சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, April 26, 2012

தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு

தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. மேலாண்மை தத்துவத்தின் படி, ஒரு பரப்பின் விளையாட்டு நிகழ்வோ, பெரும் கேளிக்கை நிகழ்வோ அந்தப் பரப்பின் வாங்கும் தன்மையை (buying pattern) பெருமளவு பாதிக்கிற குணத்தை உட்கொண்டிருக்கிறது.அவ்வாறான மாற்றத்தில் ங்களது நிறுவனம்அடிக்கிற காற்றில் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடியுமோஅவ்வளவு அள்ளிக் கொள்ளலாம். அது உங்கள் சமர்த்து.

இந்திய தொலைக்காட்சி விற்பனையில் 30%க்கு மேலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை குழுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன கருத்து இன்றைய கால கட்டத்திலும் மாறவில்லை என தெரிகிறது.

"கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவிற்கு வருதோ இல்லையோ நம்ம கல்லா பெட்டில காசு பாருப்பா", "ஏதாவது செய். எதுவேணாலும் செய்.. விற்பனை உயர்த்து மவனே" என்கிற கார்ப்பரேட் உள் அறை கூவலோடு பல நிறுவனங்கள் இதற்காகவே கடந்து இரு வருடங்களுக்கு மேலா மண்டையை பிய்த்து விற்பனை திட்டம் தீட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நிறைய கருத்துக் கணிப்பு, சந்தை ஆராய்ச்சி. பிரேசில், இத்தாலியின் புட்பால் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சந்தை சூத்திரங்களை (market strategy) மீள் ஆய்வு செய்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் சந்தைக்காக சில உல்டா செய்து நமது சந்தைக்கேற்ப மாறுதலுக்குட்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஆராய்ச்சியில் ஓன்று - கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளரின் பழக்க வழக்கங்களை, உப செயல்களை, உற்று நோக்கல். வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது, அலுவலக்த்தில் இணைய வழி பார்ப்பது, பய நேரத்தில் ஸ்கோர் கேட்பது, அடுத்த நாள் மறுபடியும் பார்த்த மேட்சை பற்றிய பத்திகளை மறுபடி மேய்ந்து அசை போடுவது - இப்படி நிறைய விசயங்கள் விவாதிக்கப்படுகிறது.

அந்த ஆய்வு கொடுக்கிற முடிவுகளை சார்ந்து நிறைய விளம்பரங்களையும், துணை சந்தை நடவடிக்கைகளையும் ( sub market activity) மற்ற நிறுவனத்தோடு சில ஓப்பந்தங்களையும், நிறைய பரிசுப் போட்டிகளையும் அறிவித்திருக்கின்றனர் அந்த தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள்.

அப்படி செய்வதில் எல்லா துணை நடவடிக்கைகளோடும் தொலைக்காட்சி பெயரும் இணைவதில் ”பிராண்ட் ரீகால் “ அதிகமாகி, அதனால் தங்களது தொலைக்காட்சி அதிகமாக வாங்கப்படும் என்பது விற்பனை திட்டம்.

தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் வெண்ணெய், சிப்ஸ், படுக்கை நிறுவனத்திற்கும் என்ன இழவு சம்பந்தம் இருக்க முடியும். ? ஆனால் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

எல்லா மூலை முடுக்குகளையும் அலசி ஆராய்ந்த மேலாண்மை மேதாவிகள் ஒரு சின்ன குழுவை மட்டும் மெல்லிதாய் மறந்து விட்டார்கள். அதை சொன்னவுடன் அதிசியத்தார் அந்த நிறுவனர். ஆனால் கார்ப்பரேட்கள் வாங்கும் திறன் உள்ள வாடிக்கையாளனை மட்டும்தான் மனிதர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும். மற்றவர்கள் எல்லாரும் வெறும் எண்ணிக்கை தான். அந்த குழு அவர்களின் தொலைக்காட்சி விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் அதைப்பற்றி அவ்வளவாய் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் சமாதானம் கூறிக் கொண்டார்.

அந்த குழு - தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு. (தெ.நி.ஓ.டீ)

இப்போதும் கிரிக்கெட் பார்வையாளனாய் எனக்கு பிடித்தது அந்த குழு தான். அதன் அங்கத்தினன் நான் என்பதில் மகிழ்ச்சி தான். சிலருக்கு - தோடி ராகம், பில்டர் காப்பி, வடா பாவு, அதரங் சாயி, பையா ஜிலேபி. அதுபோல தெருவில் நின்று டீவி பார்ப்பது.

தெருவில் நின்று ஓசியில் டீவி (தெ.நி.ஒ.டீ) பார்க்கும் குழுவில் நிறைய வர்ணம், வர்க்கம், வயது எல்லாம் கலந்திருக்கும். புதிதாய் வந்து சேர்பவர்களுக்கு ஸ்கோர் சொல்வது ஒரு கர்ம ஞானம் போல நடக்கும். சில சந்தோசங்கள், கெட்ட வார்த்தைகள், அநுமானங்கள், மெல்லியதான எதிர்ப்பார்ப்பு, கடைசியில் ஏதாவது நடந்து எல்லாம் நல்லபடியாகும் என்கிற ஆறுதல் வார்த்தைகள், அறிவுத் தெளிப்பு, நாயக ஆராதனைகள் - எல்லாம் கூட்டுக் கலவையாய் ஈஸ்ட் மென் கலரில் மானுட மனதில் குறுக்கு வெட்டு தோற்றம்.

மூன்று உலக கோப்பைகள், நிறைய டெஸ்ட் மேட்சுகள், அப்படித்தான் பார்த்தது. தெருவில், கடை வெளியில் நின்று கொண்டே பார்த்தது. வலி மறந்து பார்த்த கணங்கள்.
ஹரி சேட்டா கடையில் பைனல் மேட்சுகள் பார்க்கக் கூடாது. அது ராசியில்லை. ராவ் ஹோட்டலில் பைனல் எப்போதும் ராசி. டெஸ்ட் மேட்ச் என்றால் கண்டிப்பாய் தோற்காது. என்ன, சர்வர் குமார் எங்களை போல கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு கொஞ்சம் தொடை எடுத்துப்பான். [ ‘என்னடா தடியா ஓழிஞ்சு போறாண்டா.. கடைசி அஞ்சு ஓவர்ரா.. வெயிட் பண்றா. நீ போனா.. டீவியை ஆப் பண்ணிருவாண்டா.. இன்சமாம் வேறா.. கம்மாநாட்டி.. அவுட்டாகல..
ப்ளிஸ்ரா. “ நாங்கள்லாம் அவனிடம் கெஞ்சுவோம் ].

நாயர் ஹோட்டலில் அவனால் எந்த தொந்திரவு இல்லையென்றாலும் சாக்கடை நாத்தம் குடலை புடுங்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. நல்ல ஜெயிக்க வேண்டிய மேட்சுகளெல்லாம் நாயரின் இரண்டாவது பெண்டாட்டி போல கை கழுவி போகும். இந்தியாவின் வெற்றியை முன்னிட்டு அவன் கடைப் பக்கமே போவதில்லை. பாகிஸ்தான், இங்கிலாந்து மேட்சுகளை மட்டும் அவன் கடையில் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அந்த மேட்சுகளில் பாகிஸ்தான் தோற்றுப் போவதுண்டு.

பெங்களூர் டெஸ்ட் மேட்சு. ஆடுதளம் கண்ட மேனிக்கு ஆடுகிறது. பாட்டி ஸ்பின் போட்டால் கூட விக்கெட் விழும் போல. ஐந்து நாள் மேட்சு மூணரை நாளில் முடிந்து விடும் போலயிருந்து. ஆனால் பள்ளியில் தேர்வு. இரண்டு மணிக்கு மணி அடித்து கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டன. வாங்கியபின் ஓன்னுக்கு போக அனுமதி கேட்டு சுவர் ஏறி குதித்து கேபியார் கடையில் ஸ்கோர் கேட்க போவதற்குள் அனில்கும்ப்ளே பிரமாதமாய் ஸ்பின்னில் கலக்கிக் கொண்டிருந்தார். இந்தியா ஜெயிப்பதற்கான எல்லா நட்சத்திரங்களும் மின்னிட்டன. அதற்குள் அந்தப் பக்கம் வந்த ராஜமாணிக்கம் வாத்தியார் பார்த்து,என் காதை பிடித்து திருகி பளார் என்று அறை விட்டதை அங்கு நின்ற கூட்டம் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் இந்தியா எப்படியோ தோற்றுபோனது. வலித்தது. நான் பார்த்திருந்தால் அன்று இந்தியா கண்டிப்பாய் ஜெயித்திருக்கும்.

நிறைய முக்கியமான மேட்சுகளை கால் வலிக்க தெருவில் நின்று கொண்டு ஏதாவது ஒரு ஓசி டீவியில் பார்த்தது எனது மகிழ்ச்சிகாக மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றிக்காகவும் தான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தை ஓவ்வொரு முறையும் பேருந்து கடக்கிற கணங்களில் எழுந்து நின்று பார்க்க தூண்டும் என் உள்ளே ஏதோ ஓன்று. இந்த ஐபிஎல்லில் சென்னை பைனல் வந்தால் என் நண்பனின் அலுவலகத்திற்கு பின்னே உள்ள ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். என்னவாகிறதென்று

ஆரூர் மூனா செந்தில்

20 comments:

  1. 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை. அப்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். அது வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது. ஓவர், ரன், விக்கெட் என்பது பற்றி எல்லாம் கொஞ்சம் அறிந்து கொண்ட நேரம். இடைவேளை நேரத்தில் சுவர் ஏறிக்குதித்து காவலர் குடியிருப்பில் எங்கள் வகுப்பு நண்பனின் வீட்டில் தொலைக்காட்சியில் ஸ்கோர் பார்த்துவிட்டு வருவோம். ஒரு நாள் நாங்கள் எல்லாரும் இடைவேளை முடிந்து வகுப்புக்குள் மயிரிழையில் நுழைந்துவிட, தாமதமாக வந்த ஒரு மாணவன் மட்டும் மாட்டிக்கொண்டான். அந்த ஆசிரியர், CCJ ராஜன். அவர் குரலை உயர்த்தி ''டேய்...வாடா இங்கே....''என்று சொன்னதும் அவனை விட நாங்கள்தான் அதிர்ந்தோம். எங்கே நாங்களும் சுவர் ஏறிக்குதித்து வந்ததை காட்டிக்கொடுத்துவிடுவானோ என்று. ஆனால் நடந்தது வேறு. பயந்து கொண்டே வந்த அவனை அணைத்த CCJ ராஜன் சார், ''என்னம்மா ஸ்கோர்'' என்று பாசத்துடன் கேட்டார். அப்போதுதான் எங்கள் இதயத்துடிப்பின் வேகம் சீரானது.

    ReplyDelete
  2. எங்க வீட்டிலயும் இப்படி என் சகோதரன் இருக்கான் பாருங்க கடைக்கு ஏதாவது வாங்க அனுப்பினா எங்காவது தெருவுல நின்னுட்டு டிவி பார்த்துட்டே இருப்பான் தேடித் போய் அழைச்சிட்டு வரணும் அப்படி என்ன தான் இருக்கு என்று யோசிப்பேன் .

    ReplyDelete
  3. சமீப காலத்தில் படித்ததில் வித்யாசமான மற்றும் சுவாரஸ்யமான பதிவு செந்தில். கங்க்ராட்ஸ்!!

    ReplyDelete
  4. அது ஒரு காலம் கண்ணு!

    ReplyDelete
  5. நல்ல அனுபவம்..ஓசியில் பார்க்கிறது, சாப்பிடுவது என்று எல்லாம் ஒரு அனுபவமே...

    ReplyDelete
  6. பழைய நினைவுகளை கிளரிவிடீர்கள்....

    ReplyDelete
  7. /// திருவாரூர் சரவணன் said...

    1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை. அப்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். அது வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது. ஓவர், ரன், விக்கெட் என்பது பற்றி எல்லாம் கொஞ்சம் அறிந்து கொண்ட நேரம். இடைவேளை நேரத்தில் சுவர் ஏறிக்குதித்து காவலர் குடியிருப்பில் எங்கள் வகுப்பு நண்பனின் வீட்டில் தொலைக்காட்சியில் ஸ்கோர் பார்த்துவிட்டு வருவோம். ஒரு நாள் நாங்கள் எல்லாரும் இடைவேளை முடிந்து வகுப்புக்குள் மயிரிழையில் நுழைந்துவிட, தாமதமாக வந்த ஒரு மாணவன் மட்டும் மாட்டிக்கொண்டான். அந்த ஆசிரியர், CCJ ராஜன். அவர் குரலை உயர்த்தி ''டேய்...வாடா இங்கே....''என்று சொன்னதும் அவனை விட நாங்கள்தான் அதிர்ந்தோம். எங்கே நாங்களும் சுவர் ஏறிக்குதித்து வந்ததை காட்டிக்கொடுத்துவிடுவானோ என்று. ஆனால் நடந்தது வேறு. பயந்து கொண்டே வந்த அவனை அணைத்த CCJ ராஜன் சார், ''என்னம்மா ஸ்கோர்'' என்று பாசத்துடன் கேட்டார். அப்போதுதான் எங்கள் இதயத்துடிப்பின் வேகம் சீரானது.
    ////

    1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது அதே போலீஸ் காலனியில் ஒரு வீட்டில் மேட்ச் பார்த்து விட்டு ஜிஎம் செக்ஷன் சந்து வழியாக வரும் போது உதவி தலைமையாசிரியர் திரு, பாலைய்யா அவர்கள் பார்த்து விட்டு இரண்டு மணிநேரம் தலைமையாசிரியர் அறையின் முன்பு முட்டிப் போட வைத்தார். இன்று நினைத்தாலும் மறக்காத நினைவு அது.

    ReplyDelete
  8. பதிவோட லேங்குவேஜ் சூப்பர் பாஸ் :-)

    ReplyDelete
  9. /// சசிகலா said...

    எங்க வீட்டிலயும் இப்படி என் சகோதரன் இருக்கான் பாருங்க கடைக்கு ஏதாவது வாங்க அனுப்பினா எங்காவது தெருவுல நின்னுட்டு டிவி பார்த்துட்டே இருப்பான் தேடித் போய் அழைச்சிட்டு வரணும் அப்படி என்ன தான் இருக்கு என்று யோசிப்பேன் . ///

    வணக்கம் சசிகலா, தங்கள் வருகைக்கு நன்றி, என்ன தான் வீட்டில் மேட்ச் பார்த்தாலும் பொதுவாக பலர் இருக்கும் போது அந்த இடத்தில் உற்சாகத்தோடு பார்த்து சந்தோஷத்தை பகிரும் மகிழ்ச்சியே தனி.

    ReplyDelete
  10. /// ! சிவகுமார் ! said...

    சமீப காலத்தில் படித்ததில் வித்யாசமான மற்றும் சுவாரஸ்யமான பதிவு செந்தில். கங்க்ராட்ஸ்!! ///


    ஹி ஹி ஹி மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  11. /// விக்கியுலகம் said...

    அது ஒரு காலம் கண்ணு! ///

    தங்கள் வருகைக்கு நன்றி மாமா.

    ReplyDelete
  12. /// கோவை நேரம் said...

    நல்ல அனுபவம்..ஓசியில் பார்க்கிறது, சாப்பிடுவது என்று எல்லாம் ஒரு அனுபவமே... ///

    நன்றி ஜீவா.

    ReplyDelete
  13. /// NAAI-NAKKS said...

    பழைய நினைவுகளை கிளரிவிடீர்கள்.... ///

    என்ன நக்கீரரே, நெல்லையில் சரக்கடித்த போதை தெளிஞ்சிடுச்சா?

    ReplyDelete
  14. /// யுவகிருஷ்ணா said...

    பதிவோட லேங்குவேஜ் சூப்பர் பாஸ் :-) ///

    மிக்க நன்றி யுவா.

    ReplyDelete
  15. நல்லதொரு அனுபவப் பகிர்வு..! கடந்த காலத்தை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு நன்றி திரு. மூனா செந்தில் அவர்களே...!!

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  17. /// palani vel said...

    நல்லதொரு அனுபவப் பகிர்வு..! கடந்த காலத்தை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு நன்றி திரு. மூனா செந்தில் அவர்களே...!! ///

    மிக்க நன்றி பழனிவேல்.

    ReplyDelete
  18. /// திண்டுக்கல் தனபாலன் said...

    பகிர்வுக்கு நன்றி நண்பரே ! ///

    மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  19. இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற உங்கள் தேசபக்தி
    நல்ல விஷயம் தான்.அனால் இங்கிலாந்துடன் ஆடினாலும்
    பாகிஸ்தான் தோற்க்கவேண்டும் என்பதைத்தான்
    புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா,பாகிஸ்தான்,
    பங்களாதேஷ் இவை மூன்றும் இணைந்த இந்தியாவை
    இருநூறு வருடகாலம் ஆண்டு நம்மை அடிமை ஆக்கி
    வைத்திருந்தவன்.பிரிடிஷ்காரன்.கோபித்து கொண்டு
    தனி குடித்தனம் போன தம்பி பாகிஸ்தான்காரன்.
    இவர்களில் யார் தோற்பது சரி?

    ReplyDelete
  20. /// kumar said...

    இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற உங்கள் தேசபக்தி
    நல்ல விஷயம் தான்.அனால் இங்கிலாந்துடன் ஆடினாலும்
    பாகிஸ்தான் தோற்க்கவேண்டும் என்பதைத்தான்
    புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா,பாகிஸ்தான்,
    பங்களாதேஷ் இவை மூன்றும் இணைந்த இந்தியாவை
    இருநூறு வருடகாலம் ஆண்டு நம்மை அடிமை ஆக்கி
    வைத்திருந்தவன்.பிரிடிஷ்காரன்.கோபித்து கொண்டு
    தனி குடித்தனம் போன தம்பி பாகிஸ்தான்காரன்.
    இவர்களில் யார் தோற்பது சரி?
    ///

    ஏங்க நான் என்ன சட்டம் படித்த வக்கீலா இல்லை வரலாற்று ஆய்வாளரா. சாதாரண சென்னை தூமைங்க. எனக்கு பார்க்கும் போது கிடைக்கும் உற்சாகமும் ஆக்ரோஷமும் தான் முக்கியமாத் தெரியும். அது முடிஞ்சதும் மறந்துடுவேன். பார்க்கும் போது கிடைக்கும் உற்சாகத்தை முடிந்தவுடன் கடாசி விடணும். இல்லைனா அதுவே பாரமாகி விடும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...