் சொல்ல வேண்டாம். நீங்களே யூகித்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு அவனை அங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதற்க்கு பிறகு அவன் கையில் காசில்லாமல் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து பணம் வாங்கி கொடுத்து ரூமிற்கு வந்து எனக்கு போன் செய்தான். பிறகு தான் எல்லாம் நடந்தது.
அவனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்று ஒரு செக் அப் செய்த பின் டாக்டர் தான் சொன்னார். அவன் பின்புறம் இருந்து ரத்தம் வருகிறது என்று. பிறகு எல்லாம் முடிந்த பிறகு அவனை அவன் ரூமில் விட்டு விட்டு வந்தேன்.
இது நடந்தது சென்னையில் எங்களால் யாரிடமும் புகார் செய்ய முடிய வில்லை. அவன் வேண்டாம் எனக்கு அசிங்கம் என்று கூறி விட்டான். நான் என் மனதுக்கு கேட்காமல் ப்ளாகில் எழுதுகிறேன். மக்களே உஷார் இது யாருக்கும் நடக்கலாம். அதனால் நீங்கள் உஷாராக இருங்கள். மீண்டும் அதே ரயில் நிலையத்தில் யாரையும் அதே போல் ஒரு பெண் அழைக்கலாம்.
யப்பா இது சென்னை வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சிறிது சபலப்பட்டால் விளைவு இது தான்.
செந்தில்

Friday, January 21, 2011

வெற்றி கொண்டாடிய சிறுத்தை.

அன்பு மக்களே. பொங்கலுக்கு ஊருக்கு சென்று விட்டேன். அதனால் தான் கடந்த சில நாட்களாக பதிவு எதுவும் எழுதவில்லை.


ஊரில் படம் பார்க்க நேரமில்லை. ஊரிலிருந்து சென்னை திரும்பியதும் சிறுத்தை பார்த்தேன். படம் நிச்சயம் மாபெரும் வெற்றி தான். படம் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது நிச்சயம் படம் சூப்பர் ஹிட் தான்.
நான் பொங்கலுக்கு முன்னாடி எழுதிய சிறுத்தை விமர்சனம் முதல் முறையாக என்று நான் எழுதிய பதிவு அதற்கு வந்த கமெண்ட்ஸ் ஆகியவற்றுடன் படம் பார்க்கும் போது நான் எழுதிய விமர்சனம் தான் நினைவுக்கு வந்தது. பரவாயில்லை. நாமும் ஒரு படம் பார்த்து வேறு மொழி ட்ரைலர் பார்த்து இரண்டையும் கலந்து நாம் சொன்ன விமர்சனம் தேறிவிட்டது. நாமும் கூடிய சீக்கிரம் முன்னணி பதிவர் ஆகலாம் என்று நம்பிக்கை மேலிட்டது. நாமும் இப்பதானே ப்ளாக் பத்தி தெரிஞ்சிகிட்டு எழுத ஆரம்பிச்சிருக்கோம்.

தயவு செய்து இதை படிக்கும் சீனியர் பிளாக்கர்கள் எனக்கு சில அட்வைஸ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முதல் விஷயம் ஓட்டளிப்பு பட்டை எவ்வாறு பெறுவது. தமிழ் 10 இணையத்தில் தெளிவாக இருந்ததால் அதை இணைத்து விட்டேன். ஆனால் திரைமணம் மற்றும் இன்ட்லி பட்டை எவ்வாறு நான் எனது ப்ளாகில் இணைப்பது.

அடுத்தது இவை அல்லாமல் வேறு எந்த திரட்டிகளில் இணைத்தால் நல்லது.
இளையவர்களுக்கு வழி காட்டுவது தானே பெரியவர்களுக்கு மேன்மை.

நன்றி எனக்கு வரப்போகும் எல்லா தகவல்களை அளிக்கப்போகும் நல் உள்ளங்களுக்கு

செந்தில்

Wednesday, January 12, 2011

சிறுத்தை திரைவிமர்சனம் முதல் முறையாக

ரத்தினவேல் பாண்டியன் (கார்த்தி -1) உயிருடன் இருப்பதாக ஒரு ரௌடி அவன் தலைவனுக்கு போன் பண்ணி சொல்லுகிறான். உடனடியாக ஒரு கும்பல் அவனை கொல்ல கிளம்புகிறது.
ராக்கெட் ராஜா (கார்த்தி -2) ஒரு பிராடு. அவனுடன் இருக்கும் சந்தானமுடன் இணைந்து ஊர் முழுவதும் திருட்டு வேலைகளை செய்கின்றனர். ஒரு கல்யாணத்தில் திருட போகும் போது அங்கு தமனாவை சந்திக்கிறார். கார்த்தியை -2 மிக பெரிய மனிதராக நினைக்கும் தமன்னா அவர் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில் அவர் திருட போகும் இடத்தில் ஒரு குழந்தை அவரை பார்த்து அப்பா என்கிறது. அங்கு வரும் போலீஸ்காரர் நீ தான் அந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லி ஒப்படைக்கிறார். அவனோ குழந்தையை விட்டு எஸ்கேப் ஆக முயற்சிக்க போலீஸ் மீண்டும் மீண்டும் அவனிடமே ஒப்படைக்கிறது.
ஒரு இடத்தில் ஒரு கும்பல் அவனையும் குழந்தையும் கொல்ல முயற்சிக்க அங்கு வருகிறான் கார்த்தி -1. அவன் இருவரையும் காப்பாற்றி அழைத்து செல்கிறான். பிளாஷ் பேக் ஓபன் ஆகிறது. ஒரு ஊரில் மிகப்பெரிய ரௌடி கும்பல் ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்த ஊருக்கு வரும் ஒரு SP (கார்த்தி -1) ரௌடிஐ ஜெயில் லில் போட்டு அடைக்கிறார். ஆனால் ஒரு மந்திரி வந்து அவர்களை DIG மூலம் விடுவிக்கிறார். பிறகு நடக்கும் மோதலில் ரௌடி தலைவனின் மகனை கொன்று விடுகிறான் கார்த்தி. பிறகு மக்களை பணயமாக வைத்து ரவுடி கார்த்தியை சுட்டு புதைத்து விடுகிறான். அங்கு வரும் மக்கள் கார்த்தியை மீட்டு காப்பாற்றி வேறு ஊர் அனுப்புகின்றனர். அந்த குழந்தை தான் அவர் குழந்தை. விவரங்களை கூறி விட்டு அவன் செத்து விடுகிறான். கார்த்தி - 2 போலீஸ் வேடத்தில் சென்று பழி வாங்குவது தான் சிறுத்தை.
படம் மிகவும் பிரமாதமாக உள்ளது. காமெடி சூப்பர். பாடல்களும் பக்கா. மிக அருமையான ஆக்சன் மூவி. பொங்கலில் முதலிடம் பிடிக்கப்போகும் படம்.

ஆனால் என்ன படம் தான் ரிலீஸ் ஆகவில்லை. நான் தான் விக்ரமருக்குடு படம் பார்த்து விட்டு சொன்னது, உல்டா கதை என்னது. ஆனால் ட்ரைலர் பார்க்கும் போது அதேபோல் படம் இருக்கும் என்பது தெரிகிறது.

பார்த்து என்சாய் பண்ணுங்க.

செந்தில்

Tuesday, January 11, 2011

காவலன் திரைவிமர்சனம் - முதல் முறையாக உங்கள் பார்வைக்கு

விஜய் சிறு வயதிலேயே படிப்பு ஏறாமல் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு ஒரு தாதாவிடம் பாடிகார்ட் ஆக சேருகிறார். அவருடன் ஒரு ஒயின் ஷாப் ஐ காலி செய்ய போகும்போது தாதாவுக்கு வரும் போன் காரணமாக திரும்பி விடுகின்றனர். விஜய் தாதாவே பயப்படும் அந்த பெரிய மனிதர் யாரோ அவரிடமே வேலை சேர்வது என முடிவு செய்து அவரை பார்க்க அவரது ஊருக்கு செல்கிறார். வழியில் பெரிய மனிதர் வீடு சமையல்காரரான வடிவேலுவை பார்க்க அவர் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் வந்து சேரும் முன்பே போனில் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி விடுகிறார். விஜய் பெரிய மனிதரான ராஜ்கிரண் அவர்களின் பாடி கார்ட் என்று ஊர் நம்பி சிறப்பான வரவேற்பு கொடுக்கிறது. தான் சேர தான் வந்திருப்பதாக சொல்லும் முன் ஊர் மக்கள் அவரை ராஜ்கிரண் வீட்டுக்கு அவரை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். அங்கு அசின் ஐ பார்க்கும் விஜய் அவர் யார் என்று தெரியாமல் ராஜ்கிரண் பற்றியும் அவரது மகன் பற்றியும் தப்பு தப்பா க சொல்கிறார். பிறகு தான் தெரிகிறது அசின் ராஜ்கிரண் மகள் என்று. பிறகு ஒரு வழியாக வேலைக்கு சேர்கிறார். அங்கு ஒரு ரௌடியால் ராஜ்கிரண் குடும்பத்திற்கு ஆபத்து வர விஜய் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார். ராஜ்கிரண் விஜய் ஐ உயர்வாக மதிக்கிறார்.

எந்நிலையில் அசின் படிப்பதற்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். ஆனால் அவரை தனியாக அனுப்ப ராஜ்கிரண் மறுக்கிறார். விஜய் தான் படிப்பை பாதியில் விட்டவராசே. அவரை மேற்கொண்டு படிக்க வைத்தால் அவருடன் அசின் பாதுகாப்பாக இருப்பார் என்று எண்ணி அவருடன் அனுப்பி வைக்கிறார். அவருக்கு சமையல் வேலைக்கு வடிவேலுவும் போகின்றனர். அங்கு விஜய் விறைப்பாக இருக்க அசின் மற்றவர்களுடன் பழக சிரமமாக உள்ளது. அதனால் அசின் குரலை மாற்றி விஜய்க்கு காதல் தூது விடுகிறார். யார் என்று தெரியாமேல விஜய் அந்த பெண்ணை காதலிக்கிறார். அவரும் மெல்ல விஜய் மீது காதல் கொள்கிறார். எந்நிலையில் ராஜ்கிரணுக்கு தெரிய வர என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

உண்மைலேயே சொல்கிறேன் கண்டிப்பாக இது விஜய்க்கு வெற்றி படம் தான். காமெடி கலக்குகிறது.

என்னடா படம் என்னும் ரிலீஸ் ஆகவில்லையே எப்படி சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா.
ஹி ஹி ஹி .

அது ஒன்றும் இல்லை. பாடி கார்ட் மலையாளம் படம் பார்த்தேன். காவலன் ட்ரைலர் பார்த்தேன். மிக்ஸ் செய்து சொல்கிறேன்.

ஆனாலும் படம் மலையாளத்தில் பார்க்க நன்றாக உள்ளது. அதே போல் தமிழ் படமும் வந்தால் நிச்சயம் வெற்றி தான். அதை விட்டு விட்டு பில்ட் அப் ரொம்ப கொடுத்தால் படம் சந்தேகம் தான்.
அன்புடன்
செந்தில்

பெப்சி கலப்படம் நேரடி புகைப்படங்கள்

இது போன்ற கலப்படங்கள் நாம் தரமானவை என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொருட்களின் நிலைமை இது தான். கவனம் மக்களே.

பெப்சி மூலப்பொருட்கள் வாங்கப்படுகின்றது. பணியாட்கள் மூலம் பாட்டில்கள் கழுவப்படுகின்றது.
பாட்டில்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

பெப்சி ஊற்றப்படுகிறது.

பொருத்தமான மூடி தேடுகிறான்.

காஸ் நிரப்பி அடைக்கப்படுகிறது.
ஒரிஜினல் போன்ற பெப்சி தயார்.

உஷார் மக்களே
செந்தில்

Monday, January 10, 2011

அப்பாவுக்கும் பசங்களுக்கும் ஏன் சண்டை வருது.

இந்த அப்பாக்கள் இருக்காங்களே ஆம்பள பசங்கள நம்பவேமாட்டானுங்க. ஏன் தெரியுமா இந்த மாதிரி காரியங்கள் செய்தால் பின்னே மடியிலே தூக்கி வச்சி கொஞ்சுவானுங்களா இல்லேதூக்கி போட்டு மிதிப்பாங்களா.















எப்பூடி
செந்தில்








மதுரை - 1940 இல் புகைப்படங்கள்

மக்களே நீங்கள் காணக்கிடைக்காத 1940 - ல் மதுரை அரிய புகைப்படங்களாக பார்த்து மகிழுங்கள். நாம் அனைவரும் சென்னை -ஐ பழங்கால புகைப்படங்களாக பார்த்திருப்போம். ஆனால் மதுரை வெகு அரிது. பாருங்கள் பார்த்து மகிழுங்கள்.

தமுக்கம் மஹால்



திருமலை நாயக்கர் மஹால்



நீராழி மண்டபம்





The Black burne Testimonial

யானை மலை

பொது மருத்துவமனை


ராய கோபுரம்




அன்புடன்
செந்தில்








நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!

ஒரு கிலோ அரிசியின் விலை 44 ரூபாய் ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது. பொது விநியோகத்தின் விற்கப்படும் அரிசியின் விலை ஒரு ரூபாய் ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவீதம்.


பிட்சா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் கூட பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை.

ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த பணத்தில் பதில் ஒரு பங்கை ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்காக செலவு செய்ய தயாராக இல்லை.

நாம் அணியும் உள்ளாடைகளும் ஆடைகளும் A/C ஷோரூம்களில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் பழங்களும் காய்கறிகளும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன.

நாம் குடிக்கும் லெமன் ஜூஸ் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவும் நீர்கலவை லெமன் கொண்டு தயாரிக்கபடுகின்றன.

மொத்தமாக பள்ளிகளை நடத்த வேண்டிய அரசு சாராயம் விற்று கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் கல்லூரிகளை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

பிரபலமாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் உண்மையான வழியில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் மட்டும் இல்லை.

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம் ஆனால். டீ கடையில் சிறுவர்கள் கொண்டு வந்து தரும் டீ யை உறிஞ்சி குடிப்போம்.
எந்த நிலை மாறுவது எப்போது. தூங்கும் பாரதமாதா எழுந்து தான் பதில் சொல்ல வேண்டும்.
செந்தில்
படிக்கிறவங்க பிடிச்சிருந்தா follow பண்ணுங்கப்பா
( இந்தியன் ல )

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...