சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, October 8, 2011

தவற விட்ட பதிவர் சந்திப்பு


இன்று காலை பிலாசபி பிரபாகரன் எனக்கு செல்லில் போன் செய்து இன்று மாலை பதிவர் சந்திப்பு இருப்பதாகவும் என்னை வரும்படியும் கூறினார். ஆனால் நான் என்ன செய்ய, முன்பே நான் என் அப்ரன்டிஸ் நண்பர்களுக்கு இன்று மதியம் நான் ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சியடைந்ததற்காக பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தேன். அது 12 மணியளவில் துவங்கியது. என் நண்பர்கள் கார்த்திக், கலாநிதி, சத்யா, தணிகா, மணி, ஜெகன், குட்டி, ஆனந்த் மற்றும் ரமணன் ஆகியோர் வந்திருந்தனர். துவங்கிய பார்ட்டி முடிய முடியவேயில்லை. மூணு மணிக்கு நான் பிரபாவுக்கு போன் செய்து என்னால் வரமுடியாது என்றும் அம்பத்தூரில் பார்ட்டி முடியவில்லை என்றும் கூறினேன். அவர் பரவாயில்லை என்றும முடிந்தவுடன் தனக்கு போன் செய்யும்படியும் கூறினார்.

கார்த்திக் நேரம் ஆக ஆக உளற ஆரம்பித்தான். பார்ட்டியில் கலாட்டா துவங்கியது. கடைசி வரை பார்ட்டி முடியவில்லை. சரி என்று பிரபாவுக்கு போன் செய்து வரமுடியவில்லை என்று கூறினேன். அவர் என்னை நாளை நடக்கும் இன்டிபிளாக்கர் கலந்துரையாரடலுக்கு வரும்படி கூறினார், ஆனால் என் அப்பா நாளை பகலில் திருவாரூரிலிருந்து ரயிலில் வருவதால் நான் எழும்பூரில் அழைத்து வர செல்ல வேண்டும் என்று கூறி வர முடியாததற்கான காரணத்தை கூறினேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் நான் இது வரை பிலாசபி பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. இன்று தான் எனக்கு போன் செய்து தான் என்னை விட சிறியவென்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பரவாயில்லை, பதிவர்களே நாளை இன்டிபிளாக்கர் கருத்தரங்கில் ஒன்று கூடுங்கள்.

நான் அடுத்த சந்திப்பில் பதிவர்களை சந்திக்க வருகிறேன்,

நன்றி வணக்கம்

ஆரூர் முனா செந்திலு,




2 comments:

  1. This is what I call original post without copying from thatstamil and dinamalar.
    thank you and keep it up

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...