சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 27, 2011

கடவுள் கொடுத்த மனித வாழ்க்கை - கொடுமைடா சாமீ

ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் ,

பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார்.

நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன்,

வீதியில் போக வர இருக்கும் எல்லாவற்றையும் ப் பார்த்துக் குரைத்துக் கொண்டு இருக்க வேண்டும் , அது தான் உன் வேலை என சொன்னார்.

நாய் பார்த்தது இந்த வேலை நம்மால் முடியாது,

ஒரு பத்து வருஷம் குறைத்துக் கொள்ளுங்கள் , என வேண்டியது ,

சரி பத்து வருஷம் நீ இரு கூறி பூலோகத்திற்கு அனுப்பினார்.

மற்றொரு நாள் ஒரு குரங்கை படைத்து

உனக்கு இருபது வருஷம் தருகிறேன் , நீ பூலோகத்தில்

இருந்து சேஷ்டைகள் எல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கவும் என்றார்.

அதற்கு குரங்கு என்னால் இருபது வருஷங்கள் எல்லாம் இருக்க முடியாது என்று கூறி வேண்டுமானால் நான் பத்து வருஷம் இருக்கிறேன் மீதி

பத்து வருஷங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றது.

சரி அப்படியே ஆகட்டும் , நீ பூலோகத்திற்கு போய் வா என அனுப்பினார்.

வேறு ஒரு நாள் பசுவை படைத்து , உனக்கு ஆறுவது வருஷங்கள் தருகிறேன் , நீ போய் வெயில் இருந்து , வயலில் வேலை செய்து , புல்வெளியில் மேய்ந்து ,பால் குடுத்து குடியானவனுக்கு துணையாக இருக்கவும் என பணிந்தார்

ஐயோ நம்மால் ஆறுவது வருஷங்கள் இருக்கமுடியாது

வேணுமானால் இருவது வருஷங்கள் இருக்கிறேன் ,

மீதி நாற்பது வருஷங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என பசு சொன்னது.

சரி நீ பூலோகத்திற்கு போய் வா என கடவுள் அனுப்பினார்.

பிறகு மனிதனை படைத்து நீ நன்றாக சாப்பிட்டு , தூங்கி, விளையாடி , கல்யாணம் பண்ணி க் கொண்டு ,சுகமாக இரு ,

உனக்கு இருபது வருஷம் வாழ தருகிறேன் என கடவுள் சொன்னார்.

அதற்கு மனிதன் எனக்கு மேலும் வாழ்க்கை அதிகமாக கொடுக்க வேண்டும் , நாய் , குரங்கு மற்றும் பசுவின் வாழ்க்கையில் மீதி உள்ளதே அதை எனக்கு தரவும் என வேண்டினான் .

கடவுளும் சரி அப்படியே ஆகட்டும் என சொல்லி மனிதனை பூலோகத்திற்கு அனுப்பினார்.

அதனால் தான் என்னவோ ,

மனிதன் தன் வாழ்நாளில் முதல் இருவது வருஷம் நன்றாக சாப்பிட்டு விட்டு, ஊர் சுற்றி கொண்டு , கல்யாணம் பண்ணிக் கொண்டு சுகமாக இருக்கிறான்.

பிறகு பசுவிடமிருந்து பெற்ற நாற்பது வருஷங்களில் ஒயாமல் வெயிலில் ஒடியாடி உழைத்து, குடும்பத்தை காப்பாற்று கிறான்.

பின் குரங்கிடம் பெற்ற பத்து வருஷங்களில் தன் பேரன், பேத்திகளிடம் குரங்கு சேஷ்டைகள் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

பின் தன் அந்திம காலத்தில் நாயிடம் பெற்ற பத்து வருஷங்களில் வீட்டு வாசலில் உட்கார்ந்துக் கொண்டு போக வர இருக்கும் மக்களிடம் வம்பு பேசிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் மனித வாழ்க்கை போல இருக்கு !.

இணையத்தில் எங்கோ படித்தது.

ஆரூர் முனா செந்திலு



3 comments:

  1. இதுல கழுதை வயசை விட்டிட்டீங்களே நண்பா.

    ReplyDelete
  2. நக்கலாக இருந்தாலும் நடைமுறையில் உள்ளதுதான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...