சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, March 31, 2014

சவுதியில் இஞ்சினியர்களுக்கு வேலை வாய்ப்பு

கவனிக்க சம்பளம் யுஎஸ் டாலரில்
URGENTLY REQUIRED FOR biggest
ROCK GROUP COMPANY IN ksa
CLIENT INTERVIEW IN CHENNAI ON 5TH APRIL 2014

Sr
POSITION
QTY
SALARY IN
JOB DESCRIPTION
(USD)
1
Civil Engineer
20
1600-1800 -Negotiable
Candidates must have BE or B .Tech degree
with  minimum5 yrs of exp in high rise building construction industry

2
Planning Engineer
20
1600-1800-Negotiable
3
Mechanical Engineer
10
1600-1800-Negotiable
4
Electrical Engineer
10
1600-1800-Negotiable
5
QC Inspector - Architectural
10
1600-1800-Negotiable
6
QC Inspector - Civil
10
1600-1800Negotiable
7
QC Inspector - Electrical
10
1600-1800Negotiable
8
QC Inspector - Mechanical
10
1600-1800Negotiable
9
QC Supervisor - Materials
10
1600-1800Negotiable
10
Quantity Surveyor - Civil
10
1600-1800Negotiable
11
Surveyor - Mechanical
10
1600-1800Negotiable




12
Quantity Surveyor - Electrical
10
1600-1800Negotiable
13
Material Engineer - Civil

1600-1800Negotiable
14
Design Engineer - Structural
20
1600-1800Negotiable

இந்திய ரூபாயில் ஒரு யுஎஸ் டாலர் என்பது ரூ.59.90 பைசா.

Important Note:

Deployment within 1 week
08 Hrs Duties
01 year renewable Contract

ஆர்வமும் தகுதியும் உள்ள கேண்டிடேட்கள் 9940173180, 044-43327466 ஆகிய எண்களையோ அல்லது vikashconsultant@gmail.com என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளவும்.

Friday, March 28, 2014

மொய்யும் மதயானைக்கூட்டமும்

எப்போதோ வந்திருந்த மதயானை கூட்டம் படத்தினை இந்த வாரம் தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. எனக்கு ஆச்சரியம், மதுரைப்பகுதி மக்கள் இடையே நான் பார்த்த சடங்குகள் சம்பிரதாயங்கள் வரை மிக நுணுக்கமாக படத்தில் இடம் பெற்று இருக்கிறது.


என் வீட்டு விசேசங்களில் குறைந்தது ஐம்பது முதல் எழுபது மோதிரங்கள் வரை மொய்யாக வரும். அதனை என் அப்பா கவனமாக ஒரு டயரியில் குறித்து வைத்து பத்திரங்கள் வைக்கும் லாக்கரில் வைத்திருப்பார். 

அதே போல் அவர்கள் வீட்டு விசேசங்களில் பவுன் குறையாமல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அங்கேயே தகராறுகள் துவங்கும். இல்லாவிடில் அவர்கள் வீட்டு அடுத்த விசேசங்களுக்கு அழைக்காமல் அவமானப்படுத்துவார்கள்.


ஒருவர் ஒரு குடும்பத்து விசேசத்திற்கு வரவில்லையென்றால் அவன் ஒதுக்கப்பட்டு இருக்கார் என மற்றவர்கள் பேசிக் கொண்டு அப்படியே காதுவழி செய்தியாக நூறு மைல் பயணிக்கும்.

ஒரு முறை நான் சென்னையில் படித்துக் கொண்டு இருக்கும் போது எங்கப்பா மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்த போது என் மாமன் ஒருவர் கிரகப்பிரவேசம் வைத்து இருந்தார். 


அம்மாவின் தாலியை அடகு வைத்து ரெண்டு வெள்ளி குத்து விளக்குகள் வாங்கிச் சென்று வைத்தும், நாங்கள் குறைவாக செய்ததாக நினைத்துக் கொண்டு மறுநாள் நடந்த கறிவிருந்துக்கு எங்கள் குடும்பத்தை மட்டும் அழைக்காமல் அவமானப்படுத்தினார்.

தன் அண்ணன் இது போல் செய்ததால் கோவமடைந்த அம்மா ரொம்ப நாள் அவருடன் பேசாமலேயிருந்தார். பிறகு தாத்தாவின் மரணத்தில் தான் இருவரும் பேசிக் கொண்டனர்.

ஆனால் அதே மரணத்தில் தான் நானும் என் பங்காளிகளும் அந்த மாமனுடனே சேர்ந்து மகாதியானத்தில் இறங்கி விட்டு சுடுகாட்டிலேயே போட்டு பொரட்டி எடுத்தோம் பழைய பகைக்காக.

இதையே சாக்காக வைத்து அவரின் மகன்களும் இன்னும் இருவது வருடங்கள் கழித்து எங்களை பழிவாங்க அலைவார்கள் என்பதும் தெரிந்த விசயமே. நாம் தான் நாசூக்காக பலவீனமான ஆட்களுடன் சொந்தங்கள் வீட்டு விசேசங்களுக்கு செல்லக் கூடாது.


நான் சொல்ல வருவது எல்லாம் எங்கள் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் அது அப்படியே பிசகாமல் படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. 

ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறது, தங்கை மகனாக இருந்தாலும் வீம்புக்காக அடிப்பது வெட்டுவது. மற்ற குடும்பத்து ஆட்களை ஊர் பொறுப்புக்கு வர விடாமல் பார்த்துக் கொள்வது, சொத்து வெளியில் போய் விடக்கூடாது என்பதற்காக வயதான ஆண்களுக்கு சின்னப் பெண்களை கட்டிக் கொடுப்பது,

மாமன்கள் சம்மதம் பெற்று தான் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, எந்த விசேசங்கள் நடந்தாலும் அதற்கு கறிவிருந்து வைப்பது என பார்த்து பார்த்து தென் தமிழக மக்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஆவணம் செய்திருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி வன்முறை சார்ந்தே படம் நகர்வது, க்ளைமாக்ஸ், அண்ணனின் கண்ணீருக்காக மனம் மாறும் விஜி சந்திரசேகர் என சில இடங்கள் மட்டுமே நெருடுகிறது. 

இது படத்தின் விமர்சனமுமல்ல, அந்த சாதி சடங்குகளை தூக்கிப் பிடிக்கவும் இல்லை. என் குடும்பத்தில் நடந்த சீர் செய்யும் பிரச்சனைகளை போன்ற சம்பவங்களைப் பார்த்ததும் அதனை ஒப்பிட்டு எழுதிய கட்டுரை தான் இது.

ஆரூர் மூனா

Wednesday, March 26, 2014

கத்தாரில் இஞ்சினியர்களுக்கு வேலை வாய்ப்பு

கத்தாரில் உள்ள நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட வேலைக்கு ஆட்கள் தேவை, சென்னையில் வரும் 29ம் தேதி இன்டர்வியு இருக்கிறது, ஆர்வமுள்ளவர்கள் 9940173180 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், vikashconsultant@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது பயோடேட்டாவை அனுப்பவும்

1 SITE ENGINEER - DIPLOMA IN CIVIL/MECH - Salary QR 2500-3500

2 QC ENGINEER/MECH - B.E IN MECHANICAL - Salary QR 2000-3000

3 DISPATCH INCHARGE - ANY DEGREE - Salary QR 1500-2000

4 LINE INSPECTOR - DIPLOMA IN MECHANICAL - Salary QR 1000-1500

.5 PRODUCTION ENGINEER - B.E in MECHANICAL - Salary QR 3000-4000

6 CNC PUNCHING OPERATOR - DIP IN MECH OR I.T.I - Salary QR 1200-1500


TERMS & CONDITIONS

1. Free Accommodation with free Electricity & water
2. Food Allowance provided by the company
3. Free Air passage from point in India to the place of work in 2 years
4. Annual leave for 30 days with leave salary to be paid in advance
5. Free Medical treatment, Transportation, Insurance
6. 8 hours duty will be working hours in a day for 6 days a week and contract is renewable every 2 years
7. Other terms & conditions as per UAE labor law


Friday, March 21, 2014

குக்கூ - சினிமா விமர்சனம்

ஏகப்பட்ட வேலைகளும் அழுத்தங்களும் இருந்ததால் இன்று சினிமாவுக்கு போவது சந்தேகமாகவே இருந்தது. வட்டியும் முதலும் தொடரின் காரணத்தால் ராஜு முருகனுக்காகவே படம் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். 

 

இரு மனதாக இருந்த போது நண்பர் மயில் ராவணன் காலையிலேயே மெசேஜ் அனுப்பியிருந்தார். மதியம் 12மணிக்கு அழைக்கவும் செய்தார். நான் டிராபிக்கில் இருந்ததால் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு யோசித்து அவருக்காகவே படம் பார்க்க சென்றேன்.
 படம் பார்க்கும் போதும் அழைத்தார். ஆக இந்த விமர்சனம் நண்பர் மயில்ராவணனுக்காக.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படம் பார்க்கும் போது கதாபாத்திரங்களுடன் நானும் பயணிப்பேன். சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது அவர்களுடனே இருப்பேன். அந்த மனஉணர்வுகளுக்கு சரியான தீனி இந்த படம்.


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே படம்.


இது போன்ற மென்சோகப் படங்களில் சோகத்தை இன்னும் திணிக்கிறேன் என்று கொடுமையான க்ளைமாக்ஸை கொடுத்து பார்ப்பவர்களை ரணகளமாக்கி விடுவார்கள்.

அதைத்தான் நானும் நினைத்தேன், படத்தை தவிர்க்க நினைத்த காரணங்களுள் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த அங்காடி தெரு படத்தில் நேர்ந்தது போல இதிலும் எதுவும் நடந்து விடக்கூடாது என்று நினைத்தேன். அப்படி எதையும் செய்யாத நண்பர் ராஜுமுருகனுக்கு பூங்கொத்துகள் அர்ப்பணம்.

மனிதனின் மனஉணர்வுகள் மிகவும் நுட்பமானவை, அவற்றை சரியாக கட்டுரையாக்கம் செய்வதில் வல்லவரான ராஜுமுருகன், படமாக்குவதிலும் முதல் படத்திலேயே பர்ஸ்ட் கிளாஸை தாண்டி இருக்கிறார். 


நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.

நாயகனின் பார்வையற்ற நண்பர் இயல்பாக சிறப்பாக பெர்பார்மஸில் அசத்தியுள்ளார். சந்தானத்திற்கு நிகரான டைமிங் கவுண்ட்டர் கொடுத்து அரங்கை கலகலக்க வைக்கிறார். 

எனக்கு மான்டேஜ் பாடல்கள் தான் பிடிக்கும். இருவரின் புரிதல்களை, மனஓட்டத்தை சிறு சிறு காட்சிகளாக எடுத்து ஒரே பாடலில் பார்க்கும் போது மனது ரெக்கை கட்டி பறக்கும். 

நிறைய மலையாள படங்களில் காதல் பாடல்கள் மான்டேஜ் பாடல்களாகத் தான் இருக்கும். அதற்காகவே நிறைய மலையாள பாடல்களை பார்ப்பேன். அதே போல் இந்த படத்திலும் பாடல்கள் மான்டேஜ் இருப்பது என்னை இன்னும் படத்திற்குள் ஈர்த்தது.

படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு  பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

படத்தில் கிறிஸ்துவராக வரும் நாயகி எப்படி பொட்டு அணிகிறார் என்று தான் புரியவில்லை. சென்னையில் பொதுவாக ஆர்சி மற்றும் பெந்தகோஸ்து பிரிவு கிறிஸ்துவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இருவருமே நெற்றியில் பொட்டு வைக்க மாட்டார்கள். பின்ன எப்படி ஒரு வேளை எனக்கு தெரியாமல் இன்னுமொரு பிரிவும் இருக்குமோ.

முதல் பாதி வட்டியும் முதலும் படிப்பது போலவே எனக்கு தெரிந்தது. அவ்வளவு பேரின்பம். இரண்டாம் பாதி சற்று அலுப்பையும் அயற்சியையும் தருகிறது. க்ளைமாக்ஸ் ஓவர் சோகத்திற்கு வித்திடுகிறது.

இருந்தாலும் இந்த படத்தின் முயற்சிக்காகவும், பெண்மையை போற்றியதற்காகவும், என் ஊர்க்காரரான ராஜுமுருகனுக்காகவும், மான்டேஜ் பாடல்களுக்காகவும் இன்னொரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday, March 14, 2014

சென்னையில் வாடகைவீடுகளின் அவலங்கள்

எங்கள் ஏரியாவில் நிறைய வீடுகள் காலியாக இருக்கிறது. தெருவுக்கு நான்கு ஐந்து வீட்டு முகப்புகளில் Tolet போர்டுகள் தொங்குகின்றன. இங்கு பலகாலமாக வாடகைக்கு குடியிருந்தவர்கள் பெரம்பூரை விட்டு வெளியேறி பட்டாபிராம், மாத்தூர், பொன்னேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.


எல்லாம் வாடகை உயர்வு தான் காரணம். ஆயிரம் ரூபாய் கூட வாடகைக்கு வக்கில்லாத வீடுகளுக்கு எட்டாயிரம் ரூபாய் வாடகை. அத்தனை ஓனர்களுக்கும் ஆசை, சாப்ட்வேர் கம்பெனிகாரன் இருக்கானே எவ்வளவு வாடகை சொன்னாலும் தாங்குவான் என வீட்டை காலியாக வைத்து காத்திருக்கிறார்கள்.

லோயர்மிடில்கிளாஸ் மக்கள் பெரும்பான்மையாக குடியிருந்த சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு பகுதிகளில் வாடகை இப்போது பத்தாயிரத்திற்கு மேல். இந்த வியாதி வடசென்னை, தென்சென்னை என பாகுபாடில்லாமல் பரவிக்கிடக்கிறது.


2005ல் என் தம்பி கேளம்பாக்கம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது செம்மஞ்சேரியில் என் குடும்பம் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தோம். டபுள் பெட்ரூம் தனிவீட்டு வாடகை 2500 ரூபாய் தான் இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு வேலையாக அந்த பகுதிக்கு சென்ற போது தான் தெரிந்தது. இப்போது அந்த வீட்டு வாடகை 35000 ரூபாய், நான்கு சாப்ட்வேர் கம்பெனி நபர்கள் தங்கியிருக்கிறார்கள்.

இந்த சாப்ட்வேர் கம்பெனிகாரனுங்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்குது என்பதற்காக மற்ற வேலைகளில் இருப்பவனை எல்லாம் முட்டாப்பயலுங்கன்னு நினைச்சிக்கிட்டானுங்க. அவன் படிச்சது கம்ப்யூட்டர் டிப்ளமோ என்றால் நான் படித்தது மெக்கானிக்கல் டிப்ளமோ. 


அவன் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் நான் ரயில்வேயில் வேலை பார்க்கிறேன். அவனுக்கு சம்பளம் 80000 ரூபாய், எனக்கு 30000 ரூபாய். என்னங்கடா நியாயம் இது. நான் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிபவனின் சம்பளத்திற்காக தர்க்கவாதம் புரியவில்லை.

இன்றைய பிரச்சனையே அளவுகடந்து வீட்டு வாடகை சென்னையில் உயர்ந்ததற்கு காரணம் சாப்ட்வேர்காரன் தான் என்கிறேன். நான் 2003 காலகட்டங்களில் ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு டபுள்பெட்ரூம் பிளாட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அதன் வாடகை 2500 ரூபாய்.


அப்போது எவரெடி பேக்டரி கம்பெனி இயங்கி கொண்டு இருந்தது. விர்துசா கம்பெனியும் வரவில்லை. 2005ல் அந்த பிளாட் ஓனர் எங்களையெல்லாம் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியில் தள்ளிவிட்டு 15000ரூபாய் வாடகைக்கு ஆறு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் பேச்சிலர்களுக்கு ப்ளாட்டை கொடுத்தான். 

அப்போது எனக்கு சம்பளம் எட்டாயிரம் ரூபாய் தான். என்னுடன் தங்கியிருந்தவர்கள் இன்னும் கம்மியாக சம்பளம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள். 

ஆனால் வந்த பசங்க எல்லோருக்கும் சம்பளம் அப்பவே 20000 ரூபாய். ஒவ்வொருவனுக்கும் 2500 ரூபாய் கொடுப்பது பெரிய விஷயமாகவே இல்லை. எங்கள் நிலை தான் மயிராப் போனது. எவரெடி பேக்டரியை இடித்து சாப்ட்வேர் கம்பெனியை கட்டியதும் நிலைமை இன்னும் மோசமானது.

அதற்கு பிறகு திருமணமாகி வீடு வாடகைக்கு எடுத்தேன். காசி தியேட்டர் பின்புறம் 2007ல் 4300 ரூபாய் வாடகை. 2009ல் 10000ரூபாய் வாடகை உயர்த்தி விட்டார் வீட்டு ஓனர். அவர் சொன்ன காரணம் சாப்ட்வேர் கம்பெனிகள் பக்கத்தில் வந்து விட்டன. இதை விட அதிக வாடகை கொடுக்க ஆளிருக்கிறார்கள், விருப்பமிருந்தால் இரு, இல்லையேல் காலி பண்ணு.

இப்போது நான் இருக்கும் பெரம்பூர் பகுதியில் முக்கால் வாசிப்பேர் ரயில்வே தொழிலாளர்கள் தான். 1980களில் கிரவுண்ட் 5000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். பிறகு ஏரியா வளர்ந்து வளர்ந்து இப்போ சதுரஅடி 5800ரூபாய். காரணம் சாப்ட்வேர் காரன்.

என் வீட்டு உரிமையாளர் என்னுடன் சரிக்கு சரி சம்பளம் வாங்கி எனக்கு சமமான வேலை பார்க்கும் ரயில்வேகாரர். அவர் இப்போ கோடீஸ்வரன், நான் அவருக்கே எட்டாயிரம் வாடகை கொடுக்கும் டெணன்ட். 

80களில் வேலைக்கு வந்து சொற்ப பணத்தில் இடம் வாங்கியது அவரின் புண்ணியமா, 2010 வேலைக்கு சேர்ந்தது என் பாவமா, என்னங்கடா நியாயம் இது.

சாப்ட்வேர்காரனை குத்தம் சொல்லாதே அவன் சம்பாதிப்பதையெல்லாம் மாதத்தவணைக்கு கொடுத்து விட்டு 20ம் தேதிக்கு பிறகு சிரமப்படுகிறான் என்கிறார்கள். 

அடப்படுபாவிகளா, வேளச்சேரியில் பிளாட்டு, சொந்தமா காரு வாங்கிட்டு ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க தனியார் வங்கிகளில் பர்சனல் லோன் வாங்கி விட்டு அதனை அடைக்க அவன் சிரமப்படுகிறான் கொழுப்பெடுத்த சாப்ட்வேர் கம்பெனிகாரன்.

அட வெங்காயங்களா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட ரயில்வேகாரனுக்கு லோன் தரமாட்டேங்கிறானே, இந்த கொடுமைய நான் எங்கப் போயி சொல்றது.

சாப்ட்வேர் தம்பிகளா உங்ககிட்ட பணம் அதிகம் இருக்கலாம், அதை பயன்படுத்தி நீங்க லாபமடையலாம், ஆனால் நீங்கள் லாபமடையும் ஒவ்வொரு இடத்திலும் பத்து சாமானியனுங்க தோத்துக்கிட்டு இருக்கானுங்க, அதை மறந்துடாதீங்க.

ஆரூர் மூனா

Sunday, March 9, 2014

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்

சமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம் முதலே பிடிக்கும்.


இந்த படம் கூட ஏதாவது சமூக கோவம் அதற்கான விழிப்புணர்வும் இருக்கும் என ஒருவாறு யூகித்தேன்.அதற்கேற்றாற் போல் தான் முதல் பாதியும் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி முதல் பாதியின் ஹைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி விட்டது. க்ளைமாக்ஸ் தான் படத்தின் மைனஸ்.

நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்


ஆசிரமத்தில் நேர்மையாக வாழ போதிக்கப்பட்டு படிப்பு முடிந்து வெளிவரும் ஜெயம்ரவி சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்ற நிஜமே புரிய மறுக்கிறது.

அப்பாவியாக ஒரு சிக்னலில் டிராபிக் போலீஸிடம் மாட்டும் ரவி 100 ரூபாய் லஞ்சம் தர மறுக்கிறார், அதனால் ஏற்படும் சிக்கலில் போலீஸில் மாட்டி நீதிபதியிடம் சிக்கி தண்டனை பெறுகிறார். வெளி  வரும் ரவி எல்லா அதிகாரிகளையும் பற்றி மேலிடத்தில் புகார் தருகிறார்.


சிக்கலுக்கு உள்ளாகும் அதிகாரிகள் ரவியை தாக்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாழ்வதற்காக ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் எதிர்த்து நிற்கும் ரவி சமூகத்தையே திருத்த நினைக்கிறார்.

அதற்காக இல்லாத ஒரு ஆளுக்காக அனைத்து அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் பெறுகிறார் நல்ல அதிகாரிகளின் துணை கொண்டு.


நீதிபதி, டாக்டர், போலீஸ், எம்பி என 147 பேர் இந்த ஊழலில் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும் சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ரவி. அனைத்து அதிகாரிகளும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இடைவேளை வரை இவ்வளவு தான். ஊழலில் மாட்டிய அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ரவியை எதிர்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது தான் படம்.

இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் நினைவுகள் அவ்வப்போது வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயம்ரவிக்கு கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படம் தான்.சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயலாமையில் பொறுமும் போதும், விட்டேத்தியாக காதலிக்கும் போதும், நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது.

அமலாபால், அவரின் முகம் பார்த்ததுமே படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது என்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் வந்து செல்கிறார். அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.

நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக  செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

சரத்குமார் இன்டர்வெல் பிளாக்குக்கு மட்டும் தேவைப்பட்டு இருக்கிறார். எனக்கு இதில் பெரிய ஆச்சரியம் கு.ஞானசம்பந்தனின் நடிப்பும் நகைச்சுவையும் தான். இனி நகைச்சுவை நடிகராகவும் அசத்தப் போகிறார். அவரின் முகபாவங்கள் இயல்பாகவே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

பாடல்கள் எல்லாமே ஸ்பீடுபிரேக்கர்கள் தான். படத்தின் துவக்கமே படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. படமும் அதற்கேற்றாற் போல் தான் நகர்கிறது.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது, சற்றே மிஸ்ஸாகி ஆவரேஜ் படமாகிவிட்டது.

மற்றபடி முயற்சிக்கு பாராட்டுகள் சமுத்திரகனி.

ஆரூர் மூனா

Friday, March 7, 2014

நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன்

திமுக இணையதள விசுவாசிகள் இரண்டு பேரு மாயவரத்துல மமகவுக்கு ஓதுக்கப்பட்டுள்ளதுனு அறிவிச்சவுடனே வெற்றியை வாங்கி திமுக கூட்டணிக்கு கொடுப்பது போல் கொடுக்கும் பில்ட்அப் இருக்கே. என்னமோ இவங்க ரெண்டு பேரு ஓட்டு மட்டும் தான் மாயவர எம்பி எலக்சனை முடிவு செய்வது போல்.


மமக என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பது போல் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு சப்பைக் கட்டு வேறு கட்டுகிறார்கள். ஏன் மற்ற கட்சிகளில் இஸ்லாமியர்களே இல்லையா. 

படித்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி வேறு மதத்தினராக இருந்தாலும் சரி மதம் பார்த்து ஓட்டு போட மாட்டார்கள். இது முதியவர்கள் அதிகம் ஓட்டளிக்கும் தேர்தல் அல்ல. முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள், படித்தவர்கள் தான் வெற்றித் தோல்வியை முடிவு செய்யப் போவது.

கண்டிப்பாக நல்லவர்களை தேர்தெடுக்கும் விதமாகத்தான் இளைஞர்கள் ஓட்டு போடப் போகிறார்கள். தமிழகத்தின் இரண்டாவது இடத்தில் என்று குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்கு வங்கி திமுகவுக்கு இருக்கலாம். ஆனால் அது இந்த தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு இல்லை என்பது தான் நிஜம்.


போன திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாசெ முதல் வசெ வரை போட்ட ஆட்டம் இருக்கிறதே. தமிழ்நாட்டில் தமிழனாய் இருந்த ஒவ்வொருவனும் சுண்ணாம்பாய் ஆன காலகட்டம் அது.

சென்னையில் வீடு கட்டுவதற்காக எந்த தெருவின் ஓரத்திலும் மண், செங்கல், ஜல்லி கொட்ட வேண்டும் என்றாலும் திமுக கவுன்சிலரின் அடிப்பொடிகளுக்கு கமிஷன் வெட்ட வேண்டும். ஏண்டா திமுகவுக்கு மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப் போட்டோம் என்று ஒவ்வொரு சென்னைவாசியும் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டான்.

 ஒவ்வொரு கவுன்சிலர்களும் குறுநில மன்னர்களாகவே வலம் வந்தார்கள். மேயராக இருந்த மா.சு மட்டும் நல்லவராக இருந்து என்ன பயன். 

மற்ற மாவட்டங்களிலும் திமுகவின் மா.செ க்கள் தான் சிற்றரசர்களாக திழ்ந்தார்கள். அந்தந்த மாவட்டத்தில் எந்த பெரிய சொத்து பரிவர்த்தனையிலும் ஒரு பர்சன்ட்டேஜ் அவர்களுக்கு சென்று விடும். பிறகு கட்டப்பஞ்சாயத்துகள் கணக்கில் அடக்க முடியாதது. எனக்கு தெரிந்து எனது மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்துகள் ஏகப்பட்டது. 

திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு திமுக மாசெ, அதுவும் மாவட்டத்தின் அசைக்க முடியாத அளவுக்கு ஆட்பலமும் ஏகே47 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களையும் கொண்ட ஒரு மாசெ வை வீட்டில் கையெறி குண்டுகள் வீசி கொலை செய்தது இவர்களின் சட்டம் ஒழுங்குக்கு ஒரு உதாரணம்.

 அந்த கொலைக்கு காரணமானவர்கள் என்று சந்தேகப்பட்ட அதிமுகவை சேர்ந்த குடும்பத்தினர் வீட்டினை அன்றைய தினமே ஜேசிபி வைத்து இடித்து தள்ளி கொக்கரித்தது இன்னும் ஒரு உதாரணம்.

இதற்கப்புறம் நமது ஈரக்குலையை அறுத்த ஈழம் பிரச்சனையில் நடத்திய நாடக உண்ணாவிரதம், கலைஞர் டிவி விசாரணையை மட்டுப்படுத்த வேண்டி ஒரு போலி ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டம், குடும்ப அரசியல் என  இன்னும் இருக்கிறது.

இவருக்கு ஒட்டுப் போடலாம் என்று சொல்லும் அளவுக்கு நான் எந்தக் கட்சியையும் உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை. ஆனால் திமுகவுக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என்று கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

திமுக கூட்டணி இந்த பாராளுமன்றத்தில் மண்ணை கவ்வி விட்டால் இணையதள விசுவாசிகள் எப்படி வெளியில் தைரியமாக உலா வருவார்கள். ஒருவேளை புளிய மரம் இருக்கும் தைரியத்திலா.

இந்த கட்டுரையை வைத்து நான் அதிமுககாரன், இல்லை பாஜக விசுவாசி என்று எல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன்,

துரதிஷ்டவசமாக முன்னாள் ஆதரவாளனும் கூட.

ஆரூர் மூனா

Wednesday, March 5, 2014

பஞ்சேந்திரியா - இரவுக்காட்சியும் கர்ணனின் கவசமும்

எப்போதும் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்கச் செல்லும் நான், கடும் வேலை, அலைச்சல் காரணமாக நேற்று இரவுக் காட்சிக்கு தான் தெகிடி சினிமாவுக்கு செல்ல முடிந்தது. பத்தரை மணிக்கு எஸ்2 பெரம்பூரில். ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னையில் இரவுக்காட்சி. மகிழ்ச்சியாக இருந்தது. 

2001 முதல் 2007 வரை பெரும்பாலான முன்னிரவுகள் திரையரங்கில் தான் கழியும். உதயம், கமலா, விஜயா, காசி, ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்குகளில் புல் மகாதியானத்துடன் நுழைந்து உற்சாகமாக படம் பார்த்தது எல்லாம் என் வரலாற்றின் முக்கிய பக்கங்கள்.

படம் பார்த்து வந்ததும் போதை இறங்கி பசி வந்து சாப்பாட்டை தேடியலைந்த இரவுகள் பல. பசியுடன் மட்டும் படுத்ததில்லை. எதாவது ஒரு புண்ணியவான் அந்த இரவுகளில் அன்னமிட்டு விடுவான்.

திருமணத்திற்கு பிறகு இரவுகளில் சினிமாவுக்கு போவதென்றால் தங்கமணியிடம் அனுமதி வாங்குவதற்குள் நம் படம் பார்க்கும் ஆர்வம் புஸ்ஸென்று இறங்கிப் போயிருக்கும். பிறகு படிப்படியாக குறைந்து இப்போதெல்லாம் சென்னையில் இரவுக் காட்சி போவதேயில்லை.

திருவாரூர் சென்றால் மட்டும் இரவுக் காட்சி செல்வதுண்டு. அப்பா, அம்மா இருப்பதால் தங்கமணியின் வசவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வேன். இப்போது ஊரில் இருந்து சொந்தங்கள் வந்து இருப்பதால் மீண்டும் குஷியாக கிளம்பி ஒரு இரவுக் காட்சியையும் நள்ளிரவில் ஒரு மாநகர உலாவும் வந்தாகி விட்டது.

-----------------------------------------------------------

ஒரு பல்லு புடுங்குனா கூட ஒரு பல்லு புடுங்குறது ப்ரீ


---------------------------------------------------------

படித்த புத்தகம்

கர்ணனின் கவசம் என்ற பெயரைப் பார்த்ததும் பயங்கர பாண்டஸியான புத்தகமாக இருக்கும் என்று நினைத்து ஆர்வமுடன் வாங்கினேன். ஆரம்பம் கூட சற்று சுவாரஸ்யமாகவே இருந்தது. ஆனாலும் நேரம் செல்லச் செல்ல ஒரு அயர்ச்சி வந்து விட்டது. 

அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்கள், கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிகள் என ரொம்பவே சலிப்பு. முதல் நான்கைந்து பகுதிகளுக்குள்ளாகவே கதாபாத்திரங்கள் அறிமுகங்கள் முடிந்திருக்க வேண்டும். அல்லது சஸ்பென்சுக்காக ஒன்றிரண்டு பாத்திரங்கள் கடைசி பகுதியில் அறிமுகப்படுத்த வேண்டும். பகுதிக்கு ஐம்பது கதாபாத்திரங்கள் அறிமுகமானால் நமக்கு மண்டை காய்ந்து விடுகிறது.

அதுவும் காலகட்டங்கள் சம்பந்தமில்லாமல், பீஷ்மர், குந்தி ஆரம்பித்து ஆதித்தகரிகாலன், குந்தவை, ரவிதாசன் வழியாக வந்து துரியோதனன், சகுனியையும் தொட்டு வியாசரை கடந்து இன்னும் சமகால மனிதர்களை திரிசங்கு சொர்க்கம் வரை கொண்டு செல்வதை காணும் போது நமக்கு தாவு தீர்ந்து விடுகிறது.

காசு கொடுத்து புத்தகத்தை வாங்கி படிக்கிறவனுக்கு காது குத்துவதற்கும் ஒரு அளவு வேண்டாமா, அடங்கப்பா. நாவலில் வரும் எல்லாப் பாத்திரங்களுக்கும் மற்ற எல்லாப் பாத்திரங்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. நமக்குள் இருக்கும் இது போன்ற உணர்வுகளை நான் இது வரை உபயோகப்படுத்தவில்லையோ என்று  சந்தேகம் கூட வந்து விட்டது.

அண்டசராசரங்களும் கிடுகிடுக்கும் அளவுக்கு நம் காதில் ஒரு கூடை பூ சுற்றியிருக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------

நம்ம கிராபிக்ஸ் ஆட்களுக்கு ரசனையே வேற


-----------------------------------------------------

பார்த்த படம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான படம் பார்த்தேன். கொஞ்சம் கூட போரடிக்காமல் சலிப்புத் தட்டாமல் படம் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டது. இப்படிப்பட்ட படங்களை எல்லாம் முதல் காட்சியில் பார்க்க தவற விடுவதே என் வழக்கமாகி விட்டது. தேடிச் சென்று ஆப்புகளில் நானே அமர்ந்து கொள்கிறேன்.

தெகிடி படம் பார்த்த ஒருவர் மற்றவருக்கு சுமாராக விவரித்தால் கூட கேட்டவருக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விடும். எனக்கு சொன்னவர் கூட அப்படித்தான் சொன்னார். 

ஒரு நாயகன் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் வேலைக்கு சேருகிறான். ஐந்து பேரை பற்றிய விவரங்கள் விசாரித்து சொல்லும்படி கம்பெனி சொல்கிறது. நால்வரைப் பற்றி விவரங்கள் தந்து விட்டு ஐந்தாவது ஆளான நாயகியை உளவு பார்க்கிறான். தன்னை மறந்து காதல் கொள்கிறான்.

பிறகு இவன் உளவு பார்த்து சொன்ன அனைவரும் ஒவ்வொருவராக சாகிறார்கள். நாயகியை காப்பாற்றவும் யார் இதை செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவும் நாயகன் போராடுகிறான். அது அவனுக்கு சாத்தியமா என்பது தான் படம். வெகு சுவாரஸ்யமாக சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

இது போல் மாதம் ஒரு படம் வந்தால் போதும் என்னைப் போன்ற சினிமாப் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஆரூர் மூனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...