சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, January 24, 2013

ஐ சப்போர்ட் கமல்ஹாசன்

சின்ன வயதிலிருந்தே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. எந்த ஒரு குழுவிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என இரு பிரிவு இருக்கும். நான் ரஜினி ரசிகர் குழுவில் இருந்தேன். அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.


தளபதியும் குணாவும் ஒரே நாளில் வெளியான போது குணாவை மொக்கை என்று கிண்டல் செய்து எங்கள் தெருவில் போஸ்டர் எல்லாம் ஒட்டினோம். போஸ்டர் என்றால் காசு கொடுத்தா அடிக்க முடியும். நோட்டு புத்தகத்தில் இருந்து பேப்பரை கிழித்து அதில் எழுதி சோற்றுப்பருக்கைகளை கொண்டு ஒட்டுவோம்.

அதே போல் பாண்டியனும் தேவர் மகனும் ஒரே நாளில் வெளியான போது கமல் ரசிகர்களிடம் இருந்து அதே போன்றதொரு அவமானத்தை நாங்கள் திரும்ப வாங்கிக் கொண்டோம். எனக்கு கூட தேவர்மகன் அளவுக்கு பாண்டியன் சூப்பர் ஹிட்டாக அமையவில்லையே என்று அழுகையாக வந்தது.

பிறகு வயது ஏற ஏற மெச்சூரிட்டி வந்து எந்த படத்தை நாங்கள் மொக்கை என்று காலி செய்து கழுவி ஊத்தினோமோ அதே குணா எனது சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தில் கமலின் உழைப்பு அசர வைத்தது.


அன்றும் இன்றும் என்றும் எனது பேவரைட் படம் அன்பே சிவம் தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம் தான். ஆனால் அந்த படம் கூட சரியாக ஒடவில்லை. இன்று நமக்கு சரியான மொக்கை என்று நாம் நினைக்கும் கமல் படம் சில வருடம் கழித்து மறக்க முடியாத படமாக அமைகிறது.

இப்பொழுது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு இந்த படத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லை. எப்பொழுதும் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் நான் இந்த படத்திற்கு முன்பதிவே செய்யவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் கமலை ஆதரிக்காவிட்டால் மனிதநேயமிக்கவனாக இருக்கமாட்டேன் என்று தோன்றியது.

அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு படம் எடுத்து வெளியில் வந்து நல்லாயில்லா விட்டால் அதுவே ஆட்டோமெட்டிக்காக பெட்டிக்குள் போகப் போகிறது. அதுவும் கமலின் படங்களுக்கு இரண்டே நிலை தான். சூப்பர் ஹிட்டு அல்லது சூரமொக்கை. சீண்டாமல் விட்டிருந்தாலே அது பாட்டுக்கு வந்து போய் இருக்கப் போகிறது.


படத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவனை வில்லன் போல் காண்பித்தால் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என்று நீங்கள் நினைப்பது நகைப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. இதே கமல் தான் ஹேராம் படத்தில் ஒரு இஸ்லாமியனான ஷாருக்கானை நல்லவனாகவும் தீவிர இந்துத்வாவான கமலை கெட்டவனாகவும் சித்திரித்திருந்தார். அதற்காக இங்குள்ள இந்துக்கள் எல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனாரா என்ன.

இத்தனைக்கும் படம் அட்டர் பிளாப். படம் பார்க்க போனவன் எல்லாம் இன்டர்வெல்லுடன் வெளியில் தெறிச்சி ஓடி வந்தான். சீண்டப்படாமல் போனதாலேயே அது புறக்கணிப்பட்டது. அது போல் இந்த படத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அதுவும் மொக்கையாக இருந்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும்.


இப்பொழுது வீணான பிரச்சனையை கிளப்பி படத்திற்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டியை கிளப்பி விட்டீர்கள். இது தேவையற்ற பிரச்சனை என்று நான் நினைப்பதால் கமல்ஹாசன் பக்கம் நான் நிற்கிறேன்.

இது நியாயமற்றது. ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு தங்களது சமூகத்தை அவமானப்படுத்துகிறது என்று நினைத்தால் அது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும். மற்றவர்களும் பார்த்து சொல்வது தானே நியாயமாக இருக்கும். ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து படத்தினை வெளியிட விடாமல் தடுக்க முடியுமென்றால் எதற்கு அரசாங்கம். நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகள் எதற்கு.

இடையில் ஒருவர் ப்ளஸ் விட்டு பொங்குகிறார். கமல்ஹாசன் முத்தக்காட்சியை வைத்து சமூகத்தை அவமானப்படுத்துகிறார் என்று. ஏனப்பா இவ்வளவு கட்டுப்பாடும் சம்பிரதாயங்களும் கொண்ட உன் சமூகத்தில் இருந்தே ஆர்யா படங்களில் முத்தக்காட்சியை வைக்கிறார். நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். சுத்தப்படுத்துவதை தங்களது இடத்தில் இருந்தே துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் ஆர்யாவை மன்னிப்பு கேட்க வைத்து பிறகு கமல்ஹாசனிடம் பொங்கலை வைத்துக் கொள்ளவும்.

ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.

தமிழ்நாட்டுல மட்டும் தானே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். நான் ஆந்திராவுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னைப் போல் பலர் காலைக் காட்சி பார்க்க ஆந்திரா கிளம்புகின்றனர். நகரியிலோ அல்லது புத்தூரிலோ பார்த்து விட்டு ஒரு மணிநேரத்தில் சென்னைக்கு திரும்பி விட முடியும். அநியாயமா ரஜினி ரசிகனான என்னை கமலுக்கு ஆதரவாக பதிவு போட வச்சிட்டீங்களே.

28ம்தேதி தடையை நீக்கினால் மறுபடியும் இரண்டாம் முறை பார்க்கப்போகிறேன். அவ்வளவு தான்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான


ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : நண்பர்களே மிக முக்கிய செய்தி சென்னையை அடுத்த ஆந்திராவின் எல்லையோர நகரான கூடூரில் படம் திரையிடப்பட்டு உள்ளது. அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலில் ஏறினால் இரண்டு மணிநேரத்தில் கூடூர் வந்துவிடும். அங்கு 40 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஹாயாக திரும்ப வந்து விடலாம்.



58 comments:

  1. இவங்க பண்ற அலம்பல் தாங்க முடியவில்லை ..
    பாருங்க ரஜினி ரசிகரை கமல் ரசிகராக மாத்தீட்டாங்க .
    அப்படியே நடுநிலை ஆளுங்களை இந்துத்துவா வாதிகளாக மாற்றும் வரை ஓயாமாட்டாங்க போல் இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தை சிங்கம். நாடு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பெரியார் கஷ்டப்பட்டு மக்களை பலபடிகள் முன்னேற்றி சென்றார். இது போன்ற மதவாதிகளும் சில ஜாதிவெறியர்களும் மீண்டும் சிலபடி நம்மை கீழிறக்கி விடுவார்கள் போல.

      Delete
    2. //பாருங்க ரஜினி ரசிகரை கமல் ரசிகராக மாத்தீட்டாங்க .
      அப்படியே நடுநிலை ஆளுங்களை இந்துத்துவா வாதிகளா//

      :)

      Delete
    3. சிங்கத்தின் வார்த்தைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது.

      Delete
    4. அஞ்சா ஸிங்கம்,

      ஹி..ஹி இதை நான் நேத்தே ஒரு மார்க்கப்பந்து பதிவில் சொல்லிட்டேன், "என்னையும் லோகநாயகர் படம் பார்க்க தூண்டிவிட்டிங்கன்னு"

      லோகநாயகர் படத்தை எல்லாம் ரிலீஸ் அப்போ பார்க்கவே மாட்டேன் , ஒரு வாரம் ஆகும், இப்போ உடனே பார்க்கணும் போல ஒரு நமைச்சல் :-))

      கூடிய சீக்கிரம் எங்கே என்னை மோடி ஆதரவாளரா மாத்திடுவாங்களோனு வேற பயமா இருக்கு அவ்வ்வ் :-((

      Delete
    5. வாங்க மோடியின் ஆதரவாளரே.

      Delete
    6. மூனா,

      சொல்லிடக்கூடாதே உடனே மோடிக்கிட்டே கூப்பிட்டு போய் கையில தாமரை சின்னமே பச்சை குத்திடுவீங்க போல ...அவ்வ்!

      இந்த பதிவு படித்ததும் நீங்க தன்னிச்சையாக கருத்து சொல்லி இருக்கிங்கன்னு நினைச்சேன், ஆனால் , இப்படி ஐ சப்போர்ட் கமலஹாசனு ஒரே மாதிரியா இணையம் முழுக்க கிளம்பி இருக்கு போல.

      இப்படி கிளம்ப தேவையே இல்லை, ஐ சப்போர்ட் விவசாயினு கிளம்பாத இணைய சமுதாயம் ,ஒரு படத்திற்காக இப்படிலாம் மெனக்கெடுவது சமூக சீர்க்கேடு.

      இன்னும் இரண்டு மாதங்களில் அரிசி விலை இரண்டு மடங்கு உயரப்போகுது, இந்த அறுவடை நிலை ரொம்ப மோசம், கடந்த அறுவடையில் பதுக்கி வைத்த அரிசி இப்போ கொள்ளை விலைக்கு விக்க போகுது,விவசாயிக்கு ஒரு பைசா புண்ணியம் இல்லை, இதையெல்லாம் பேசக்கூட யாருக்கும் நேரமில்லை.

      ஒரு சினிமாவுக்காக இத்தனை உணர்வு பூர்வம் பொங்கும் நாட்டில் உணவுக்காக ஒரு மண்ணும் பொங்க காணோம்.

      இப்பவும் , மார்க்கப்பந்துக்களின் எதிர்ப்பு சரியல்ல என்று தான் சொல்கிறேன், அதே சமயம் சினிமா வியாபாரி கமல் அனைத்தையும் கணக்கிட்டு இருக்க வேண்டும்,ஆனால் மேலும் மேலும் தவறு தான் செய்தார்.

      இப்போ சும்மா மக்களை கவர்ந்து அனுதாபம் தேட முயல்கிறாரோ என தோன்றுகிறது, எங்கேயிருந்து ஐ சப்போர்ட் கமலஹாசன் கான்செப்ட் ஒட்டு மொத்தமா உருவாச்சு.


      ஒரு சினிமா தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையா? இதுக்கெல்லாம் இப்படி ஒன்னுக்கூடி "கருத்துரிமை என்ற பிரசங்கம் " எப்படி தன்னிச்சையாக கிளம்பும்? எல்லாம் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர தூதர்களின் வேலை.

      மெரினா பீச்சில் ஈழ தமிழருக்கு மெழுகு வர்த்தி ஏர்த்தினா தீர்வு கிடைக்குமானு கேட்ட மக்கள் , இப்போ சினிமாவுக்கு ஜோடி சேர்ராங்களே?

      தனிப்பட்ட முறையில் , மார்க்கப்பந்துக்களின் செய்லினை எதிர்க்கிறேன்,ஆனால் இது ஒன்றும் சமூகமே திரள வேண்டிய பிரச்சினை அல்ல. சும்மா எல்லாம் ஐ சப்போர்ட் கமலஹாசனு பதிவ போட்டு நேரம் விரயம் ஆக்கவேண்டாம் என்பதே எனது எண்ணம்.

      Delete
  2. //அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.//

    கிட்டத்தட்ட எனக்கும் அப்படி தான் தல.. பட் கமலையும் பிடித்தது. என்னை பொறுத்த வரை கமலை எதிர்க்கும் ரஜினி ரசிகனும், ரஜினியை எதிர்க்கும் கமல் ரசிகனையும் சுத்தமாக பிடிக்காது.. அடி முட்டாள் தனமான வாதமாகவே (பல) இடங்களில் அமைந்து இருக்கும்.. (நேற்றைய 300 கோடி சர்ச்சை வரை)

    //படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான//

    சரியா சொன்னிங்க தல.. ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகன் என்று பாராது, அனைவருக்கும் கிட்டத்தட்ட இதே மன நிலை தான் இப்போது தோன்றியிருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாரி. இதுபோல் பிளவுபட்டு இருக்கும் நம்மளை ஒன்று சேர்க்காமல் விடமாட்டார்கள் போல.

      Delete
    2. நைஸ் ஹாரி

      Delete
  3. அஞ்சா சிங்கம் கருத்தை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      Delete
  4. சைவ மரபில் வந்த ஒரு மன்னன், வைஷ்ணவனை கல்லில் கட்டி கடலில் தூக்கிப் போட்ட போது இப்போது போராடும் சமூகம் கை தட்டி சிரித்துப் பார்த்து மகிழ்ந்தது...அப்போது அந்த உண்மையை எதிர் கொள்ள முடியாத சைவத்தை சார்ந்த மக்களுக்கு கமலஹாசன் எதிரியாகிப் போனார்..... பிரச்சினை கமலஹாசனிடமா இல்லை உண்மையை எதிர் கொள்ள திரணியற்ற ஒரு புரையோடிப்போன சமூகத்திடமா என்பதற்கு காலம் மட்டுமே விடையளிக்க முடியும்...!

    ReplyDelete
    Replies
    1. இந்த சமூகத்தை திருத்த இன்னொரு பெரியார் தான் பிறந்து வர வேண்டும்.

      Delete
  5. இந்தப்படத்தை ஏன் வெளியிடச் சொன்னோம் என்று சென்சார் போர்டும்.... அதை ஏன் தடை செய்தோம்? என்று தமிழக அரசும்...முதலில் விளக்கம் கொடுக்க வேண்டும். சென்சார் போர்டு தவறெனில் அதை முதலில் தடை செய்யுங்கள்.... இல்லை அரசின் முடிவு தவறெனில் எதிர்வரும் காலங்களில் சென்சார் போர்டு அனுமதித்தப் பின்னால் எந்தக் கொம்பனும் தடை செய்ய முடியாது...சட்ட ரீதியாய்த்தான் அதை அணுகவேண்டும் என்று உறுதியான சட்டம் இயற்றுங்கள்....!!
    -நன்றி தேவா

    ReplyDelete
    Replies
    1. இது சிறுபான்மையினர் ஓட்டை பெறத்துடிக்கும் அரசியல் கட்சிக்கும், வளரத்துடிக்கும் சிறுபான்மையினர் கட்சிக்கும் மட்டுமே ஆதாயமாக இருக்கப் போகிறது. இதில் எங்கேயிருந்து சட்டம் இயற்றுவது.

      Delete
  6. இந்துக்கள் எல்லாம் முற்போக்குவாதிகளாகிக் கொண்டிருக்கின்றார்கள்!
    இந்த முல்லாக்கள் இஸ்லாமிய சமூகத்தை பிற்போக்குவாதிகளாக்கி்க் கொண்டிருக்கின்றார்கள்.

    நடுநிலையான இஸ்லாமிய சகோதர்களின் கேள்விகளுக்கு முல்லாக்களின் பதில் என்ன...?

    நன்றி மச்சி!

    ReplyDelete
    Replies
    1. இந்து தீவிரவாதிகளை முஸ்லீம்கள் மட்டும் எதிர்க்க வில்லை அவர்களை விட அதிகமாக இந்துக்கள் எதிர்க்கிறார்கள் .
      இவர்கள் அப்படியா மனசாட்சி தொட்டு சொல்லட்டும் கசாபிர்க்கு ஆதரவாக பதிவு போடுகிறார்கள் .
      இந்த ஆந்திரா எம்.எல்.ஏ. ஒருத்தன் 15 நிமிடம் குடுத்தால் பொதும் இந்தியாவில் மிச்சம் இருக்கும் 75 கோடி பேர்களை கொன்று விடுவோம் என்று சொன்னானே . சொன்னவன் மக்கள் பிரதிநிதி இந்துக்களின் மற்ற மதத்தினரின் ஓட்டையும் வாங்கி ஜெயித்தவன் .
      இவனுக்கு எதிராக ஏதாவது இஸ்லாமிய அமைப்பு போராட்டம் நடத்தியதா...? அவன் சொன்ன கருத்து தீவிரவாதம் இல்லையா ..?
      அட குலபெருமையை கெடுக்கவந்த கோடரி காம்பே உன்னால் முஸ்லீம்களுக்கு கெட்டபெயர் என்று யாராவது போராடினார்களா ..?
      நான் பார்த்த வரையில் அவனை கைதி செய்யாதே என்று தான் போராட்டம் நடந்தது .
      எந்த தீவிரவாதிக்கு எதிராக இவர்கள் பத்வா போட்டிருக்கிறார்களா ..?
      மலாலா சுடபட்ட பொது ஓமர் நல்லவர் என்று காப்பாற்ற வருகிறார் ஒரு மார்க்கபந்து . சானியா குட்டை பாவாடை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிகிறது .

      Delete
    2. அவர்கள் பொதுப்படையாக எப்படி கருத்து சொல்ல முடியும் மச்சி. எதாவது சொல்லப் போய் நடுநிலைவாதிகளையும் துரோகிகள் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்.

      Delete
    3. சாட்டையடி கேள்விகள் சிங்கம்.

      Delete
  7. வழிமொழிகிறேன் ஆரூர் மூனா செந்தில் AND அஞ்சா சிங்கம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      Delete
  8. அடுத்து அஜித் நடித்த வலை படம் வருது. . இனையம் பயன் படுத்தும் நம்மை கேவலபடுத்தி விட்டார்கள் என சொல்லி நாம் போராட்டம் நடத்தினால் என்ன????

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் போராட்ட குழு தலைவர் ஆசிரியரே.

      Delete
  9. சென்ஸருக்கு பதில் அனைத்து மதம் , சாதி தலைவர்களை வைத்து ஒரு அமைப்பு வைக்கலாமே. படம் எடுக்கும் முன்பே கதையை அவர்களிடம் சொல்லி அனுமதிவாங்கி பின் எடுக்கலாமே???????

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியாவா இருக்கே. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற சொல்லிடலாம்.

      Delete
  10. உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் ஆரூர் மூனா :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஷ்வா.

      Delete
  11. இப்படியே எதுக்கெடுத்தாலும் மதப்பற்றுன்ற பேர்ல பிரச்சினை பண்ணி எல்லார் கிட்டயும் கெட்டபேர்தான் வாங்கப்போறாங்க இவங்க.

    சென்சார் போர்டுல சான்றிதழ் குடுத்த குழுவில் ஒருத்தர் இசுலாம் மதம் சார்ந்தவராகதான் இருந்திருக்கிறார். முதல் பேராக இருக்கிறது.

    இனி படம்னு ஒன்னு எடுத்தா எல்லா சாதி, மதம், இன்னபிர அமைப்புகளுக்கு போட்டுக் காட்டி அனுமதி வாங்கிட்டு வெளியீடு செய்ய வாண்டியதுதான்.

    அவங்கவஙக்ளுக்கு அவங்க அளவு கோல்னு வச்சிகிட்டு ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான். போராடுர கூட்டத்துக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகமிருந்தா அவங்க கோரிக்கை ஏத்துகிட்டு தடை கிடைக்கும்.. கூட்டம் இல்லைனா உதை கிடைக்கும் :-((((

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்தில் குதித்த வீரர் பட்டிக்ஸ் வாழ்க.

      Delete
  12. கருணாநிதியுடன் கூட்டுக் களவானியாக இருக்கும் கம்மலுக்கு என்றுமே ஆதரவு கிடையாது.

    …இந்தப் படம் தமிழ்…நாட்டில் வெளியாக …ஜெ விடுவாரா?

    …வந்து காலில் விழுந்தால் ஏதாவது நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராவணன் நாம அந்த இடத்துக்கு உள்ளே போக வேண்டாமே. இதுக்குள்ள தலைய விட்டா வெளிவர நேரமாகும்.

      Delete
  13. கண்டிப்பாக படத்தை theatre la பார்ப்பது என்று உறுதியேற்போம்..இதுவே அந்த மஹாகலைஞனுக்கு நாம் செய்யும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக விஷ்வா.

      Delete
  14. I support kamal .

    அனைவரும் முதல் காட்சி முன் பதிவு செய்து பார்த்து இத் திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. செய்வோம் அகோரி.

      Delete
  15. பதிவின் கருத்துடன் முழுதும் ஒத்து போகிறேன்.

    தொடர்புடைய எனது பதிவு.

    http://sathyapriyan.blogspot.com/2013/01/i-support-kamalhaasan.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யப்பிரியன்

      Delete
  16. நீங்க ரஜினி ரசிகர் , அப்புறம் அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, பூர்யா ரசிகர்கள் மட்டுமில்ல... சந்தானம் ரசிகர்கள் கூட இப்போ கமல் பக்கம்தான்... விஸ்வரூபம் படம் வருது சாரே, வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டு ஆகுது சாரே!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
  17. செந்தில்,ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...
    முனு நாள் கழிச்சு ரீலீஸ் ஆகும்ல. அப்ப என்ன பண்ணுவாங்க. தமிழ்நாடு மற்றும் பாண்டி தவிர்த்து நாளைக்கு ரீலீஸ். இங்க யு.ஸ்ல இன்னைக்கு நைட் ரீலீஸ்.
    ஆனா கமலுக்கு பண நஷ்டம் தான்.TMMK கட்சியை முதல தடை பண்ணனும்.
    நான் என்னோட பார்வையில இதை பத்தி எழுதி இருக்கேன்.
    http://hollywoodraj.blogspot.com/2013/01/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கா போயாச்சா. நன்றி ராஜ். பார்த்து விட்டு விமர்சனத்தை போடுங்கள். கண்டிப்பாக படிக்கிறேன்.

      Delete
  18. அன்பே சிவம்...

    நம்ம ஆளு நீங்க.. எனக்கு மிகவும் பிடித்த இன்னும் ஒரு சினிமா "உன்னால் முடியும் தம்பி"

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      Delete
  19. Good post!.
    I support kamalhasan!!

    http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_3377.html
    Thank you

    ReplyDelete
  20. விஸ்வரூபம் விமர்சனம் (சுட்டது)
    http://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html

    ReplyDelete
  21. செந்தில்!புதிய தலைமுறையில் இயக்குநர் செல்வமணி,முன்னாள் தணிக்கை அதிகாரி ஒருவர்,இஸ்லாமிய இயக்க தலைவர் ஒருவர்,திரைப்பட தொழில் நுட்ப கலைஞர் ஆனந்த் என்பவர்,ஜவஹருல்லா எம்.எல்.ஏ,இயக்குநர் விக்கிரமன் போன்றவர்களின் கருத்துரையாடல் இப்பொழுதுதான் முடிந்தது.சிலர் பார்த்திருக்க கூடுமென நினைக்கின்றேன்.யார் எந்த நிலை சார்ந்து பேசியிருப்பார்கள் என சொல்லத்தேவையில்லை.எம்.எல்.ஏ வை மட்டும் இங்கே தொடலாம்.

    அதென்ன சட்டமன்றத்திற்குள் நுழைந்து விட்டாலே நாக்கை துருத்தவும்,உச்சக்குரலில் பேசவும்,ஒற்றை விரல் நீட்டும் மாணவனாகவும் மாறி விடுகிறார்களா என தெரியவில்லை.ஜவஹருல்லாவின் குரல் தொனியிலேயே பேச்சுத்தீவிரவாதம் தெரிகிறது.அதைத்தான் கருத்துரிமை சார்ந்து பேசியவர்கள் மெல்ல தொட்டுக்காட்டவும் செய்தார்கள்.

    இவர் பேசியதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் விசுவரூபத்தில் தலையை ஆடுவெட்டுவது மாதிரி போன்ற காட்சியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது என்ற அங்கலாய்ப்பு.வடிவேலுவின் தக்காளி,ரத்தம் எங்கெல்லாம் ஒப்பீடாகிறது பாருங்கள்:)

    ஒருவர் சினிமான்னா நகைச்சுவை இருக்கவேண்டும்.ஆபாசம் இருக்கவேண்டும்.விசுவரூபத்தில் இது ஒன்றுமேயில்லையே என அப்பாவித்தனமாக புதிய தலைமுறையில் சொல்கிறார்:)

    படமே ஒழுங்கா பார்ப்பதில்லை.ஒரு முடிவோடு போய் உட்கார்ந்துகிட்டு படம் பார்ப்பவர்களுக்கு படம் ஒரு மாதிரியாகத்தான் தெரியும்.ஒரு படத்தை பலகோணங்களில் உணரலாம் என்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது.பல இஸ்லாமியர்களும் தமிழர்கள் என்ற நிலையில் மட்டுமே படம் பார்த்து மறந்தும் போய்விடுகிறார்கள்.ஆனால் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை ஏனைய இஸ்லாமியர்களும் பின்பற்ற வேண்டுமென நினைப்பது அபாயகரமான சூழலைத் தோற்றுவிக்கும் என்பதை மித மத உணர்வாளர்கள் புரிந்து கொள்வது நல்லது.

    நானெல்லாம் ரஜனி கடற்கரை ஓரமா ஓடிகிட்டே சூட்டிங்க் செய்த போதெல்லாம் கவனிக்காமல் சன்பாத் எடுத்தவன்.சிவாஜி,கமல் போன்றவர்களின் நடிப்பு வாழ்வியலோடும்,மூளை நாளங்களோடும் ஒன்றிணைந்தவை.எனவே சப்போர்ட் குரல் தேவையில்லாத ஒன்று என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  22. இன்னுமொன்னு சொல்லணும்.இனி வரும் காலத்தில் மதங்களே ஒன்றோடு ஒன்று மோதி முட்டிக்கொள்வார்கள்.நாம் பகுத்தறிவுவாதிகள்.அன்பை நோக்கி பயணம் செய்வோம் என்றார் கமல்.

    சின்னதா பின்னூட்டம் போட்டால் பின்னூட்டம் போட்ட மாதிரியே இருப்பதேயில்லை:)அதனால் வவ்வாலின் கூட்டிலும் வெளியே பறந்தால் பறந்து பறந்து மோதுவதும் நமக்கு பிடித்தமான பொழுது போக்கு என்பதால் அவரையும் கொஞ்சம் கொட்டி விட்டுப் போகிறேன்.

    சினிமா பார்க்கும் போது சினிமா பார்த்தால் மட்டும் போதும்.இடைவெளி விட்டா மூத்திர வரிசைக்கோ இல்ல காபி,பாப்கார்ன் சாப்பிடவோ இல்ல கூட்டம் குறையட்டும்ன்னு ஒரு தம் பத்த வச்சுகிட்டாவது நிற்கலாம்.அதை விட்டுப்புட்டு வயலும் வாழ்வும் போட்டிருந்தால் படம் நல்லாயிருக்குமேன்னு கவலைப்படக் கூடாது:) எந்த சூழலில் எது முக்கியமோ அதன் மையப்புள்ளி தொடுவதுதான் நல்லது.இதுல வேற காண்டெக்ஸ்ட்ன்னு எனக்கு பாடம் வேற:)

    ReplyDelete
    Replies
    1. ஓய் ராச நட,

      //எனவே சப்போர்ட் குரல் தேவையில்லாத ஒன்று என நினைக்கின்றேன்.//

      அப்புறம் என்னாத்துக்கு இதை சொன்னீர்?

      நான் இதை தானே வேறு வார்த்தைகளில் உமக்கு முன்னாடி சொல்லிட்டூ போயிருக்கிறேன், அதாவது நான் சொன்னதையே சொல்லிட்டு என்னையும் கொட்டினேன்னு ஒரு பேரு வாங்க ஆசை :-))

      என்னை எல்லாம் கொட்டனும்னு நினைச்சா கை தான் வலிக்கும், இரும்பு மண்டையன் நான் :-))

      போய் ரசம் சாதமும் ,வாழைக்காய் வறுவலும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தூங்கும் :-))

      நாட்டுல தண்ணி இல்லாம விவசாயம் செய்ய முடியலை, கரண்டும் இல்லை ,என்ன செய்வதுனு தெரியாம 10 விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க,அதுக்கெல்லாம் இணைய சேகுவேராக்கள் பொங்கலையேனு உம்ம சிற்றறிவுக்கு இன்னும் எட்டக்காணோம்,என்னக்கொடுமை சார் இது!!!

      Delete
  23. முக்கியமான ஒன்று தாமதமாக நினைவுக்கு வந்தது.புதிய தலைமுறை கருத்தரங்கில் பங்கு கொண்ட ஜவஹருல்லா எம்.எல்.ஏ விஸ்வரூபம் படத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.தணிக்கை குழுவில் இருந்த இன்னுமொரு இஸ்லாமியர் ஹசன் அலி படம் பற்றிய எதிர்ப்புக் குரலை தெரிவிக்க வில்லை.

    இதில் உண்மை ஜவஹருல்லா பக்கமா அல்லது ஹசன் அலி பக்கமா?
    படம் பார்த்து விட்டு சொல்லவும்.

    ReplyDelete
  24. You guys are all speaking already as Hindutuva.. why are you all pretending as seculars... when a muslim association protests you consider it as all muslims.. what about when Shive Sena protests... is it all HINDUS what about when Bombay was shown for Bal Thackerey and some scenes cut... where were you all ?? what happened when FANAA movie was not released in MODI's state... can we say all HINDUS are against..or just shivsena was against...??

    were you ever been randomly checked in airports everytime you travel. how you been enquired by police in nights.. have you faced nay of these fools... useless... what if one protests... even for Kanna Lattu thinga asaya.. some rubbish hindu group has protested for showing hindu gods badly .. so now can i say all HINDUS are trying to stop the movie... think before you rite... useless

    ReplyDelete
  25. சமூகத்தின் மற்ற அவலங்களை எதிர்த்து குரல் எழுப்பாத இந்த முஸ்லிம்கள் தங்கள் மதம் என்று வந்துவிட்டால் மட்டும் இப்படி கூட்டம் கூடி தங்களுக்கு ஆபத்து என்று கூச்சல் போடுவது தற்போது அபாயகரமாக அதிகரித்து வருகிறது.இது போன்ற அர்த்தமில்லாத எதிர்ப்புகள் அவர்கள் தங்களை தானே தனிமை படுத்திக்கொள்ளும் நிலையை நோக்கி தள்ளுவதை அவர்கள் புரிந்து கொள்வார்களா?இதனால் பாதிக்கப்படப்போவது அமைதியாக இருக்கும் உண்மையான இஸ்லாமியர்கள்தான்.

    ReplyDelete
  26. ஹாலோ ! என்ன எந்த உண்மையும் தெரியாம வரலாறு தெரியாமா நீ பாட்டுக்கு கமலஹாசனுக்கு வக்காலத்து வாங்கிறீர்கள் ! முதலில் கமலஹாசன் தற்போது பகுத்தறிவு வாதி கிடையாது. அவர் தனது படங்களில் பகுத்தறிவை தெளிவாக சொல்லாமல் குழப்புவது தான் அவருடைய வேலை.கமலின் கடந்த கால படங்களை எல்லாம் இதுவரை யாரவது எதிர்த்து இருக்கிறாளா தற்போது எதிர்க்கிறார்கள் தற்போது அவருடைய பாதையில் இந்துத்துவம் வெளிப்படுகிறது.அவருடைய நான்கு படங்களில் ஆதிக்க சாதியினருக்கும் தீண்டாமைக்கும் காவடி தூக்கிறார். அதனால் தான் அவர் மீதான மக்கள் பார்வை மாறி இருக்கிறது. இவர் பார்ப்பண ஆதிக்க சாதியினரின் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டு படங்களை எடுத்துள்ளார்.நீங்கள் உன்னை போல் ஒருவன் படத்தை பார்த்தால் தெரியும் அதன் கதை களமும் தமிழக முஸ்லிம்களுக்கும் தொடர்பே இருக்காது ஆனால் தொடர்பு படுத்தி மிகை படுத்தி தமிழக முஸ்லிம்களுக்கும் வட இந்திய தீவிரவாதிகளுக்கும் தொடர்பு போல காட்டியிருப்பார் அதையும் நியாயப்படுத்தி டிவியில் பேட்டி கொடுப்பார்

    ReplyDelete
  27. நீங்க என்ற வார்த்தைக்கு பதிலாக நீ என்று வந்துவிட்டது அது எழுத்து பிழை மன்னிக்கவும்.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.// super ams

    ReplyDelete
  30. சகோதரர் அன்பழகன் ராமலிங்கத்திற்கு நான் நினைவு படுத்த விரும்புவது கமல் உடைய கடந்த படங்களை சான்றாக வைத்தே எங்களுக்கு இந்த சந்தேக உறுதியாகிறது.நானும் பகுத்தறிவாதி தான்.பட்டதாரியான நான் கடந்த காலங்களில் கமலின் ரசிகனாக இருந்தேன்.ஆனால் தற்போது அவருடைய இந்துத்துவ நட்பு காரணமாக நான் விலகி விட்டேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...