சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, June 26, 2013

குடிகாரர்களின் சம்பாஷனைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நான் அம்பத்தூர் முருகன் திரையரங்கு அருகில் இருந்த பாரில் சரக்கடித்துக் கொண்டு இருந்தேன். என் எதிரில் இரு நபர்கள் அமர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்தனர்.


கொஞ்ச நேரத்தில் சண்டை முற்றிப் போய் இருவரும் கட்டி உருண்டனர். விஷயத்தை நான் புரிந்து சமாதானப் படுத்துவதற்குள் பலவிஷயங்கள் புரிந்துப் போயின. அப்படியே கொடுத்தால் ராவாக இருந்து படிக்க முடியாமல் போய் விடும். அதனால் கொஞ்சம் நாகரீகமாக கொடுத்துள்ளேன். படித்து ரசிக்கவும்.


ராசு : ஒல்லி நபர், அப்பா அம்மா கிடையாது, ஐம்பதை கடந்தவர், மனைவி குழந்தைகளுடன் வாழ்பவர்

சீனு : சற்று தாட்டியானவர், முப்பது வயதுக்காரர்,ராசுவின் பக்கத்து வீட்டுக்காரர், மனைவியின் தொல்லையால் அம்மாவை அடிப்பார், திட்டுவார். மனைவி சற்று ராட்சஸி.

விளக்கம் இது வரை....................


ராசு: நீ இப்படியெல்லாம் அம்மாவை திட்டுன தப்புங்க சார், அப்படியெல்லாம் பேசக்கூடாது சார், அம்மா என்பவர் தெய்வம்

சீனு : அட நீங்க வேற ஏதாவது ஒரு சமயத்துல அம்மா தப்பா பேசிடுது. அம்மாவையும் மனைவியையும் வச்சிக்கிட்டு ஒரே வீட்டுல நான் ரொம்ப சிரமப்படுறேன்.

ராசு : என்ன இருந்தாலும் அம்மா தெய்வம், எனக்கு அம்மா கிடையாது. அப்பா கிடையாது. அவர்களுக்காக வேண்டுகிறேன். நீங்கள் ரொம்ப தப்பா திட்டுகிறீர்கள். இப்படி பேசக்ககூடாதுடா டேய். தம்பி.

சீனு : நீங்களும் ஒரு வீட்டில் அம்மா மனைவியுடன் வாழ்ந்து பாரு தெரியும்.

ராசு : இருந்தாலும் அம்மாவை அடிச்சியா நீ கொன்னுபுடுவேன் படவா,

சீனு : போடா டேய்

ராசு : என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டுடா, அம்மாவை திட்டாதடா,

சீனு : அம்மாவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியலை, எனக்காக புரிந்து போக மாட்டேங்குறாள்


ராசு : சார் அப்படி சொல்லாதீங்க, நீங்க என் தம்பி மாதிரி, அம்மா தெய்வம்

சீனு : போடா டேய் என்னால சமாளிக்க முடியலை.

ராசு : பொண்டாட்டி மடி போதுமாடா நாயே, போய் நக்....டா

சீனு : அப்படி பேசாதடா கொன்னுடுவேன். ராஸ்கல்.

அடித்து உருளுகிறார்கள். இவர்களில் யார் நல்லவன், எனக்கு இன்று வரை புரியவில்லை. அம்மா அப்பா இல்லாத ராசுவா, இல்லை அம்மாவை திட்டினாலும் வைத்து காப்பாத்தும் சீனுவா.

இந்த பேச்சுகளுக்கு அப்புறம் கட்டிப் புரண்டவர்களை நான் எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

கல்யாணம் ஆன பக்கிகளா நீங்களாவது சொல்லுங்கள் அம்மா அப்பா
இல்லாத ராசு நல்லவரா, அல்லது அம்மாவை வைத்து காப்பாத்தினாலும் மனைவியின் தொந்தரவுக்காக அவ்வப்போது திட்டும் சீனு நல்லவரா

ஆரூர் மூனா செந்தில்

7 comments:

  1. நல்லவரு நீங்கதான்...அதில என்ன சந்தேகம்

    ReplyDelete
  2. கொடுமை! இதையெல்லாம் கேக்கறத்துக்கு நீங்க குடிக்கப்போகாம இருக்கலாம்!

    ReplyDelete
  3. நீங்களும் அவர்களைப் போல் நல்லா தண்ணி அடிச்சிருந்தா எங்களுக்கு இந்த பிரச்னை வந்திருக்காது. இருங்க ஒரு பெக் போட்டுட்டு வந்து உங்களை ஒரு கை பாக்குறேன்

    ReplyDelete
  4. இந்த கதையை எழுதிய ஆனா மூனா மட்டுமே நல்லவர்!!!

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. சாமாதானம் செய்த நீங்கள் நல்ல வருதாங்கோ!ஹீ

    ReplyDelete
  7. நான் பொறந்ததும் திருவாரூர் தான் (முக்தி நிச்சயம்) பொண்ணு எடுத்ததும் திருவாரூர் தான். பொண்டாட்டி சாதுவா இருந்தாலும் அம்மாக்களுக்கு பெத்த பிள்ளை மீதே அவர்கள் திருமணத்திற்கு பிறகு நம்பிக்கை வரமாட்டேங்குது. என்னத்த சொல்றது இதையும் விட முடியாது அதையும் விட முடியாது. ரெண்டுபேரும் நல்லவங்க தான். அவுங்க பிரச்சனைய பார்த்து உங்க பிரச்சினையை மறந்துடீங்க போலருக்கு இல்லன்னா இன்னும் ரெண்டு பெக் அதிகமா போயிருக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...