சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 30, 2012

டாஸ்மார்க்கு ரசிகர்கள் - 1

குடிப்பழக்கம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் தொற்றிக் கொண்டது. முதலில் முகர்ந்து பார்த்து போதையாகி பிறகு சில நாட்கள் கழித்து மூடி அளவுக்கு குடித்த பிறகு மட்டையாகிக் கொண்டிருந்தேன். 2002ம் ஆண்டு வரை அது தான் என் கெபாசிட்டியாக இருந்தது. அதுவும் எனக்கு ஒயின்சாப் சென்று சரக்கு வாங்க பயமாக இருக்கும்.

என் நண்பர்களை கடைக்கு சென்று வாங்க வைத்து திருவாரூர் SVT வேபிரிட்ஜ் அருகில் உள்ள காட்டில் தான் குடிப்போம். சென்னையாக இருந்தால் நான் இருந்த ஹாஸ்டலின் மேல்மாடியில் வாட்டர் டேங்கின் உள் அமர்ந்து குடிப்போம். ஒரு குவாட்டரை ஐந்து பேர் பங்கிட்டு குடிப்போம். குடித்து விட்டு அங்கேயே தூங்கி விட்டு தெளிந்த பிறகு தான் வீடு வந்து சேர்வோம்.

இது வரை உள்ளது என் கல்லூரி கால குடிப்பழக்கத்தின் சுயசொறிதல், இத்துடன் நிறுத்திக் கொண்டால் மானம் தப்பிக்கும். தற்போது நான் குடித்து விட்டு நடத்தும் கலாட்டாவை நம் பதிவுலக நண்பர்களே நன்று அறிவார்கள் என்று எண்ணுகிறேன்..

நான் அறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களில் பலர் குடித்து விட்டால் அடிக்கும் லூட்டி பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த தொடர்.

இத்தொடரின் முதலாமவர் சக்தி மாமா. என் அப்பாவின் அத்தை மகன். என் அப்பாவுக்கு மிக நெருங்கிய உறவினரான நண்பர். கும்பகோணத்தில் உள்ள ஒரு அய்யர் ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார். காலையில் ஹோட்டலில் 04.00 மணிக்கு பூஜை போட்டு கடையை திறந்து வைப்பவர் அவர் தான். மதியம் இரண்டு மணி வரை அவரது ஷிப்ட் இருக்கும்.

ஷிப்ட் முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி காரைக்கால் பக்கம் இருக்கும் அம்பகரத்தூர் சென்று சாமி கும்பிட்ட பிறகு சாராயம் வாங்கி குடித்து விட்டு கோயிலின் பிரகாரத்திலேயே மட்டையாகி விடுவார். பிறகு நள்ளிரவு தெளிந்தவுடன் எழுந்து கும்பகோணம் வந்து விடுவார். மறுநாள் வழக்கம் போல முதல் பூஜை அவர் தான். வயது 64 ஆகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. ஹோட்டலின் மாடியில் தான் தங்கியுள்ளார். எங்கள் வீடு தான் அவர் வீடு போல. வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். வரும் போது அவரது பையில் என் அப்பாவுக்கென தனி குவார்ட்டர் இருக்கும்.

யாருக்கும் தெரியாமல் என் அப்பாவின் கையில் கொடுத்து விட்டு என் வீட்டையே அல்லோகலப்படுத்தி விடுவார். நான், என் தம்பி உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் தன் கையால் தான் பறிமாறுவார். வேண்டாம் என்றாலும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக சாப்பாட்டை வைத்து பொறுமையை சோதிப்பார். ஆனால் சிறு வயதில் இருந்தே என்னை தூக்கி வளர்த்தவர் என்பதால் எனக்கு அவர் என்ன செய்தாலும் கோவம் வராது. வீட்டில் உள்ளவர்களுக்கும் அப்படியே.

ஒரு முறை அளவுக்கு மிக அதிகமாக குடித்து விட்டு திருவாரூரில் உள்ள எங்கள் ஜெராக்ஸ் கடையின் முன்பு விழுந்து கிடந்தார். என் அப்பாவும் நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் எழுப்ப முடியவில்லை. என் அப்பா மிகுந்த கோபமடைந்து ரெண்டு வாளி தண்ணீரை கொட்டி எழுப்பி அடித்து விரட்டி விட்டார். அடடா பெரிய சண்டையாகி விட்டதே இனி மேல் வர மாட்டாரோ என்று நினைத்தால் இரண்டு நாள் கழித்து மாமாவும் அப்பாவும் புல் மப்பில் வீட்டிற்கு வந்தார்கள். சரிதான் இவர்களது நட்பை நாம் பிரிக்க நினைத்தாலும் அவர்களாக பிரிய மாட்டார்கள் என்று புரிந்து விட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு கூட என் தம்பியின் திருமணத்திற்கு திருப்பதிக்கு அழைத்திருந்தோம். ஆனால் மேல் திருப்பதியில் சரக்கு கிடைக்காததால் வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்திருந்தோம். அது போலவே வண்டிகள் திருவாரூரிலிருந்து கிளம்பும் வரை மாமா வரவில்லை. ஆனால் மறுநாள் காலை திருமண நேரத்தன்று டான்னென்று மனிதர் ஆஜராகியிருந்தார்.

"நான் இல்லாமல் எப்படி கல்யாணம் நடக்கும்" என கேட்டு விட்டு மொத்த வேலைகளையும் முன்னின்று செய்தார். திருமணம் நல்லபடியாக முடிந்ததும் சத்தமில்லாமல் கீழ்திருப்பதிக்கு சென்று விட்டார். போய் நன்றாக சரக்கடித்து விட்டு நாங்கள் கீழ்திருப்பதியில் விட்டுச் சென்றிருந்த டெம்போ டிராவலரில் ஏறிப் படுத்திருந்தார்.

நாங்களெல்லாம் ஆளைக் காணோமே கல்யாணத்தில் சாப்பிடாமல் கூட சென்று விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டு கீழ்திருப்பதிக்கு வந்தால் மனிதர் வண்டியிலிருந்து எழுந்து வந்து எனக்கு கல்யாண சாப்பாடு இல்லையா என்று கேட்டாரே பார்க்கலாம். என் அப்பா அவரை அடித்த அடியில் மனிதர் எழுந்திருக்கவே மாட்டார் என்று நினைத்திருந்தோம். நான் மற்றும் சில உறவினர்கள் வேறு காரில் திருவாரூர் வந்து விட்டோம். வரும்வழியில் ஏற்கனவே வண்டியில் தனியாக சரக்கு வாங்கி வைத்திருந்து என் அப்பாவும் அவரும் குடித்து கும்மாளமிட்டு வந்ததை மறுநாள் அறிந்து தலையில் அடித்துக் கொண்டோம்.

இன்றும் சரி அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் விஷேசம் இல்லை. அந்த விஷேசத்தில் அவர் இல்லாமல் தொல்லை இல்லை.

ஆரூர் மூனா செந்தில்.


13 comments:

  1. சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா. அருமையான பதிவு. நேரம் இருந்தால் இந்தச் சிருகதியைப் படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  2. யோவ்! சரக்கடிச்சு காலையில தலைவலி வருவதை நிப்பாட்டுவதற்கு டிப்ஸ் போடுய்யா.......

    ReplyDelete
  3. /// சீனு said...

    சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா. அருமையான பதிவு. நேரம் இருந்தால் இந்தச் சிருகதியைப் படித்துப் பாருங்கள் ///

    நன்றி சீனு.

    ReplyDelete
  4. /// வீடு சுரேஸ்குமார் said...

    யோவ்! சரக்கடிச்சு காலையில தலைவலி வருவதை நிப்பாட்டுவதற்கு டிப்ஸ் போடுய்யா....... ///

    ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.

    ReplyDelete
  5. //ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.//

    இத தான்யா சொல்லலாம்னு வந்தேன் ஏற்கனவே சொல்லியாச்சு ஏன் இன்னொரு கட்டிங்க் அடிச்சா தலைவலி போகும் என்பதற்கான விஞ்ஞான விளக்கம் தெரியுமா? அப்புறம சொல்கிறேன் ....

    ReplyDelete
  6. நல்ல சுவையான பகிர்வு... நண்பரே...

    ReplyDelete
  7. அஹா .. இதுக்குதான்னா நெல்லைக்கு நீங்க வந்தா ஜாலியா இருக்கும்ன்னு நக்கீரன் சார் சொன்னாரா ?

    ReplyDelete
  8. /// வவ்வால் said...

    //ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.//

    இத தான்யா சொல்லலாம்னு வந்தேன் ஏற்கனவே சொல்லியாச்சு ஏன் இன்னொரு கட்டிங்க் அடிச்சா தலைவலி போகும் என்பதற்கான விஞ்ஞான விளக்கம் தெரியுமா? அப்புறம சொல்கிறேன் .... ///

    ஏங்க அது ஏன் முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ் வச்சீங்க.

    ReplyDelete
  9. /// சங்கவி said...

    நல்ல சுவையான பகிர்வு... நண்பரே... ///

    நன்றி சங்கவி.

    ReplyDelete
  10. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

    அஹா .. இதுக்குதான்னா நெல்லைக்கு நீங்க வந்தா ஜாலியா இருக்கும்ன்னு நக்கீரன் சார் சொன்னாரா ///

    நானும் நக்கீரனை போட்டுப் பார்க்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் நான் ரயில்வே பணியில் சேர வேண்டியிருந்ததால் வரமுடியாமல் போய் நக்கீரன் தப்பித்து விட்டார்.

    ReplyDelete
  11. மூனா.


    //ஏங்க அது ஏன் முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ் வச்சீங்க.//

    எதாவது பெரிய கை வந்து பதில் சொல்லும்னு பார்த்தேன் , எல்லாம் திருந்திட்டாங்க போல இருக்கே, சரி நானே சொல்லிடுறேன்,

    மது வருந்தியவுடன் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு ரத்த ஓட்டம் எல்லாம் குறையும் இதான் போதைக்கு காரணம். இதனால் இரத்த நாளங்கள் ,நுண்நாளங்கள் எல்லாம் சுருங்கிவிடும்.

    அதே சமயம் மூளைக்கு செல்லாமல் குறைக்கப்பட்ட ரத்தம் உடலின் சருமத்துடன் இணைந்த நுண்நாளங்களுக்கு செல்லும் இதனால் சருமத்தின் வெப்ப அளவு கூடும் , எனவே தான் சரக்கடிச்சா வேர்ப்பத்உம் ,குளிருக்கு இதமாக இருப்பதும் நடக்கிறது.

    காலையில் போதை இறங்கியதும் , வழக்கமான அளவு ரத்தம் மூளைக்கு பாயும் ஆனால் சுருங்கிய ரத்த நாளம் , நுண் நாளங்கள் எல்லாம் உடனே விரிவடையாமல்ல் சுருங்கிய நிலையிலே இருக்கும் எனவே குறுகிய ரத்த நாளத்தின் வழியே அதிக ரத்தம் அழுத்தத்துடன் பாய்வதால் தலைவலிக்கிறது.

    கட்டிங்க் அடித்தால் த்அலைவலி எப்படி குறையும், கட்டிங்க் மீண்டும் மூளைக்கு போதை ஏற்றி மீண்டும் இரத்த ஓட்டம் குறைவாக பாய ஆணையிட தூண்டும் , குவார்ட்டர் அப்படியே அடிச்சா மீண்டும் முழுப்போதை ஆகிவிடும் எனவே தலைவலிக்கு மட்டும் கொஞ்சமாக கட்டிங்க் போட்டு ரத்த ஓட்ட டிராபிக் குறைக்கிறாங்க :-))

    இந்த ரத்த ஓட்ட சமாச்சாரம் எல்லாம் கவனிப்பது சிறு மூளையில் உள்ள முகுலம் எனப்படும் பகுதி , மனித மூளையில் எல்லாம் வேதியல் சமாச்சாரம் தான். இப்படி ரத்த ஓட்டத்தினை சரியாக பாய கட்டுப்படுத்தாவிடில் ஹார்ட் அட்டாக், மூளையில் ரத்த கசிவு எல்லாம் வரும் , அதிக போதை மருந்து உட்கொண்டால் மரணம் இப்படித்தான் மயக்கத்தோட வரும் :-))

    ச்சே ஒரு சரக்கு பதிவில என்ன சயிண்ஸ் பேச வச்சிட்டீரே :-))

    ReplyDelete
  12. /// வவ்வால் said...

    ச்சே ஒரு சரக்கு பதிவில என்ன சயிண்ஸ் பேச வச்சிட்டீரே :-)) ///

    சொல்ற இடம் முக்கியமில்லைங்க. சொல்ற விஷயம் நச்சுனு இருக்காங்கிறது தான் முக்கியம். உண்மையிலேயே நச் கமெண்ட். நன்றி வவ்வால்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...