சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, December 12, 2011

1954-ல் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைந்த சூழ்நிலை

எனக்கு மிகவும் பிடித்த காமராஜரின் ஆட்சிக்காலத்தை பற்றி சில குறிப்புகள் தேடிய போது கிடைத்தவற்றின் தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1954 ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழ்நிலையில் ராஜாஜி ராஜினாமா செய்தார். அன்றைய நிலைமையை ஆராய மறுநாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. சி.சுப்பிரமணியத்தை தற்காலிக முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று ராஜாஜி யோசனை தெரிவித்தார்.

அதை காமராஜர் ஏற்கவில்லை. "தற்காலிக முதல்மந்திரி தேவை இல்லை. அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பதற்கான முதல்மந்திரியை தேர்ந்தெடுப்போம்" என்றார், காமராஜர். புதிய முதல்மந்திரி தேர்தலை மார்ச் 30ந்தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. "முதல்மந்திரி பதவியை நீங்களே ஏற்க வேண்டும்" என்று வரதராஜீலு நாயுடுவும், பல எம்.எல்.ஏ.க்களும் காமராஜரிடம் வற்புறுத்தினார்கள்.

கட்சியை நடத்துவதில் கை தேர்ந்தவரான காமராஜர், முதல்வர் பதவியை ஏற்கத் தயங்கினார். காமராஜர் ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்வார் என்றாலும், காந்தி, நேரு, பட்டேல், சத்தியமூர்த்தி போன்றவர்களின் ஆங்கில உரையாடல்களை எல்லாம் நேரில் பார்த்திருந் காரணத்தால், "ஐ.ஏ.எஸ். படித்த பெரிய அதிகாரிகளை எப்படி சமாளித்து வேலை வாங்குவது?" என்று யோசித்தார்.

வரதராஜீலு நாயுடுவின் வீட்டில் காமராஜரும், பெரியாரும் சந்தித்தனர். முதல்வர் பொறுப்பை ஏற்கும்படி காமராஜரிடம் பெரியார் கேட்டுக்கொண் டார். காமராஜர் ஆட்சிக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். தினமும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டமாக வந்து காமராஜரை சந்தித்தனர்.

"முதல்அமைச்சர் பொறுப்பை நீங்கள்தான் ஏற்கவேண்டும்" என்று மன்றாடினார்கள். தீர ஆலோசனை செய்த பிறகு, முதல்அமைச்சர் பதவியை ஏற்பது என்று காமராஜர் முடிவு செய்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

"மந்திரி பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து யாரும் கேட்கக்கூடாது. அரசாங்க நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் முதல்அமைச்சர் பதவியை ஏற்கிறேன்" என்று கூறினார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் சம்மதித்தனர்.

சி.சுப்பிரமணியத்தை முதல்அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜாஜி கோஷ்டியினருக்கு, "முதல் அமைச்சர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்துவிட்டார்" என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடி, மார்ச் 30_ந்தேதி முதல்அமைச்சரை தேர்ந்தெடுக்க சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடினார்கள். காமராஜர் பெயரை வரதராஜீலு நாயுடு முன்மொழிந்தார். என்.அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியத்தின் பெயரை, பக்தவச்சலம் முன் மொழிந்தார். டாக்டர் கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.

வாக்கெடுப்பு நடந்தது. காமராஜருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் புதிய முதல்அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13_ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவர் பெயரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் தன் மந்திரிசபையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார். மற்றும் மாணிக்கவேலர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, "ராமநாதபுரம்ராஜா" சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி, பரமேசுவரன் ஆகியோரும் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.

ராஜாஜி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோரும் காமராஜர் மந்திரிசபையில் இடம் பெற்றனர். எட்டு பேர் மட்டுமே கொண்ட மந்திரிசபையை காமராஜர் அமைத்தது, அகில இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது.

முதல் அமைச்சராக பதவி ஏற்றதும், தன் அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு காமராஜர் சென்றார். சத்திய மூர்த்தி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சத்திய மூர்த்தியின் மனைவி பாலசுந்தரம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.


காமராஜர் முதல் அமைச்சரானதை பெரும்பாலான பத்திரிகைகள் வரவேற்றன. ஒரு சில பத்திரிகைகள், "ராஜாஜி வகித்த பதவியை மற்றவர்கள் வகிப்பது எளிதல்ல. காமராஜருக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு என்றாலும், அமைச்சரவை அனுபவம் இல்லை. அவர் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்" என்று எழுதின.

ஆனாலும், அனைவரும் வியக்கத்தக்க முறையில் காமராஜர் ஆட்சி புரிந்தார். காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்க, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை, 50 ஆக ராஜாஜி குறைத்திருந்தார்.

இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை மீண்டும் 150 ஆக காமராஜர் உயர்த்தினார். இவ்வாறு காமராஜர் செய்த சீர்திருத்தங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரசியலில், ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர், காமராஜர்.

மிகவும் படித்தவரும், ராஜதந்திரியும், மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவருமான ராஜாஜியின் எதிர்ப்பையும் சமாளித்து முன்னேறி, முதல் அமைச்சர் ஆனார். எனினும், ராஜாஜி கோஷ்டியினரை வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்து சென்றார். "எதிரிகளை ஒழிக்க நினைப்பதை விட, அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது சிறந்தது" என்பது காமராஜரின் கொள்கை.

அதனால்தான் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை மந்திரிகளாக்கியதுடன், முக்கிய இலாகாக்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். காமராஜரின் சிறிய மந்திரிசபை, "சிறந்த மந்திரிசபை" என்று விரைவிலேயே பெயர் எடுத்தது


ஆரூர் முனா செந்திலு


8 comments:

  1. காமராஜர் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்.

    ReplyDelete
  2. என்னைப் பொறுத்த வரை நாடே கொண்டாடிய ஒரு மனிதரின் மகத்துவத்தை அறியாமல் தமிழ், தமிழ் என்று முழங்கிய கூட்டத்தின் வெறும் வாய்ப்பேச்சில் மயங்கி 1967ல் காமராஜரை தோற்கடித்த விருதுநகர் மக்கள் தான் மன்னிக்கவே முடியாதவர்கள். எப்படிடா அவரின் வரலாற்றில் கரும்புள்ளி வைக்க உங்களுக்கெல்லாம் மனசு வந்தது.

    ReplyDelete
  3. காமராஜரை அனைவரும் மறந்து வரும் சூழ்நிலையில் நீங்கள் ஞாபகம் வைத்து பதிவிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. Arumaiyaga solliyulleergal nandri.

    ReplyDelete
  5. விருதுந‌கர் மக்கள் செய்த தவறை குமரி மக்கள் நாங்கள் சரி செய்து விட்டொம். காமராஜர் எங்களின் அப்பச்சி. பாராளுமன்றத்திற்க்கு நங்கள் பெருமையுடன் அனுப்பி வைத்தோம்.

    ReplyDelete
  6. கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்களைப் பற்றி நிறைய தகவல்கள். அறியாத பல தகவல்கள். அருமை.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  7. தலைவா உங்களையே போட்டு ஓட்டுறாங்க தலைவா

    http://spoofking.blogspot.com/2011/12/1-2.html

    ReplyDelete
  8. //என்னைப் பொறுத்த வரை நாடே கொண்டாடிய ஒரு மனிதரின் மகத்துவத்தை அறியாமல் தமிழ், தமிழ் என்று முழங்கிய கூட்டத்தின் வெறும் வாய்ப்பேச்சில் மயங்கி 1967ல் காமராஜரை தோற்கடித்த விருதுநகர் மக்கள் தான் மன்னிக்கவே முடியாதவர்கள். எப்படிடா அவரின் வரலாற்றில் கரும்புள்ளி வைக்க உங்களுக்கெல்லாம் மனசு வந்தது. //

    ஆமா, அவரப் போல இருக்கற தேசிய நியாயவாதிகளால தான், பீர்மேடு, தேவிகுளம், திருப்பதி எல்லாம் கொடுத்துட்டு இப்ப அடிவாங்கிட்டு நிக்கறோம்! காமராசர் தூய அரசியல்வாதி, அருமையான மனிதரா இருக்கலாம். அதுக்காக அவர் பிரதிநிதித்துவப் படுத்தின அசிங்கம் பிடிச்ச காங்கிரச்சுக்கு ஆதரவா இருக்கணும்னு ஒண்ணுமில்ல. தவறான கூடாரத்துல இருந்த நல்ல மனிதர்ன்னு சொல்லலாம், அம்புட்டுதான்! ஒவ்வொரு காலத்துலயும் ஒவ்வோர் சமுதாயத்துலயும் எழுச்சி ஏற்படும். அப்படி ஏற்பட்ட எழுச்சிக்கு பலியானவர் தான் காமராசர். அதுக்கு விருதுநகர் மக்களக் குறை சொல்லிப் பயனில்லை. காமராசர் இருந்த கட்சியும், அவரின் தேசிய அரசியலுமே அவ்வீழ்ச்சிக்கு காரணம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...