சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, December 26, 2012

எனக்கு மெடுல்லா ஆப்ளிக்கேட்டா

என்னாச்சு

கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டாங்க.

இம்மி அண்ணன் பார்ட்டிக்கு நைட்டு கூப்பிட்டாரு.

புல்லா சரக்கடிச்சேன், நைட்டு 11.30 ஆகிடுச்சி

வீட்டுலேருந்து போன் பண்ணி சத்தம் போட்டதும் கிளம்பினேன்

வீட்டுக்குள் நுழைய படியேறினேன். முக்கால் தூரம் ஏறியதும் தடுமாறி டமால்...

படிகளில் ரெண்டு சம்மர் சால்ட் போட்டு கீழே விழுந்தேன்

எழுந்தால் பின் மண்டையில் பயங்கர ரத்தம், பெரிய காயம்

அங்கதான் மெடுல்லா ஆப்ளிக்கேட்டா இருக்கு

ஒரு வேளை நான் எல்லாத்தையும் தற்காலிகமா மறந்துடுவேனோ

என்னாச்சு

விளையாட்டுக்கு சொல்லலை. சத்தியமா இது நேற்று முன்தினம் இரவு எனக்கு நடந்தது . கிறிஸ்துமஸ் பார்ட்டி துவங்கி நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. மறுநாள் விடுமுறை என்பதனால் சற்று அதிமாக சாப்பிட்டு இருந்தேன். வீட்டம்மா போன் செய்து சத்தம் போடவே கிளம்பினேன்.

முதல்மாடியில் வீடு இருப்பதால் படியேற வேண்டும். வீரமாக படியேறி சத்தம் போட்டுக் கொண்டே வர கோபமடைந்த வீட்டம்மா எதிர் வீட்டில் பாக்கிறாங்க, சத்தம் போடாம வா என்று சொல்ல எவன்டா அவன் என்ன பாக்குறது என்று வீர வசனம் பேசி திரும்பிய நான் நிலை தடுமாறி விழ ரெண்டு டைவ், சில குட்டிக்கரணம் போட்டு விழ தலையில் சுவற்றில் மோதி தெரித்தது.

கடுமையான காயம், ரத்தம் கொட்டிக் கொண்டு இருக்கிறது. வீட்டம்மாவுக்கு எங்கிருந்து தான தைரியம் வந்ததோ. 62 எடையுடைய வீட்டம்மா 100+ எடையுள்ள என்னை எவ்வாறு மாடிப்படியில் தூக்கி வந்து வீட்டில் போட்டாரோ தெரியவில்லை. இப்படி ஒரு பலசாலியிடம் இப்பல்லாம் குரலை உயர்த்தி பேசவே பயமாயிருக்கிறது.

உடனே நெருங்கிய டாக்டர் நண்பனுக்கு போனைப் போட்டார் வீட்டம்மா. அவன் வீட்டிலிருந்து கிளம்பி வந்து அவன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்தி விட்டு முதலுதவியை ஆரம்பித்தான். அதற்குள் நண்பர்கள் குழாமுக்குள் போன் போக ஆரம்பித்து அனைவரும் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதெல்லாம் தெரியாமல் நான் மட்டும் முழுப் போதையில் மயக்கத்தில் இருந்தேன். நள்ளிரவுக்கு பிறகு போதை தெளிய ஆரம்பித்தது. எழுந்து எனக்கு என்ன ஆச்சி என்று என் வீட்டம்மாவிடம் கேட்க பளாரென்று ஒரு அறை விட்டாள். சகலமும் கலங்கி விட்டது.

அதன் பிறகு நான் எங்க தூங்குறது. நினைவுகள் பயங்கரமாக சுழல ஆரம்பித்தது. எனக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர்ற மாதிரி அதே இடத்துல அடிப்பட்டது. ஆனால் எனக்கு காயத்தின் வீரியம் அதிகம். ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. அதனால் காலையில் விடிந்தால் சில வருடங்களுடைய நினைவுகள் மறந்து விடுமா அல்லது ஏற்கனவே மறந்து போய் விட்டதா எனவும் சந்தேகம்.

உடனடியாக எனக்கு கடைசியாக என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்று எனக்குள் ஒட்டிப் பார்த்துக் கொண்டேன். ஆனால் அது நேற்று நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது. பிறகு போனை எடுத்து கடைசியாக டயல் செய்திருந்த நம்பர்களை பார்த்தால் நான் பேசியது நினைவில் இருந்தது. அப்பாடா எனக்கு நினைவு தப்பவில்லை என்று சந்தோசம் வந்தாலும் போதை இறங்கியதால் தலை கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

மல்லாக்கவும் படுக்க முடியாமல் உட்காரவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். வலியால் விடிய விடிய தூங்கவில்லை. விடிய ஆரம்பித்ததும் கிறிஸ்துமஸ் கொண்டாட சர்ச்சுக்கு சென்றிருந்த நண்பர்கள் குடும்பத்துடன் காலையிலேயே வீட்டு வர ஆரம்பித்தார்கள். கன்னாபின்னா அட்வைஸ்கள் வர ஆரம்பித்தன.

எனக்கே தெரியுது நான் செய்தது தப்பென்று, ஆனாலும் அவனவன் அட்வைஸ் பண்ணது தான் எனக்கு வாங்கிய அடியை விட வலித்தது. ஒரு வழியாக நண்பர்கள் வீட்டுக்கு சென்றவுடன் தான் தப்பிச்சோம்டா என்று எண்ணினேன். இன்னும் அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. நாளை ஊருக்கு போய் தான சொல்லனும், அங்கிருந்து எந்த மாதிரியான ரெஸ்பான்சிபிள் வருமோ தெரியாது.

இன்றைக்கு ரயில்வே மருத்துவமனையில் ஒரு ஒரு டிப்பார்ட்மெண்ட்டாக பார்த்து பார்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து சரிபார்த்து ஒன்றும் பிரச்சனையில்லை என்று டாக்டர் சொன்னதும் தான் அப்பாடா தப்பிச்சேன் என்று தோன்றியது.

ஒரு நாள் சபலப்பட்டு அதிகம் குடிச்சது, இன்னைக்கு எனக்கே வில்லங்கமாகி இனி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு மாட்டி விட்டு விட்டது. வேறு வழியே இல்லாமல் என் மனைவிக்கு பயந்து இன்று முதல் நான் டீடோட்லர்.


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இன்று நான் விடுமுறைக்காக திருவாரூக்கு கிளம்புகிறேன். 1ம் தேதி தான் சென்னை திரும்புகிறேன். திருவாரூரில் இருந்த படியே திருப்பூர் பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். எனவே இது தான் இந்த ஆண்டின் கடைசி பதிவாக இருக்கக்கூடும். நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த வருடம் சந்திப்போம்.


Monday, December 24, 2012

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ சேலை கட்டும் பெண்களைப் பற்றிய பதிவு என்று நினைத்து விடாதீர்கள். வாசனை பற்றி எனக்கு தெரிந்த சிற்சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் துவக்கியிருக்கிறேன். ஒற்றை வார்த்தையை தலைப்பாக வைக்க சற்று யோசனையாக இருந்ததால் துணைக்கு ரஜினி பாடலை சேர்த்திருக்கிறேன்.

வாசனை என்று பொதுவாக சொல்லிஅடையாளப்படுத்துவதை விட அதனை நுகர்வதால் ஏற்படும் கிளர்ச்சியை பகிர்ந்திருக்கிறேன். பிறந்ததிலிருந்து நமக்கு ஏதாவது ஒரு வாசனையுடன் ஒன்றியே வாழ்கிறோம். அது அம்மாவின் மடியிலிருந்து துவங்குகிறது.

எனக்கு கற்பூரத்தின் வாசனை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே கோயில்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்களுக்கு தரப்படும் ஆரத்தி தட்டில் இருந்து அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். நான் அப்படியே கையில் தீபத்தை ஒற்றி எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து கொள்வேன்.

அந்த வாசனை சில நிமிடங்களுக்கு எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. எந்த வயதில் இருந்து ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் ஜாமெண்ட்ரி பாக்ஸில் ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்வேன். அவ்வப்போது எடுத்து முகர்ந்து பார்க்கும் போது ஒரு கல்ப் அடித்த புத்துணர்வு ஏற்படும்.

அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு ஒரு கற்பூரம் டப்பாவை வாங்கி எனது செல்ஃப்பில் வைத்திருந்தேன். அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் ஒரு முறை முகர்ந்து விடுவது வழக்கம். பிறகு இந்த பழக்கத்தை விட்டு விட்டாலும் கூட நண்பர்களின் கடைக்கு செல்லும் போது அவர்களில் பூஜை செல்ஃப்பில் கற்பூரம் டப்பாவை பார்த்து விட்டால் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வேன்.

இன்று கூட என் தொழிற்சாலை பிரிவில் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து வைக்கப்படும் ஆரத்தி தட்டில் முழுவதும் கற்பூரம் எரிந்த பின் மிச்சமிருக்கும் எரிந்த பகுதியில் விரல் வைத்து தேய்த்து முகர்ந்து பார்த்தால் வாசனை என்னை கவர்ந்திருந்து இழுத்திருக்கும்.

என்னைப் போலவே என் நண்பன் ஒருவன் இருந்தான், அவன் பெட்ரோலின் வாசத்திற்கு அடிமையானவன். பள்ளி படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டிற்கு யாராவது பைக்கில் வந்திருந்தால் அவர்களிடம் இருந்த சாவியை வாங்கி டேங்க்கை திறந்து முக்கை விட்டு அதன் வாசத்தை முகர்ந்து கொண்டிருப்பான்.

ரொம்ப நாட்களுக்கு அவர்கள் வீட்டில் தெரியாமல் இருந்து பிறகொரு நாள் தெரிந்து நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் அனுமதித்து அவனை அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்தார்கள். இப்போது கூட அவன் வண்டியில் பெட்ரோல் இருக்கா என்று டேங்க்கை திறந்து பார்க்கும் போது ரகசியமாக முகர்ந்து கொள்வான்.

யோசித்து பார்த்தால் சிறுவயதில் இருந்தே நாம் பார்க்க பிடித்ததும் முகர்ந்து பார்க்க வாசனையாக இருந்ததும் தான் ஈர்ப்புகளுக்கு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் பாட்டி ஒருவர் எப்போதும் பேரப்புள்ளைகளுக்காக தன் மடியில் கடலை மிட்டாயை முடிந்து வைத்திருப்பார். எந்த பேரப்புள்ளையை பார்த்தாலும் தன் மடியில் இருந்து அவிழ்த்து ஒரு கடலை மிட்டாயை கொடுப்பார். எனக்கு அதில் ஒரு உழைத்த பெண்மணியின் வாசம் தான் தெரியும். அதற்காகவே அவரை தினம் சென்று பார்த்து கடலை மிட்டாயை வாங்கி வருவதை பழக்கமாக வைத்திருந்தேன் அவர் இறக்கும் வரை.

பத்து வயதில் என்னுடன் விளையாடும் அபிராமியின் உடையில் முக்கியமாக பாவாடையில் இருந்து ஒரு வாசனை வரும். வியர்வையின் வாசம் அது. நீங்கள் பாட்டுக்கு எதுவும் வில்லங்கமாக கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள். பத்து வயதில் விளையாட்டு மட்டும் நமக்கு தெரியும். ஐஸ்பாய் என்றொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது அவள் எங்கு ஒளிந்திருப்பாளோ நானும் அவளுடனே ஒளிவேன், அந்த வாசத்துக்காக.

ஏன் அவள் உடையில் அந்த வாசம் வரும் என்றால் அவள் வீட்டில் எல்லா வேலைகளையும் அவள் தான் செய்வாள். அம்மா கிடையாது, சித்தியின் கொடுமை காரணமாக வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என எல்லா வேலைகளையும் அந்த வயதிலேயே செய்வாள். அது உழைத்த வியர்வையின் வாசம். இன்று யோசித்து பார்த்தால் அவள் மீது இருந்தது வாசத்தின் பிரியம் மட்டுமல்ல பப்பி லவ்வும் கூடதான் என்று.

முக்கியமாக சாப்பாட்டின் வாசம் என்பது என்னை பல வீடுகளில் மானத்தை வாங்கியிருக்கிறது. நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தால் அசைவ குழம்புகளின் வாசத்தை வைத்தே என்ன சமையல் என்று கண்டுபிடித்து விடுவேன். அப்புறம் என்ன ஒரு கட்டு கட்டிவிட்டு தான் நடையை கட்டுவேன்.

என் அம்மா கூட அப்படித்தான். அதனை ஒரு சம்பவம் மூலம் விளக்க நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல் எடை அதிகரித்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். நான் அவரிடம் ஜெனரல் மோட்டார்ஸ் டயட் சார்ட்டை சொல்லி முயற்சித்தால் ஏழு நாட்களுக்குள் ஏழு கிலோ குறைக்கும் விஷயத்தை சொன்னதும் ஆர்வமாகி அன்றே துவங்கினார்.

மூன்று நாள் தாக்கு பிடித்த அவரால் அதற்கு மேல் அசைவம் இல்லாமல் முடியவில்லை. உடனே வாலை கருவாடு போட்டு குழம்பு வைத்து முட்டை அவித்து அந்த வாசத்தை முகர்ந்த பிறகே பழைய உற்சாகம் வந்தது.

ஒரு முறை கறம்பக்குடியில் என் பெரியம்மாவின் வீட்டில் அமர்ந்து தம்பிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். ஒரு வித தீய்ந்த வாசம் வந்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல துணி தீயும் வாசம் உடன் சேர்ந்து வேறு வித கெட்ட வாசம் வந்து கொண்டே இருந்தது. எல்லோரும் சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறோம். எங்கிருந்து வாசம் வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெளிச்சம் வரவே அங்கு சென்று பார்த்தால் பக்கத்து வீட்டு சாரதா அக்கா காதல் தோல்வியின் காரணமாக தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் சத்தம் போட்டால் அடுத்தவர்கள் வந்து நெருப்பை அணைத்து விடுவார்கள் என்று கடைசி வரை முனகல் கூட இல்லாமல் செத்துப் போனார். ரொம்ப நாட்களுக்கு என் மூக்கில் அந்த கெட்ட வாசம் சுற்றிக் கொண்டே இருந்தது ஏனென்றால் அவரின் காதலுக்கு நான் தான் தூதுவன்.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, December 20, 2012

கும்கி - லேட்டானாலும் லேட்டஸ்ட்டு

புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுற நானே அடுத்து செய்யக்கூடாத விஷயம் என்னன்னு முடிவு பண்ண இத்தனை நாட்களாகி விட்டது. அது என்னன்னா அடுத்தவங்க விமர்சனத்தை படித்து விட்டு போகலாமா வேண்டமா என்று முடிவு செய்வதை பற்றியது.

முதல் நாள் செல்ல வேண்டும் என்று நினைத்து தவறவிட்ட கும்கியை தக்காளி பலரும் பலமாதிரி கழுவி ஊத்தியதால் நான் போகும் எண்ணத்தையே விட்டு விட்டேன். ஆனால் வீட்டம்மாவின் இடைவிடாத நச்சரிப்பு காரணமாக போய் பார்க்க நேர்ந்தது. அதன் பிறகே நான் இத்தனை நாட்களாக பார்க்காமல் தவற விட்டது தப்பு என்று புரிந்தது.

படத்தின் கதையை எல்லாரும் பலமாதிரி சொல்லி விட்டதால் நாம் அதற்குள் போக வேண்டாம். மொத்தப் படத்தில் எனக்கு சரியில்லாத மாதிரி பட்ட விஷயங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று யானைகளின் சண்டையில் சரியில்லாத கிராபிக்ஸ், அடுத்தது எல்லாம் இழந்த நாயகனுக்கு ஊர்த்தலைவர் தனது பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.

அதற்கு முன்பாக படத்தை சப்பென்று முடித்தது தான் குறையாக இருக்கிறது. சாரே உங்களுடைய எல்லாப் படத்தையும் சோகமாகவே முடிக்கனும் என்ற அவசியமில்லை. இந்தப் படத்தை சற்று மாற்றி மகிழ்வுடன் முடித்திருக்கலாம்.

இந்த இரண்டை தவிர எனக்கு சொல்கிற மாதிரி குறைகள் எதுவுமே இல்லை. அதுவும் நம்ம ஆட்களில் சிலருடைய விமர்சனத்தை பார்த்தால் படம் மரண மொக்கை மாதிரியே இருந்தது. இவற்றின் உச்சம் என்னவென்றால் இந்த படத்தை நான் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சிபி செந்தில் குமார் எழுதிய பதிவு தான். இவரெல்லாம் ஆலோசனை சொல்கிற அளவுக்கு படம் போய் விட்டதே அதனால் படம் காலி தான் என்று நினைத்தேன்.

எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் புறந்தள்ளி விட்டு படம் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்த்தது கூட வார நாட்களில் ஒரு காலைக் காட்சிதான். ஆனால் படம் ஹவுஸ்புல். இதற்கு மேல் இதற்கு சாட்சியம் வேண்டாம்.

என்னைப் பொறுத்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் பாடல் மற்றும் இசை. அடுத்தது யானை மாணிக்கம், அதன் பிறகு ஒளிப்பதிவு, விக்ரம் பிரபு, லட்சுமி மற்ற விஷயங்கள் வரும். எனக்கு புதிய படங்களின் பாடல்களை கேட்பது பழக்கமேயில்லை. இப்போது சில நாட்களாக வீட்டில் கும்கி பாடல்கள் தான் ஒடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் திரையில் பாடல்களை பார்க்கும் போது சந்தோஷம் கூடுதலாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

வெகு இயல்பாக முதல் படம் என்ற தடையை தாண்டி முன்னேறியிருக்கிறார் விக்ரம் பிரபு. முதல் படத்திலேயே அவங்க தாத்தாவைப் போல் நடிப்பை எதிர்பார்ப்பது அதிகப்பிரங்கித் தனம். விக்ரம் பிரபுவை எனக்கு பிடித்திருக்கிறது. நமது விமர்சனத்தையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்திற்கு போய் விடுவார் என்பது நிச்சயம்.

ஒளிப்பதிவு உண்மையிலேயே அருமை. சி கிளாஸ் ரசிகனான எனக்கு ஒளிப்பதிவில் கலர்டோன், ஆங்கிள், லைட்டிங் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து அலசத் தெரியாது. பார்த்தால் பிடித்திருக்கனும் அவ்வளவு தான். அந்த வகையில் எனக்கு அந்த அருவிக் காட்சிகள் சூப்பரோ சூப்பர்.

லட்சுமி (மேனன்?) இதற்கு முன்பாக வெளிவந்த சுந்தரபாண்டியனிலேயே மனதை கவர்ந்து விட்டதால் புதிதாக நம்மை ஈர்க்க எதுவும் செய்ய வேண்டியதில்லை, திரையில் வந்தவுடனே நம்மை அந்த புடவை முடிச்சில் சேர்த்து முடிந்து வைத்து விடுகிறார்.

தம்பி ராமையா பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நமக்கு இந்தப் படத்தில் மிகப் பெரிய ரிலீஃப்பே அவர்தான். பாதிக்கும் மேல் படத்தினை அவர் தான் சுமக்கிறார். எனக்கு நேரம் செல்லச் செல்ல கடுப்பாக ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பின் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் தம்பிராமையாவின் ஒவ்வொரு கவுண்ட்டருக்கும் விழுந்து விழுந்து சிரிக்க இவர்களாலேயே நானும் சிரித்துத் தொலைத்தேன்.

இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் இருக்கும் சிற்ச்சில குறைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நான் இதுவரை இரண்டு முறை பார்த்து விட்டேன். முக்கியமான விஷயம் பாடல்கள் தான். திரையில் பார்க்கும் போது சில வருடங்கள் பின்னோக்கி சென்று நான் காதலித்த சமயத்தில் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி இமான்.

என்னை மாதிரி கண்ட விமர்சனத்தை படிச்சிப்புட்டு பாக்கவேணாம் இருந்தீங்கன்னா உடனடியா அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டு விட்டு போய் உடனடியாக படத்தை பார்க்கவும். உங்களுக்கு கூட மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கலாம்.


ஆரூர் மூனா செந்தில்

Wednesday, December 19, 2012

கும்கியுடன் கூடிய பெரம்பூர் S2வின் அனுபவம்

சில விஷயங்களை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்லி விட முடியாது. பழைய ஞாபகங்கள் என்பது என்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து நிறைந்திருக்கும் என்பது இன்று என் வாழ்வில் நான் கண்டிருக்கும் உண்மை.

பெரம்பூர் என்பது 97 - 2000 காலக்கட்டங்களில் என் ஏரியாவாக இருந்தது. அந்த நாட்களில் நான் அங்கு தான் தங்கியிருந்தேன். பிறகு படிப்பு முடிந்ததும் சென்னையை விட்டு விலகி திருவாரூருக்கு வந்து செட்டிலாகி விட்டேன்.

பிறகு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்க திரும்பவும் சென்னை வாசம். அதுவும் தென் சென்னையின் முக்கிய பகுதியான ஈக்காட்டுதாங்கலில் தான் 2001 முதல் 2010 வரை வாழ்ந்தேன். அதிலும் சில காலங்கள் வெளியூர் அதாவது கேரளா வடநாடுகள் என்று கழிந்தாலும் சென்னை தான் என் மையமாக இருந்தது.

தாறுமாறாக தோத்து 2010ல் சென்னையை விட்டு ஓட்டாண்டியாக சோகத்துடன் விலகிய பிறகு சுத்தமாக சென்னைக்கும் எனக்குமான தொடர்பு சில காலங்கள் விலகியிருந்தது. அதன் பிறகு வேலை கிடைத்து நான் மீண்டும் சென்னைக்கு வந்ததை இரண்டு புத்தகமாகவே எழுதலாம்.

ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல. சற்று ப்ளாஷ்பேக்கும் நிகழ்காலத்தையும் ஒத்தது. இன்று வேலை கிடைத்து அதே பெரம்பூருக்கு நான் வந்து விட்டேன். எதுவாக இருந்தாலும் இன்னும் 28 வருடங்களுக்கு இதே பகுதி தான்.

படிக்கும் காலத்தில் இங்கு வீனஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது. அப்பொழுது பெரும்பாலான பிட்டு படங்கள் இங்கு தான் வெளியாகும். அவற்றை ஒன்று விடாமல் பார்த்து மகிழ்ந்தவன் நான்.

அதிலும் முக்கியமாக திருட்டு புருசன் என்று ஒரு படம் வந்தது. சென்னையில் ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்த பிட்டு படம் அது. ஜெயப்பிரதாவின் தம்பி தான் அந்தப்படத்தின் நாயகன்.

ஒரு நாயகன் பல பொய்களை சொல்லி ஒன்பது பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சல்லாபிக்கும் படம் அது. ஏகப்பட்ட பிட்டுகளை கொண்ட அந்த படம் பல நாட்கள் ஹவுஸ்புல்லானதும் உண்டு.

அப்படிப்பட்ட திரைப்படங்களை இந்த தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. நானும் என் நண்பர்கள் நந்தா (இன்று தர்மபுரியில் பெரிய ஹார்டுவேர் கடையை நடத்தி வருகிறான்), சுரேஷ் (இன்று சாப்ட்வேர் பிஸினஸ்மேன்), சித்தப்பு என்கிற செந்தில் (இன்று போஸ்டல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்), ஆனந்த் (ஐசிஎப் ஓர்க்கர்) என பல நண்பர்களுக்கு இது தான் புகலிடம்.

குச் குச் ஹோத்தா ஹை என்ற ஹந்தி படத்தின் முதல் காட்சியை இங்கு தான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியை கன்னாபின்னாவென்று லாட்டரியை கிழித்து எறிந்து பார்த்தவன் நான்.

இவ்வளவு சிறப்பு பெற்ற வீனஸ் திரையரங்கம் சில வருடங்களுக்கு பிறகு மூடப்பட்டது என்பதை அறிந்த பிறகு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சில நாட்கள் வருத்தப்பட்ட பின் நான் அதனை மறந்து விட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு சத்யம் திரையரங்கு பெரம்பூரில் துவங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்த பிறகு எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக இருந்தது. நண்பர்களிடம் விசாரித்த பிறகு அது பழைய வீனஸ் தியேட்டர் என்று அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் மீண்டும் அந்த திரையரங்கிற்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று கும்கி படம் பார்க்க முடிவான பிறகு பெரம்பூரில் எங்கு படம் ஓடுகிறது என்று பார்த்தால் அது S2 என்று தெரிந்தது. மிகுந்த மகிழ்வுடனே சென்றேன்.

படம் எப்படியிருந்தது என்பதை படத்தின் விமர்சனத்தில் சொல்கிறேன், ஆனால் பல நாட்களாக தொலைந்து போன நண்பன் பெரிய ஆளாக மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோசத்தை அடைவோமோ அந்த சந்தோசத்தை நேற்று அடைந்தேன்.

அப்பாடா எந்த விஷயமும் இல்லாமல் ஒரு பதிவை எழுத முடியுமா என்று யோசித்தேன். சற்று முயற்சித்தேன். அதில வெற்றியடைந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இனிய வணக்கங்கள் நண்பர்களே.

ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : எனக்கு மதுரையில் சிவக்குமார் என்னும் வாசக நண்பர் உள்ளார். மிகுந்த பாசத்துடன் மரியாதையாக பழகும் உயர்தட்டு நண்பர் அவர். பல நாட்களாக தொடர்பில் இருந்த அவர் சில நாட்களாக எனக்கு போன் பேசவில்லை. இன்று போன் செய்த அவர் என் அப்பாவிற்கு உள்ள பிரச்சனையை கவனமுடன் கேட்டு அதற்குரிய தீர்வையும், மருத்துவமனையையும் சொல்லி மேலும் விவரங்கள் தருவதாக சொன்னார். இது போல் முகமறியா நண்பர்கள் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்தவனாவேன். நன்றி சிவக்குமார்.

Sunday, December 16, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

பட்டப்படிப்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் செல்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------
பட்டப்படிப்பு முடித்தவர்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, December 14, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

நாம படம் பார்க்கனும்னு நினைச்சி கிளம்பினாலே அது வரலாறாகி விடுகிறது. நான் என்ன தான் செய்யும் என்று புரியவில்லை. இன்று வேலை சீக்கிரம் முடிந்து என் செக்சனில் காத்திருந்தேன். என்னுடன் படம் பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்த என் நண்பன் அசோக் வரவேயில்லை.

நானும் காத்திருந்து காத்திருந்து மணி 11.50 ஆகி விட்டது. சரி இன்றைய முதல் காட்சியை தவற விட்டு விட்டேன் என்று முடிவு செய்து பரபரப்புடன் நான் இருக்கை கொள்ளாமல் காத்திருக்கையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன் வந்தது.

நண்பர் நக்ஸ் போன் செய்து "எங்க இருக்க, எங்கிருந்தாலும் உடனடியாக உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வரவும், நானும் நீயும் உண்ணாவிரதத்தை கட் அடித்து விட்டு சத்யம் திரையரங்கில் சிவாஜி 3D போகலாம். வலைமனையில் படத்தை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். மத்த நண்பர்கள் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள். நீ தான் வெட்டி" என்று கூப்பிட்டார், அடப்பாவிகளா இது வேறயா என்று நினைத்துக் கொண்டு சத்யம் வெப்சைட்டை ஒப்பன் செய்து பார்த்தால் படம் ஹவுஸ்புல் என்று போட்டிருந்தது.

நல்லவேளை தப்பித்தேன் என்று நக்ஸூக்கு போன் செய்து விவரத்தை சொன்னால் அவரோ இரவுகாட்சி பார்த்து விட்டு பஸ்ஸில் போக வேண்டியிருக்குமோ என்று பினாத்த அய்யய்யோ எனக்கு கிரகம் ராத்திரி வரை விடாது என்று பயந்த நான் வேலையிருப்பதை சொல்லி ஒரு வாராக தப்பித்தேன்.

12.15 மணிக்கு அசோக் வந்து "சாரிண்ணே வேலை முடிய லேட்டாகி விட்டது" என்று சொல்ல "சரி உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்" என்று சொல்லி இருவரும் கிளம்பினேன். அவனது வீட்டு வாசலில் நிற்கும் போது சும்மா போனில் நெட்டை எடுத்துப் பார்த்து பார்த்தால் ராக்கி திரையரங்கில் கும்கியும், நீதானே என் பொன் வசந்தமும் ஒரு மணிகாட்சி இருக்கிறது என்று போட்டிருந்தது.

உடனடியாக அசோக்குக்கு போன் செய்து வெளியே வரச்சொல்லி இருவரும் ராக்கிக்கு விரைந்தோம். கூட்டம் அள்ளியது. அவனிடம் கும்கிக்கு டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வண்டியை நான் பார்க்கிங்கில் விட்டேன். டிக்கெட் வாங்கி வந்த அவன் கும்கி டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லி நீதானே என் பொன் வசந்தத்திற்கு வாங்கியதாக சொன்னான்.

உள்ளே நுழைந்தால் படத்தின் முதல் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. அடித்துப்பிடித்து இருக்கையை ஒருவாராக கண்டுபிடித்து அமர்ந்தேன். இனி ஓவர் டூ பிக்சர்.

படத்தின் கதை என்ன? பெரிய சிக்கலான கதையெல்லாம் கிடையாது. மிகச்சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் கதாநாயகனும் கதாநாயகியும் பதிண்பருவத்தில் காதலிக்கிறார்கள். அதன் பிறகு சீசனுக்கு ஒரு முறை ஈகோவினால் சண்டை போட்டு பிரிகிறார்கள். பிறகு கடைசியில் சேர்கிறார்கள். அவ்வளவு தான் கதை.

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். படம் மிகமெதுவாக செல்கிறது. ஆனால் எனக்கு பிடித்திருந்தது. படத்திற்கு வந்திருந்த பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. பொலம்பிக் கொண்டே இருந்து கடைசியில் படம் முடியும் முன்பே வெளியேறினார்கள்.

ஜீவா படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார். பலபடங்களில் ரொம்ப லோக்கலாக நடித்து நம் பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் இவர் இந்தப் படத்தில் சற்று மேலான இடத்தில் படு டீசண்ட்டாக நடித்துள்ளார்.அழகாக இருக்கிறார். பள்ளிக்கால உடைகள் தான் சற்று ஒட்டவில்லை. மற்றப்படி படம் அவருக்கான களம் தான் புகுந்து விளையாடி இருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலமே ஹீரோயின் சமந்தா தான். எனக்கு அவரை மாஸ்கோவின் காவிரியில் பிடித்திருந்தது. ப்ரெஷ்ஷான ஆப்பிள் போல் இருந்தார். அவருக்காகவே அந்த மொக்கப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். அதன் பிறகு தெலுகுக்கு சென்ற பின் சற்று தொய்வடைந்ததால் எனக்கு பிடிக்காமல் போனது. இந்தப் படத்தில் கூட அவரின் முதல் காட்சியில் எனக்கு பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அழகாக என் மனதில் வந்து அமர்ந்து விட்டார்.

படத்தின் கலகலப்பான பகுதிக்கு சொந்தக்காரர் சந்தானம் மட்டுமே. அவரும் அந்த குண்டு பெண்ணும் செய்யும் அபத்த காதல் கலாட்டாக்கள் திரையரங்கில் பலத்த சிரிப்பொலியை உண்டாக்குகின்றன. இன்னும் மறக்க முடியாத அவரின் வசனம் "எந்தப் பெண்ணை பார்த்தாலும் எனக்கும் தான் மச்சி அழகாயிருக்கிற மாதிரியே தோணுது, Because I am studying only in Boys Hr Sec School". எனக்கு அப்படியே பொருந்துகிறது. நானும் சென்னை வந்த நாட்களில் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்திருந்ததே ஒரு பெண்ணுடைய காதலின் டீட்டெயிலிங் தான். எனக்கு மிகப் புதிதாக இருந்தது. பெண்ணுக்கு ஒரு காதல் தோல்விப் பாடலும் உண்டு. பெண் உணர்ச்சி வசப்படும் தருணங்கள் கூட இயல்பாகவே இருந்தது. அதை விரிவாக சொல்லலாம் தான். ஆனால் அதில் என் குட்டு கூட வெளிப்பட்டு விடக்கூடிய அபாயம் இருப்பதால் அப்படியே மேம்போக்காக கடந்து செல்கிறேன்.

இடைவேளைக்கு முன் வரும் காட்சி அப்படியே 15 நிமிடங்களுக்கு மேலாக எந்த கட்டிங்கும் இல்லாமல் இருந்தது வியக்க வைக்கும் காட்சி. கிளைமாக்ஸ் காட்சியில் இருவருக்கும் இருக்கும் அந்த நெருக்கம் எந்த நிமிடமும் உடைந்து விடக்கூடிய மெல்லிய ஈகோவுடனே பயணித்து நாம் அவர்கள் அதை உடைத்து விடுவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து ஹீரோயின திரும்பிச் செல்லும் கடைசி தருணம் வரை டென்சனை மெயிண்ட்டெயின் செய்த விதம் சூப்பர்.

எல்லாத்தையும் சொல்லிவிட்டு இசையை சொல்லாமல் போனால் எப்படி, அதுவும் நம்ம இளையராஜாவின் இசை. படத்திற்கு பொருத்தமான இடத்தில் பொருத்தமான டியுனில் இருக்கிறது. இளையராஜா மட்டும் இல்லாவிட்டால் படம் சுமாரான படமாகவே இருந்திருக்கக் கூடும். அனைத்து பாடல்களும் சூப்பர், சூப்பர், சூப்பரோ சூப்பர்.

இடைவேளைக்கு முன் ஒரு காட்சி வரும் அந்தக் காட்சியில் நீங்கள் யார் பக்கமும் நிற்க முடியாது. இருவர் செய்வதும் சரியாகத்தான் இருப்பது போலவே தோணும். ஜீவா நடுத்தர குடும்பத்து பையன், அதுவரை பொறுப்பில்லாமல் இருந்தவன் தன் குடும்பத்தின் வசதிக்காக நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்று குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி விட்டு தன் காதலை தொடரலாம் என்று நினைக்கிறான்.

அதற்காக ஐஐஎம் கல்லூரியில் படிக்க வெளியூர் செல்ல நினைக்கிறான். சமந்தா ஜீவாவை காதலித்து அவருக்காகவே மேற்கொண்டு படிக்காமல் அவருடன் வாழ்வதையே தன் லட்சியம் என வாதிடுகிறாள். இந்த வாக்குவாதம் முழுவதும் எந்த எடிட்டிங்கும் இல்லாமல் 15 நிமிடங்களுக்கு மேல் வருகிறது. சூப்பர்ப் சீன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

நீ தானே என் பொன் வசந்தம் - கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் தான். பார்த்து மகிழுங்கள்.

கடைசியில் படம் முடிந்து வெளி வந்ததும் நண்பன் அசோக் சொன்னான் "அண்ணா ரொம்ப சாரி, நான் நீதானே என் பொன் வசந்தம் பார்க்கனும்னு நினைச்சேன். உங்கக்கிட்ட சொன்னா திட்டுவீங்க. நீங்க கும்கிக்கு டிக்கெட் எடுத்து வர சொன்னீர்கள். நான் இந்தப்படத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு உங்களிடம் பொய் சொன்னேன்" என்று சொன்னான். இந்த மாதிரி பயலுகள நான் என்ன தான் செய்யிறது.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, December 13, 2012

சபலத்தின் உச்சம் அவமானம்

சமீபத்துல ஒரு பெரிய உறவினர் திருமணத்திற்காக புதுக்கோட்டை பக்கம் ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டின் தலைவர் 70 வயதான பெரியவர். மற்றவர்கள் எல்லோரும் அவரைக் கண்டால் நடுங்குவார்கள்.

அந்த அளவுக்கு வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரியவர். யாராவது தவறு செய்தால் அடிவிளாசி விடுவார். வீட்டில் உள்ள மற்ற பெண்கள் கூட அவர் எதிரில் வரத் தயங்குவர்.

அப்படிப்பட்ட வீட்டுக்கு திருமணத்திற்காக மூன்று நாட்கள் சென்று தங்க வேண்டியிருந்தது. வீட்டம்மா அவரை பற்றி எச்சரித்து அங்கே போய் எவன் கூடவாவது சேர்ந்து குடித்தால் மண்டையை உடைத்து விடுவேன், அது மட்டுமல்லாது அந்த பெரியவரிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என எச்சரித்து இருந்தார்.

பொதுவா குடிகாரர்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அது எனக்கு கிடையாது. மற்றவர்கள் குடித்தால் அதனை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைப்பர். என்னைப் பற்றிய சுயஅறிமுகமே குடியைப் பற்றித்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சிலர் அந்த சரக்கை ஏதோ விஷம் குடிப்பது போல் முகத்தை சுளித்துக் கொண்டு குடித்து விட்டு நாற்றம் தாங்காமல் மூக்கை வேறு மூடிக் கொள்வர். நான் அப்படியெல்லாம் கிடையாது. நிதானமாக ரசித்து ருசித்து மடக்கு மடக்காக குடிப்பேன்.

ஆனால் எனக்கு குடியைப் பற்றி பெருமையாக பேச மட்டுமே செய்வேனே தவிர வழக்கமான குடிகாரன் கிடையாது. என்னுடைய பதிவுகளை படித்து பலர் நான் தினமும் ஆப் அடிக்காமல் தூங்க மாட்டேன் போல என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நான் வாரம் ஒரு முறை மட்டுமே அதுவும் நண்பர்களுடன் மட்டுமே குடிப்பேன்.

யாரும் இல்லையென்றால் எனக்கு தனியாக குடிக்கத் தோணாது. இது சில பேருக்கு நம்ப சிரமமாக இருக்கும். குடிப்பது பிடிக்கும். ரசித்து செய்வேன். ஆனால் வழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சில இடங்களில் நாம் சும்மா இருந்தாலும் வேண்டுமென்றே நீ மட்டும் குடித்தால் என்று சொன்னவுடன் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். பிறகென்ன ஆப் அடித்து தான் நிறுத்த வேண்டியிருக்கும்.

அது போலவே என் மனைவியும் என்னை எச்சரித்து இருந்ததால் திருட்டுத்தனமாக குடிக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. ஆனால் அந்த சொந்தக்காரர்கள் எனக்கு சற்று பழக்கம் குறைவானவர்கள். என் அப்பாவும் அம்மாவும் சென்றிருக்க வேண்டிய கல்யாணம், என்னை பரம்பரையின் அடுத்த தலைமுறை ஆளாக நிறுத்த வேண்டி அந்த திருமணத்திற்கு என் அப்பா அனுப்பியிருந்தார்.

நம்ம பரம்பரை தான் குடிகார பரம்பரையாச்சே, குலதெய்வத்திற்கே சாராயம் படைக்கிற வம்சமாச்சே அதனால் யாராவது கம்பெனிக்கு தோதானவர்கள் கிடைப்பார்களா என்று அந்த வீட்டை நோட்டம் விட்டதில் அந்த பெரியவரின் ஏச்சுப் பேச்சுக்கு பயந்து அனைவரும் குடிக்காதவர்கள் என்று தெரிய வந்தது. எனக்குள் பயங்கர சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த முயற்சியாக அந்த வீட்டில் வேலைக்கு இருப்பவர்கள், வந்து போகும் வெளியாட்கள் இவர்களிடம் வலியப் போய் பேசி இந்த விஷயத்திற்கு அடி போட்டால் அவர்களோ இந்த விஷயம் அந்த பெரியவருக்கு தெரிந்தால் தொலைத்து விடுவார் என்று ஒதுங்கி விட்டார்கள்.

எப்படியாவது முயற்சித்து கண்டிப்பாக சரக்கடித்து விட வேண்டும் என்று ப்ளான் பண்ண ஆரம்பித்தேன். நாம எந்த விஷயத்துல மொக்கைன்னாலும் இதில் ப்ளான் பண்ணால் தோல்வியை கிடையாது என்ற அளவுக்கு பிரபலமானவர்கள்.

இது போதாதென்று வீட்டம்மா வேறு மணிக்கொருதரம் வந்து நம்மை உற்றுப் பார்த்து விட்டு சென்று கொண்டிருந்தார். நமக்கு ஒரு பழக்கம் உண்டு. சரக்கு அடித்து விட்டால் சும்மாவே உஃப் உஃப் என்று ஊதிக் கொண்டே இருப்பேன். நெருங்கிய ஆட்கள் மட்டும் பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுவார்கள்.

திட்டம் தயார். ஒரு புல் பாட்டில் சரக்கை இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கலந்து வைத்து எப்படியாவது சிரமப்பட்டு கொண்டு வந்து பெட்டிக்குள் சேர்த்து விட வேண்டும். இரவு உணவை பேருக்கு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பொறுக்க சாத்த வேண்டும்.

ரீசார்ஜ் பண்ண போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு வெளியில் வந்து வாங்கி மிக்ஸ் செய்து பையில் வைத்து உள்ளே பெட்டியில் சேர்த்து விட்டேன். ராத்திரி கொஞ்சமாக சாப்பிட்டு ஏமாத்தி விடலாம் என்று பந்தியில் அமர்ந்தால் நான் அசைவம் தின்பேன் என்று எனக்கு மட்டும் ஸ்பெசலாக உடும்பு அடித்து சமைத்து வைத்திருந்தனர்.

ஆசையை அடக்க முடியாமல் ராத்திரி விஷயத்தை மறந்து விட்டு சாப்பாட்டை வெளுத்து கட்டி விட்டேன். மாட்டை முழுங்குன மலைப்பாம்பு போல உருள ஆரம்பித்தேன். விடியற்காலை வயித்தை கலக்கியது. ஆபீசுக்கு போய் விட்டு வந்து படுத்தால் சரக்கு ஞாபகம் வந்து விட்டது.

விடியற்காலை என்றும் பார்க்காமல் பாட்டிலை எடுத்துக் கொண்டு கொல்லைக்கு வந்து விட்டேன். இரண்டு சிப் தான் காலி செய்திருப்பேன். அதற்குள் விடியற்காலை கொல்லைக்கு சென்று வந்த பெரியவர் என் செய்கையை பார்த்து விட்டார்.

மகனே காலி என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா. இந்த விடியற்காலையில எங்கடா சரக்கு கிடைக்குது. எனக்கும் கொடு என்று சொல்லி வாங்கி பாதி பாட்டிலை கவிழ்த்து விட்டார். ரெண்டு பேரும் சேர்ந்து மொத்த சரக்கையும் காலி செய்து விட்டு கொல்லைப்புறத்தில் ஆட்டம் போட்டதில், மொத்த குடும்பமும் எழுந்து வந்து பார்த்து விட்டது.

இத்தனை நாட்களாக தனியாக அறையில் அளவாக குடித்து விட்டு யாருக்கும் தெரியாமல் தூங்குவார் என்ற அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை மொத்த குடும்பத்திற்கும் முன்னாடி காலி செய்து விட்டேன். வீட்டில் இருந்த பொடிசுகள் எல்லாம் அவரை பார்த்து ஏளனமாக சிரிக்க குடும்பத்தின் முன் மானம் போய் தலை தொங்கி நின்றார்.


பாட்டிலுடன் நான் நிற்பதை பார்த்ததும் என்னை சத்தம் போட்டு விட்டு போயிருந்தால் கெளரவமாக இருந்திருக்கும். ஆனால் கணநேரம் சபலப்பட்டு சலனப்பட எல்லாருக்கும் முன்பாக மானம் போனது தான் மிச்சம்.

இவ்வளவுக்கும் காரணமாக எனக்கு வீட்டம்மாவிடம் இருந்து செம மாத்து கிடைத்ததை இன்னும் நீங்கள் நம்பாமல் இருந்தால் உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான். நம்புங்க எசமான் நம்புங்க இந்த பொம்புளைங்க நெசமா வலிக்கிற மாதிரியே அடிக்கிறாங்க.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, December 12, 2012

கேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(வட்டத்துலநான்தான்பா)

படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணிக்காக ரயில்வே அப்ரெண்டிஸ் குழுவினர் இங்கிருந்து திருச்சூர் சென்றோம்.

சென்று இறங்கிய மூன்றாவது நாள் படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது.

மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.

அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்து விட்டோம்.

படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் டாகுடர் விஜய்யின் சச்சின் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படத்தை 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று.

இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன்.

உள்ளுர் மலையாளி ஒருவன் வரிசையில் நிற்கும் எங்கள் தோளின் மீது ஏறி டிக்கெட் எடுப்பதற்காக முன் சென்றான். அவ்வளவு தான். ஏற்கனவே மலையாளிகளின் மீதான கடுப்பும் சேர்ந்து அவனை கீழே இழுத்துப் போட்டு செம மொத்து மொத்தினோம். பாரபட்சமில்லாமல் எல்லாத் தமிழர்களிடம் இருந்தும் அவனுக்கு அடி விழுந்தது.

படம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. என் தலைவனின் பிறந்தநாளுக்காக மறுபதிப்பு செய்யப்படுகிறது


Tuesday, December 11, 2012

நிலை கொள்ளா மனது

தலைப்பை பார்த்ததும் ஏதோ ராணி முத்து, கண்மணி போன்ற இதழ்களில் வரும் குடும்ப நாவல் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. ஏற்கனவே கவிதை எழுதுகிறேன் என்று முயற்சித்து எதைப் பேசினாலும் எதுகை மோனையாகவே வருகிறது. இதில் குடும்ப நாவல் வேறயா என்று நினைக்க வேண்டாம் மக்களே.

சனியன்று திருப்பூர் செல்ல பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது. மெட்ராஸ் பவன் சிவா பேருந்து நிலையத்தில் காத்திருக்க நான் கிளம்ப நேரமாகி விட்டது. குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்ற பதட்டம் கூட ஆரம்பித்தது. வண்டியை வேகப்படுத்தி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பியது. ஏறி அமர்ந்து விட்டேன். அன்று ஆரம்பித்த பதட்டம், இன்று வரை குறையாமல் இருந்து என்னை இது போன்ற தலைப்புகளில் எல்லாம் எழுத வைத்து விட்டது.

ஞாயிறு மட்டும் திருப்பூரில் நண்பர்களுடன் மகிழ்வாக சென்று விதிவிலக்காக அசத்தியது. நண்பர்கள், வீடு சுரேஷ், இரவுவானம் சுரேஷ், சசிமோகன் குமார், நா. மணிவண்ணன் ஆகியோருடன் மாலை மகிழ்வுடனே எங்களுக்கு கடந்தது.

திங்கள் அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை எங்கும் தனியாக அனுப்புவதில்லை. ஏப்ரலில் பெருங்குடலில் புற்றுநோய்க்கட்டி அகற்றிய பிறகு, சில மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பிறகு அவருக்கு உடலில் பலம் சுத்தமாக குறைந்து விட்டது.

கூட்டுறவுத்துறையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தவர், ஓய்வு பெற்ற பிறகும் கூட சும்மா இருக்கக்கூடாது என்று நினைத்து ஜெராக்ஸ், டைப்பிங் கடை வைத்து நடத்தியவர். இன்று தனியாக எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை.

கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது. இந்த எலும்புக்கிடையில் ஒரு நரம்பு உராய்வதால் கை கால்கள் எந்நேரமும் மரத்து போய் இருக்கின்றன. தனது சட்டையின் பொத்தானை தானே கழற்ற முடியாது, மற்றொருவர் துணையுடன் தான் கழற்ற முடியும்.

இன்று ரயில்வே மருத்துவமனைக்கு சென்று ஆர்த்தோ, நியுரோ மற்றும் பிஸியோதெரபி துறை வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து வந்தோம். அவர்கள் விஹெச்எஸ் மருத்துவமனைக்கு சென்று நியுரோ சர்ஜனை கலந்தாலோசிக்கும்படி ரிப்போர்ட் தந்தார்கள். நாளை அவருக்கு ஊரில் வேலை இருந்ததால் அடுத்த வாரம் தான் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

இன்று ஊருக்கு திரும்பி சென்றார். பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் சிறுநீர் கழிக்க வேண்டுமென்று கழிப்பறைக்கு சென்று வந்தவர், கை மரத்து போனதால் பேண்ட்டின் ஜிப் எங்கு இருக்கிறது என்று உணர முடியாமல் பேண்ட்டில் கை வைத்து நீண்ட நேரம் ஜிப் போட முயற்சித்து கொண்டு இருந்தார். அவருக்கு ஜிப் தொடும் உணர்வே இல்லை.

இதற்கு போய் மகனிடம் உதவி கேட்க வேண்டுமா என்ற கூச்சம் இருந்ததனால் அவராகவே பத்து நிமிடத்திற்கு மேலாக முயற்சித்தும் முடியவில்லை. எனக்கு போய் கேட்க தயக்கமாக இருந்தது. பிறகு ஒருவழியாக போட்டு விட்டு பேருந்தில் ஏறினார். எனக்கு வீட்டுக்கு வரும் வழியெங்கும் கலக்கமாகவே இருந்தது.

கண்டிப்பாக இதனை சரிசெய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குள் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.

இப்படியே பதிவு நெஞ்ச நக்குற மாதிரி போயிக்கிட்டு இருந்தா எனக்கே கடுப்பாகுது. அதனால் விஷயத்தை இத்துடன் விடுங்க. இத உங்களுடன் பகிர்ந்து கொண்டால் சற்று லேசாகும் என்று தோன்றியது. செய்து விட்டேன்.

ஆனால் இதற்கு எவனாவது வந்து செண்ட்டிமெண்ட்டா பின்னூட்டம் போட்டு நெஞ்ச நக்க பார்த்தா உடனடியாக நான் எழுதிக் கொண்டு இருக்கும் மரபுக்கவிதையின் திருத்தப்படாத பதிப்பை தங்களுக்கு மின்னஞ்சல் செய்து விடுவேன் என்று எச்சரிக்கிறேன்.

ஏற்கனவே புதுக்கவிதை எழுதி கவிஞனாகிவிட்ட நான் அடுத்த முயற்சியாக மரபுகவிஞனாகப் போகிறேன். பனைஓலையும் எழுத்தாணியும் கூட வாங்கி விட்டேன். இனி எழுத வேண்டியது தான்.

சாம்பிள் வேணுமா.

யாதுமார்க்கி யறிவில்லா செய்துணர்ந்து
மாமாங்கமாகி - சங்கடகரன் வீணென்று
செய்துணர்வான் செந்திலாண்டவன்

எப்பூடி

விரைவில் மரபுக்கவிதை வெளிவரப்போகிறது. அதற்கு விளக்கம் கொடுக்கும் அறிவாளிக்கு ஆலயமணி படத்தில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்புடப்பா கூரியர் அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்காக பட்டிக்காட்டானுக்கு மட்டும் ஊசிப் போன ஒயின் தரப்படும் என்பதை கம்பெனி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆரூர் மூனா செந்தில்



Friday, December 7, 2012

ஒரு கவிஞனின் அரங்கேற்றம்

நாலு வரி சேர்ந்தா மாதிரி எழுதிபுட்டு நடுவுல ரெண்டு எண்டர் தட்டி கவிதைங்கிறான். நாமளும் எத்தனை நாள் தான் வேடிக்கை பாக்குறது. அதான் நானும் தொபுக்கடின்னு களத்துல குதிச்சிட்டேன். இந்த கவிதை தொகுப்பை படிங்க, படிங்க கொமட்டிக்கிட்டு வர்ற வரைக்கும் படிங்க, புரியலைன்னா ஒரு பின்னூட்டம் அனுப்புங்க. நான் பின் நவீனத்துவ கவிஞனாகிட்டேன் என்பதை புரிஞ்சிக்கிறேன்.

தனிமையில் எப்போதும் பேசுகிறேன் நிலவோடு
என் தவம் அறிந்து இறங்கி வா என்னோடு
தனிமையில் செலவழிக்க நேரமில்லை உன்னோடு
உன்னிடம் கவிதை என்ற பெயரில்
மொக்கை போடும் நான் ஒரு கறுப்பாடு

--------------------------------------------------


மனதிற்கினிய பாடல் கேட்கும் போதெல்லாம்
உன் நினைவே என்னை தாலாட்டுகிறது
மறந்து விட்டு பணியில் கவனம் செலுத்த நினைக்கிறேன்
பேருந்தில் பாடல் வந்து தாலாட்ட கவனம் சிதறி
பேருந்து நிறுத்தம் கடந்து போகின்றேன்
பாடல் முடிந்த பின்னே உன்னை நினைத்து சிரித்து
இறங்கி வந்த வழியே நடக்கின்றேன்

-------------------------------------------------------

அன்பே நேசிக்க தகுதி வேணுமா
உன்னை நேசிக்க அழகன் எனும் தகுதி வேணுமா
உன் அருகில் அமர்ந்ததனால்
அழகாகி விட்டதாக உணர்கிறேன்
தெம்பான இளமையும் சேர்ந்திருக்கிறது
உன்னால் கிடைத்த ரெண்டையும் கொண்டு
மன்மதன் அம்பை உன் மீதே வீசுகிறேன்

-------------------------------------------------------


உரசத்தான் நினைக்கிறேன்
நினைத்துன்னை தொடர்கிறேன்
சற்றே தூரம் சென்று
விட்டு விலகி விலகி உன்னை
என் கண்முன்னே காணவில்லையே
அன்பே இன்றென்ன அமாவாசையா

---------------------------------------------------------

ஒன்று சேரும் நாளது வரும் என்று
இந்த கருமேகம் காத்திருக்கிறது
நிலாவின் தயக்கம் தாண்டி
என்னை அடையும் நாளோ பெளர்ணமி

-----------------------------------------------------------

உன்னை நிலவென்று நினைத்திருந்தேன்
சூரியனாய் சுள்ளென்று சுடுகிறாயே,
தெர்மிகூல் வாங்கி தடவிக்கிட்டேன்
வெயிலாவது வியர்வையாவது
சுட்டுப்பார் பொசுங்கிப் போவாய்

----------------------------------------------------------

நெடுந்தூரம் சென்றாலும் என் நினைவெல்லாம் நீதான்
பார்க்க முடியாவிட்டாலும் கண்ணுக்குள் உன் முகம் தான்
உன்னிடம் நேரில் பேசியது கொஞ்ச நேரம் தான்
இன்றும் என் காதுகளில் உன் ஒலிதான்
என்ன மாயம் செய்தாய் என் மனதை கலைத்தாய்

----------------------------------------------------------

உங்களது பொன்னாடைகளை வைத்து தான் இன்னும் மெகா கவிஞனாகி உங்களை வதைக்கலாமா, இல்லை போதும்டா சாமி என்று விலகலாமா என்று முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன்

ஆரூர் மூனா செந்தில்


Thursday, December 6, 2012

சிங்கப்பூரில் DECE, DEEE, DME முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Metal Finishing & Manufacturing Company Singapore க்கு கீழ்கண்ட தகுதியுடைய ஆட்கள் தேவை. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணையோ அல்லது senthilkkum@gmail.com என்ற மெயில் ஐடியையோ தொடர்பு கொள்ளவும்.

ELECTRICAL TECHNICIANS – 10 Nos.

Qualification : Diploma Engineering (DEEE / DECE).


Experience : 3 Years Experienced in Industrial Electrician. Salary 1500 - 2000 Singapore Dollar

Accomodation Free

Installs, Repairs and Maintains motors, transformers, generators, lights, appliances, circuits, wiring,
and other electrical system equipment and components in compliance with electrical codes,
standards, and regulations.
Studies plans, drawings, specifications, and work orders to determine work requirement and
sequence of repairs and/or installations.
Repairs and maintains high voltage systems.
Knowledge of the tools, equipment, and materials common to the electrical trade.
Knowledge of applicable electrical codes, standards, and regulations.
Knowledge of electrical application for high and low voltage electric system.
Skill in the installation, repair and maintenance of all types of electrical system equipment and
components.
Skill in both verbal and written communication.


FABRICATION TECHNICIANS – 10 Nos.

Qualification : Diploma Engineering. (DME / DEEE / DECE).


Experience : 3 Years Experienced in Metal Fabrication Salary 1500 - 2000 Singapore Dollar

Accomodation Free

Fabricates and assembles structural metal products, such as framework or shells for machinery,
ovens, tanks, stacks, and metal parts for buildings and bridges according to job order, verbal
instructions, and blueprints: Develops layout and plans sequence of operations, applying
knowledge of trigonometry, stock allowances for thickness, machine and welding shrinkage, and
physical properties of metal.
Locates and marks bending and cutting lines onto work piece.
Sets up and operates fabricating machines, such as brakes, rolls, shears, flame cutters, and drill
presses.
Designs and constructs templates and fixtures.
Verifies conformance of work piece to specifications, using square, ruler, and measuring tape.
May fabricate and assemble sheet metal products.
May set up and operate machine tools associated with fabricating shops, such as radial drill press,
end mill, and edge planer.


----------------------------------------------------------------


Qatarக்கு கீழ்கண்ட தகுதியுடைய ஆட்கள் தேவை. வரும் திங்களன்று(10.12.12) சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணையோ அல்லது senthilkkum@gmail.com என்ற மெயில் ஐடியையோ தொடர்பு கொள்ளவும்.


WORKSHOP MANAGER - DEGREE IN MECHANICAL  EXP 8 YRS ABOVE - Salary 5000 - 6000 Qatar Riyal

Food and Accommodation are Free 


WORKSHOP SUPERVISOR - DEGREE OR DIPLOMA WITH 6YRS EXP  Salary 3000 - 5000 Qatar Riyal

Food and Accommodation are Free


INSTRUMENTATION TECHNICAN - DIPLOMA ECE WITH 5YS EXP - Salary 1800 - 3500 Qatar Riyal
Food and Accommodation are Free



QA/QC(HEAVY EQUIPMENT) 2 years and above exp - Salary 4000 - 5000 Qatar Riyal
Food and Accommodation are Free

----------------------------------------------------------------------------------

 GLOBAL INDUSTRIAL SERVICES LLC, OMANக்கு கீழ்கண்ட தகுதியுடைய ஆட்கள் தேவை. வரும் திங்களன்று(10.12.12) சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணையோ அல்லது senthilkkum@gmail.com என்ற மெயில் ஐடியையோ தொடர்பு கொள்ளவும்.

Accoundant - B.Com - Salary Oman Riyal 200 to 400 – Depends upon their Experience. 

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...