சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, June 26, 2013

குடிகாரர்களின் சம்பாஷனைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நான் அம்பத்தூர் முருகன் திரையரங்கு அருகில் இருந்த பாரில் சரக்கடித்துக் கொண்டு இருந்தேன். என் எதிரில் இரு நபர்கள் அமர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்தனர்.


கொஞ்ச நேரத்தில் சண்டை முற்றிப் போய் இருவரும் கட்டி உருண்டனர். விஷயத்தை நான் புரிந்து சமாதானப் படுத்துவதற்குள் பலவிஷயங்கள் புரிந்துப் போயின. அப்படியே கொடுத்தால் ராவாக இருந்து படிக்க முடியாமல் போய் விடும். அதனால் கொஞ்சம் நாகரீகமாக கொடுத்துள்ளேன். படித்து ரசிக்கவும்.


ராசு : ஒல்லி நபர், அப்பா அம்மா கிடையாது, ஐம்பதை கடந்தவர், மனைவி குழந்தைகளுடன் வாழ்பவர்

சீனு : சற்று தாட்டியானவர், முப்பது வயதுக்காரர்,ராசுவின் பக்கத்து வீட்டுக்காரர், மனைவியின் தொல்லையால் அம்மாவை அடிப்பார், திட்டுவார். மனைவி சற்று ராட்சஸி.

விளக்கம் இது வரை....................


ராசு: நீ இப்படியெல்லாம் அம்மாவை திட்டுன தப்புங்க சார், அப்படியெல்லாம் பேசக்கூடாது சார், அம்மா என்பவர் தெய்வம்

சீனு : அட நீங்க வேற ஏதாவது ஒரு சமயத்துல அம்மா தப்பா பேசிடுது. அம்மாவையும் மனைவியையும் வச்சிக்கிட்டு ஒரே வீட்டுல நான் ரொம்ப சிரமப்படுறேன்.

ராசு : என்ன இருந்தாலும் அம்மா தெய்வம், எனக்கு அம்மா கிடையாது. அப்பா கிடையாது. அவர்களுக்காக வேண்டுகிறேன். நீங்கள் ரொம்ப தப்பா திட்டுகிறீர்கள். இப்படி பேசக்ககூடாதுடா டேய். தம்பி.

சீனு : நீங்களும் ஒரு வீட்டில் அம்மா மனைவியுடன் வாழ்ந்து பாரு தெரியும்.

ராசு : இருந்தாலும் அம்மாவை அடிச்சியா நீ கொன்னுபுடுவேன் படவா,

சீனு : போடா டேய்

ராசு : என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டுடா, அம்மாவை திட்டாதடா,

சீனு : அம்மாவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியலை, எனக்காக புரிந்து போக மாட்டேங்குறாள்


ராசு : சார் அப்படி சொல்லாதீங்க, நீங்க என் தம்பி மாதிரி, அம்மா தெய்வம்

சீனு : போடா டேய் என்னால சமாளிக்க முடியலை.

ராசு : பொண்டாட்டி மடி போதுமாடா நாயே, போய் நக்....டா

சீனு : அப்படி பேசாதடா கொன்னுடுவேன். ராஸ்கல்.

அடித்து உருளுகிறார்கள். இவர்களில் யார் நல்லவன், எனக்கு இன்று வரை புரியவில்லை. அம்மா அப்பா இல்லாத ராசுவா, இல்லை அம்மாவை திட்டினாலும் வைத்து காப்பாத்தும் சீனுவா.

இந்த பேச்சுகளுக்கு அப்புறம் கட்டிப் புரண்டவர்களை நான் எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

கல்யாணம் ஆன பக்கிகளா நீங்களாவது சொல்லுங்கள் அம்மா அப்பா
இல்லாத ராசு நல்லவரா, அல்லது அம்மாவை வைத்து காப்பாத்தினாலும் மனைவியின் தொந்தரவுக்காக அவ்வப்போது திட்டும் சீனு நல்லவரா

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, June 25, 2013

சூடு ஆறிப் போன தில்லுமுல்லு

எப்பொழுதும் பரபரப்பாக படங்கள் பார்த்து விமர்சனங்கள் எழுதிக் கொண்டிந்த நான் இரண்டு வாரங்களாக வந்த வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. எப்பொழுதாவது இது போல் நடப்பதுண்டு.


சென்ற வாரம் அம்மாவும் அப்பாவும் சென்னை வந்திருந்தார்கள். அப்பா கூட அடிக்கடி சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் அம்மா பல வருடங்களுக்கு ஒரு முறை தான் வருவார். அவர்களுக்காக அபிராமி மாலில் ரீக்ளைனர் டிக்கெட் வாங்கி தில்லுமுல்லு படம் பார்த்தேன். அந்த சீட்டில் அமர்ந்து படம் பார்த்ததில் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். வித்தியாச அனுபவமும் கூட. எனக்கு அதுவே போதும்.

படம் பார்க்கும் போது பயமாகவே இருந்தது. பழைய தில்லுமுல்லுவை போட்டு குழப்பியடித்திருப்பார்களோ என்று நினைத்தேன். அதுபோல் இல்லாமல் காப்பாற்றியதே படத்தின் வெற்றி.


படம் துவங்கும் முன்பே பழைய தில்லுமுல்லுவை மனதிலிருந்து கழற்றி வைத்து விட்டேன். ரஜினி, தேங்காய் சீனிவாசன், மாதவி, கிளாசிக் காமெடி என எல்லாமே நினைவில் இருந்தால் படத்தினை ரசிக்க முடியாது.

படத்தின் சீன்களை ஒரளவுக்கு பழைய படத்திலிருந்து மாற்றி யோசித்து இருக்கிறார்கள். கதை கருமாந்திரம் எல்லாம் எதுக்கு அதான் பழைய தில்லுமுல்லுவிலேயே தெரியுமே.

சிவாவின் நடிப்பு சென்னை 600028 படத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்படத்தை ரசித்துப் பார்த்தேன். கலகலப்பில் கூட சந்தானம் வரும் வரை படத்தை காப்பாற்றியவர் சிவா தான். ஆனால் இந்த படத்திலும் அதே பாணி நடிப்பு எனக்கு லேசாக அலுப்புத் தட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஸ்டைலை மாற்றிக் கொள்ளாவிட்டால் கஷ்டம் சாரே.


இஷா தல்வார் தட்டத்தின் மறயத்து படத்தில் பிரமாதமாக நடித்து இருந்தால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் வரும் முத்துச்சிப்பி போலோரு என்ற பாடலை என் செல்லில் டவுன்லோடிட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து ரசித்து வருகிறேன்.

ஆனால் அதே தல்வார் இந்த படத்தில் சற்று ஙொய் என காட்சியளிக்கிறார். இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால் அந்த படத்தில் சற்று வெட்கத்துடன் இருப்பதும் இந்த படத்தில் நாம் மாதவியுடன் அவரை ஒப்பிட்டுப் பார்ப்பதும் தான். வெட்கப்படும் பெண்ணை எந்த ஆணுக்குத் தான் பிடிக்காது. இனி அவரின் நினைவுகளுக்கு எனக்கு முத்துச்சிப்பி பாடல் மட்டும் போதும்.

பிரகாஷ்ராஜ் முருக பக்தராக வழக்கம் போல் அடவு கட்டுகிறார். பெரிய மனிதர் போலவும் அதே சமயம் சற்று அம்மாஞ்சி போலவும் நடிப்பது சற்று சிரமம் தான். ஆனால் இரண்டையும் அலேக்காக தூக்கிச் சாப்பிடுகிறார்.


கோவை சரளா சென்னை ஸ்லாங்கில் வெளுத்துக் கட்டுகிறார். நாக்கில் அலகைக் குத்தி பேச சிரமப்படும் போது சற்று சத்தமாகவே சிரித்தேன். அது போல் இளவரசுவும் சில காட்சிகளில் நகைக்க வைக்கிறார்.

பரோட்டா சூரி வருகிறார் சற்று கலங்கலான போட்டுக் கொடுத்தல் வேலையை செவ்வனே செய்கிறார். பழைய தில்லுமுல்லுவில் வரும் சிறுவன் கதாபாத்திரத்தின் மாற்று வடிவமைப்பு தான் இந்த பாத்திரம்.

படத்தின் மிகப் பெரும் பலங்களில் ஒன்று சிவாவின் டயலாக் காமெடிகள் பூரிக்கிழங்குக்காக புருஸ்லீ மேல சத்தியம் என பின்னுகிறார். நமக்கு அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது. இதுக்கு மேல வசனங்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிபியின் ஜெராக்ஸாகத் தான் இருக்க வேண்டும்.

அது போல அந்த கணேஷ் வசந்த் காமெடி சூப்பரோ சூப்பர். மாடியில் ஏறி அடிவாங்கும் காமெடி சற்று மொக்கை என்றாலும் சத்தம் போட்டு சிரித்து ரசித்தேன். ஹோட்டலில் பார்சல் வாங்கிப் போகும் போது இன்னும் சிரிப்பு தான்.

இடையில் சில படங்களில் கடுப்பேற்றியிருந்த சந்தானம் எல்லாவற்றிற்கும் சேர்த்து இந்த படத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார். வந்ததிலிருந்து படம் முடியும் வரை சந்தானம் ஆட்சி தான். அதிலும் ஆங்க்ரி பேர்ட் மூக்கன் என்ற வார்த்தை இன்று எங்கள் அலுவலகத்தில் பல பேருடைய பட்டப் பெயர்.

இதெல்லாம் படம் வெளியான அன்று பதிவிட்டு இருந்தால் படிக்க நன்றாக இருந்திருக்கும். இப்ப எல்லார் விமர்சனங்களையும் படித்த பின்பு இன்று படிக்க போராகத்தான் இருக்கும். ஆறின காப்பி சுவை சற்று குறைவாகத் தான் இருக்கும். இருந்தாலும் நறுக்குன்னு இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்
 

Saturday, June 22, 2013

ரயில் பயணங்களில்

சமீபத்திய பதிவு : சிங்கப்பூர் வேலை வாய்ப்பு
இப்பொழுது எல்லாம் ரயில் பயணம் என்பது நியாயமாக பணம் கொடுத்து செல்பவனுக்கு கிட்டாது என்றே தோன்றுகிறது. திங்கள் கிழமை சொந்த ஊரில் நடக்கும் திருமணத்திற்காக நாளை இரவு திருவாரூர் செல்ல வேண்டியிருந்தது. பல வருடங்களாகவே ஊருக்கு பேருந்திலோ அல்லது காரிலோ மட்டும் சென்று கொண்டிருந்ததால் மாறுதலுக்காக இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள முன்பதிவு நிலையத்திற்கு காலை 07.00 மணிக்கெல்லாம் சென்றேன். 


நண்பர்கள் தட்கலில் எடுக்கும் முறையே ஏற்கனவே சொல்லி அறிவுறுத்தியிருந்ததால் சீக்கிரம் சென்ற நான் அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கு முன்னால் 80 பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். அடப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டு நானும் வரிசையில் நின்றேன். 7மணியிலிருந்து வரிசையில் நின்று 9மணிக்கு என்முறை வந்தது. சென்று முன்பதிவு விண்ணப்பத்தை கொடுத்தால், வெயிட்டிங் லிஸ்ட் 40 என்றார்கள். கடுப்பாகி விட்டது, அவர்களிடம் என்ன சொல்வது, முனகிக் கொண்டே வெளியில் வந்தேன்.


என் நண்பன் ஒருவனிடம் இதுபோல் டிக்கெட் எடுக்கப்போய் வந்த கதையை சொன்னேன். உடன் அவன் ஒரு ரயில் டிக்கெட் ஏஜெண்ட் நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னான். நான் அந்த நம்பரில் உள்ளவரிடம் கேட்டால் டிக்கெட் தயார் என்று் கூடுதலாக ரூ200 கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றும் கூறினான். இதற்கு நான் பேருந்திலேயே செல்லத்தயார் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

எவ்வளவோ வட இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு அலுவல் காரணமாக பலமுறை சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் பெரும்பாலும் நான் மட்டுமே செல்லும்படி இருக்கும். எனவே துணைக்கு மாவீரன் நெப்போலியன் அல்லது VSOP ஆகியோர் கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் மிக்ஸ் பண்ணி என்னுடன் இருப்பர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து அதுவும் திருமணமாகி இத்தனை நாட்களில் முதன்முறையாக என் மனைவியுடன் செல்லலாம் என்று அதுவும் மிஸ்ஸானதால் வந்த கடுப்பு இது.


சிறுவயதில் விடுமுறைக்காக திருவாரூரிலிருந்து சென்னை வந்து விடுமுறை நாட்களை மாமா வீட்டில் கழித்து விட்டு திரும்பி செங்கோட்டை பாஸஞ்சரில் மயிலாடுதுறை வரை வந்து அங்கிருந்து மயிலாடுதுறையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரயிலில் ஏறி திருவாரூர் செல்வோம்.

அந்தப் பயணத்தில் திருவாரூரிலிருந்து சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரையும் உள்ள பயணம் இருட்டில் இருப்பதால் அவ்வளவாக ஈர்க்காது. ஆனால் காலை 06.00 மணிக்கு மயிலாடுதுறையில் இறங்கி பல் துலக்கிய பிறகு ரயில் நிலையத்தில் காலை சிற்றுண்டியாக இட்லி வடை அப்பா வாங்கித்தருவார். அதை ரயில் நிலையத்தில் அமர்ந்து சாப்பிடும் போது, அடடா அதன் சுவையே தனி. பிறகு 07.00 ரயில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும். அது செல்லும் பாதையே மிகுந்த ரசனையாக இருக்கும்.


ஆற்றுப்பாலங்கள், இரு பக்கமும் தோப்புகள் என சுற்றுப்புறமும் அந்த காலை ரம்மியமான சூழ்நிலையும் அருமையாக இருக்கும். பிறகு +2 முடித்த பிறகு நான் படிப்பதற்காக சென்னைக்கு வந்து இங்கேயே தங்கி விட்டதாலும் பேருந்து பயணம் மட்டுமே வகுப்பு நேரத்திற்குரிய வசதியாக அமைந்து விட்டதால் அப்போதிலிருந்து பேருந்து பயணம் மட்டுமே. இப்பொழுதெல்லாம் கார் அல்லது ஆம்னி பஸ் மட்டுமே.

தற்பொழுது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை பிராட்கேஜ் பணிகள் நடப்பதால் ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து கும்போணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூர் செல்கின்றன. மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் பயணம் துவங்கிய பின்பே நான் அந்த பயண சுகத்தை அனுபவிக்க முடியும்.


ஆரூர் மூனா செந்தில்

 டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு, இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியது. ரயில் முன்பதிவு சிக்கல்களில் இன்று வரை மாற்றமில்லை.

Monday, June 17, 2013

பஞ்சேந்திரியா - திருவாரூர் அலப்பறைகளும் க்கூ கவிதைகளும்

ஒரு வாரம் தொய்வு விழுந்தால் மீண்டும் எழுதுவதற்கு மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் ஊருக்கு சென்றிருந்ததால் இணையம் பக்கம் வர முடியவில்லை. வெள்ளி முதல் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், எழுதுவதற்கு வாய்ப்புகள் பிடிபடவேயில்லை. எனவே தான் இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சேந்திரியா.


சென்ற வாரம் இரண்டு திருமணங்கள் ஊரில் நடந்தன. மிக நெருங்கிய நண்பனின் திருமணம் ஒன்று, அத்தைப் பையனின் திருமணம் மற்றொன்று. பல வருடங்களுக்கு பிறகு பல நண்பர்களையும் சொந்தக்காரர்களையும் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.

முதல் திருமணம் திருவாரூரிலும் மற்றொரு திருமணம் திருப்பனந்தாளிலும் ஒரே நாளில் இரண்டு மணிநேர வித்தியாசத்தில் நடந்தன. காலையில் அவசர அவசரமாக முதல் கல்யாணத்தை முடித்து அடுத்த திருமணத்திற்கு காரில் சென்று இரண்டு பக்கமும் நல்ல பெயரை வாங்கி விட்டோம்.


நண்பனின் கல்யாணம் காதல் திருமணமானதால் இரண்டு வீட்டினரிடமும் பெரிய ஈடுபாடில்லை. நாங்களே எல்லா வேலைக்கும் முன்னிற்க வேண்டியிருந்தது. முதல் நாள் நள்ளிரவில் மாப்பிள்ளையின் அண்ணனையும் மண்டபத்தை விட்டு துரத்தும் அளவுக்கு பிரச்சனை.

முதல் கல்யாணம் நல்லபடியாக முடிந்ததும் அத்தைப் பையனின் திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பனந்தாளுக்கு சென்றோம். அம்மாவும் அப்பாவும் முதல்நாளே சென்று இருந்தனர். நானும் தம்பியும் மட்டுமே காரில் சென்று சரியான நேரத்தில் அடைந்தோம். முழுவதும் உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


பல வருடங்கள் கழித்து ஒன்று கூடியதால் மற்றவர்களுடன் அளவளாவியதே பெரிய மகிழ்ச்சியை தந்தது. அந்த திருமணத்தை முடித்து விட்டு நானும் தம்பியும் மட்டும் திருவாரூர் திரும்பினர். அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளையின் ஊரான கன்னியாக்குறிச்சிக்கு சென்றனர். மறுநாள் கறிவிருந்தும் வரவேற்பும் அங்கு ஏற்பாடாகியிருந்தது.

மறுநாள் காலையிலேயே தம்பிகள் மற்றும் மச்சான்கள் ஒன்று கூடியிருந்தனர். கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. பெரியப்பா மற்றும் சித்தப்பாகள் தனியாவர்த்தனம் வாசிக்க நாங்கள் அந்த போக்குவரத்தே இல்லாத கிராமத்தில் இருந்த கடைக்குள் நுழைந்தோம்.


இதில் பெரிய போதை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நெருங்கிய சொந்தங்களுடன் இதுபோல் நேரத்தை செலவிடுவது பல வருடங்களுக்கு நினைவுகளை சுமக்க வசதியாக இருக்கும்.

அத்தைகள், மாமன்கள், சித்தப்பாக்கள், சித்திகள், பெரியப்பா, பங்காளிகள், மச்சான்கள் என அனைவரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தோம். கறிவிருந்தும் பிரமாதம். இதற்கென இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 ஆடுகள் வாங்கி வளர்க்கப்பட்டன. மட்டன் பிரியாணி, ரத்தப் பொரியல், தலைக்கறி கூட்டு, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் என ஏக தடபுடல் தான்.


அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு அத்தைப் பையனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வரையில் இந்த சந்திப்பு எங்கள் சொந்த பிணைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

----------------------------------------------------------------

லிங்குசாமியின் லிங்கூ என்ற ஹைக்கூ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டாலும் வெளியிட்டார். முகநூலில் எல்லோரும் ஒரு இக்கூவை வைத்து தாளிக்க ஆரம்பித்தனர். நானும் என் பங்குக்கு தாளித்தது இது. இனிமேல் யாரும் க்கூ என்று புத்தகம் வெளியிடவே மாட்டார்கள்.

செல்வின் சிங்கூ, மெட்ராஸ் பவன் சிவா சிங்கூ, நாகராஜசோழன் நாங்கூ, கேபிள் சங்கூ, கேஆர்பி செங்கூ, பட்டிக்காட்டான் ஜெய்கூ, நக்கீரன் நங்கூ, கோகுலத்தில் சூரியன் வெங்கட் வெங்கூ என போட்டு தாளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பயணித்தேன் அவள் நினைவுடனே
பேருந்து நிறுத்தம் வந்தது கூட தெரியாமல்
தூரத்தில் நடத்துனர் குரல்
சாவுகிராக்கி ஸ்டாப்பிங்ல இறங்க மாட்டியா # செங்கூ

பள்ளி செல்லும் குழந்தை
அப்பாவிடம் கேட்டு வாங்கி
போட்டு சென்ற சப்பாத்துவை
விளையாடும் போது தொலைத்து விட்டு
வெறும் காலில் நடந்து வந்து
வாங்கப் போவது அடியா உதையா? # செங்கூ

வெயிலில் அலைந்து
ஊரெல்லாம் திரிந்து
விதைநெல் வாங்கி வந்து
வயலைப் பார்த்தால்
நிலமெல்லாம் களை # செங்கூ

கொட்டும் மழையில்
ஓடும் ரயிலில்
ஜன்னலோரத்தில்
சாரலில் நனைந்து
கொண்டே நான் # செங்கூ

மாடு போட்டா சாணம்
அதுவே ஆடு போட்டா புழுக்கை
அவ்வளவு தான் வாழ்க்கை # செங்கூ

ரெண்டு நாளைக்கு முன்னாடி
முந்தாநாளாம்
இன்னையிலிருந்து ரெண்டு நாள்
கழிச்சி நாளன்னைக்காம் # செங்கூ

சைக்கிளை ஓட்டி இறங்கி
கீழப் பாத்தா தரை
வெறும் கட்டாந்தரை # செங்கூ

பக்கத்து வீட்டு பாப்பா
இருப்பா ரொம்ப கருப்பா
இதைப் பத்தி சொன்னா
என்னைப் பாத்து மொறைப்பா # செங்கூ

மூத்திர சந்தில் மல்லிகை வாசம்
ஜாஸ்மின் செண்ட்டு போட்டு
ஒன்னுக்கடிச்சவன் யாரோ # செங்கூ

இன்று நல்லபடியாக துவங்கியிருக்கிறேன் இந்த வாரத்திற்குள் இன்னும் மூன்று பதிவாவது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

ஆரூர் மூனா செந்தில்


Thursday, June 6, 2013

நான் தோற்ற சம்பவங்களில் ஒன்று

ஒரு பெரிய சறுக்கலுக்கு பிறகு சென்னையை விட்டு திருவாரூருக்கு சென்று எதையாவது செய்து தோல்வியில் இருந்து மீ்ண்டு விடுவது என்று கிடைத்த தொழில்களையெல்லாம் செய்து வந்தேன். கிடைத்தது லாபங்களல்ல, அனுபவங்கள் மட்டுமே.


2010ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் பூண்டு விலை ரூ300க்கு மேல் விற்றுக் கொண்டு இருந்தது. அந்த சமயம் இந்தூர் என்ற மத்திய பிரதேச பெருநகரில் உள்ள பூண்டு மார்க்கெட்டில் விலை 120 தான் என தெரிய வந்தது. பெருமளவில் வாங்கி வந்து சென்னையில் விற்றால் பெரும் லாபம் கிடைக்கும் என இந்தூருக்கு பயணமானேன்.

நான் இந்தூருக்கு போனதை ஒரு தொடராக எழுதலாம் அவ்வளவு சிரமப்பட்டு தான் போனேன். திருச்சியிலிருந்து போபால் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்தேன். வெயிட்டிங் லிஸ்ட் தான் கிடைத்தது. என் நண்பனிடம் சொல்லி EQ போட்டேன். அதிகாலை 2.30க்கு திருச்சியில் ரயில் புறப்படும் நேரம். சென்று விசாரித்தால் EQ கிடைக்கவில்லை.


நண்பனுக்கு போனைப் போட்டால் அதிகாலையில் அவன் போனை எடுக்கவும் இல்லை. வடமாநிலங்களுக்கு அன்ரிசர்வ்டு பெட்டியில் செல்வது உகந்தது இல்லை என தெரியும். இருந்தாலும் பணத்தின் தேவை என்னை பயணம் செய்ய வைத்தது. சரியாக 28 மணிநேரம் நின்று கொண்டே பயணமானேன்.

நரக பயணம் அது. ஆந்திரா வந்ததும் அவனவன் வண்டியிலேயே பீடி பிடிக்க ஆரம்பித்தானுங்க. கக்கூஸை நாரடித்து வைத்தார்கள். வழியில் எங்காவது இறங்கி விடலாம் என்று கூட நினைத்தேன். ஒரு வழியாக பல்லைக் கடித்துக் கொண்டு பயணம் செய்து இந்தூர் சென்றேன்.


சென்ற போது நல்ல விலையில் பூண்டு ஒரு லாட் கிடைத்தது. ஆனால் ஊரில் பணம் ரெடி செய்து அது என் கையில் கிடைப்பதற்குள் அந்த லாட் விற்று விட்டது. தென் மாநிலங்களில் விலையேறி விட்டதால் டிமாண்ட் அதிகமாகி விட்டதாக அங்குள்ள ஏஜெண்ட்டுகள் தெரிவித்தார்கள்.

பிறகு மார்க்கெட்டில் நடக்கும் ஏலத்திற்கு சென்று கவனிக்க ஆரம்பித்தேன். காலை பத்து மணிக்கு துவங்கும் ஏலம் ஒரு மணிக்குள் முடிந்து விடும். விலை எனக்கு புரிந்து கேட்க ஆரம்பிப்பதற்குள் ஏலம் முடிந்து விடும்.


அது மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரிகள் தமிழ்காரனான என்னை ஏலம் கேட்க விடாமல் மிரட்ட ஆரம்பித்தார்கள். இப்படியே பத்து நாட்கள் ஓடி விட்டது. வெறும் சப்பாத்தி தான் சாப்பாடு.

அங்கு காலை உணவு என்று ஒன்று கிடையவே கிடையாது. எந்த ஹோட்டலிலும் காலை உணவுகள் கிடைக்காது. நமக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால் டீக்கடையில் பொஹா என்று ஒரு அவல் உப்புமா போன்ற அயிட்டம் தான் கிடைக்கும். அதையும் சுண்டல் போல பேப்பரில் தான் தருவார்கள்.

நாள் செல்லச் செல்ல நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. வாங்காமல் போனால் ஊரில் ஒரு பயல் மதிக்க மாட்டான் எனவே எப்படியாவது வாங்க வேண்டும் என்று மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தேன். அங்கு நான் தங்கயிருந்த ஹோட்டலில் சப்ளையராக இருந்த ஒரு நபர் நண்பனாகினான்.

அவனை வைத்து ஏலம் கேட்டால் என்ன என்று யோசித்து அவனை வைத்தே ஏலம் கேட்டேன். இரண்டு நாள் படியவில்லை. மூன்றாம் நாள் ரூ 130க்கு இரண்டு டன் கிடைத்தது. பிறகு ரயில்வே ஸ்டேசனில் லோடு போட கேட்டால் மூன்று நாட்களுக்கு வண்டிகளில் இடமில்லை போபால் சென்று தான் போட வேண்டும் என்றார்கள்.

ஒரு டாட்டா ஏஸ் வண்டியை வைத்து லோடு ஏற்றிக் கொண்டு சாயங்காலம் போல நானும் அறையை காலி செய்து அந்த வண்டியிலேயே பயணமானேன். இரவு 8 மணிக்கு போபால் போய் சேர்ந்தோம்.

வண்டியை ரயில்வே ஸ்டேசனில் விட்டதும் சரசரவென லேபர்கள் வண்டியில் குவிய ஆரம்பித்தார்கள். ரேட்டு படியவில்லை. பிறகு வண்டியை வெளியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு நான் மட்டும் தனியாக வந்து ஒரு நபரிடம் விசாரித்தேன்.

சென்னைக்கு இரண்டு டன் ஏற்றுவதற்கு 10000 ரூபாய் கேட்டார்கள். ஆனால் அன்று நேரம் முடிந்து விட்டபடியால் மறுநாள் காலை தான் ஏற்ற வேண்டும். வண்டிக்காரன் வேறு லோடை இறக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருந்தான். நான் தனியாள், இரண்டு டன் பூண்டுடன் இரவு முழுவதும் என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது.

சரி ஒரு கை பார்த்து விடுவோம் என பார்சல் ஆபீஸ் வாசலில் மூட்டைகளை அட்டி போல அடுக்கி வைத்தோம். வண்டிக்காரன் போனதும் நான் மூட்டைகளின் மீது அமர்ந்து கொண்டேன். நான் எங்காவது சென்று விட்டால் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்றால் கூட பிரச்சனையாகி விடும் என பயந்தேன்.

குளிர் வேறு பயமுறுத்திக் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருந்தது. என்னிடம் போர்வையும் இல்லை. ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியினால் ராத்திரி முழுக்க கண்விழித்து அமர்ந்து இருந்தேன்.

காலையில் பத்து மணியானதும் பார்சலில் மூட்டைகளை போட்டு விட்டு ஒரு ரூம் எடுத்து தூங்கினேன். போபாலில் எப்படி குளிரோ அதை விட அதிகமாக சென்னையில் கடும் மழை. மறுநாள் நான் சென்னை வந்ததும் கொட்டும் மழையிலேயே கோயம்பேடு சென்று ஒரு வியாபாரியிடம் சாம்ப்பிளை காட்டி விலை பேசி ரூ240க்கு முடித்தேன்.

மொத்த மூட்டைகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு கனவுகளுடன் கோயம்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். எப்படியும் இரண்டு லட்சம் லாபம் வந்து விடும், இனி வாரம் ஒரு முறை இந்தூர் சென்று பூண்டு வாங்கி வந்தால் என் கடன்களையெல்லாம் அடைத்து மறுபடியும் மேலே வந்து விடலாம் என்று பெருமிதத்துடன் வந்தேன்.

வந்து மூட்டையை இறக்கி மூட்டைகளை அவன் சோதித்துக் கொண்டு வந்தான். இரண்டாவது மூட்டையிலேயே அவனுக்கு சந்தேகம் வந்து மொத்த மூட்டையையும் பிரித்து கொட்டினான். சோதித்து விட்டு "இந்த பூண்டு விலைக்கு போகாது. நாங்களும் வைத்துக் கொள்ள முடியாது, நீங்கள் எடுத்து சென்று விடுங்கள்" என்று சொன்னான்.

"என்னய்யா என்ன ஆச்சு" என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். "பூண்டு மழையில் நனைந்ததால் பழுத்து விட்டது. இதனை வைத்து விக்க முடியாது" என்று சொன்னான். எனக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

அந்த மூட்டையிலிருந்து கொஞ்சம் பூண்டுகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த எல்லாம் பூண்டு வியாபாரிகளிடமும் காட்டி விலை கேட்டேன். ஒருத்தனும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

கவலையுடன் இடிந்து போய் உக்கார்ந்து இருந்தேன். அப்போது என் நண்பன் ஒருவன் புதிய ஆள் ஒருவனை அழைத்து வந்தான். விசாரித்ததில் அவன் பூண்டு இஞ்சியை பேஸ்ட்டாக அரைத்து கடைகளில் விற்பனை செய்பவன் என்றும் இந்த பூண்டை கிலோ ரூ60க்கு வேண்டுமானால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினான். அப்பொழுது சென்னையில் பூண்டின் விலை கிலோ ரூ320.

வெறுத்துப் போய் அந்த விலைக்கே அவனிடம் கொடுத்து விட்டு வந்தேன். ஒரு மாதம் சிரமப்பட்டு வடமாநிலத்தில் தங்கியிருந்து, குளிரில் காய்ந்து அந்த பொருளை கொண்டு வந்ததில் எனக்கு கிடைத்தது அனுபவமும் 1 லட்ச ரூபாய் நஷ்டமும் தான்.

ஆரூர் மூனா செந்தில்
 

Wednesday, June 5, 2013

18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்

டிஸ்கி : மூன்று நாட்களாக வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியவில்லை. ஆனாலும் கை பரபரங்குது. அதுக்காக தான் இந்த பதிவு. இது ஒரு மீள்பதிவு

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 3மணிக்கு ஒரு நபரை அயனாவரம் அருகில் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலகம் சென்ற பின் தான் அவர் தாமதமாக மதிய உணவு சாப்பிட சென்றிருக்கிறார் என்றும் 4 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் தெரிந்தது.


நேரத்தை கடத்தலாம் என்னடா செய்யலாம் என்று யோசித்து சரி ஐசிஎப் கிரவுண்ட் சென்று உட்கார்ந்தால் கேலரியின் இருக்கைகள் கொதிக்கிறது. முடியவில்லை. எனவே எழுந்து வந்து வண்டியை எடுத்து அயனாவரம் பக்கம் விட்டேன். கோபிகிருஷ்ணாவில் இஷ்டம் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. சரி நேரத்தை கடத்த சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியை திரையரங்கத்திற்கு விட்டேன்.

திரையரங்க வளாகத்தில் கோபிகிருஷ்ணா, ராதா, ருக்மணி என மூன்று திரையரங்கங்கள் உள்ளன. இஷ்டம் படம் அடுத்த வாரம் தான் ரிலீஸ் என்று போட்டிருந்தது. கோபிகிருஷ்ணாவில் கண்டதும் காணாததும் என்ற படமும், ராதாவில் கலகலப்பும், ருக்மணியில் சிங்காரியின் கதை என்ற படமும் ஒடியது.

கலகலப்பு ஏற்கனவே பார்த்தாகி விட்டது. கண்டதும் காணாததும் பார்க்கக் கூடிய படமே இல்லை என முத்துராமலிங்கம் அவர்கள் ஓஹோ புரொடக்ஷன்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். நமக்கும் ஒரு மணிநேரத்தில் திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் சிங்காரியின் கதை படத்துக்கு டிக்கெட் எடுத்தேன். கில்மா படம் தியேட்டரில் பார்க்க வேண்டியது அவசியமானதில்லை. நமக்குத்தான் கம்ப்யூட்டரும் இணையமும் இருக்கிறதே, இருந்தாலும் ஒரு மணிநேரத்தை ஒட்ட வேண்டுமே என்பதற்காக தான் உள்ளே சென்றேன். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.



நான் அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டிருந்த 1997, 98 காலக்கட்டங்களில் கி்ல்மா படம் பார்க்க வேண்டுமென்றால் பெரம்பூர், ஐசிஎப், அயனாவரம் பகுதியில் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே தியேட்டர் அயனாவரம் ராதா தான். பிட்டுக்கு பயங்கர பேமஸ். நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒரு முறை சினிமாவுக்கு வந்து விடுவேன். பலமுறை நான் மொட்டை மாடியில் 10 மணிக்கெல்லாம் படுத்து தூங்கி விடுவேன். சில நாட்கள் தூங்கிய பின் திடீரென்று வந்து நண்பர்கள் எழுப்புவார்கள்.

ராதாவுக்கு படம் பார்க்கலாம் வா என்று அழைப்பார்கள். கீழே சென்று சட்டையை எடுக்க முடியாது. எனவே மொட்டை மாடியில் யார் சட்டை காய்ந்தாலும் எடுத்து மாட்டிக் கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன். ஒரு முறை மொட்டை மாடியில் துணிகளே காயவில்லை. பரவயில்லை என்று வெறும் லுங்கி மற்றும் உள்பனியனுடன் சென்ற காலமும் உண்டு. படிப்பு முடிந்த பிறகு நான் அந்த ஏரியாவை விட்டு சென்று விட்டபடியால் ராதா திரையங்கையே மறந்து விட்டேன். பிளாஷ்பேக் முடிந்து விட்டது.



டிக்கெட் எடுத்த பிறகு திரையரங்கினுள் சென்று அமர்ந்தால் என்னுடன் சேர்த்து படம் பார்த்தவர்கள் பத்து பேர் மட்டுமே. அனைத்தும் 50 வயதை கடந்த பெரிசுகள் தான். டீன்ஏஜ் பசங்கள் எல்லாம் இன்டர்நெட், செல் என ஏகமாய் வளர்ந்து விட்டதால் இந்த பக்கமே வருவதில்லை போல.

அப்பொழுது எல்லாம் இன்டர்வெல் முடிந்த பின் வரும் பிட்டு பயங்கர பேமஸ். இப்பொழுது என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை என்று ஆர்வத்துடனே உட்கார்ந்தேன். படம் துவங்கியது.

படத்தின் ஒன்லைன் என்ன? அம்மாவைத் தொடர்ந்து பொண்ணும் விபச்சார தொழிலுக்கு வரக்கூடாது என்பதை பல கூடாதுக்கு பிறகு முடிக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன? ஒரு விபச்சார விடுதியில் பலபெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் கீதா. அவருக்கு வயதாகி விட்டதால் விடுதியின் ஒனர் கீதாவின் மகளை இத்தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். கீதா தடுக்கவே அவரை இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கொலை குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார். அம்மா இல்லாததால் பொண்ணை தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் அம்மா சிறையில் இருந்து தப்பி வந்து விடுதியின் ஒனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போட்டுத்தள்ளி விட்டு பொண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைக்கிறார். உஸ் அவ்வளவு தாங்க கதை.

படத்தில் கில்மா காட்சிகளே இல்லை. இதுக்கு பேசாம SJ சூர்யாவின் நியு அல்லது அஆ பார்த்திருந்தாலே சற்று கூடுதலான கில்மா காட்சிகள் இருந்திருக்கும். ஒருமணிநேரம் நேரத்தை கடத்தியதை தவிர படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்வதற்கு நமக்கு ஞாபக சக்தியில்லை. இயக்குனருக்கு ஆலோசனைகளை சொல்லுமளவிற்கு அருகதையும் இல்லை. எனவே விமர்சனத்தை இத்துடன் முடிக்கிறேன்.

நான் உங்களுக்கு சொல்ல வரும் நீதி என்ன? இதுக்கு பேசாம இன்டர்நெட் சென்டருக்கே போய்விடுங்கள். பத்துரூபாயுடன் செலவு முடிந்து விடும்.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...