சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, May 27, 2014

அலற வைத்த கத்திரி தினங்கள்

கத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன்று ஏசி புகைந்து விட்டது. 


எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான புதிதில் வாங்கிய 1.5 டன் ஒனிடா ஸ்ப்ளிட் ஏசி, இது வரை செலவே வைத்தது இல்லை. ஆனால் இந்த சம்மருக்கு எனக்கு ஏழரைக்கு பிள்ளையார் சுழி போட்டது விட்டது. 

முதல் தளத்தில் வீடு இருப்பதால் வெயில் நேரடியாக உள்ளிறங்கி இரவில் வீடு அனலாக தகிக்கும். மற்றவர்கள் மொட்டை மாடியில் தண்ணி தெளித்து வைத்து  ஹாயாக போய் படுத்து விட வீட்டம்மணி அறையை விட்டு வெளியில் வரமுடியாத சூழல். அவருக்கு துணையாக நானும் இருந்தாக வேண்டும்.


முதல் நாள் இரவு வெயிலின் உக்கிரம் புரியாமல் லைட்டாக மகாதியானத்துடன் சென்று படுத்து விட விடியற்காலையில் கிட்னியில் யுரினல் டியுபில் வலி பின்னியெடுக்க ஆரம்பித்தது. அன்று முழுக்க மருத்துவரிடம் செல்லாமல் கைவைத்தியத்தை வைத்தே தள்ளினேன். ஆனால் மாலை வரை வலி நிற்கவேயில்லை.

அப்பா, உடனடியாக கொளத்தூரில் இருக்கும் கிட்னி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர் என் வலியின் தன்மையை கேட்டறிந்து "இது கிட்னியில் கல் பிரச்சனையாகத்தான் இருக்கும். உடனடியாக ஸ்கேன் எடுக்கவும்" என்று பரிந்துரைத்தார். 


ஸ்கேன் எடுத்து முடித்ததும் கிட்னி வீங்கியிருக்கிறது. கல்லின் அளவு தெரியவில்லை, டியிபி எக்ஸ்ரே எடுக்க வேண்டும்" என்றார்கள். அதையும் பணத்தை கட்டி எடுத்தேன். எக்ஸ்ரேவை பார்த்த மருத்துவர், எந்த ரிப்போர்ட்டையும் என்னிடம் கொடுக்காமல் "கல்லின் அளவு 15மிமி அளவுக்கு இருக்கிறது. கிட்னியும் வீங்கியிருக்கிறது, உடனடியாக கல்லை நீக்கியாக வேண்டும். லேப்ரஸ்கோப்புக்கு 35000 செலவாகும். காலைக்குள் பணத்தை கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும்" என்றார்.

நான் "பணத்தை கட்டி விடவா" என்று கேட்க, அப்பா கடுப்பாகி "வா வீட்டுக்கு போகலாம். நாளை ரயில்வே மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார். எனக்கு ரயில்வே ஆஸ்பிட்டல் கூட்டத்தை நினைத்ததும் சற்று தயக்கமாக இருந்தது. 


அப்பாவுக்கு பயந்து கிளம்பி வலியுடனே அன்றைய இரவை அந்த வெக்கை ரூமுக்குள் கடத்த வேண்டியதாக போயிற்று. மறுநாள் காலையிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சர்ஜிக்கல் ஓபி மருத்துவரை பார்த்தேன். 

முதல் நாள் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் எக்ஸ்ரேவையும் பார்த்தவர் என் உடம்பை சோதித்து "நீங்கள் சொல்லும் அறிகுறிகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. கேசுவாலிட்டியில் ஊசி போட்டு இரண்டு மணிநேரம் வைத்துப்பார்த்து முடிவு செய்யலாம்" என்று சொன்னார். ஊசி போட்டு ஒரு மணிநேரத்தில் வலியே இல்லை, எல்லாம் நார்மலாகி விட்டது. பிறகு ஸ்கேன் எழுதி கொடுத்தார்கள்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுப்பதற்குள் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்து மாடு பிடித்து திரும்பவும் சென்னைக்கே வந்து விடலாம். முதல் நாள் யுனியனில் ஆளைப் பிடித்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி  மறுநாள் காலை எதுவும் சாப்பிடாமல் எட்டு மணிக்கு ஸ்கேனுக்கு சென்றால் எனக்கு ஸ்கேன் எடுக்கும் போது மணி 12, ஆனால் காலை 8 மணிக்கே இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து வயிறு நிரம்ப காத்திருக்க வேண்டும்.

அரை மணி நேரத்தில் ஒன்னுக்கு வந்து அடக்க முடியாமல் போய் விட்டு வந்தால் மறுபடியும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து காத்திருக்க வேண்டும். மறுபடியும் அரைமணிநேரத்தில் ஒன்னுக்கு, மறுபடியும் தண்ணீர் என்று நொந்து நூலாகிப் போனேன். எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது மாதவா.

அது ரிசல்ட் வந்து மோடி கோலேச்சிய தினம். ஊரே பரபரப்பாக இருக்க நான் மட்டும் 2 லிட்டர் தண்ணியும் பாத்ரூமுமாக இருந்தேன். 12 மணிக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது 7 மிமி தான் அளவு இருக்கிறது. லேப்ரஸ்கோப் தேவையில்லை, மருந்திலேயே கரைத்து விடலாம் என்றனர். 

நல்லப்பிள்ளையாக அடக்கி வாசித்து மருந்து சாப்பிட்டு அளவுச் சாப்பாட்டு சாப்பிட்டு வந்தேன். நேற்று கல் உடைந்து வெளியேறி விட்டது. பிரச்சனை முடிந்து என்று நினைத்தேன். அப்போது என்னை பார்க்க வந்த டாக்டர் நண்பன் "கல் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். அடக்கி வாசி மாமே"ன்னு சொல்லிட்டு போயிட்டான். 

அப்ப நான் அடக்கி தான் வாசிக்கனுமா

ஆரூர் மூனா

Friday, May 23, 2014

ஆட்டோகிராப்பும் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பும்

2003-04ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்கான வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியிருந்தது. அதற்கான பணிஆணை 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு இருந்தது. வீராணம் ஏரியில் தொடங்கும் குழாய் பதிக்கும் பணி போரூர் ஏரியில் அந்த நீரை சுத்திகரித்து வழங்குவதில் முடியவடையும்.


இதில் நான் வேலை பார்த்த நிறுவனம் மேல்மருவத்தூரில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிஆணையை பெற்றிருந்தது. இதில் வண்டலூர் முதல் போரூர் வரை உள்ள இடத்தில் குழாய்களை தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து இறக்கும் பொறுப்பு என்னுடையது.

எனக்கு உதவியாக ஆறு பேர், 25 கண்டெய்னர் லாரிகள் மற்றும் ஒரு டவர் கிரேன். இந்த பணிக்காக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. வண்டலூரில் இருந்து தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை வரை மண்ணுக்குள் வரும் குழாய் புறவழிச்சாலை தொடங்கியதும் சிறுபில்லர் அமைக்கப்பட்டு மண்ணுக்கு மேலேயே பயணிக்கும்.

பில்லர் போடுவது, குழாயை வெல்டிங் அடிப்பது இடையில் பட்டர்ப்ளை வால்வுகள் பொருத்துவது, இடையில் வரும் சாலைகளை கடக்க சுரங்கம் அமைப்பது, அனகாபுத்தூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற இன்ன பிற பொறியாளர்களிடமும் அலுவலர்களிடமும் கொடுக்கப்பட்டு இருந்தன.

10 டன் எடையுள்ள மாபெரும் குழாய்கள் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு புறவழிச்சாலையில் இருந்து டவர் கிரேன் மூலம் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளது போல் நடுவில் சென்டர் மீடியன் உள்ள நான்கு வழிச்சாலை அப்போது கிடையாது. இருவழிச்சாலை மட்டும் தான். நடுவில் தடுப்பு கூட கிடையாது. எந்நேரமும் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வரும் வாகனங்களை வேகம் குறைக்க வைத்து அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் டவர் கிரேன் சாலையின் முக்கால் பகுதி இடத்தை அடைத்துக் கொள்ளும். மீதியுள்ள சாலையை இருபக்க வாகனங்களும் கடக்க வேண்டும். தொழிற்சாலையில் குழாயை எடுப்பதில் தொடங்கி இவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழாயை புறவழிச்சாலையின் பக்கவாட்டில் அடுக்க வேண்டும்.

எங்கள் குழு குழாயை வைத்து முடித்ததும் அடுத்த குழு பில்லரில் குழாயை வைத்து வெல்டிங்கை துவக்கும். இது ஒரு செயின் லிங்க் ஒர்க். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இருள் தொடங்கியதும் புறவழிச்சாலையில் குழாய்கள் வைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் மேலிடத்தின் அழுத்தத்தினால் வேலை அசுர வேகத்தில் நடைபெற தொடங்கின. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. 24 மணிநேரமும் புறவழிச்சாலையில் தான் இருக்க வேண்டும்.

இருக்கும் 25 கண்டெய்னர் லாரிகளை வைத்து இடைவெளி விடாமல் குழாய்களை இறக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேரம் முழுவதும் மொத்த வண்டிகளையும் தொழிற்சாலைக்கு அனுப்பி குழாய்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஆறு மணிக்கு குழாய்களை இறக்கத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் தலைவராக இருந்தார். எனக்கு அவர் குரு மாதிரி. மிகச்சாதாரண ஆளாக இருந்த என்னை வளர்த்து நல்ல பொறுப்பில் வைத்திருந்தார்.

அவருக்கு மேல்மருத்தூர் முதல் போரூர் வரை வேலையிருக்கும். எங்கள் பகுதிக்கு அவர் வரும் போது நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக சத்தம் போடுவார். அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, மொத்த குழுவும் அவரைப் பார்த்து நடுங்குவர்.

நிற்க. தலைப்புக்கும் இதுவரை சொல்லிய கதைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறீர்களா, கதையை சொல்வதற்கு முன்பு கால சூழ்நிலையை உங்களிடம் சேர்த்தால் தான் சம்பவத்தின் வீரியம் உங்களுக்கு புரியும்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் கிடைக்கும் கேப்பில் எஸ்கேப்பாகி சினிமாக்களை முடிந்த வரை முதல் காட்சி பார்த்து விடுவேன். சரக்கும் எப்படியாவது அடித்து விடுவேன். என் தலைவர் வரும் நேரம் கொஞ்சம் வெடவெடவென்று நடுக்கமாக இருக்கும்.

ஒரு கணக்கு உண்டு, அவர் எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் அதே இடத்திற்கு வர குறைந்தது 8 மணிநேரம் ஆகும். மேல்மருவத்தூர் வரை சென்று வழியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு திரும்ப வர வேண்டுமே.

ஆட்டோகிராப் படம் வெளியான அன்று முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். காலையில் முதல் லோடு குழாய்களை இறக்கி வைத்து விட்டு லாரிகளை அனுப்பி படம் பார்த்து வருவதற்குள் குரோம்பேட்டை வெற்றியில் படம் பார்த்து விட்டு வந்து விடலாம் என திட்டம் போட்டேன்.

லாரிகளை அனுப்பி வைத்து விட்டு தொழிற்சாலையில் உள்ள என் நண்பனிடம் "ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு குழாய்களை லாரியில் ஏற்று" என்று சொல்லி விட்டு தியேட்டருக்கு வந்து விட்டேன்.

நான் திரையங்கிற்கு போன சமயம் எங்கள் தலைவர் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார். லாரிகள் லோடு ஏற்றாமல் நிற்கவே அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு "இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள் லாரிகள் கிளம்ப வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அவன் பதற்றத்தில் எனக்கு சொல்லாமல் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான். லாரிகள் ஊரப்பாக்கம் பக்கம் ரோட்டில் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த தலைவர் லாரிகள் நிற்பதை பார்த்து எனக்கு போன் போட்டிருக்கிறார்.

அவரது போனிலிருந்து எனக்கு கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து போன் அடித்தார். நான் படம் துவங்கி அரைமணிநேரம் வரை ஜாலியாக படம் பார்த்துக் கொண்டு இருக்க லோக்கல் நம்பரில் இருந்து போன் வரவும் மிகவும் அசால்ட்டாக போனை எடுத்து "யாரு" என்று நக்கலாக தியேட்டரின் உள்ளேயே அமர்ந்து பேசினேன்.

சில நொடிகளில் நான் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார். கடுமையாக சத்தம் போட்டு "இன்னும் அரைமணிநேரத்திற்குள் லாரிகளில் உள்ள குழாய்கள் இறக்கப்பட்டு தொழிற்சாலைக்கு திரும்பாவிட்டால் நீ வேலையை விட்டு அனுப்பப்படுவாய்" என்றதும் எனக்கு சர்வமும் நடுங்கி விட்டது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் தியேட்டர்காரன் பைக்கை எடுக்க விட மாட்டேங்கிறான். படம் முடியாமல் எடுக்க முடியாது. கதவையும் திறக்க முடியாது என்று சத்தம் போடவே வெற்றி தியேட்டரின் பெரிய கதவை ஏறி குதித்து வெளியில் வந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊரப்பாக்கம் வந்தேன்.

லாரிகளை எடுத்துக் கொண்டு புறவழிச்சாலைக்கு வந்து அவசர அவசரமாக குழாய்களை இறக்கி லாரிகளை அனுப்பி வைத்ததும் தான் நிம்மதி வந்தது. படம் முடியும் நேரம் தியேட்டருக்கு போய் பைக்கை எடுத்து வந்தேன். மறுநாள் காலை திட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே உள்ளே அமர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் கலையும் போது ஒரு நிமிடம் என்று எல்லோரையும் அமர வைத்த தலைவர் என் கதையை சொல்லி "இப்படிப்பட்ட பொறுக்கிகளையும் வைத்து தான் இந்த திட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்று முடித்தார்.

நல்ல வேளை பிரச்சனை அத்துடன் முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. அதற்காக அடுத்த வாரம் சினிமாவுக்கு போகாமல் இருந்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள், ஹி ஹி.

ஆரூர் மூனா 
 
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Friday, May 2, 2014

பஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்

2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில் தான் தினமும் நாஷ்டா துன்னுவேன்.

என்னுடன் எனது அறை நண்பர்கள் எல்லோரும் காலை எட்டு மணிக்கு அங்கு ஜமா கூடுவோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அக்கவுண்ட். நான் இரண்டு இட்லி, இரண்டு வடை சாப்பிடுவேன். ரெகுலர் சாப்பாடு அதுதான். தினம் ஒரு மெனு என மாற்றமெல்லாம் இருக்காது.

இரண்டு இட்லி, இரண்டு வடைக்கு எட்டு ரூபா. என்னடா இது எட்டு ரூபா காலை சாப்பாட்டுக்கே ஆகிறதே என்று யோசித்து இதை விட விலை குறைவாக கடை இருக்குமா என தேடினோம். ஓரளவுக்கு சுகாதாரமாக இதை விட குறைந்த விலைக்கு வேறு கடை அந்த ஏரியாவில் சிக்கவில்லை.

இன்று காலை வீட்டில் சமைக்கவில்லை. வேலைக்கு போகும் போது கேரேஜ் ஸ்டேசன் எதிரில் இட்லி விற்கும் அம்மாவிடம் இட்லி பார்சல் வாங்கினேன். ஒரு இட்லி எட்டு ரூபா.

நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை. இனி பாச்சிலர் பாடு அவ்வளவு தான்.

------------------------------------------------------------------

நம்ம டிபார்ட்மெண்ட் தான்


-------------------------------------------------------

சில விளம்பரங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் போல் இருக்கும். சப்ஜெக்ட்டும் கண்ணியமாக இருக்கும். விளம்பரங்களில் வித்தியாசமாக செய்கிறேன் என்று சிலர் அபத்தங்களாக எடுத்து தள்ளியிருப்பார்கள்.

உதாரணத்திற்கு தனுஷ் நடித்த சென்டர் ப்ரஷ் விளம்பரம். அதே போல் நேற்று எப்எம்மில் ஒன்று கேட்டேன். கடுப்பாகி விட்டது. ஏண்டா உங்க அலப்பறைக்கு ஒரு அளவே கிடையாதா.

விளம்பரத்தை உன்னிப்பாக கவனிக்கவும்.

அப்பா  : என்னம்மா உன் கல்யாணத்திற்கு செலவுகள் கச்சிதமா இருந்ததா

மகள் : ஆமாம்ப்பா, என் கணவர் வீட்டில் எல்லாரும் அசந்துட்டாங்க, முக்கியமா ஏசி தாம்ப்பா.

அப்பா  : அதுக்காத்தான் பாத்துப் பாத்து கேரியர் ஏசி வாங்கினேம்மா

மகள் : கேரியர் ஏசி போட்டதுனாலதாம்ப்பா மாப்ள சில்லுன்னு குஷியாகி என்னை சீக்கிரமாகவே கேரியிங் ஆக்கிட்டாருப்பா.

டேய் டேய் விளம்பரதாரர்களா நல்லாயிருங்கடா.

-------------------------------------------------------

இவுக ஜப்பான்ல பொறந்துருக்கலாம்


------------------------------------------------------

ஒரு மருத்துவ வேலையாக நான், அம்மா, வீட்டம்மா எல்லாரும் காரில் மயிலாப்பூர் சென்றிருந்தோம். சென்ற மாதம் இதே போல் ராதாகிருஷ்ணன் சாலையில் போகும் போது அம்மாவிடம் இங்கு தான் ஜெயலலிதா வீடு இருக்கிறது. இங்கு தான் கலைஞர் வீடு இருக்கிறது. என்று வழியை காட்டிச் சென்றிருந்தேன். 

என் குடும்பமே அதிதீவிர திமுக ஆதரவாளர்கள் தான். அப்பா வழி சித்தப்பன்கள் முதல், அம்மா வழி மாமன்கள் வரை. அம்மாவுக்கு கலைஞர் வீடு அந்த இடத்திற்குப் பக்கத்தில் தான் இருக்கிறது என்று தெரிந்த பிறகு என்னை அவர் வீட்டு வழியாக அழைத்து செல்லும்படி நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

நானே இப்ப சுத்தமாக திமுகவிலிருந்து விலகி வந்து அரசியல் துறவறமும் பூண்டு விட்டேன். இப்ப வந்து அங்கெல்லாம் போறதுக்கு கொஞ்சம் சங்கோஜமா இருந்தது. இது வேற எதிர்க்கட்சிக்காரனுக்கு தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பான்னு யோசனையாகவும் இருந்தது.

அம்மா கெஞ்ச ஆரம்பித்து விட்டார். இதற்கு பிறகு தர்க்கம் பண்ணினால் நன்றாக இருக்காது என்று தயக்கத்திற்கு பிறகு வண்டியை கோபாலபுரத்திற்கு விட்டேன். கலைஞர் வீடு வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி அம்மா இறங்கி பார்த்து விட்டு வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.

நான் காரை விட்டு இறங்கவேயில்லை. எல்லாம் முடித்து அம்மா வண்டியில் ஏறியதும் ஊருக்கு போன் பண்ணி அப்பா, மாமாக்கள், அத்தைகள் எல்லாருக்கும் கலைஞர் வீட்டு முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டதையும் வீட்டை நேரில் பார்த்ததையும் பெருமைப்பட சொல்லிக் கொண்டு இருந்தார்.

இது போன்ற அப்பாவி திமுக ஆதரவாளர்கள் தான் திமுகவின் பலமே. நான் திமுக தலைமையின் பச்சோந்தித்தனத்தை சொல்லி அம்மாவை திருத்தவும் முடியாது. புரிந்து கொள்ளும் மனநிலையும் அவர்களுக்கு கிடையாது. எப்பவும் எங்க வீட்டில் நான் மட்டும் தான் தனி. என்னைத் தவிர எல்லா ஓட்டுக்களும் திமுகவுக்கு தான். 

வௌங்கிடும்.

ஆரூர் மூனா

Friday, April 25, 2014

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

இன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் போடுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரமாகும். ஆனால் இன்று பணம் போடுவதற்கு மிசின் வைத்திருக்கிறார்கள். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. பிறகென்ன நேரம் நிறைய இருந்ததால் வண்டியை சினிமாவுக்கு விட்டேன்.


இது சரியாக எல்லோராலும் கணிக்க முடியாத படம், சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலரை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விடும். எனவே இந்த விமர்சனம் எனது பார்வையில் மட்டுமே.

பனிமலை என்ற ஊரில் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒரு அபூர்வ நோய் பரவுகிறது. அதாவது வைரஸ் கிருமி தாக்குதலால் பேசும் தன்மையை மக்கள் இழக்கத் தொடங்குகின்றனர். அரசாங்கம் சுகாதாரத்துறை அமைச்சரை அனுப்பி தீர்வு காண பார்க்கிறது. 


ஆனால் நோய் முற்றி மரணம் வரை செல்கிறது. வாயைத் திறந்து பேசியதால் மரணம் சம்பவித்தது தெரிய வருகிறது. இதனால் பீதியாகும் அரசு பனிமலையில் மக்கள் வாயைத் திறந்து பேச தடை விதிக்கிறது. மக்கள் பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டு சைகையாலேயே பேசிக் கொள்கின்றனர். 

இறுதியில் அரசு இதற்கு மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு நோயை குணமாக்குகிறது. இது தான் கதை. 


அய்யய்யோ இது தான் கதைன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு, இது கதையல்ல, இது தான் படத்தின் ப்ளாட்பார்ம். 

இந்த பிளாட்பார்ம்மில் துல்கரும் நஸ்ரியாவும் ஓட்டும் அழகான காதல் கதை தான் படம். கூடவே ரோபோ சங்கர் மற்றும் குழுவினர் ஒரு தள்ளுவண்டியும், இயக்குனர் நியுஸ் சானல் அறிவிப்பாளராக ஒரு தள்ளுவண்டி, ஜான்விஜய் ஓட்டும் ஒரு தள்ளுவண்டி, அர்ஜுனன் காதல் கதை ஒரு தள்ளுவண்டி, வினுசக்கரவர்த்தி அவர் இடத்தில் நடக்கும் அனாதை இல்லம் ஒரு தள்ளு வண்டி என எல்லாம் கலந்து கட்டி ஓடுகிறது.

எவ்வளவு தான் விழிப்பாக இருந்து பார்த்தாலும் ஒரு வித அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் வித்தியாசமான முயற்சி தான். 


துல்கர் சல்மான் தமிழுக்கு இனிய வரவு. அந்த ப்ரெஷ்னஸ் தான் அவரது பலம். உற்சாகமான நடிப்பு அவர் முகத்தில் துள்ளி விளையாடுகிறது. டயலாக் டெலிவரி, சிறுபுன்னகை, பாஸிட்டிவ் மனோபாவம், துறுதுறுப்பு என டிஸ்டிங்சனில் பாஸாகிறார். சரியான படத்தை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கான எதிர்காலம் தமிழ்சினிமாவில் பிரகாசமாகவே இருக்கிறது.

நஸ்ரியா அமைதியான மருத்துவர். அனாவசியமாக பேசாதவர், வேறொருவனை காதலிக்கும் அவர் துல்கரை கண்டால் உற்சாகமடைவதும் மற்றவர்களை கண்டால் சோகமாக இருப்பதுமாய் இருக்கிறார். சாக்லேட் சாப்பிடும் போது காட்டும் எக்ஸ்பிரசன் சூப்பர். நமக்கும் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையே வருகிறது.

அர்ஜுனன் காதல் எபிசோடுகள் படத்தின் ஆகப்பெரும்பலம். ஒவ்வொரு முறையும் அவர் காதலை சொல்ல முயற்சித்து பிறகு வார்த்தை குழறி கெட்ட வார்த்தை பேசுவதும், காதலியிடம் காதலை சொல்லப் போய் பேசும்திறன் இழந்து அதனால் காதலை பெறும்போதும் பட்டையை கிளப்புகிறார். இன்னொசன்ட் முகம் தான் அவர் பலம்.

ரோபோ சங்கர் குடிகாரர்களின் சங்கத் தலைவனாக வந்து படம் முழுக்கவே சரக்கடித்து அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். சினிமா நாயகனாக வந்து மொக்கைப் படங்களாக நடித்து கடுப்பேற்றும் பாத்திரத்தில் ஜான் விஜய், வெல்டன்.

பாண்டியராஜன் அப்பாவி அமைச்சராக வந்து மக்களிடையே பேச முடியாமல் பேசமுடியாதது போல் நடித்து இறுதியில் பரிசோதனை முயற்சியில் குரலையே இழக்கிறார்.

மதுபாலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில், பெரிய ஈர்ப்பு ஒன்றுமில்லை. நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துங்கம்மா இப்படியெல்லாம் இருந்தா நம்ம ஆட்களுக்கு பிடிக்காது.

பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க நல்லாயிருக்கிறது. அவ்வளவு தான். பெரிய திருப்பங்களோ ஆச்சரியங்களோ இல்லாத திரைக்கதை இடைவேளை தாண்டி சற்று நொண்டியடிக்கிறது. தியேட்டரில் இருப்பவன் எல்லாம் கடுப்பாகி புலம்ப ஆரம்பித்து விட்டான். 

எனக்கு இரண்டாம் பாதி சைகை மொழி பிடித்து இருந்தது. க்ளைமாக்ஸ்க்கு முன்பு வரை படத்தில் கை, கண் அசைவு மொழி தான்.
 
 ந்ல்ல ஒரு காதல் படம் வித்தியாசமான ப்ளாட்பார்மில், சினிமா ஆர்வலர்கள் ரசிக்கலாம்.  இல்லையென்றால் கழுவி ஊற்றலாம். எனக்கு டபுள் ஓகே.

ஆரூர் மூனா

Monday, April 21, 2014

குவாட்டரும் கோழிபிரியாணியும்

தேர்தல் காலத்தில் காலையிலிருந்து சைக்கிளில் கட்சிக் கொடி கட்டி ஊரையெல்லாம் சுற்றி தொண்டை கிழிய கத்தி வாக்கு சேகரித்து விட்டு மதியம் பசிநேரத்தில் வார்டு செயலாளரின் வீட்டில் ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி பொட்டிக் கடையில் ஒரு பாக்கெட் ஊறுகாய், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு பிடாரி கோயிலின் குளத்துப் படிக்கட்டில் ஒய்யாரமாக அமர்ந்து, பதமாய் பாதி கிளாஸ் மருந்தும் கால் கிளாஸ் தண்ணீரும் ஊற்றி ஒரு ரவுண்டு சாத்தி ஊறுகாய் பாக்கெட்டின் முனையை கிள்ளி ஆள்காட்டி விரலில் ரவையூண்டு பிதுக்கி எடுத்து நடுநாக்கில் தேய்த்து மேனி சிலிர்த்து பிரியாணி பொட்டலத்தை பிரித்து ஒரு வாய் பிரியாணியும் லெக்பீஸின் சிறு துண்டு சேர்த்து எடுத்து வாயில் வைத்து சுவைத்தால் உச்சி மண்டையில் ஜிவ்வென்று தெரியுமே ஒரு ருசி, அதற்கு நிகராக எந்த தலப்பாக்கட்டி பிரியாணிகளும் லா மார்ட்டின் லார்ஜ்களும் வர முடியாது.


இந்த அனுபவத்திற்காகவே அம்மா திட்டி உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்று வர சொன்னாலும், அப்பா ஈபி கார்டுக்கு பணம் கட்டச் சொன்னாலும், நண்பர்கள் காரைக்காலுக்கு சரக்கடிக்க கூப்பிட்டாலும் அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு மறுநாள் காலை வார்டு செயலாளரின் வீட்டில் கட்சிக் கொடிக் கம்புடன் கோஷம் போட மனது நிற்க வைக்கும்.

இது எனக்கு மட்டுமல்ல, பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்கும் அத்தனை கட்சித் தொண்டனுக்கும் கிடைத்த வரப்பிரசாதம். கட்சியில் என்ன தான் வட்டம், மாவட்டம் என்று உயர்ந்து தேர்தல் செலவுகளில் ஒரு பகுதியை கமிஷன் அடித்தாலும் அடி மட்ட தொண்டனின் இந்த சிறு ஆசைக்குட்பட்ட அனுபவம் பதவிகளில் கோலேச்சிக் கொண்டு இருப்பவர்களுக்கு அமையாது.


என்றைக்கு திமுக, ஈழ விஷயத்தில் கழுத்தறுத்ததோ அத்துடன் தீவிர அரசியல், கட்சி, கலைஞர், உதயசூரியன் எல்லாத்துக்கும் ஒரு சலாம் போட்டு கூடாரத்தை விட்டு வெளியேறி வருடம் ஐந்தாச்சி. இப்ப மிஞ்சி இருக்கிறது நினைவுகள் தான்.

சிறு வயதில் விவரமே இல்லாமல் 1989 சட்டமன்ற தேர்தலில் என் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் நண்பர்களுடன் ஒரு ஜாலி அனுபவத்திற்காகவும் கையில் கை சின்னம் பதாகையை எடுத்துக் கொண்டு "போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து" னு கத்திக் கொண்டே வடக்கு வீதி, பிடாரி கோயில் தெரு, வடக்கு மடவிளாகம், மேட்டுத் தெரு, நடவாகனத் தெருன்னு வீதி வீதியாக சுற்றி வருவோம்.


1991 தேர்தலிலும் காங்கிரஸ்க்கு தான் ஓட்டு கேட்டுள்ளேன். பிறகு விவரங்கள் புரிய ஆரம்பித்து கலைஞரின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு 1996 தேர்தலில் விளமல் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டு சேகரிப்பது, பிட் நோட்டீஸ் வினியோகம் செய்வது சாலையை கடக்கும் இரு சக்கர வாகனங்களை மடக்கி உதயசூரியன் ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக ஒட்டி அனுப்புவது போன்ற வேலைகளை செய்து வந்தேன்.

ஓட்டுப் பதிவு அன்று மதியம் வரை யாரெல்லாம் ஓட்டு போடவில்லையோ அவர்கள் வீட்டுக்கு சென்று கையோடு அழைத்து வந்து ஓட்டுப் போடச் செய்வோம். மதியம் தாண்டியதும் விட்டுப் போன ஓட்டுக்களை நாங்களே போட்டு தேர்தலை சுபமாக முடித்து வைத்தோம். 


அந்த காலகட்டத்தில் மகாதியானப் பழக்கம் இல்லாததால் இந்த அனுபவங்கள் கிட்டியதில்லை. பிறகு 2001 தேர்தல் காலக்கட்டத்தில் இன்னும் திமுக வெறியேறி இருந்தது. எவனாவது திமுகவையோ கலைஞரையோ குறை சொன்னால் அவன் பல்லை பேத்து விட்டு தான் மறுவேலை பார்க்கிறது.

பிறகு 2004 பாராளுமன்ற தேர்தல், 2006 சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னால் முடிந்த அதிக பட்ச உழைப்பை கொட்டினேன். அப்போது எனக்கு திருப்தியளித்தது திமுகவுக்காக ஓட்டுப் கேட்டதைத்தான். அல்ப ஆசை என்பது குவாட்டரும் கோழிபிரியாணியும் தான்.

2009 தேர்தலில் தான் கடைசியாக ஒரு தொண்டனாக பங்கு கொண்டேன். ஈழ விவகாரத்தில் திமுகவின் சுயநல வெளிப்பாடு தெரிந்தவுடன் எல்லா திமுக சம்பந்தப்பட்ட எல்லா போட்டோக்களையும் எரித்து மிச்சத்தை குப்பைத் தொட்டியில் போட்டு என்னை நானே காறித் துப்பிக் கொண்டு வெளியில் வந்து விட்டேன். 

பதிவு எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறதே என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் பதிவின் நோக்கம் இந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு இல்லை என்பதைப் பற்றி, சத்தியமாக என் ஓட்டு திமுகவுக்கு கிடையாது. இது என் மனநிலை மட்டுமல்ல.

ஆரூர் மூனா

Friday, April 18, 2014

தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

வடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை தாண்டி விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் நடந்தது என்ன, வேறென்ன எனக்கு விபத்து தான். இதுல கூடுதலா ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு போய் அந்த காசும் எனக்கு தண்டம்.


மூன்று வருடம் கழித்து பார்ப்பதாலோ என்னவோ நமக்கு வடிவேலுவின் காமெடிகள் அவுட் ஆப் பேசனாக தெரிகிறது. வெறும் உடல்மொழியால் செய்யும் அலப்பறைகள் போரடிக்கின்றன.

வடிவேலு சார், மீண்டும் வந்து இருக்கீங்க, சந்தோஷம், ஆனா இந்த மாதிரி சோதனை முயற்சிகளை கைவிட்டு மீண்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவைக்கு வாங்க, உங்க இடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறது. இதுபோன்ற உங்கள் பரிசோதனைக்கு நாங்கள் என்ன சோதனை எலியா.


என்பதுகளில் பிறந்தவர்கள் அனைவரும் அம்புலிமாமா புத்தகத்திலும், மற்ற கதைபுத்தகத்திலும், தாத்தா பாட்டிகள் கதையாக சொல்லியும் கேட்ட கதை தான் தெனாலிராமன். அதே கதையை அதே போல் அமெச்சூர்த்தனமாக படமாக்கி நம்மிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் தெனாலிராமன் அரசவையில் ஒரு அமைச்சர் பதவி காலியாக இருப்பதை அறிந்து தன் மதியூகத்தால் அந்த பதவியை அடைகிறான். ஆனால் அவன் வந்தது ஊழல் பேர்வழிகளான மற்ற மந்திரிகளுக்கு பிடிக்கவில்லை. 


தந்திரம் செய்து தெனாலிராமனை அரசவையை விட்டு வெளியேற்றுகிறார்கள். பிறகு எப்படி தெனாலிராமன் அரசரை திருத்தி கெட்டவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுகிறான் என்பது தான் படம். 

உங்களுக்கு 23ம் புலிகேசி கதையைப் போலவே இருக்குமே. அதே தான் படம் புலிக்கேசியை தழுவி எடுக்கப்பட்ட ரீமேக் தான் இந்த படம்.

வடிவேலுவுக்கு இந்த படம் தானே எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. அதனால் கொடுத்த காசை விட ரெண்டு மடங்கு அதிகமாகவே கூவுகிறார். நமக்கு தான் காது ஜவ்வு கிழிந்து தொங்குகிறது. 


திரையில் உடல்மொழியாலும் வசனஉச்சரிப்பாலும் விழுந்து விழுந்து காமெடி செய்து கொண்டு இருப்பார் வடிவேலு. ஆனால் அரங்கில் மட்டும் மயான அமைதி. நான் படம் முழுவதுமே அப்படித்தான் இருந்தேன். யோசித்துப் பார்த்தால் ஒரு இடத்தில் கூட நான் சிரிக்கவேயில்லை.

பாடல்கள் எல்லாம் வேகத்தடை தான். பார்க்கும் போது சலிப்பு தட்டுகிறது. 

இந்தப்படத்தின் இயக்குனர் யுவராஜ் இயக்குனர் சிம்புதேவனின் ரசிகராக இருப்பார் போல இருக்கிறது. அதனால் தான் சில சமூக கருத்துக்களை அதாவது உலகமயமாக்கல் போன்ற விஷயங்களை எடுத்து அங்கங்கே அவரைப் போலவே விரவியிருக்கிறார். ஆனால் அது பொருந்தவேயில்லை.

நாயகி அழகாக மட்டும் இருந்தால் போதுமா. ஒரு படம் எடுக்கும் போது நாயகிக்கு வசனம் சொல்லிக் கொடுத்து  உச்சரிக்க சொல்லும் அளவுக்கு கூட உழைப்பில்லையென்றால் எப்படி. ப்ராம்ட் கூட ஓழுங்கில்லாமல் அவர் ஏதோ ஒன்றுக்காக வாயசைக்கிறார். வசனம் ஏதோ ஒன்று வருகிறது. அடப் போங்கப்பா.

படத்தில் மெச்சக்கூடிய விஷயங்கள், ஆர்ட் டைரக்ஷனும், ஒளிப்பதிவும் தான், கச்சிதமாக இருக்கிறது. மற்றபடி உங்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரை மட்டுமல்ல, ஒரு டிக்கெட்டை 120ஓவா கொடுத்து வாங்கிப் பார்க்கும் என்னைப் போன்ற ரசிகர்களையும் இப்படி அம்போன்னு விட்டுடீங்களே அப்பு.

தெனாலிராமன் - பழைய மொந்தை ரொம்ப புளிச்ச பழைய கள்ளு

ஆரூர் மூனா

Saturday, April 12, 2014

பஞ்சேந்திரியா - மாயா பஜாரும், ஏர்டெல் பொண்ணும்

பர்மா பஜார்ல இருந்து அள்ளிக்கிட்டு வந்த டிவிடிக்களில் இந்த படத்தை மட்டும் ரொம்ப நாட்களாக பார்க்காமல் இருந்தேன். காரணம் ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். சூப்பர், பிரமாதமாக இருந்தது. நான் படத்தின் விமர்சனத்தை எழுதவில்லை. அதற்கு ஜாக்கி இருக்காப்ல, இன்னும் பல ஹாலிவுட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நான் ரசித்த ஒரு மாஜிக் காட்சியையும் அதற்கான தந்திர முடிச்சையும் உங்களிடம் பகிர்கிறேன்.

படத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு அரங்கில் மாஜிக் காட்சியை நிகழ்த்துவார்கள். அது என்னவென்றால் பல்லாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அந்த அரங்கில் இருக்கும் ஒருவரை ராண்டமாக தேர்ந்தெடுத்து அவர் கணக்கு வைத்து இருக்கும் வங்கியில் இருக்கும் பணத்தை அவரை வைத்தே திருடுவது.

மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க பந்து குலுக்கி ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவர் ப்ரெஞ்சுக்காரர். அவர் வங்கி கணக்கு இருப்பதோ ப்ரான்ஸில். அந்த அரங்கில் இருந்தே அவரை வங்கியின் உள் அனுப்பி திருட வேண்டும், இது தான் டாஸ்க்.

அவரை மேடைக்கு அழைத்து அவரின் கையில் ஒரு ப்ளேயிங்கார்டை கொடுத்து அதில் கையெழுத்திட வைத்து அதனையும் அந்த ஷோவின் டிக்கெட்டையும் அவரிடமே கொடுத்து பேங்க் வாலட்டின் உள் வைத்து விட்டு பணத்தை திருடி வரும் படி சொல்கிறார்கள்.

அவரை லைட்டாக மெஸ்மரைஸ் செய்து அவருக்கு கேமிராவுடன் கூடிய ஹெல்மெட் மாட்டி விட்டு ஒரு பொட்டிக்குள் நுழைத்து மூடி உள்ளே தள்ளுகிறார்கள். 

அடுத்த வினாடி அவர் அவரின் பேங்க் வாலட்டின் உள்ளே விழுகிறார். அதிலிருந்து அவரது தலையில் இருக்கும் காமிரா மூலம் மற்றவர்கள் என்ன நடக்கிறது என்பதை அரங்கினுள் தெரிந்து கொள்கிறார்கள். 

ப்ரெஞ்சுக்காரர் மேஜிக்காரர்களின் சொல்படி ஒரு பட்டனை தட்ட பணத்திற்கு மேலே இருக்கும் சிம்னி வழியாக காற்று உறிஞ்ச அதன் வழியாக பணம் மேலே எழும்புகிறது.

அதே நேரம் சரியாக வங்கியை திறக்க பேங்க்காரர்கள் கதவின் அருகே இருக்கிறார்கள். பணம் பாதி சிம்னி வழியே நுழைகிறது. வாலட்டின் கதவை திறக்கப் போகிறார்கள். முழு பணமும் உள்ளே போய் அவர் வைத்த ப்ளேயிங் கார்டும் ஷோ டிக்கெட்டும் மட்டும் மிஞ்ச ப்ரெஞ்சுக்காரரும் மாயமாகி அமெரிக்கா வந்து விடுகிறார். பேங்க்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ச்சி அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். 

இது எப்படி சாத்தியம். ஆனால் இது பக்கா ப்ளான் பண்ண திருட்டு. அதற்கு பொருந்தும் மாதிரியான பதிலை படத்தில் இயக்குனர் வைத்து இருக்கிறார். பாருங்கள் சூப்பராக இருக்கும்

படத்தின் பெயர் Now You See me
-------------------------------------------------------

இதுக்கு மேல எப்படிய்யா இறங்க முடியும்


-------------------------------------------------

இன்னிக்கி ஆபீஸ் நம்பருக்கு ஏர்டெல் பிராட்பேண்ட் கஸ்டமர் கேர்லயிருந்து போன் வந்தது. பாவம் அந்த பொண்ணு, வேலைக்கு புதுசுபோல. என்கிட்ட பேசி புது ப்ளானை விளக்கறதுக்குள்ள அதுக்கு வேர்த்து கொட்டிடுச்சி.

நாம சும்மாவே லந்து கொடுப்போம். புதுசா ஒருத்தர் மாட்னா விடுவோமா என்ன, பத்து நிமிசம் கலாய்ச்சேன். அந்த பெண்ணும் ஒவ்வொரு முறையும் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் மேனேஜர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி கட் பண்ணி கட் பண்ணி மூணு முறை கூப்ட்டுச்சி, 

ஒரு லெவலுக்கு மேல அந்த பொண்ணு திணறியதை பார்த்ததும் பாவமாயிடுச்சி. கேள்விகள் எதுவும் கேட்காம அமைதியா இருந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு என் ப்ராண்ட்பேன்ட் ப்ளானை மாத்திக்கிட்டேன்.

நானாவது பரவாயில்லை, இன்னும் மோசமா கலாய்க்கிறவனுங்ககிட்ட மாட்னா அழ விட்டுடுவானுங்க. உண்மையிலேயே இந்த வேலை பார்க்குற பொண்ணுங்க பாவம் தான் போல.

----------------------------------------------------

ஒரு ப்ளாஷ்பேக் தருணம்

படத்தில் உள்ள அனைவரும் எஸ்ஐயிட்டி அருகில் இருக்கும் ஒரு தாய் ரெஸ்டாரண்ட்டில் புல் கட்டு கட்டி விட்டு வந்த போது கொடுத்த போஸ். 




ஆரூர் மூனா

Monday, April 7, 2014

பஞ்சேந்திரியா - மான் கராத்தே படம் பார்த்த கதை, படித்த புத்தகம்.

நான் அம்பத்தூரில் இருந்த வரை காலை எட்டு மணி சிறப்பு காட்சிக்கு போய்க் கொண்டு இருந்தேன். அதன் பிறகு பெரம்பூர் வந்ததும் சிறப்புக் காட்சிக்கு அதிகம் மெனக்கெடுவதில்லை. 

ஏஜிஎஸ் அல்லது எஸ்2வில் இருக்கும் சிறப்புக் காட்சிகளைத்தான் பார்த்து வந்தேன். இந்த முறை எங்கள் பகுதியில் எங்குமே சிறப்புக் காட்சிகள் இல்லை.  ராக்கியில் 08.30 மணிக்காட்சி இருந்தது.

நான் மட்டும் கிளம்பலாம் என்று பார்த்தால் வீட்டில் தம்பியும் பங்காளியும் படத்துக்கு வர தயாராக இருந்தார்கள். அப்பா, அம்மாவிடம் படத்துக்கு என்று சொல்லிவிட்டு கிளம்ப முடியாது.

நான் வேலைக்கு போவதாக சொல்லி கிளம்பி லோகோ ஸ்டேசனில் பைக்கை விட்டு காத்திருந்தேன். பங்காளி தி.நகருக்கு போவதாக சொல்லிவிட்டு நடந்து வர தம்பி காரை வாட்டர் சர்வீஸ் செய்து வருவதாக எடுத்து வந்தான்.

மூவரும் காரில் ஏறி அம்பத்தூருக்கு பயணமானோம். அப்பவே மணி 08.15. இனி கிளம்பி எட்டரைக்குள் சேர முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் வண்டியை விரட்டினால் லூகாஸ் பிரிட்ஜ் தாண்டியதும் பயங்கர டிராபிக், 

வண்டியை கொரட்டூர் சிக்னலில் வலது புறம் திருப்பி பால்பண்ணை ரோட்டில் சென்று பைபாஸ் ரோட்டை கடந்து அம்பத்தூர் எஸ்டேட் உள்ளே நுழைந்து ஆட்டோ செல்லும் சந்தில் காரை சுகுராக விட்டு கனராபேங்க்கை அடையும் போது மணி 08.40. காரை பார்க் செய்து அரக்கப்பரக்க உள்ளே நுழைந்தால் முதல் பாடல் ஓடிக் கொண்டு இருந்தது. 

தம்பியும் பங்காளியும் இப்படியெல்லாம் சிரமப்பட்டு படம் பார்ப்பதெல்லாம் தேவையா என்று வாக்குவாதம் செய்தார்கள். இதுவும் நம்ம வரலாற்றில் வரும் என்பது அவர்களுக்கு தெரியுமா என்ன.

---------------------------------------------------------------

 இதுதான் பயணிகள் ரயில்


 -------------------------------------------------------

வாரம் ஒரு வாசக நண்பர் அறிமுகம்.

சிங்கப்பூரில் ஒரு நண்பர் இருக்கிறார், அவரது பெயர் ஹம்சா முகமது. சிங்கப்பூரில் சொந்தமாக ஹோட்டல் வைத்து இருக்கிறார். நம் தோத்தவண்டா வலைத்தளத்தில் நெடுநாள் வாசகர், அதனாலேயே நண்பர். 

எந்த படம் பார்ப்பதாக இருந்தாலும் நமது விமர்சனத்தை படித்து விட்டு தான் செல்வார். அது போல் எனக்கு முன்னால் சிங்கப்பூரில் படம் பார்த்து விட்டு நன்றாக இருந்தால் எனக்கு சாட் செய்து படம் பார்த்து விமர்சனம் போடும்படி ரெகமண்ட் செய்வார். 

நிறைய பேசியிருக்கிறோம். நேரில் சந்தித்ததில்லை. ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் அழைப்பு விடுப்பார். நான் அந்த சமயங்களில் எதாவது ஒரு வேலையில் சிக்கியிருப்பேன். இப்படியாக நான்கு முறை நடந்து இருக்கிறது. 

ஆனால் அவர் சலித்துக் கொள்ளவே மாட்டார். இந்த முறையும் அப்படியே ஆனது. அடுத்த முறை லீவு போட்டு சந்திக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். கண்டிப்பாக மீட் பண்ணுவோம் நண்பா.

அடுத்த வாரம் ராணுவத்தில் பணிபுரியும் ராஜீவ் நிஷாந்த்.

-------------------------------------------------------

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா


----------------------------------------------------------------

படித்த புத்தகம்

வெல்லிங்டன் என்ற புத்தகம் சுகுமாரன் எழுதியது. புத்தக கண்காட்சியில் பிரபாகரனின் வற்புறுத்தலுக்காக வாங்கினேன். முதல் விமர்சன கட்டுரையில் கூட இந்த இடம் உருவான கதை என்று இருந்தது. 

படிக்கத் தொடங்கிய பிறகு தான் எல்லாம் போச்சு என்று தெரிந்தது. முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே. கோயமுத்தூர் ஆங்கிலேய கலெக்டர் ஒருவர் யாருமே நுழையாத மேற்கு தொடர்ச்சி மலைக்கு ரோடு போடுவதையும் பங்களாக்கள் கட்டுவதை பற்றியும் இருந்தது.

சரி சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்தேன். பிறகு கதை தவ்வி தற்காலத்திற்கு வந்து நொண்டியடிக்க ஆரம்பித்தது. ஒரு கோவையில் இருந்து ஒரு சிறுவன் தத்துக் கொடுக்கப்பட்டு வெல்லிங்டன் வருகிறான். அங்கு நடக்கும் சண்டை, சச்சரவு, கும்மாளங்கள் தான் கதை. சாதாரண கதை தான். வார்த்தைப்படுத்தியதும் சுமார் தான். சவசவவென்று நகர்கிறது. 

ஆனால் என்னை என்னவோ இதில் இருக்கு என்று நம்பி வாங்க வைத்தார்கள் பாருங்கள். அதில் தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் தோற்றவன் நானாக மட்டுமே இருக்கட்டும். 

ஆரூர் மூனா

Friday, April 4, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

காலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் விசிலடித்து ரசிக்கிறோம். காரணம் அதை சொல்பவர் சிவகார்த்திகேயன்.


ஏற்கனவே நிறைய படங்களில் வந்த க்ளிஷே காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ரசிக்கிறோம் காரணம் அந்த காட்சிகளில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நாம் ஏற்கனவே தொலைக்காட்சி புண்ணியத்தில் சிவகார்த்திகேயனை நம்ம வீட்டு ஆளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அவர் அதற்கான பலனை சினிமாவில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு தெரிந்து 2005 அல்லது 2006 காலகட்டத்தில் சாதாரணமாக சிவகார்த்திகேயன் முன்வரிசையில் இருக்க நான் உதயம் திரையரங்கில் ஏதோ ஒரு படம் பார்த்து இருக்கிறேன். இன்று ராக்கியில் காலை 08.30 மணி சிறப்பு காட்சி சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படத்தை பார்க்கிறேன். 

சாதித்து விட்டாயடா சிவகார்த்திகேயா. 



நான்கு கம்ப்யுட்டர் இஞ்சினியர் நண்பர்களுக்கு சாமியார் மூலமாக சில மாதங்களுக்கு பிறகு வரவேண்டிய நாளிதழ் கிடைக்கிறது. அதில் உள்ள செய்திப்படி குத்துசண்டை போட்டியில் பீட்டர் என்பவர் குத்து சண்டை போட்டியில் இரண்டு கோடி வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் உண்மையில் பீட்டர் ராயபுரத்தில் வெட்டியாக சுற்றிக் கொண்டு இருக்கும் வாலிபன். குத்துசண்டை பற்றி அனாஆவன்னா கூட தெரியாது. அவனை ஸ்பான்சர்ஷிப் செய்து அவனுக்கு கிடைக்கப் போகும் பரிசுப்பணத்தை பெற நினைக்கிறார்கள். இது நடந்ததா என்பது தான் படத்தின் கதை.


இதை பேப்பர் நியுஸ், சாமியார் என்ற மோல்ட்டை எடுத்து விட்டு பார்த்தால் சாதாரண கதை தான். ஆனால் அந்த மோல்ட் தான் படத்திற்கு ஒரு விறுவிறுப்பை கொடுத்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.

நாயகனாக சிவகார்த்திகேயன், நமக்கு பிடித்த ஆள் ஆகிட்டாப்ல. அதனால் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நன்றாக நடிக்கிறார். மாஸ் ஹீரோ ஆகி விட்டார். கதையை தேர்ந்தெடுப்பதில் சறுக்காமல், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல், பில்ட்அப் காட்டாமல் இப்படியே தொடர்ந்தால் தமிழ்சினிமாவின் மணிமகுடம் சாருக்கு தான்.


ஹன்சிகா நாயகியாக இளைத்து அசத்தியிருக்கிறார். நடித்தே ஆக வேண்டிய பாத்திரம் என்பதால் நடித்து இருக்கிறார். நடிப்பு என்றால் நடிகர்திலகம் அளவுக்கு இல்லை. அவர் பாக்கெட் பேனா அளவுக்கு தான்.டார்லிங் டம்பக்கு பாடல் முன்பே டீசராக வந்த போது அசத்தியிருந்தது. குட்டைப் பாவாடையில் ஆட்டம்  போட்டு இளசுகளின் இதயத்தில் பால் வார்த்து இருக்கிறார்.

படத்தில் சதீஷின் ஒன்லைனர் காமெடிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. சதீஷ் வாகை சூடவா படத்தில் தான் கவனிக்க வைக்கும் அளவுக்கு சில காட்சிகள் நடித்து இருந்தார்.  மூன்று வருடத்திற்குள் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி. இன்னும் சில படங்கள் இது போல் அமைந்தால் சந்தானம் சீட்டை பறித்து விடுவார்.

ஏற்கனவே ஹிட்டான பாடல்கள் பார்ப்பதற்கும் குளுகுளுவென்று இருக்கிறது. 

சூரியும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து அபத்த காமெடியா இருந்தாலும் அதை மூளைக்கு எட்ட விடாமல் சிரிக்க வைத்து விட்டு செல்கிறார்.

சிவா ப்ரிமிலினரி ரவுண்டுகளில் ஜெயிப்பதை சற்று காமெடி குறைத்து விட்டு அவர் முயற்சியில் ஜெயிப்பது போல் இருந்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும். பைனல் வரை ஜாலியாக வந்து விடுவது தான் லைட்டாக உறுத்துகிறது.

மற்றபடி எந்த குறையும் இல்லை. குடும்பத்துடன் சென்று கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் சிரித்து விட்டு வரலாம். இந்த ஆண்டின் கோடை விடுமுறையை நிறைவாக்க வந்திருக்கும் எண்டர்டெயினர் மூவி.

ஆரூர் மூனா.

Wednesday, April 2, 2014

டொமைன் நேம் மாறுகிறது - தடங்கலுக்கு வருந்துகிறோம்.

நம்மையெல்லாம் யார் சீண்ட போகிறார்கள் என்ற நினைப்பில் தான் நமது வலைதளத்தின் டொமைன் நேம் காலாவதியாகும் நேரத்தில் ஒரு அலுப்பின் காரணமாக விட்டு விட்டேன். 


டொமைன் நேம் டியு டேட் காலாவதி ஆனது தெரிந்து நண்பர் ஸ்கூல்பையன் தன்னுடைய கார்டை பயன்படுத்தி ரினீவல் செய்து கொள்ளும்படி சொன்னார். 

ஆனால் அதனைப் பற்றிய டெக்னிக்கல் அறிவு நமக்கு குறைவாக இருந்ததால் அதற்குரிய ஆட்களை பிடித்து பணம் கட்டுவதற்குள் நமக்கு ஆகாத குரூப்பைச் சேர்ந்த ஒருவரோ அல்லது என்கூடவே இருந்து சிரித்துக் கொண்டு இருக்கும் ஒரு நல்லவரோ தான் இப்படி குறுக்குசால் ஓட்டி அந்த டொமைன்நேம்மை வாங்கி விட்டார்.

இந்த நேரத்தில் தான் நமது வலைத்தளத்தை ரெகுலராக படித்து வரும் வாசக நண்பர்கள் நிறைய பேர் விவரம் விசாரித்தனர். அப்போது தான் எனக்கே நமது வலைதளத்தை முகம் தெரியாத இத்தனை பேர் படிக்கின்றனர் என்றும் அவர்கள் சும்மா படித்து விட்டு செல்லவில்லை தொடர்ந்து நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியும்.


என் வெப்சைட் முகவரி நம்மை விட்டு கைத்தவறி போனதால் பேஸ்புக்கில் பொங்கல் வைத்த நண்பர்கள் ஏராளம். இதனை சரக்கடித்து பார்ட்டி கொண்டாடியவர்களும் உண்டு.

என்ன நடந்தாலும் அதைப் பற்றி கலங்குகிற ஆளா நாம், இடியே விழுந்தாலும் அசர மாட்டோம், இது வெறும் லக்ஷ்மி வெடி. 

இந்த நேரத்தில்  நான் கேட்டதும் உடனடியாக அதற்கு மாற்று டொமைன் நேம் வாங்கித் தந்த தோழர் நாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி.

ஆக நண்ப்ர்களே நமது தோத்தவண்டா வலைத்தளத்தின் டொமைன் நேம் www.amsenthil.com/ என்பதில் இருந்து www.amsenthil.in/ என்று மாறுகிறது. இன்று அதற்கான வேலை நடப்பதால் பழைய பெயரிலேயே இருக்கும்.

இரண்டு நாட்களுக்குள் www.amsenthil.in/ என்ற முகவரிக்குள் வந்தால் தோத்தவண்டா வலைத்தளம் எப்போதும் போல் அனைத்து பதிவுகளுடனும் இருக்கும்.

விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும், உதவிய நல்ல உள்ளங்களுக்கும், நலம் விசாரித்த முகம் தெரியா வாசக நண்பர்களுக்கும், கும்மியடித்த நல்லவங்களுக்கும், தொல்லை ஒழிஞ்சதுடா என்று சந்தோஷப்பட்ட வேண்டப்பட்டவர்களுக்கும், கிரிமினல்த்தனமாக டொமைன்நேம் லவட்டிய அந்த நல் உள்ளம் கொண்ட மகாத்மாவுக்கும் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா

Monday, March 31, 2014

சவுதியில் இஞ்சினியர்களுக்கு வேலை வாய்ப்பு

கவனிக்க சம்பளம் யுஎஸ் டாலரில்
URGENTLY REQUIRED FOR biggest
ROCK GROUP COMPANY IN ksa
CLIENT INTERVIEW IN CHENNAI ON 5TH APRIL 2014

Sr
POSITION
QTY
SALARY IN
JOB DESCRIPTION
(USD)
1
Civil Engineer
20
1600-1800 -Negotiable
Candidates must have BE or B .Tech degree
with  minimum5 yrs of exp in high rise building construction industry

2
Planning Engineer
20
1600-1800-Negotiable
3
Mechanical Engineer
10
1600-1800-Negotiable
4
Electrical Engineer
10
1600-1800-Negotiable
5
QC Inspector - Architectural
10
1600-1800-Negotiable
6
QC Inspector - Civil
10
1600-1800Negotiable
7
QC Inspector - Electrical
10
1600-1800Negotiable
8
QC Inspector - Mechanical
10
1600-1800Negotiable
9
QC Supervisor - Materials
10
1600-1800Negotiable
10
Quantity Surveyor - Civil
10
1600-1800Negotiable
11
Surveyor - Mechanical
10
1600-1800Negotiable




12
Quantity Surveyor - Electrical
10
1600-1800Negotiable
13
Material Engineer - Civil

1600-1800Negotiable
14
Design Engineer - Structural
20
1600-1800Negotiable

இந்திய ரூபாயில் ஒரு யுஎஸ் டாலர் என்பது ரூ.59.90 பைசா.

Important Note:

Deployment within 1 week
08 Hrs Duties
01 year renewable Contract

ஆர்வமும் தகுதியும் உள்ள கேண்டிடேட்கள் 9940173180, 044-43327466 ஆகிய எண்களையோ அல்லது vikashconsultant@gmail.com என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...