சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, August 21, 2012

பதிவர் சந்திப்பை குலைக்க நடக்கும் சதிகள்

மிகப்பெரிய பதிவர் சந்திப்பு பல வருடங்களாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஒரு சிலரின் ஒத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டே வந்தது. ஐயா சென்னைப் பித்தன், புலவர் ராமானுஜம், மின்னல் வரிகள் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரால் மிகச்சிறிய அளவில் பதிவர் சந்திப்பு என்று துவங்கப்பட்டு மற்ற பதிவர்களால் கைதூக்கப்பட்டு மிகப் பெரிய பதிவர் சந்திப்புக்கு அடிக்கோலிடப்பட்டது.

பொதுவாக ஒரு விஷயம் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தால் அது உடனடியாக சில கருங்காலிகளால் திட்டமிடப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தினால் அதன் வீரியத்தை இழந்து விடுவதுண்டு.

இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது.

நானும் நக்கீரனும் குடிக்கிறோம். குடியைப் பற்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். நானோ அல்லது என் நண்பர்களோ குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்ததை பார்த்ததுண்டா?

இரவு தனியறையில் குடித்து விட்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாமல் இருப்பவன் நல்லவனா? நான் பெரியவன் என் குழு பெரியது என்று பொது இடத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பேசி கெடுக்க நினைக்கும் நீங்கள் நல்லவர்களா?

ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னையும் என் நண்பரையும் தாக்கி பதிவிட்டு இருக்கிறார். அவர் செய்தது தவறு என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அந்த உரையாடலில் எந்த சம்மந்தமும் இல்லாமல் அவர் உன் குழுவை சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்.

பதிவர் சந்திப்பை குலைக்கும் வகையில் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி முகமது ஆஷிக் போன பதிவில் சம்மந்தம் இல்லாமல் நீ பதிவிட்டு இருக்கும் போதே நினைத்தேன். உங்களது அடுத்த டார்கெட் நானாக இருப்பேன் என்று. செயல்படுத்தி விட்டாய் நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

87 comments:

  1. செந்தில்: விழா நன்றாக நடப்பது முக்கியம். இதுவரை எந்த பிரச்னையும் இன்றி போய் கொண்டு இருக்கிறது. நீங்கள் மனம் வருந்தாமல் உங்கள் பணிகளை செவ்வனே செய்வீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நமக்கு என்னண்ணே வருத்தம். துடைத்துப் போட்டு வேலை செய்வோம். ஆனால் சிலர் தனிமனித தாக்குதலை முன்னிறுத்தும் போது தான் கடுப்பாகிறது. நீங்கள் அந்த பதிவை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். என் மீதோ என் சார்பாக பின்னூட்டமிடும் தோழர்கள் மீதோ தவறிருந்தால் சொல்லுங்கள். யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கத் தயார்.

      Delete
  2. செந்தில்...இவனுக...என்ன மாதிரி கூட்டம்ன்னு...அடிக்கடி நிருபிக்குராணுக...

    ReplyDelete
    Replies
    1. என்னக் கேட்டா இவனுங்கள இப்படியே விட்டுவிடலாம்னு தோணுது. சிராஜ் எனக்கு நண்பர். மற்ற முகமறியா தோழர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. விடுங்க தல.

      Delete
  3. செந்தில் பதிவர் சந்திப்பு ஒற்றுமையுடன் சிறப்பாக நடக்கும்.பெரிய விழாவில் இதுபோன்ற சலசலப்புகள் வருவது சகஜம் கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்கின்ற கொள்கையுள்ளவன் நான்.

    ஆனால் தம்பி ஆஷிக் அஹமத் உங்கள் இருவரின் தனிபட்ட ஒழுக்கத்தை சீண்டியது எனக்கு ஆத்திரத்தை உண்டாக்கிவிட்டது. அதனால் நான் கொஞ்சம் எல்லை மீற வேண்டியதாகி விட்டது. அவர் ஆன்லைனில் இல்லை என்று சிராஜ் சொல்கின்றார்.கொஞ்சம் பொறுத்து பதிவு போட்டிருக்கலாம்!

    காலை வரை பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காத்திருப்போம் சுரேஷ். என் நண்பர் என்பதற்காக ஒரு சார்பு நிலை எடுக்காமல் நியாயத்தின் பக்கம் நின்ற உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. பதிவர் மாநாட்டில் மகிழ்வுடன் சந்திப்போம்.

      Delete
  4. //பதிவர் சந்திப்பை குலைக்கும் வகையில் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

    சரியான பதில் சந்திப்புக்கான வேலைகள் இனிதே நடந்தேறட்டும்

    ReplyDelete
    Replies
    1. நண்பன் என்ற முறையில் என் சார்பு நிலை எடுக்காமல் நியாயத்தின் பக்கம் நின்ற தங்களுக்கு மிக்க நன்றி கேரளாக்காரன்.

      Delete
  5. பதிவர்கள் சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. நண்பன் என்ற முறையில் என் சார்பு நிலை எடுக்காமல் நியாயத்தின் பக்கம் நின்ற தங்களுக்கு மிக்க நன்றி காட்டான்.

      Delete
  6. இந்த வருஷம் எந்த பிரெச்சனையும் வராது... நக்கீரர் துணை....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நக்கீரரே துணை.

      Delete
  7. அன்பின் செந்தில்

    அந்த பதிவினையும் அதன் கருத்துகளையும் முழுமையாக படித்துவிட்டு (up to 132)இந்த கருத்தினை எழுதுகின்றேன்

    1.பதிவினை எழுதிய நபர் இதுவரை பதிலளிக்கவில்லை.

    2.என்னைப் பொறுத்த வரையில் அவரை பின்னிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    3.அவர்களின் நோக்கம் பதிவர் திருவிழா பற்றிய பயத்தினை உண்டு செய்வது போலவே தெரிகிறது.

    4.என்னை பொறுத்த வரையில் நீங்கள் இத்துடன் இதை புறந்தள்ளி சந்திப்பினை நல்லதொரு தித்திப்பாய் நடத்திக் காட்டிட முழு வேலையில் இறங்குங்கள்.

    5.அவரின் பதிவினை வாசிக்கும் திருவாளார் பொதுஜனத்திற்க்கு அவரைப் பற்றிய உணமை நிச்சயம் தெரிந்துவிடும்

    கவலை மறந்து பதிவர் திருவிழா இனிதே நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி சம்பத் குமார்

      Delete
  8. சபாஷ் செந்தில், அந்தக் கூட்டத்துக்கு தக்க பதிலடி கொடுத்தீங்க.
    இதுங்களுக்கு அட்வைஸ் பண்ற தகுதி கிடையவே கிடையாது
    அந்த பதிவைப் போட்டு, சபாஷ் செந்தில்னு கூகிள் பிளஸ்ஸில் போட்டேன், நீங்க கூகிள் பிளஸ்ஸில் என் சர்க்கிளில் இல்லாததால் பகிர முடியவில்லை

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. குகூகிள் பிளஸ்ஸில் தங்களின் நண்பனாக சேர்நது விட்டேன். தங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  9. ஸ்ரீராமின் கருத்தை வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமரபாரதி

      Delete
  10. NAAI-NAKKSAugust 21, 2012 7:58 PM
    செந்தில்...இவனுக...என்ன மாதிரி கூட்டம்ன்னு...அடிக்கடி நிருபிக்குராணுக...

    nakks,

    நீங்க கூட்டம் என்று சொன்னது அவரின் பதிவர் நண்பர்கள் கூட்டமா அல்லது பெயர் காரணமாக சொல்லும் கூட்டமா.

    ReplyDelete
    Replies
    1. அதை நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும் பாஷா.

      Delete
  11. தோழரே.. இது தனி மனித தாக்குதல் என்பதை எதிர்பார்க்கவில்லை.என் கண்டனத்தை அங்கேயும் தெரிவித்திருக்கிறேன்.இதை புறந்தள்ளிவிட்டு அடுத்த கட்ட வேலைகளை பார்ப்போம்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி மதுமதி

      Delete
  12. வணக்கம் சார்,
    நல்லா இருக்கீங்களா?
    இஸ்லாமியச் சகோதரிகள் சிலரும் பதிவர் சந்திப்பிற்கு வருவதாகப் பேசிக்கிறாங்க. அது இந்த மதவெறி குரூப்பிற்கு பிடிக்கல சார்.
    அதனால் தான் பதிவர் சந்திப்பில் ஏதாச்சும் குழறுபடி இருக்கும் அப்படீன்னு ஒரு புரளியை கிளப்பி விட்டு மதத்தின் பின்னே ஒளிந்து கொள்கிறார்கள்!

    சந்திப்பு இனிதே நடக்க, பதிவர்கள் அனைவரும் இதமாய் பேசி மகிழ, இனிய தீர்மானங்களை நிறைவேற்ற சிறியேனின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  13. வணக்கம் சார்,
    நல்லா இருக்கீங்களா?
    இஸ்லாமியச் சகோதரிகள் சிலரும் பதிவர் சந்திப்பிற்கு வருவதாகப் பேசிக்கிறாங்க. அது இந்த மதவெறி குரூப்பிற்கு பிடிக்கல சார்.
    அதனால் தான் பதிவர் சந்திப்பில் ஏதாச்சும் குழறுபடி இருக்கும் அப்படீன்னு ஒரு புரளியை கிளப்பி விட்டு மதத்தின் பின்னே ஒளிந்து கொள்கிறார்கள்!

    சந்திப்பு இனிதே நடக்க, பதிவர்கள் அனைவரும் இதமாய் பேசி மகிழ, இனிய தீர்மானங்களை நிறைவேற்ற சிறியேனின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கும்பலை சமாளிக்கிறது சும்மா தான் நிருபா. வெயிட் பண்ணுங்க. தங்களின் வாழத்துக்களை வாங்கி பதிவர் சந்திப்பு நன்றாக நடக்கும் நிரூபா.

      Delete
  14. மூனா,

    அவங்க ஆசைப்படுறதே நீங்க எல்லாம் டென்ஷன் ஆகணும் என்று தான், எனவே டென்ஷன் ஆகாமல் வழக்கம் போல இருங்கள், இவங்களை எல்லாம் அவங்க பாணியில ..என்ன கையப்புடிச்சு இழுத்தியா என கலாய்த்தே ஓட வைக்கணும்.

    எனவே வழக்கம் போல பதிவர் சந்திப்பு வேலைகளை பாருங்க.

    நமக்கும் பதிவர் சந்திப்புக்கும் காத தூரம் என்றாலும் ,அனைவருக்கும் பொதுவான நிகழ்வை கொச்சைப்படுத்துவது தவறு என்பதை மக்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாத்தீங்கன்னா நாங்க டென்சன் ஆகாம காலய்த்தோம் என்பது தான் புரியும் நன்றாக புரிந்து படியுங்கள் வவ்வால்.

      Delete
  15. உலகத்தை திண்டாட வைப்பதே மதவெறியர்களின் நோக்கம்! ஸோ...நாம இதை கண்டுக்க வேணாம்! காரியத்தில் கண்ணாக இருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வார்த்தையே சரியாக இருக்கும் நிரூபன்.

      Delete
  16. பாஸ்,
    அந்த குள்ளநரிகள் நினைப்பது கண்டிப்பாய் நிறைவேறாது. சந்திப்பு கண்டிப்பாய் நடக்கும். அதுவும் சிறப்பாய் நடக்கும்.
    முஹம்மத் ஆஷிக் citizen of world~ வயதெரிச்சல் காரணமாக கண்டபடி எழுதி இருக்கார். உங்க போன பதிவுல சம்பந்தமே இல்லாம ஆஜர் ஆனாப்பவே நினைச்சேன், எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு. இப்ப தான் எதுக்குன்னு தெரியுது.
    மனிதாபிமானி என்று தனியாக யாரும் இல்லை. அந்த ப்ளாக் ஒரு குழுவாக நிர்வகிக்க படுகிறது. இவங்களே அவங்களுக்கு பிடிக்காத ஆளுங்களை பத்தி தாக்கி எழுதுறதுக்கு தான் அந்த ப்ளாகை யூஸ் பண்ணுறாங்க. அதுல வந்த பதிவுகளை பார்த்தாலே தெரியும். அந்த ப்ளாக் followers பாருங்க. அதுவே அவங்களை பத்தி நமக்கு எடுத்து சொல்லும். பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதே அவங்களுக்கு நம்ம குடுக்கிற பதிலடி. :)
    ஹைதராபாத்தில் இருந்து பதிவர் சந்திப்புக்கு நானும் வருகிறேன் பாஸ். சென்னையில் சந்திப்போம்..உங்களைளும் நாக்ஸ் அவர்களையும் சந்திக்கிறதுக்கு ரொம்பவே ஆர்வமாய் இருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. ராஜ் இந்த பிரச்சனைகளை மீறி தனிப்பட்ட முறையில் நானும் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

      Delete
  17. யோவ்வ்வ்வ்வ் செந்திலு...
    சந்திப்புல குண்டு வச்சிட போராணுக...

    ReplyDelete
    Replies
    1. அடப்போய்யா நானே பெரிய குண்டு.

      Delete
    2. ஹா ஹா ஹா அண்ணே பயபுள்ள உங்கள நேர்ல பார்த்து இருந்தாம்னா இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டன்... வாங்கன்னே சந்திப்பு விசயமா நமக்கு ஆயிரம் வேலை இருக்கு... நாம அதப் பாப்போம்... உங்க புதிய சிஷ்யன் அரசன் இருகாரு... அவரையும் வேணா செதுக்குவோம்

      Delete
  18. Whatever those people are saying dont listen . Just ignore them and keep moving forward.. Just feel like this is your family function then do it.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றிண்ணே.

      Delete
  19. கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை. அது சென்னை நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. சிறு தடங்கல்கள்தான், நம்மை முன்னிலும் வேகமெடுக்க வைக்கும். அதனால், இதுபோன்ற தடங்கல்களை புறந்தள்ளி, புறப்படுங்கள் முன்னிலும் வேகமாக. நடக்கட்டும் பதிவர் சந்திப்பு நல்லபடியாக.

    ReplyDelete
    Replies
    1. சங்கரலிங்கம் சார். தங்களின் ஆசீர்வாதம் ஒன்றே போதும்.

      Delete
    2. என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி தள்ளிவைக்கிறீங்க! அன்று நான் படித்த Sri Paramakalyani கல்லூரியில் ALUMNI மீட்டிங். மனதால் ஞாயிறன்று சென்னையில் உங்களோடு இருப்பேன்.

      Delete
    3. தங்களின் கருத்தொன்றே போதும் சார்.

      Delete
  20. டிக்கெட் அனுப்பி வைத்தீர்கள் என்றால் நானும் கூட்டத்தில் கலந்து கொள்வேன். :-)

    டென்ஷனை குறைத்து பதிவர் மீட்டிங்கை சிறப்பாக நடத்துங்கள் செந்தில்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்கிரீன் சாட் எடுத்த போல, எதாச்சும் hidden camera கொண்டு போக போறிங்களோ சுவனம்?

      Delete
  21. இப்பல்லாம் எதிர்பதிவை படிச்சிட்டு தான் மெயின் பதிவை படிக்க வேண்டியதா இருக்கு... யாருப்பா அந்த முக"மது" ஆஷிக்...? உரல் இருந்தா கொடுங்கய்யா...

    ReplyDelete
    Replies
    1. மனிதாபிமானியின் பதிவை படியுங்க பிரபா

      Delete
  22. செந்தில் சார் நீங்க பதிவர் சந்திப்பு நடத்தறது சென்னையில் நாங்கள் (சகோதரர் ஆஷிக் (ஜுபைல் சவுதி அரேபியா,சகோதரர் சுவனப்பிரியன் ரியாத் சவுதி அரேபியா,நான் இருப்பது ஜெட்டாஹ் சவுதி அரேபியா) நங்கள் நினைத்தால் எப்படி உங்கள் பதிவர் சந்திப்பு நிறுத்த முடியும். உங்கள் எழுத்து நடை மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் போராடி வென்றவர் என்ற முறையில் நிறைய வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன், ஆனால் மதவெறி என்றெல்லாம் என்று எழுதி உங்கள் நண்பர்கள் உங்களை அகற்ற பார்க்கிறார்கள்.

    சகோதரர் சுவனப்பிரியன் டிக்கெட் கொடுத்தால் வருவதற்க்கு தயார் என்று சொல்லி விட்டார்.

    குழப்பவாதிகள் உங்களை மதத்தின் பெயரால் குழப்புகிறார்கள் கவனமாக இருக்கவும்.

    சென்னை பதிவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அஸீம், எல்லா முஸ்லீமும் மதவாதின்னு சொல்றது உங்களுக்கு வலிக்குதுல்ல? எல்லா பதிவரையும் குடிகாரன்னு சொன்ன ஆஷிக்க கேள்வி கேக்கக் கூடாதா. முஸ்லீம்ங்கறதுக்காகவே இன்னொரு முஸ்லீம் தப்பே பண்ணாலும் ஆதரிக்கனும்னு நெனைக்காதீங்க. அது நான் ஒரு மதவாதின்னு நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறதுக்கு சமம்.

      Delete
    2. பதிவர் சந்திப்புக்கு வர டிக்கெட் தேவையில்லையே. வரணும் என்று விருப்பமுள்ளவர்கள் தாராளமாக வரலாம்.

      Delete
  23. Replies
    1. நன்றி சரவணன்.

      Delete
  24. மனிதாபிமானி உண்மையைத்தான் சொன்னார்..! ஆனால்.... அதனை நீக்க வைக்க... ஆபாச வசன வசைபாடல், வன்முறை மிரட்டல், மதவெறி அவதூறு என்று பல ஆயுதங்களை உபயோகித்தீர்கள்..! இறுதியாக நீக்கி விட்டார்.

    ///தம்பி முகமது ஆஷிக் போன பதிவில் சம்மந்தம் இல்லாமல் நீ பதிவிட்டு இருக்கும் போதே நினைத்தேன். உங்களது அடுத்த டார்கெட் நானாக இருப்பேன் என்று. செயல்படுத்தி விட்டாய் நன்றி.///

    -------இது... என்மீது புனைந்து கூறப்பட்ட அப்பட்டமான ஆதாரமற்ற அவதூறு..! நான் கேட்கிறேன்..! இதனை நீக்க தயாரா நீங்கள்..! உங்களை போல ஆபாச அசிங்க கேட்ட வார்த்தைகள் போட்டு என்னால் கமென்ட் போட்டு கேட்க இயலாது..! அன்பாக மட்டுமே கேட்கிறேன்..! இதற்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  25. அன்று,
    சென்ற பதிவு 'Tamilmanam மகுடம்' என்பதால்... நீண்ட நாள் கழித்து இங்கே வந்தேன்..! அந்த பதிவு எவ்விதத்திலும் என்ன கவராததால்... வந்ததுக்கு அடையாளமாக ஒரு பின்னூட்டமிட நாடினேன்..!

    இதற்கு முன்னர் நான் அந்த வரிகளை இத்தளத்தில் பார்த்த நியாபகம் இல்லை. புதிதாக இருந்தது. கண்ணில்பட்ட அதன் பொருட்டு... சென்ற பதிவில் ஒரு நியாயமான பின்னூட்டகேள்வியைத்தான் கேட்டு இருந்தேன்.

    உங்கள் தளத்தில் நீங்கள் எழுதி வைத்து இருந்ததைத்தான்... அது முன்னுக்குபின் முரணாக உள்ளதே என்றுதான்.... கேட்டு இருந்தேன்.

    அதற்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கூட பரவாயில்லை. மனம் புண்படும்படி கேலி பேசி இருந்தீர்கள். வருத்தப்பட்டேன்.

    இன்றோ... மனிதாபிமானியில் உங்கள் 'பின்னூட்டங்கள்' கண்டு உங்களை பற்றி இன்னும் இன்னும் நன்றாக அறிந்து கொண்டேன்..!

    உங்களிடம் அந்த கேள்வியை தக்க பதிலை எதிர்பார்த்து கேட்டது எனது தவறுதான்..! இதற்காகவும் என்னை மன்னிக்கவும்..!

    ReplyDelete
  26. எதிர்ப்புகளை புறம் தள்ளுங்கள், பதிவர் ஒன்று கூடல் வெற்றிகரமாக நடப்பதற்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவி.கண்ணன்

      Delete
  27. செந்தில் பிரதர் தங்களின் பதிவு அருமை . உங்கள் முன்னேற்றத்திற்க்கு சிலர் முற்று புள்ளி வைக்க நினைத்தாலும் "முற்று புள்ளியை சற்று தள்ளி " வைத்து எதிர் பதிவுக்கு தக்க பதல் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் . பதிவர் விழா இனிதாய் அமையும் . பிரதர் நீங்க கோபப்படவே மாட்டீங்களா?. இலக்கன பிழை இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அட விடு அசோக். நீ பதிவர் மாநாட்டிற்கு வருகிறாய் அல்லவா.

      Delete
  28. Pathivar santhippu inithe nadakka vaslthukkal
    Santhiranai paarthrhu dog kulaiththaal naikku than vai ulaiyum

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஅழகன்

      Delete
  29. ஆரூர் பின்னூட்டத்தில் கோபத்தை தவிர்க்க. கூல்.

    ReplyDelete
    Replies
    1. நான் அமைதியடைந்து விட்டேன் சிவா. இனிமேல் இந்த பிரச்சனை குறித்து பேசமாட்டேன்.

      Delete
  30. // பொதுவாக ஒரு விஷயம் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்தால் அது உடனடியாக சில கருங்காலிகளால் திட்டமிடப்பட்ட பொய்ப்பிரச்சாரத்தினால் அதன் வீரியத்தை இழந்து விடுவதுண்டு.

    இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது //---திசைதிருப்பளுடன் கூடிய அப்பட்டமான அவதூற்று பொய் பிரச்சாரம்..!குடி போதை இல்லாமல்... பதிவர் மாநாடு இன்னும் சிறப்பாக... மகிழ்ச்சியுடன் நடக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட சிறந்த பதிவு அது..!

    ReplyDelete
    Replies
    1. மரியாதையா கேட்டப்ப நீங்க ஸ்கிரீன்ஷாட்ட தூக்கினீங்களா? தூண்டி விட்டு பேச வைக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டு செயல்பட்டிங்க. இப்ப வந்து அனுதாப ஓட்டுக்கு சட்டி தூக்குறது நியாயமே இல்லை.

      Delete
  31. ///ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னையும் என் நண்பரையும் தாக்கி பதிவிட்டு இருக்கிறார். ///---இல்லை தாக்கவில்லை.ஒரு சாம்பிளுக்கு சொல்லப்பட்டு இருந்தீர்கள்.

    ReplyDelete
  32. ///அவர் செய்தது தவறு என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.///---அப்போதெல்லாம் குடிப்பதை பெருமையாக நினைத்தவர்கள்....ஒரு முஸ்லிம் அறிவுரை கூற துவங்கியதும்... அது பிடிக்காமல்... ஒட்டுமொத்த முஸ்லிம்களை பற்றி தரக்குறைவாக திட்டியும், ஆபாச கெட்ட வார்த்தைகள் போட்டு அருவருக்கத்தக்க வகையில் மொத்த முஸ்லிம்க்ளையும் ... அவரகளது தாய் மற்றும் வீட்டாரை எல்லாம் வசைபாடி...கமெண்ட்ஸ் போட்டீர்கள். போட்டீர்கள் சலிக்காமல்... போட்டுக்கொண்டே இருந்தீர்கள். இதுதான் குற்றம் சாட்டும் முறையா..?

    ReplyDelete
  33. ///அந்த உரையாடலில் எந்த சம்மந்தமும் இல்லாமல் அவர் உன் குழுவை சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்.///---வக்காலத்து எல்லாம் வாங்க வில்லை. உங்கள் இருவரை பற்றி மட்டும் ஸ்க்ரீன் ஷாட் போட்டது தவறு என்றும்... பல பதிவர் சந்திப்பு பதிவுகளில் சென்று... உங்களைப்போன்ற பலர் பகிரங்கமாக பேசிக்கொண்டதை இன்னும் பலரின் ஸ்க்ரீன் ஷாட்களையும் போட்டு இருந்தால் பதிவின் மையக்கருத்துக்கு சரியாக நியாயமாக இருக்கும் என்றுதான் சொன்னேன்..!

    ReplyDelete
  34. முதலில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள்

    ///இந்த சந்திப்புக்கு சில கருங்காலிகள் திருஷ்டிப்பொட்டு வைக்க முயன்றிருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பதிவர் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த உங்களால் முடியாது.///

    இந்த வார்த்தைக்கு என் கண்டனங்கள் நான் தெரியாமல் தான் ஒன்று கேட்கிறேன் உங்கள் பதிவர் சந்திப்பை கெடுப்பதால் என்ன லாபம் அவர்களுக்கு கிடைக்கப் போகிறது பதிவர்களின் மீது அதிகப்படியான உரிமை எடுத்து அஹமது அஷிக் பதிவு போட்டு விட்டார் அங்கு வைத்தே நாங்கள் கண்டித்தோம் முடிந்தது

    இதை வைத்துக் கொண்டு பதிவர் சந்திப்பை சீர்குலைக்க சதி கருங்காலி என்பதெல்லாம் ரொம்ப அதிகம். ஆரூர் மூனா செந்தில் அவர்களே

    ReplyDelete
  35. Replies
    1. நானும் சியர்ஸ்.

      Delete
  36. நல்லதே நினைத்து நல்லதே செய்து வருகிறோம்;நல்லதாகவே முடியும்.புரளியைப் புறந்தள்ளி,புது வேகத்துடன் முன்னேறி சந்திப்பின் வெற்றியை நிலை நாட்டுவோம்!உங்கள் கடின உழைப்பும் முயற்சியும் வீணாகாது செந்தில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சென்னை பித்தன் அய்யா.

      Delete
  37. சகோதரர்களே நீங்கல்லாம் யாருன்னு எனக்கு தெரியாது காரணம் தினத் தந்தியும் தினகரனும் படித்துப் பழகிப் போன எனக்கு இந்த"வலை பூ"என்பது ஒரு சில வருட காலமாகத்தான் தெரியும் பிறகு நானும் ஒரு ப்ளாக் தொடங்கி சில வார்த்தைகளை எழுதினேன் கமெண்ட்டும் ஓட்டும் கிடைத்தது இதுனாலே எனக்கு என்ன லாபம்னே தெரியாது.இருந்த போதிலும் சில கட்டுரைகள் எழுதினேன் சில ஜோக்ஸ்களை பகிர்ந்தேன் பல நண்பர்களின் உறவும் நட்பும் கிடைத்தது சில எதிரிகளும் கிடைத்தார்கள்.

    நம் நாட்டின் பிரதமர் தொடங்கி நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வரை கிண்டலும் கேலியுமா செய்திகள் வெளியிட்டு பத்திரிகைகள் சிரிக்க வில்லையா ?

    அந்தப் பதிவை பார்த்து விட்டு அவர்கள் பத்திரிகையில் ( நமது எம்ஜீஆர்,முரசொலி ) கெட்ட வார்த்தைகளால் எழுத வில்லையே,மாறாக எதிர் பதிவு போடுவார்கள் அல்லது மறுப்பு தெரிவிப்பார்கள் இதுதான் பத்திரிக்கை நடத்தும் ஆசிரியர்களின் நன் மதிப்பு இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    அது போல வலை தளங்களை நிர்வகிக்கும் நீங்களும் சமூக பொறுப்பு உள்ளவர்கள்தான் அவ்வகையில் நீங்களும் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து எழுதி இருக்கலாம் வலைப் பூவில் பொறுப்புள்ள நல்ல பதிவர்கள் குறைவுதான் இருந்தாலும் மக்களுக்கு நல்ல செய்திகள் உங்கள் மூலமாக கொண்டு செல்வதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.

    நேரிடையாக நாம் பேசுவது வேரே,கமேன்ட்சில் சொல்லுகிறது வேரே உங்களின் வார்த்தைகளை பார்க்கும் எவருமே உங்கள் தளத்திற்கு வர நினைக்க மாட்டார் காரணம் கமேன்ட்ஷே இப்படி இருந்தால் பதிவு எப்படி இருக்கும் என்று மிக கீழ் தரமாக நினைக்க தோன்றும்.

    ஆகையால் எல்லா பதிவர்களும் ஒற்றுமையாக இருங்கள் நாம் அனைவரும் தமிழர்கள்.

    மூனா அண்ணா உங்களுக்கு பின்னாடி இருந்து ஒத்து ஊதும் ஆள்களை முன்னாடி வந்து ஊத சொல்லுங்கள் நீங்கள் தும்மினால் அவர்கள் மூக்கை துடைக்கின்றார்கள்.

    ஒற்றுமையாக இருக்க ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

  38. இதுக்கெல்லாம் ஒரு பதில் பதிவு போடுற அளவுக்கு வொர்த் இல்லை சார்...விடுங்க... !

    இதை எல்லாவற்றையும் விட முக்கியமா பதிவர் சந்திப்பு வாசலில் இப்படி ஒரு போர்டு போடுங்க !

    மதம் பிடித்த வெறியர்கள்
    மற்றும்
    மது குடிக்கும் மனிதர்கள்
    இருவருக்கும் அனுமதி கிடையாது : )

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆலோசனைக்கு நன்றி கபிலன்.

      Delete
  39. நேத்துல இருந்தே பாத்துக்கிட்டே இருந்தேன். ஒண்ணு புரியுது. யாரு வேணா யார பத்தியும் பேசலாம், நார கிழி கிழிக்கலாம். கேட்டா இராவன் அதாவது இறைவன் மேல சத்தியமா தனி மனித தாக்குதல் இல்லன்னு சொல்லலாம். உலக நன்மைக்காக பதிவு போட்டேண்ணு சொல்லலாம். கூட நாலு நல்ல வெள்ளை ஆண் பெண் காக்கைகள் சேந்து ஆமாம்னு சொல்லும். சரி எனக்கு எதுக்கு வேண்டாத வேலை. பதிவர் சந்திப்பு நல்ல நடந்தா போதும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாடர்

      Delete
  40. என்னமோ நடக்குது ஒண்ணும் புரியலை! ஆனா,பதிவர் சந்திப்பு சிறப்பா ஒற்றுமையா நடக்கப்போவுதுன்னு தெரியுது! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      Delete
  41. பதிவர் மாநாட்டிற்கு சரக்கு சப்ளை சுவனப்பிரியன் என்று கேள்விப்பட்டேன். அப்ப எல்லாமே வெளிநாட்டுச் சரக்காகவே இருக்கும்..சியர்ஸ்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சேர்ந்து குடிப்போம் சியர்ஸ்.

      Delete
  42. அண்ணாச்சிகளா, இப்படி எல்லாம் பேசி எனர்ஜியை வேஸ்ட் ஆக்காமல், பதிவர் சந்திப்பு நல்லபடியா நடக்க ஆக வேண்டிய வேலையைப் பாருங்கய்யா..நக்கீரரு ஏற்கனவே பொங்குவாரு..இது வேறயா..!

    நல்ல முயற்சியான பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செங்கோவி.

      Delete
  43. மழை வரும் முன்
    வானம் கருத்து இருட்டாகத் தான் இருக்கும்.
    மழை விடட்டும் ஐயா...
    விளைச்சளைக் கண்டு பிரமிப்பார்கள்....!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வம்

      Delete
  44. மதத்தைப் பற்றி பேசுகிறவார்த்தை சில பதிவர்களுக்கு படிக்கவில்லை ஆனால்? மற்றவர்களை பற்றி தவறாக பதிவிடுவது மட்டும் பிடிக்கிறதா? நடந்து முடிந்ததை ஏன் மறுபடியும் தூன்டிவிடுகிறிர்கள். பதிவர் சந்திப்பு இனிதாய் அமையும் சர்ச்சையின்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எதிர்பார்த்ததை விட அமோகமாக நடக்கும்.

      Delete
  45. சவூதி அரேபியாவில் தமிழ்மணம் தடை செய்யப் பட்டுள்ளது என்று நண்பர் சொன்னாரே எப்படி இவர்கள் தமிழ்மணத்தில் பதிவரசியல் செய்கிறார்கள். வியக்கிறேன்.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...