சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, February 25, 2014

பஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்

நான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு லிஸ்ட் போட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் தெறிச்சி ஓடி விட, அப்பாவியாய் நின்றிருந்த என் பெயரை மட்டும் என் முதுநிலை பொறியாளர் எழுதிக் கொண்டு சென்று விட்டார்.

நானும் நேற்று அதற்கான ஆவணங்களை கொடுத்து விட்டு பாரம்மில் கையெழுத்தும் போட்டு வந்து விட்டேன்.வந்த பிறகு ஆளாளுக்கு இதற்கு முன்பு தேர்தலில் நடந்த சண்டைகளை சொல்லி பயமுறுத்துகிறார்கள். இதற்கு மேல் பின்வாங்கவும் முடியாது. 

நான் பணிபுரிய போகும் வாக்குச்சாவடி புளியந்தோப்பு, வியாசர்பாடி பகுதிகளில் வருகிறது. சாதாரணமாகவே அந்த ஏரியாவுல சட்டைய கிழிச்சிக்குவாங்க, தேர்தல் வேற வந்தா கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான்.

என்ன இருந்தாலும் இதுக்கெல்லாமா அசர்ற ஆள் நாம, தைரியமா களத்துல இறங்கி ஒரு கை பார்த்துட வேண்டியது தான். எவனாவது வந்து கள்ளவோட்டு போட்டான், அப்படியே புடிச்சி கொடுத்துட வேண்டியது தான். பிறகு வரும் பிரச்சனைகளை போலீஸ்ஜீப்பில் பதுங்கியபடி பார்த்துக் கொள்ளலாம்.

------------------------------------------------------

நக்கீரன் வீட்டு ஐபாட்



--------------------------------------------------------

பார்த்த திரைப்படம்

Jolly LLB (ஹிந்தி)

இந்த படத்தை இத்தனை நாள் எப்படி தவறவிட்டேன் என்றே தெரியவில்லை. அபத்தமான சில காட்சியமைப்புகள் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அட்டகாசமான திரைப்படம் இது. 

ஒரு கோடீஸ்வர வீட்டு பையன் நள்ளிரவில் குடித்து விட்டு ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த ஏழைகள் மேல் ஏற்றிக் கொன்று விடுகிறான். அந்த வழக்கை ராம் ஜெத்மலானி போன்ற ஒரு பெரிய வக்கீலான பொமன் இரானி சாதுர்யமாக வாதாடி அவனை குற்றமற்றவன் என வெளியில் கொண்டு வந்து விடுகிறான்.

வாதாட வழக்குகள் இல்லாமல் ஈயடித்துக் கொண்டு இருக்கும் சாதாரண வக்கீல் அர்ஷத் வர்சி தான் படத்தின் நாயகன். அம்ரிதா ராவ்வை காதலித்துக் கொண்டு இருக்கிறார். தான் பிரபல வக்கீலை எதிர்த்து வாதாடினால் தனக்கு கேஸ் வரும் என்று, இந்த கார் ஏற்றிய வழக்கு சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார் அர்ஷத்.

அந்த கோர்ட்டின் நீதிபதியான சவுரப் சுக்லாவோ பொமன் இரானியின் நண்பர். இந்த கேஸை கைவிட்டால் இருபது லட்சம் லஞ்சம்  கொடுப்பதாக இரானியிடம் இருந்து வந்த ஆட்கள் சொல்லி அட்வான்சாக இரண்டு லட்சம் லஞ்சம் கொடுக்கிறார்கள். 

லஞ்சம் வாங்கியவன் வேண்டாம் என்று அம்ரிதா ராவ் அர்ஷத்தை விட்டு விலகி செல்கிறார். பிறகு லஞ்சம் வேண்டாம் என்று மறுக்கும் அர்ஷத் இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி எப்படி இந்த கேஸை நடத்தி ஜெயிக்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவே எடுத்துச் சென்று இருக்கிறார்கள். 

மெய்ன் ஹூன் நா வில் இரண்டாம் நாயகியாக வந்த அம்ரிதா ராவா இவர். இளைத்துப் போய் இளமை போய் சொய்ங்கென இருக்கிறார். 2004ல் மெய்ன் ஹூன் நா பார்த்து விட்டு கிறுக்குப்புடிச்சுப் போய் திரிந்த கூட்டத்தில் நானும் ஒருவன். கூடுதலாக சுஷ்மிதாவையும் பார்த்து எனக்கு ப்ரச்சோதகம் ஏற்பட்டது இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம்.

நீதிபதியாக வரும் சவுரப் சுக்லாவின் நடிப்பு ஏஒன். ஹேராமில் முதல் பாடலான ராமரானாலும் பாபரானாலும் பாடலுக்கு கமல் ஷாருக் இருவருடனும் இணைந்து ஒரு குண்டான நடிகர் நடனமாடியிருப்பாரே அவர் தான் இவர். இருக்கையில் அமர்ந்ததும் டீ சாப்பிட்டுக் கொண்டே கண் அருகில் பேப்பரை வைத்துப் பார்த்து கேஸ் பற்றிய ஒப்பீனியன் சொல்லும் தோரணை அருமை.

ஒரு பஞ்சாயத்தை சாப்பாத்தியை பிய்த்து சாம்பாரில் நனைத்து சாப்பிட்டுக் கொண்டே தீர்த்து வைக்கும் காட்சியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். 

கொஞ்சம் மெதுவாக சென்றாலும் சுவாரஸ்யமான படமே. அவசியம் ஒரு முறை பார்க்கலாம். 

-----------------------------------------------------

எங்க போனாலும் நம்மாளுங்க இப்படித்தான்



---------------------------------------------------------

படித்த புத்தகம்

லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய உப்பு நாய்கள் என்று ஒரு நாவலை படித்தேன். வடசென்னையின் கறுப்புபக்கத்தை, வக்கிரத்தை உச்சம் கொண்டு படைத்திருக்கும் புத்தகம் இது. 

நாயகன் ஒருவன், அர்மேனியன் தெருவில் வளர்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அங்கு சர்ச்சில் இருக்கும் கன்னியாஸ்திரிகளை மேட்டர் செய்கிறான். அதில் ஒருவள் கர்ப்பமாகிறாள். தினமும் ஆணுறை அணிந்து தானே செய்கிறோம் எப்படி கர்ப்பமானாள் என்று குழப்பமாகிறான். பிறகு தான் தெரிகிறது. இதற்கு காரணம் பாதிரியார் என்று பிறகு தெரிய வருகிறது.

நாயகனின் அம்மாவும் நாயகனின் நண்பரும் சல்லாபமாக இருக்கிறான். இதனை நேரில் பார்க்கும் நாயகன் நண்பனின் ஆணுறுப்பை வெட்டி விடுகிறான். 

பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணும் போலி மருத்துவர் பெண்ணும் லெஸ்பியன் உறவு கொள்கிறார்கள். 

ஒரு  சேட்டு வீட்டுப் பெண் கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டு இருக்கிறாள், பக்கத்தில் இருக்கும் வாலிபன் அந்த பெண்ணை உஷார் செய்து அரங்கிலேயே அவள் கையில் விந்தை பீச்சுகிறான்.

என்னடா ஒரே கவுச்சியாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். இவ்வளவும் இந்த புத்தகத்தில் உள்ள வரிகள். இதனை ரசித்து மட்டுமல்ல அருவறுப்புடன் கூட படிக்க முடியாது. ராஜீவ்காந்தி சாலைக்கு கொஞ்சமும் குறைவில்லாத வக்கிரம் இதிலும் நிறைந்திருக்கிறது.

காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. 

இந்த மாதிரி அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கூட திட்டலாம் தான், ஆனால் அதனால் இந்த புத்தகத்தின் சர்க்குலேசன் இன்னும் அதிகமானால் என்ன செய்வது. அதனால் இத்துடன் விட்டு விடுகிறேன்

ஆரூர் மூனா

16 comments:

  1. அப்போ உங்களுடைய ஓட்டை யாரு போடுவாங்க?

    ReplyDelete
    Replies
    1. தபால் ஓட்டு போட சொல்வாங்க. வாக்கு எண்ணிக்கை தினத்தின் போது முதலில் எண்ணப்படுவது தபால் ஓட்டுக்கள் தான்.

      Delete
  2. காப்பாத்திட்டீங்க,காப்பாத்திட்டீங்க e bay ல 150ரூவாக்கு ஆபர் குடுத்து இருந்தாங்க,உப்பு நாய்கள் தான் வாங்கலாம்னு இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அந்த காசுக்கு உப்புக் கருவாடு வாங்கி துன்ட்டு குஜாலா இருக்கலாம் கோகுல்.

      Delete
  3. Replies
    1. இந்த விமர்சனமே போதும்... யாரும் வாங்க தயங்குவார்கள்... நன்றி...

      Delete
    2. நன்றி தனபாலன்.

      Delete
  4. அதென்ன உப்பு நாய்கள்?.....’எச்சிலை நாய்கள்’னு தலைப்புக் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க

      Delete
  5. உப்பு நாய்கள் என்னுடைய லிஸ்டில் உள்ளது என்று நினைக்கிறேன்... வருகிற ஞாயிறு அந்த பக்கம் வரவேண்டிய வேலை இருக்கிறது... உங்களிடம் ஏற்கனவே வாங்கிய புத்தகங்களை கொண்டு வருகிறேன்... ராஜீவ் காந்தி சாலையையும், உப்பு நாய்களையும் தாரை வார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. அது என்ன இந்தப்பக்கம் வேலை இருக்கிறது. வர்றதே இதுக்காகத்தானே. வந்து எடுத்துக்க பிரபா.

      Delete
  6. ஒரே ஹிந்தி வாசனை..
    முடிந்தால் ராஜீவ் காந்தி சாலை தரலாம்...(வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது.. விலையோடு கொஞ்சம் பயம்) It will be returned...

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் பிரபா எடுத்துச் செல்வார். அடுத்த மாதம் பார்க்கலாம் பிரபாகரன்.

      Delete
  7. நன்றி ஜெயக்குமார் சார்.

    ReplyDelete
  8. ஐ-பாட் சூப்பரா இருக்கு.எவ்ளோ ஆகுது?

    ReplyDelete
  9. எது எப்படியோ வாக்குசாவடி அனுபவங்கள் என்று அதன் முன் நாள் முதல் தேர்தல் நாள் மாலை வரை நிறைய விஷயங்கள் நடக்கும்.உங்கள் பதிவுக்கு மேட்டர் நிறைய கிடைக்கும்.அநேகமாக வாக்கு சாவடி அனுபவங்கள் பற்றி நெருக்கமாக எழுதபோகும் பதிவர் நீங்கள் தான்.இப்பவே சொல்லிடுறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...