சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, October 15, 2012

பஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்

மாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடிந்தது. நேற்று என் பெரியப்பா, என் ஒன்று விட்ட தங்கை, அவள் கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் வந்திருந்தனர்.

பகல் முழுவதும் நேரம் செலவழித்து விட்டு மாலை கிளம்பும் நேரம் மாற்றான் பற்றிய பேச்சு கிளம்ப அவர்களும் பார்க்க வேண்டும் என்று கூற என் இல்லாளோ என்னையும் கிளம்பச் சொல்லி நச்சரிக்க வேறு வழியில்லாமல் நேற்று இரவு காட்சி இரண்டாவது முறையாக அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.

அம்பத்தூர் ராக்கி காம்ப்ளக்ஸில் உள்ள ராக்கி, மினிராக்கி, சினிராக்கி் லட்சுமிராக்கி ஆகிய நான்கு திரையரங்கிலும் நேற்று மாற்றான் தான். நேற்று பகல் மற்றும் மாலைக்காட்சிக்கான டிக்கெட் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்து விட்டது. இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து சென்றால் கூட்டம் கன்னாபின்னாவென்று அலைமோதியது.

மற்றவர்களெல்லாம் படம் பார்க்கப்போற சந்தோஷத்தில் இருக்க எனக்கு மட்டும் கூடுதலாக தலையை வலித்தது. நேற்று முன்தினம் வரை எந்த எந்த காட்சிகள் இழுவை என்று நாம் பட்டியலிட்டோமோ அனைத்தையும் வெட்டி விட்டனர். வோல்கா அறைக்கு சென்று சூர்யாவின் தந்தை மிரட்டும் காட்சி, தாரா தன் கணவனுக்கு எனர்ஜியான் கலந்து காப்பி தரும் காட்சி, உக்வேனியாவில் உரக்கம்பெனிக்கு சென்று அதன் முதலாளியை மிரட்டும் காட்சி, ராணுவ மேஜரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டும் காட்சி ஆகியவற்றை வெட்டி எறிந்து விட்டனர்.

அதனால் படத்தில் சற்று தொய்வு குறைகிறது. ஆனாலும் இரண்டாம் முறை படத்தை பார்த்த கடுப்பு கொஞ்சம் குறையவில்லை. எனக்கு மட்டும் ஏண்டா மாதவா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.

---------------------------------------------------------------------

என்னை மாதிரியே திங்கிறானுங்களே


----------------------------------------------------------------

நேற்று காலை அபூர்வமாக ஒரு சம்பவம் நடந்தேறியது. திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 - 97 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்தேன். அதில் என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. அதில் முக்கியமானவர்கள் அம்மையப்பன் பாலாஜி, தினேஷ், மஞ்சரொட்டி விஜயன், காட்டான் அருண்குமார்.

படிப்பு முடிந்ததும் சில வருடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்த இவர்கள் சில வருடங்களில் சுத்தமாக தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டனர். சில வாரங்களுக்கு அவர்கள் அனைவரும் பேஸ்புக்கின் மூலமாகவும் கூகிள் பிளஸ் மூலமாகவும் என்னை கண்டுபிடித்து தொடர்புக்குள் வந்தனர்.

ஆனால் அனைவரும் ஆளுக்கொரு நேரத்திற்கு இணையத்திற்குள் வந்ததால் சாட் செய்யவோ பேசவோ முடியவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நேற்று அனைவரும் ஒரு சேர என்னுடன் சாட்டில் வந்து பிறகு போனிலும் நெடுநேரம் பேசிக்கொண்டோம்.

இதில் பாலாஜி அமெரிக்காவில் புரூக்ளினில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறான். அருண் சிங்கப்பூரில் மரைன் இன்ஜினியராக இருக்கிறான். தினேஷ் சீனாவில் சாப்ட்வேர் தொழிலை சொந்தமாக நடத்திக் கொண்டு இருக்கிறான். விஜயன் ஏற்றுமதி தொழிலில் திருவாரூரிலேயே இருக்கிறான்.

ஒரு மணிநேரம் அனைவருடனும் அளவளாவிய பிறகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிலும் நாங்கள் அந்த காலக்கட்டத்தில் எப்பொழுதும் மலையாள பிட்டு படம் பார்க்கப் போகும் செங்கம் திரையரங்கை பற்றி பாலாஜி சிலாகித்து கூறியதும் ரொம்ப நேரத்திற்கு சிரித்தேன். அவன் இருக்கும் பொசிசனுக்கு இன்னும் பழசை மறக்காத பாங்கு என்னை ரொம்பவே வியக்க வைத்தது.

இதைப் பார்த்து கடுப்பான இல்லாள் என்னுடன் பேசச்சொன்னால் வார்த்தை வரவே மாட்டேங்குது, ஆனால் நண்பர்களுடன் பேசும் போது மட்டும் சத்தம் கிழியுது என்று சைடில் வாரிக் கொண்டு இருந்தாள். எல்லா சந்தோஷங்களும் நிமிடத்தில் அடங்கியது. அட ஆண்டவா ஆட்டுக்கு வாலை அளந்தா வைப்பாங்க.

----------------------------------------------------------------

ஒளிரும் இந்தியா - தமிழ்நாடு தவிர


--------------------------------------------------

இப்ப இணைத்தில் கவிதைகாற்று வீசுகிறது போல. அவனவன் கவிதைங்கிற பேரில் கொன்னுக்கிட்டு இருக்கான். ஒரு வாக்கியத்தை மடக்கி மடக்கி அடிச்சா கவிதைன்னு சொன்னவன் எவன்னு தெரியல. கிடைச்சான் மவனே அவன் சங்க கடிச்சி துப்பியிருப்பேன். சாம்பிளுக்கு நம்ம வீடு சுரேசு கக்கிய கவிதை இலக்கியமோ இலக்கியம்.

விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. இதையெல்லாம் சமீப காலத்துல துவக்கி வச்சது லக்கிலுக் யுவகிருஷ்ணா தான்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு லுலல்லாயிக்கு பெரியவர் கவிதைய எடுத்து உல்டா அடிக்க ஆளாளுக்கு இதையே புடிச்சிக்கிட்டு தொங்குறானுங்க.

விட்டுத் தொலைங்கடா டேய். இதப் படிச்சிபுட்டு தூக்கத்துல கெட்ட கனவா வந்து அலறிகிட்டே எந்திரிக்க வேண்டியிருக்குது. இது தொடர்ந்தா மொக்க கவிதைகள் வெளியிடப்படும் பதிவுகளில் ஆங்கில கவிதை எழுதும் பவர் ஸ்டார் நக்கீரனை வைத்து பின்னூட்ட கவியரங்கம் நடத்தப்படும் என்பதை கூறி எச்சரிக்கின்றேன்.

 
ஆரூர் மூனா செந்தில்


115 comments:

  1. கவியரங்கம் நடத்துமாறு... அன்புடன்.. கேட்டு... கொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவியரங்கத்தலைவரை கேட்டுமுடிவு செய்து விட்டு அறிவிக்கிறேன்.

      Delete
    2. நீங்க வேணா கவியரங்கத்துல கவிதை அருவியை கொட்டவும்.

      Delete
  2. பள்ளி கல்லுரி கால நட்புகள் அது ஒரு தனி சொகமுங்க

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தலைவரே

      Delete
  3. Replies
    1. இது ப்ளஸ்ஸூக்குரிய கோர்வேர்டாச்சே பதிவுல எப்படி தலைவரே.

      Delete
    2. வேணா வேணா வேணா. நான் அழுதுடுவேன்.

      Delete
  4. மூனா,

    காஜால் அகர்வாலை ரெண்டாவது தடவையா ரசிச்சுட்டு என்னா ஒரு நடிப்பு :-))
    --------------------

    ஒரு காலத்தில் நாமும் கவிதயா எழுதி கொலையாக்கொன்னவனுங்க, மீண்டும் அந்த மிருகத்த தட்டி எழுப்பிடுவாங்க போல இருக்கே,

    ஒரு சாம்பிள் கவித(2008இல்) எழுதியது,

    என் கடல் நிறைவதில்லை!

    "மழைக்காலங்களில்

    குளங்கள் நிரம்பி வழிகின்றது

    ஏரிகள் நிரம்பிவழிகின்றது !

    ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன

    எல்லா மழைகாலங்களிலும்

    கடல் மட்டும்

    காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்

    பேராவலுடன் பெற்றுக்கொள்ள!

    நானும் அப்படித்தான்!"

    இனிமே யாராவது கவித கிவிதன்னு சொன்னால் அப்புறம் கொல வெறிக்கவிதையோட நான் களம் இறங்கிடுவேன் :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்வாலு உம்ம கவிதைக்கு எதிர் கவிதை என் தலைவன் நக்கீரன் ஆங்கிலத்தில் விரைவில் சமர்ப்பிப்பார்.

      Delete
  5. நல்ல வேளை ரெண்டாம் முறையாக மாற்றான் விமர்சனம்னு இன்னொண்ணு எழுதாம விட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது தான் சூப்பர்

      Delete
  6. ITHO
    VANTHUTTEN.


    VAVVAALU
    SEMA
    KUNAM
    KONDA
    KOVAALU.
    ENGALUKKU
    ELLAAM
    MANNAVARU....


    ReplyDelete
    Replies
    1. வந்துட்டான்யா என் தலைவன், இனிமே எவனாவது வந்து கவித சொல்லுங்கடே பாப்போம்.

      Delete
    2. மிஸ்டர் ஜெய் நீங்ன பிளஸ்ஸரா இருக்கலாம். ஆனா அதிதீவிர ப்ளஸ்ஸரா இருக்கப்புடாது.

      Delete
  7. @வவ்வால்...

    வாங்கப்பு...ரோம்ப நாள் ஆச்சி...
    நாம ஜோடி போட்டு...

    ReplyDelete
    Replies
    1. வாய்யா ஆங்கில எலக்கியவாதி.

      Delete
  8. படம் நெ.1 = சூப்பர்...நான் சொன்னது காஜலை...
    படம் நெ.2 = செம சூப்பர் ... நான் சொன்னது நட்ட நடு செண்டர்ல இருக்கிர ஒயின் பாட்டிலை..
    படம் நெ.3 = ஆ!!!! வேர் டிட் டமிள்நாட் கான்????? வேர் மேன் ...வேர்????

    ReplyDelete
    Replies
    1. பதில் 1 ஒரே தட்டுல எவ்வளவு பேரு தான் சாப்பிடுவீங்க
      பதில் 2 உம்ம பார்வை அர்ஜூனன் இலக்குயா
      பதில் 3 இட்ஸ் கான் போயே போச்சு

      Delete
    2. பதில்கள் மூன்றும் அருமை... எளிமையாக விளக்கி இருப்பதில்...உங்களின் ஆநம் வெளிப்பட்டிருக்கிறது...

      ஆநம் = ஞானம்

      Delete
  9. யோவ் கமெண்ட் பாக்ஸ் தனியா ப்ரிச்சி தொலை சாமீ.... ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் ரெஃப்ரெஷ் ஆக ஒன் அவர் ஆகுது....த்தூ....

    ReplyDelete
    Replies
    1. சும்மா துப்பக்கூடாது. காறித்துப்பவும்.

      Delete
  10. கமெண்ட் பாக்ஸ் பிரிக்காதவரை இனி நோ கமெண்ட்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்க மட்டும் அப்படி சொல்லக்கூடாது. உங்களுக்காக எங்கேயும் கொடிநாட்டுவேன். தலைவா நீங்க மட்டும் அப்படி சொல்லக்கூடாது.

      Delete
    2. போயா...சொன்னா பிரிஞ்சிக்கணும்...
      ச்சே...புரிஞ்சிக்கனும்...

      Delete
    3. செந்தில் ...நக்ஸ்க்கு இப்படி பம்முரியே.... ஓவர் டார்ச்சர்ல சரண்டர் ஆயிட்டியா...:-))))))))))))))))))))))))))))))

      Delete
    4. வேணும்னா சொறிஞ்சிக்கிறேன். ச்சே புரிஞ்சிக்கிறேன்.

      Delete
    5. இல்லைனா இன்னைக்கு நைட்டு போன் வரும் ஜெய். அந்த கருமத்துக்கு கால்லயே விழுந்துடலாம்.

      Delete
  11. // விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. //

    அப்ப நீ இன்னும் கவிஞர் ஆகலையா????
    என்னய்யா சொல்றே!!!!

    திருவாரூர்ல பிறந்து....புரண்டு ச்சீ வலர்ந்து... அதுவும்....ஒலகக் கவிஞர் ச்சே கலிஞர் தாத்தா படிச்ச இஸ்கூல்....படிச்ச...நீ...நீ....நீ.....கவிஜ எழுதத் தெரியாத காவாலியா?????

    வீ ஆல் டமிள் பீப்பிள் டிசப்பாய்ட்ண்டட் டு ஹியர் திஸ் ஐ சே...டிஸப்பாய்ண்ட்டட்.....

    ReplyDelete
    Replies
    1. என்னைப்பாத்து ஜெய் என்ன கேள்வி கேட்டாரு
      நானோ ஓடாத பழைய மோட்டாரு
      இன்னக்கி வம்பு சண்டக்கி ஒன்னுமில்ல மேட்டரு
      மணியாச்சி நான் குடிக்கப்போறேன் குவாட்டரு

      Delete
  12. சர்க்கரை துண்டாக
    கரையும் நிலவு --மனதில்
    வளர்ந்து கொண்டிருக்கும்
    வானமாய்
    உன் நினைவு .

    ReplyDelete
    Replies
    1. காட்சிகளோ கண்ணோடு
      நினைவுகளோ நெஞ்சோடு
      என் நண்பன் மனவாடு
      இப்படியே போனா
      எனக்கு கிடைக்கப் போவது திருவோடு

      Delete
  13. பூமி சூரியனை சுற்றுவது
    புவி ஈர்ப்பு விசையால் நான்
    உன்னை சுற்றுவது -- உன்
    விழி ஈர்ப்பு விசையால்

    ReplyDelete
    Replies
    1. யேய் காந்தக் கண்ணழகி, இங்க பூசு, ஹேய் இங்க பூசு.

      Delete
  14. நட்சத்திர கூட்டங்களாக
    உன் தோழிகள் நடுவில்
    நீ மட்டும் விடி வெள்ளியாய் .

    ReplyDelete
    Replies
    1. இங்க நீ = நாந்தானே :-)))...ஹ்ஹேய்ய் இரு..இரு...இது கொஞ்சம் கொழப்பமா தெரியுது...


      ஓகே.... நீ= பட்டிகாட்டான் தானே....:-)))
      தோழிகள் நட்சத்திரக் கூட்டங்களாய்....ஹிஹிஹி

      அவர்கள் நடுவில்...ஹிஹிஹிஹிஹிஹி ...பட்டிகாட்டான்...

      கேக்குறதுக்கே இம்புட்டு சொகம்னா.....:-)))))))))))))

      Delete

    2. கேக்குறதுக்கே இம்புட்டு சொகம்னா.....:-)))))))))))))

      ஹி ஹி ஹி கிடைச்சா எவ்வளவு சொகம்.

      Delete
    3. எல்லா கவிதையையும் சேர்த்து படிக்கவும் ஒரு பிரபஞ்சத்தையே கவர் பண்ணி இருக்கேன் ...........

      Delete
    4. அப்படினா நீங்க தான் பிரபஞ்ச அழகர் செல்வின்.

      Delete
  15. நாளை சூரிய கிரகணம் --- நீ
    வீட்டிலேயே இருந்து விடு
    வெழியே வந்து விஞ்சானிகளை
    குழப்பி விடாதே .

    ReplyDelete
    Replies
    1. அப்படினா அவ கெரகம் புடிச்சவளா இருப்பாளோ

      Delete
  16. ம்மஹும் வெறி ஏத்தாமல் விட மாட்டோம் ...............

    ReplyDelete
    Replies
    1. பட்டிக்காட்டான் :-))))))))))))

      Delete
    2. பட்டிகாட்டானுக்கு சின்ன வாய் :-)))

      செந்திலுக்கு பெரிய வாய் :-))))))))))))

      எப்படி நம்ம கண்டு பிடிப்பு ..

      Delete
    3. நீர் தான்யா விச்ஞானி.

      Delete
  17. அஞ்சா சிங்கம் கர்ர்ர்ர் கர்ர்ர் கர்ர்ர் த்தூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. ஒத்துகிறேன் ................உங்களுக்கு பெரிய வாய்தான் .. ஆத்தி எவ்ளோ தூரம் வந்து விழுகுது ..................

      Delete
    2. பல் செட்டா மச்சி....!

      Delete
  18. Ennaayaa
    nadakkuthu
    inga......

    Padikkura
    kavithai
    mokkai.....

    Nakks
    podum
    paaru

    BAKARDI,,,,
    kottum
    paarum...
    Vadai
    kari.........!!!!!!!!!!


    SAAVUNGADA......!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சாவுறதுக்கு பக்கார்டியெல்லாம் வேண்டாம். இந்த கவிதையே போதும்.

      Delete
  19. Eli
    pori-la
    vakkuraanga
    vadai....

    Vadai
    kidaikkaama
    thinnuraanaga
    eli....

    Manusanukku
    mattum
    kidaikkla
    PULI..........!!!!!!!

    koyaala.....
    Yaarkitta.....???????

    ReplyDelete
    Replies
    1. கொலகொலயா முந்திரிக்கா
      எங்கண்ணன் ஒரு புடலங்கா
      பழைய நடிகர் சாமிக்கண்ணு
      பசிச்சா நாஷ்டா துண்ணு
      கிரிக்கெட் ஸ்டேடியம் மொகாலி
      வியட்னாம் விக்கி ஒரு தக்காளி
      சிவாவின் பிளாக்கு மெட்ராஸ்பவன்
      நாங்கலாம் எமனுக்கே எமன்
      ஹேஹே யாருகிட்ட.

      Delete
    2. Ketta
      pasanga....
      Ippa thaan
      aarampichcheen.....

      Oodittaanga....

      Delete
  20. Atho
    paaru
    nilaa

    nakks
    parththa
    palaa....

    Neenga
    pottukkunga
    KULLA............

    ReplyDelete
    Replies
    1. மனிதன் அடங்குவது ஆறடி நிலம்
      நக்கீரனுக்கு வாய் கொஞ்சம் நீளம்
      அதனால அவரு பழுத்த பழம்
      வாயசானா கூப்பிடுவாங்க கிழம்
      குளிக்கிற குளம் அது நீச்சல் குளம்
      இப்படியே போனா நான் போற ஊரு குணசீலம்

      Delete
  21. அய்யோ அய்யயோ....கொல்றாய்ங்களே...கவுஜயையா எழுதிக் கொல்றாய்ங்களே... காப்பாத்துங்க... காப்பாத்துங்க....

    ReplyDelete
    Replies
    1. மஞ்ச துண்டும் இப்படிதான் கத்துனாரு கதருனாறு . யாரு விட்டா ..........?
      விதி எல்லாம் அனுபவிச்சி தான் ஆகணும் ............

      Delete
    2. ஜெய் மாட்டிக்கிட்டது உங்க விதி
      இதுல யாருமே செய்யல சதி
      பயன்படுத்துங்க உங்க மதி
      தேரோடும் தெரு பேரு வீதி
      எங்க சங்க தலைவரு மதுமதி

      Delete
  22. Kavithai
    pottathu
    VITHAI

    mulaiththathu....
    KAVITHAI.....!!!!!!!
    --------------------------------------
    Ini
    enna
    aakum.......

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காந்தி
      மனதுக்கு தேவை சாந்தி
      கடை திறப்புல கொடுத்தானுங்க பூந்தி
      குடிச்சிப்புட்டு எடுக்கிறானுங்க பாரு வாந்தி
      அவன் வீட்டுக்கு ஒடனே கொடு ஒரு தந்தி

      Delete
  23. சே ஒரு அஞ்சி நிமிசம் சரக்கு கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள ஆத்தா ஃபியூச புடுங்கிடுச்சு, அதுக்குள்ள பாத்தா அலப்பரைய கூட்டிட்டிங்களே மவராசனுங்க,

    நக்ஸ் அண்ணாத்தா ,அஞ்சா ஸிங்கம் எங்கிருந்தாலும் வரவும்... இந்த பிலாக் படிக்குறவங்களுக்கு எல்லாம் வாந்தி ,பேதி வந்தாலும் ஓயாமல் கவித மாரி பொழிவோம்...

    உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காது ...
    குவார்ட்டர் அடிச்சு கலங்காது,
    குஸ்கா சாப்பிட்டாலும் அடங்காது
    கூடவே கோழிக்காலும் ,
    கொத்து பரோட்டாவும் வேணுமடா...

    கர்ணா டாஸ் மாக் போகும் வழியே
    வாந்தி எடுக்காதவன் வல்லவனடா!

    ReplyDelete
    Replies
    1. வவ்வால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்
      கவிதையெனும் அம்பு தொடுக்கிறார்
      தமிழ்த்தேனில் முக்கி எடுக்கிறார்

      Delete
  24. @வவ்வால்....



    ஆங்கிலமா...
    தமிழா.....
    எது
    வேணும்...

    சொல்லுங்க
    போதும்....

    எடுக்காத
    நடைபாதையில
    வாந்தி.....

    இதை
    சொன்னா
    குத்துவாறு
    காந்தி....!!!

    ReplyDelete
    Replies
    1. நக்கீரன் கவிதையில் ஆங்கிலம்
      அவரோ பேச்சில் திமிங்கிலம்
      வாங்க கவிமழையில் முங்கலாம்

      Delete
  25. நக்ஸ் அண்ணாத்த,

    தமிழுக்கு உண்டோ தாட்பாள்,
    தட்டாமல் கேட்பாள்
    தமிழ் கவிதை எனும் தமிழ்ப்பால்
    தண்ணீர் கலக்காத ஆவின் பால்,
    தெனமும் கனவிலோ அமலா பால்!

    ReplyDelete
  26. இதோ
    வராரு
    காட்டான்....

    எல்லாருக்கும்
    கொடுக்க
    போராறு
    புட்டான்.....


    ReplyDelete
  27. கவிதைனா காத தூரம் ஓடுர என்னை எதுக்குயா எஸ் எம் எஸ் , சாட்-னு பிடிச்சி இழுக்குறீங்க........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஒரு கவிதை ஜெய் முயற்சியுங்கள் உங்களாலும் முடியும். ஒர் இரவுக்குள் நீங்கள் கவிஞராகி விடலாம்.

      Delete
    2. காலைல ஒரு கவிதையை ஐஸ் என்று சொன்னதால வந்த பின் விளைவுகளை பார்த்திங்களா ஜெய்.

      Delete
  28. பஸ்..!
    பார்க்..!
    பாத்ரூம்..!
    தியேட்டர்..!
    தென்னந்தோப்பு..!
    குளக்கரை..!
    ஏரிக்கரை..!
    பார்..!

    இது ஒரு கவிஞர் விட்ட பிளஸ்....
    இதுக்குள்ள உள்ள ஒற்றுமை என்னானு சொல்லுங்க....

    ந்க்கொய்யாலே கைப்பிடிச்சா இழுக்குறீங்க...

    இதுக்கு நான் ஒரு ரிப்ளை பண்ணேன்.
    அத கடைசில சொல்றேன்.....:-)))

    ReplyDelete
    Replies
    1. !!!!!!!!!!!!!!!!!!!!

      இதுதான்...

      Delete
    2. இதன் ஒற்றுமை எல்லாத்திலும் ஆச்சரியக்குறி. அடடே

      Delete
  29. உணவு
    உட்கொள்ள
    அழைக்கிறாள்
    என்னவள்.....

    இல்லாவிட்டால்
    கொட்டி
    விடுவாள்
    தலையில்
    பால்...

    வந்துவிடுகிறேன்...
    அதுவரை
    ஆறாமல்
    வைக்கவும்
    அமலாபால்.....

    ReplyDelete
    Replies
    1. யோவ் இது கவிதையெல்லாம் இல்ல. மொக்க. நல்லா முயற்சி பண்ணுங்கள்.

      Delete
    2. ஆறாமல் வைக்க
      ஹாட் பாக்ஸ்,
      அமலா பால்
      ரொம்ப ஹாட் கேல்!

      அன்னமிட்ட அன்னம்,
      அன்பின் சின்னம்!
      அழகின் அடையாளம்
      அவள் மனசோ தாராளம்!

      Delete
  30. இருட்டுல வாழும்
    குருட்டு ஜனங்களே
    கொஞ்சம் கேளுங்க,

    கரண்டு இல்லைனாலும்
    காசிருந்தா இன்வெர்ட்டர் போட்டு
    இணையத்துல இம்சையை
    இழுக்கும் இனமுண்டு பாருங்க

    அட எங்க பேரு பிலாக்கருங்க
    எங்களுக்கு இல்லை வங்கி லாக்கருங்க,

    இராவான போதும் ரெண்டு
    ரவுண்டு போட்டு ரவுச பண்னுவோங்க!

    ReplyDelete
  31. இதெல்லாம் தண்ணி அடிச்சுட்டு வாந்தி எடுத்த இடங்கள்..! ஹி..ஹி..

    இது அந்தக் கவிஞர் சொன்னது....

    நான் போட்ட கமெண்ட்.... கீழே...

    டைட்டில் *லவ்*

    பஸ்..! = பெண்ணைக் கண்ட இடம்
    பார்க்..! = லவ் ப்ரபோஸ் பண்ண இடம்
    பாத்ரூம்..! = போன் வரும் போது குசு க்சுனு பேசுற இடம்
    தியேட்டர்..! = லவ் கசமுசா
    தென்னந்தோப்பு..! = இதுவும் தனிமையில் பேச
    குளக்கரை..! = ஊடலாகி கரயில் உக்கார்ந்து குலத்துல கல் விடுரது
    ஏரிக்கரை..! = சேம் அஸ் குளக்கரை
    பார்..! = லவ் புட்டுகிட்டு போர இடம்


    ReplyDelete
    Replies
    1. நீர் மன்மதனுக்கு மாமா பையனா கரெக்ட்டா, கோத்து விட்டு இருக்கீரே.

      Delete
  32. ஆண்டவா இந்தக் குடிகாரக் கும்பல்ல என்னை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறயே....

    பாதி மப்புக்கே இப்படினா....இன்னும் மீதி குடிச்சி மப்பு உச்சந்தலைக்கி ஏறுனா....என்னவெல்லாம் உளருவானுகளோ...தெரியலையே.....

    ReplyDelete
    Replies
    1. யோவ், பெரிய மனுசா யாரப்பாத்து குடிகாரன்னு சொன்ன, இன்னைக்கு குடிக்கலை தெரியும்ல.

      Delete
    2. யாரையும் காணும், நீங்க கிளம்புறதுனா கிளம்புங்க ஜெய்.

      Delete
    3. வந்துட்டேன்....
      அனைவரும் இருக்கவும்....
      தரமாம...
      நயம் கவிதைகள்...
      பிறக்கும் வரை....

      Delete
  33. மாலைப்பொழுதின்
    மயக்கத்திலே
    மதுரை மல்லியின்
    கிறக்கத்திலே

    ரெண்டு பெக் போட்டேன் தோழா,
    அது என்ன கேடா?

    ReplyDelete
  34. அதோ
    பாரு
    நிர்மலா..........

    கண்ணை
    மறைத்தது
    மின்னலா...

    கண்ணுக்கு
    எட்டியவரை
    காணோம்
    மின்சாரத்தை...

    கையை
    கொட்டுதே
    மின்கட்டணம்....

    ReplyDelete
  35. சுயமாக ஊற்றெடுக்கும்
    நயமான கவிதை
    நயன் தாரா
    கேட்டால்
    நைண்டி அடிக்கும் ஜோரா!

    ReplyDelete
  36. வேணாம் ...வேணாம் ,
    விழுந்திடுவேனா
    குவார்ட்டர் அடிச்சால்
    கவிழ்ந்திடுவேனா?

    ReplyDelete
  37. கூத்து
    அடிக்க
    போன்னேன்
    டாஸ்மாக்....

    பாத்து
    அடிக்குறாங்க
    காசு
    எக்ஸ்ட்ரா...

    ReplyDelete
  38. தம்பி...!ஏம்ப்பா என்னை ஒரண்டை இழுக்குறே...!
    நாம் பாட்டுக்கு முக்குல நிக்குற...!
    வீனா நெப்போலியனை அடிக்க வைக்கிறே...!
    மாற்றான் இரண்டாவது தடவை பார்த்துட்டு
    ஒரு மாதிரியா திரியிற......கொய்யால
    ஏய்யா எழவை கூட்டுற...!

    ReplyDelete
  39. சிங்காரமாம் ஊரு
    சென்னையின்னு பேரு
    ஊரை சுத்தி ஆகுதய்யா
    எக்கசக்க டிராபிக்கு ஜாம்மு!

    இன்னொரு கட்டிங் போடட்டுமா
    இடையில் வந்து பாடட்டுமா?

    ReplyDelete
  40. ஓ...வவ்வால்
    நீர் அடிச்சது மெக்டோவல்
    நான் அடிச்சது
    பிளாக் பைப்பர்
    ஆனால் மப்பு ஒன்னிதான்....
    அடடே ஆச்சர்யக்குறி!

    ReplyDelete
  41. @ வவ்வாலு....

    போட்டாலே
    விருவிருக்கும்
    ஜெர்தா...

    ஆனா
    மோந்தாலே
    பரபரக்கும்
    ஜானிவார்த்தா

    ReplyDelete
  42. சுரேஷ் வாரும்

    எட்டுப்பட்டி ராசா
    எட்டிப்பாரு லேசா
    மெட்டுக்கட்டி பாடும்
    சிட்டுகளே வாரும்!

    ReplyDelete
  43. கொயாலே....
    இனி யாராவதுகவிதைபோடுவீங்க...????

    ReplyDelete
  44. ஏய் நக்கீரா
    நீ..போட்டது டொக்காமா சிம்மா...!
    நிமிஷத்துக்கு ஒரு பைசாவா
    இப்படி ஏழரை கூட்டிறியே
    நியாயமா...?????

    ReplyDelete
  45. பிளாக் பைப்பர்
    அடிச்சாலும்
    பிலாக்கில் கதைப்பர்
    பெருங்குடி மக்கள்!

    ReplyDelete
  46. அரை டஜன் ஆம்லட்டை
    ஏப்பம் விடும் அண்டா வயிறே...!
    புல் அடிச்சும் ஸ்டெடியா
    நிற்கும் கரண்டு கம்பமே!
    ஆ.மூ.அடை மொழி வைத்திருக்கும்
    எங்க குண்டா செந்திலே...!

    ReplyDelete
  47. நக்ச் அண்ணாத்த ,

    கவித ..கவித...

    சில்லென்று பூத்த
    சிறு நெருஞ்சி காட்டினிலே
    சில்லென்று
    சிக்ஸ் தவுசண்ட் பீரடித்தால்
    நிற்பதுவா, நடப்பதுவா
    நிற்பது போல நடப்பதா?

    ReplyDelete
  48. மானிடர் அடித்தாலும்
    மேன் மக்கள்....மேன் மக்களே...!

    ReplyDelete
  49. கூடி
    வாழ்ந்தால்
    கோடி
    நன்மை....

    ஆடி
    பாடி
    கூடி
    குடித்தால்
    மேன்மை...
    மேன்மையே....

    ReplyDelete
  50. தட்டுங்கள் திறக்கப்படும் ,
    கேளுங்கள் கொடுக்கப்படும்
    கடை மூடிய பின்னும்
    டாஸ்மாக் பாரினிலே!

    ReplyDelete
  51. ஏ....மானிடா.!
    நீ...வீனடா.....!
    தூக்கம் வருது
    குட் பாய்....!

    ReplyDelete
  52. ஆ.மூனாவை கடுப்பேற்றிய நான் எழுதிய செய்யுள்...:-
    உஸ்மானு ரோட்டு மேல
    ஒரு நகைக் கடை – அங்கே
    வாங்கித் தாரேன் ஒரு
    அஞ்சு பவுனு ஜெயினு.....!
    என் ஜோடிக் கிளி வாடி புள்ள…..

    அதோ தெரியுது பாரு அண்ணா மேம்பாலம்
    மேல ஏறிப் பார்த்தா தெரியும் என் குடிசை
    அங்கே நீ….. பாங்கா வாழ வந்தா
    அதுதாண்டி எனக்கு சீர் வரிசை…

    அஞ்சு மணிக்கு மேல வாடி மெரினா
    நீதாண்டி ரதி எனக்கு கரீனா
    இரண்டு பேரும் குடிப்போம் ஒரே…ஒரு டொரினா
    நீ….ஓகேன்னு சொன்னா உம் மாமனாரு
    என்னோட நைனா…!
    எனப் பாடுவேன்டி ஒரு கனாக் கானா….!

    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  53. பை...குட் நைட்...
    @ வௌவாலு...
    நாம வருண் போஸ்ட் போவோமா...?????????

    நான் போய் மாத கணக்கா ஆகுது...
    செமத்தியா கமெண்ட் போடணும்...
    அங்க...

    ReplyDelete
  54. மானிட்டர் அடித்தாலும்
    மானமிழக்காத மானிடா,
    உன் வேட்டி அவிழ்ந்து போனது
    உனக்கு தெரியாமல் போனது ஏனடா?

    சான்றோர்க்கு அழகு
    சரக்கடித்தாலும்
    சாயாமல் நடப்பது!

    ReplyDelete
  55. அங்க ஏற்கெனவே ஒருத்தன்
    போட்டு பிரட்டி அடிக்குறான்...

    நாமளும் செர்ந்துக்கோவாமா.......????????

    ReplyDelete
  56. நக்ஸ் அண்ணாத்த,

    அந்த மாமாவை எல்லாம் கண்டுக்கிறதே இல்லை ,எதவாது சொன்ன சின்னப்புள்ளத்தனமா ஒப்பாறி வைக்கும்.

    ஓ.கே. குட் நைட், மக்களே!

    ReplyDelete
  57. இங்கே
    கவியரங்கம்
    முடிந்துவிட்டது
    இனி
    தமிழ்
    பிழைத்துக்கொள்ளும்.

    ReplyDelete
  58. முடிவில்... படத்தில் சென்னை தெரிகிறது... கொடுத்து வச்சவங்க...

    ReplyDelete
  59. அட பாவிகளா நான் மட்டை ஆனபின் இங்கே மரண மொக்கை போட்டிருக்கீங்க .
    ரைட்டு ஸ்க்ரீன்ஷாட்டு எடுத்துர வேண்டியது தான் ...................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...