நான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தவன். சென்னை வந்த பிறகே புகழ்பெற்ற நாவல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிக்க ஆரம்பித்து வருடா வருடம் குறைந்தது 50 புத்தகங்களையாவது வாங்கி விடுவேன்.![](//1.bp.blogspot.com/--daPbqa2eog/T8Yd_tly-oI/AAAAAAAAC8Y/554VLlL381s/s400/images.jpeg)
பொதுவாக புத்தக விமர்சனம் எழுதும் பழக்கம எனக்கில்லை. நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததால் எழுதவில்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது பொன்னியின் செல்வன் நாவலும் காவல் கோட்டம் நாவலும் தான். ஏற்கனவே காவல் கோட்டத்தை படித்து முடித்து விட்டேன்.![](//3.bp.blogspot.com/-9CryCRMMEbg/T8Yd_eghseI/AAAAAAAAC8M/2EPmfXZ-lFU/s400/images1.jpeg)
20 நாட்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்தேன். LKM பப்ளிகேசனின் 5 பாகங்களும் அடங்கிய தொகுதி இது. மொத்தம் 850 பக்கங்களை கொண்டது. பொதுவாக சரித்திர நாவல்கள் கொஞ்சம் போரடிப்பது போல் எனக்கு தோன்றும். ஆனால் இதற்கு முன் படித்த பார்த்திபன் கனவு தான் போரடிக்காமல் படித்த சரித்திர நாவல்.
இந்த முறை பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்ததும் நானும் வல்லரையன் வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பப்பா என்ன வகையான நாவல் இது. கொஞ்சம் கூட போரடிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மனதோடு ஒன்றி விட்டது.![](//3.bp.blogspot.com/-L2L9m7Pp5Co/T8YeK_CXIaI/AAAAAAAAC8k/Y-We61yejzk/s400/Ponniyin-Selvan%2B%252815%2529.jpg)
எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள். வந்தியத்தேவனில் தொடங்கி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பெரிய சம்புவரையர், கந்தன்மாறன், சேந்தன்அமுதன், கருத்திருமன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், நந்தினிதேவி, குந்தவை நாச்சியார், பூங்குழலி, வானதி தேவி, மணிமேகலை மற்றும் பலப்பல கதாப்பாத்திரங்கள். அவற்றிற்கான சிறப்பான குழப்பமில்லாத பாத்திரவடிவமைப்புகள் அசத்துகின்றன.![](//3.bp.blogspot.com/-6ELVvAikW-4/T8Yd_LDaWII/AAAAAAAAC8A/LFPpvR1kxRw/s400/kalki.JPG)
அதன் கதை சுருக்கம் இது தான். தஞ்சாவூரில் சோழ அரசர் சுந்தர சோழன் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரி்ன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டி வடபகுதியில் மற்ற படைகள் வந்துவிடாதபடி அரணாக இருக்கிறார். இளையமகன் அருள்மொழிவர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) இலங்கையில் படையெடுத்து சென்றுள்ள சோழப்படைக்கு தலைமையேற்று இருக்கிறான். ஒரே மகளான குந்தவை நாச்சியார் பழையாறை அரண்மனையில் இருக்கிறார்.![](//3.bp.blogspot.com/-jiwq3SfJa6o/T8Yd-foVWCI/AAAAAAAAC70/3xgVakPLCWM/s400/scan0006.jpg)
ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்கு அந்தரங்க நண்பனும் வாணர் குல வீரனுமான வல்லரையன் வந்தியத்தேவன் மூலமாக தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு ரகசிய செய்தி அனுப்புகிறான். ஆனால் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பு ஏற்றிருக்கும் சின்னப் பழுவேட்டரையரிடம் பல பொய்களைச் சொல்லி அரசரை சந்தித்து ஒலையை கொடுக்கிறார்.
வந்தியத்தேவன் பொய் சொல்லியிருப்பது சின்ன பழுவேட்டரையருக்கு தெரிய வரவே வந்தியத்தேவனை சிறைப்பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பித்து குந்தவை நாச்சியாரை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையரும் அவரது இளம் மனைவியான நந்தினி தேவியும் சேர்ந்து அரசரின் பெரியப்பா மகன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்ட சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கிறான்.![](//2.bp.blogspot.com/-1YVxaehyH8o/T8Yd957CQoI/AAAAAAAAC7o/5UxxfYIm4NA/s400/ponni-2.jpg)
குந்தவை பழுவேட்டரையர்களுக்கு தெரியாமல் இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனிடம் இந்த செய்தியைச் சொல்லி அழைத்து வருமாறு கூறுகிறார். பல எதிர்ப்புகளை மீறி பூங்குழலி என்ற பெண்ணின் உதவியுடன் படகில் இலங்கை சென்று அருள்மொழிவர்மனை சந்தித்து விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறான். வழியில் புயலை கடந்து வருகிறார்கள்.
அதற்குள் பாண்டிய அரசினைச் சேர்ந்த நந்தினி தேவி மேலும பல பாண்டிய ஒற்றர்கள் மூலம் சோழ அரசை கவிழ்க்கவும் சோழ அரசரையும் அவரது மகன்களையும கொல்ல திட்டமிடுகிறார். நந்தினி தேவி திட்டமிட்டபடி நடந்ததா? யார் அடுத்த அரசாக பதவியேற்றார்கள்? குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை கைப்பிடித்தாரா? அரசரையை கைப்பிடிப்பேன் என்று சபதம் செய்த சாதாரண குலப்பெண் பூங்குழலி சபதத்தை நிறைவேற்றினாரா? அருள்மொழிவர்மனை திருமணம் செய்தாலும் சிங்காதனம் ஏறமாட்டேன் என்று சபதம் செய்த வானதி தேவியின் நிலை என்ன? மற்றும் பலப்பல என்ற கேள்விகளுக்கு விடை நாவலில் உள்ளது.
20 நாட்களும் சற்று போரடித்தால் உடன் சுறுசுறுப்பாக நாவலை படித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது படித்து முடித்து விட்டதால் சற்று சோகம் வந்ததென்னவோ நிஜம். நீங்களும் என்னைப் போல் நாவலைப் படித்து பரவசமடையுங்கள்.
இது நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் வந்தால் மேலும் 500 புத்தக விமர்சனங்கள் உறுதி. சற்று போரடிப்பதாக படிப்பவர்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்தப்படும்.
ஆரூர் மூனா செந்தில்
![](http://1.bp.blogspot.com/--daPbqa2eog/T8Yd_tly-oI/AAAAAAAAC8Y/554VLlL381s/s400/images.jpeg)
பொதுவாக புத்தக விமர்சனம் எழுதும் பழக்கம எனக்கில்லை. நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததால் எழுதவில்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது பொன்னியின் செல்வன் நாவலும் காவல் கோட்டம் நாவலும் தான். ஏற்கனவே காவல் கோட்டத்தை படித்து முடித்து விட்டேன்.
![](http://3.bp.blogspot.com/-9CryCRMMEbg/T8Yd_eghseI/AAAAAAAAC8M/2EPmfXZ-lFU/s400/images1.jpeg)
20 நாட்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்தேன். LKM பப்ளிகேசனின் 5 பாகங்களும் அடங்கிய தொகுதி இது. மொத்தம் 850 பக்கங்களை கொண்டது. பொதுவாக சரித்திர நாவல்கள் கொஞ்சம் போரடிப்பது போல் எனக்கு தோன்றும். ஆனால் இதற்கு முன் படித்த பார்த்திபன் கனவு தான் போரடிக்காமல் படித்த சரித்திர நாவல்.
இந்த முறை பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்ததும் நானும் வல்லரையன் வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பப்பா என்ன வகையான நாவல் இது. கொஞ்சம் கூட போரடிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மனதோடு ஒன்றி விட்டது.
![](http://3.bp.blogspot.com/-L2L9m7Pp5Co/T8YeK_CXIaI/AAAAAAAAC8k/Y-We61yejzk/s400/Ponniyin-Selvan%2B%252815%2529.jpg)
எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள். வந்தியத்தேவனில் தொடங்கி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பெரிய சம்புவரையர், கந்தன்மாறன், சேந்தன்அமுதன், கருத்திருமன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், நந்தினிதேவி, குந்தவை நாச்சியார், பூங்குழலி, வானதி தேவி, மணிமேகலை மற்றும் பலப்பல கதாப்பாத்திரங்கள். அவற்றிற்கான சிறப்பான குழப்பமில்லாத பாத்திரவடிவமைப்புகள் அசத்துகின்றன.
அதன் கதை சுருக்கம் இது தான். தஞ்சாவூரில் சோழ அரசர் சுந்தர சோழன் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரி்ன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டி வடபகுதியில் மற்ற படைகள் வந்துவிடாதபடி அரணாக இருக்கிறார். இளையமகன் அருள்மொழிவர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) இலங்கையில் படையெடுத்து சென்றுள்ள சோழப்படைக்கு தலைமையேற்று இருக்கிறான். ஒரே மகளான குந்தவை நாச்சியார் பழையாறை அரண்மனையில் இருக்கிறார்.
![](http://3.bp.blogspot.com/-jiwq3SfJa6o/T8Yd-foVWCI/AAAAAAAAC70/3xgVakPLCWM/s400/scan0006.jpg)
ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்கு அந்தரங்க நண்பனும் வாணர் குல வீரனுமான வல்லரையன் வந்தியத்தேவன் மூலமாக தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு ரகசிய செய்தி அனுப்புகிறான். ஆனால் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பு ஏற்றிருக்கும் சின்னப் பழுவேட்டரையரிடம் பல பொய்களைச் சொல்லி அரசரை சந்தித்து ஒலையை கொடுக்கிறார்.
வந்தியத்தேவன் பொய் சொல்லியிருப்பது சின்ன பழுவேட்டரையருக்கு தெரிய வரவே வந்தியத்தேவனை சிறைப்பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பித்து குந்தவை நாச்சியாரை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையரும் அவரது இளம் மனைவியான நந்தினி தேவியும் சேர்ந்து அரசரின் பெரியப்பா மகன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்ட சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கிறான்.
![](http://2.bp.blogspot.com/-1YVxaehyH8o/T8Yd957CQoI/AAAAAAAAC7o/5UxxfYIm4NA/s400/ponni-2.jpg)
குந்தவை பழுவேட்டரையர்களுக்கு தெரியாமல் இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனிடம் இந்த செய்தியைச் சொல்லி அழைத்து வருமாறு கூறுகிறார். பல எதிர்ப்புகளை மீறி பூங்குழலி என்ற பெண்ணின் உதவியுடன் படகில் இலங்கை சென்று அருள்மொழிவர்மனை சந்தித்து விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறான். வழியில் புயலை கடந்து வருகிறார்கள்.
அதற்குள் பாண்டிய அரசினைச் சேர்ந்த நந்தினி தேவி மேலும பல பாண்டிய ஒற்றர்கள் மூலம் சோழ அரசை கவிழ்க்கவும் சோழ அரசரையும் அவரது மகன்களையும கொல்ல திட்டமிடுகிறார். நந்தினி தேவி திட்டமிட்டபடி நடந்ததா? யார் அடுத்த அரசாக பதவியேற்றார்கள்? குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை கைப்பிடித்தாரா? அரசரையை கைப்பிடிப்பேன் என்று சபதம் செய்த சாதாரண குலப்பெண் பூங்குழலி சபதத்தை நிறைவேற்றினாரா? அருள்மொழிவர்மனை திருமணம் செய்தாலும் சிங்காதனம் ஏறமாட்டேன் என்று சபதம் செய்த வானதி தேவியின் நிலை என்ன? மற்றும் பலப்பல என்ற கேள்விகளுக்கு விடை நாவலில் உள்ளது.
20 நாட்களும் சற்று போரடித்தால் உடன் சுறுசுறுப்பாக நாவலை படித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது படித்து முடித்து விட்டதால் சற்று சோகம் வந்ததென்னவோ நிஜம். நீங்களும் என்னைப் போல் நாவலைப் படித்து பரவசமடையுங்கள்.
இது நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் வந்தால் மேலும் 500 புத்தக விமர்சனங்கள் உறுதி. சற்று போரடிப்பதாக படிப்பவர்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்தப்படும்.
ஆரூர் மூனா செந்தில்
850 பக்க நாவலுக்கு ஒரே பக்கத்தில் அருமையான கதை சுருக்கம் அளித்திருக்கிறீர்கள்..,
ReplyDeleteஇது உங்கள் முதல் புத்தக விமர்சன பதிவு என்றால் நம்பிக்கையில்லை.., எழுத்தில் அருமையான நேர்த்தி .., தொடருங்கள் .. :)
நாங்க எல்லாம் இந்த ஐந்து பாகத்தையும்......
ReplyDeleteஐந்தரை நாளில் சோறு தண்ணி இல்லாமல்....தூக்கம் இல்லாமல்....
படித்த....
ஆள்.....
எப்ப தெரியுமா....????
ENGG. நுழைவு தேர்வுக்கு பத்து நாள் இருக்கும்போது.....
அது கிடக்கட்டும்....
முன்பெல்லாம்....சுண்டல் வாங்கின பேப்பரை வைத்து....பதிவு தேத்துவீங்க....
இப்ப நாவலுக்கு வந்துடீன்களா,,,,,??????
Superb !!! Short and Sweet!!! Keep it up... Write your views about books which all are reading by you.
ReplyDelete-- Saran | INDIA
யோவ்! கல்கி நாவலை விமர்சனம் பண்ணற அளவுக்கு ஒர்த் ஆயிட்டியோ? பெரிய..பெரிய...எழுத்தாளர்களே ஜாக்கிரதையா விமர்சனம் பண்ணியதுய்யா?
ReplyDeleteரசிகர்கள் அதிகம் இந்த நாவலுக்கு....விமர்சனம் என்பதுக்கு பதில் நான் வாசித்த சிறந்த புத்தகம் அப்படின்னு இருக்கனும் தம்பி!
Article is too good.... "ponniyin selvan vaasippanubavam" suits better
ReplyDeleteநல்ல பதிவு, சினிமா விமர்சனத்தினை குறைத்துக் கொண்டு, புத்தக விமர்சனத்தினை எழுதுவதால் ஒரு மன நிறைவுகிடைக்கும்.
ReplyDeleteநானும் எழுத நினைத்ததுண்டு, ஆனால், முடியாமல் போனது.
வாழ்த்துக்கள். கண்டிப்பாக அதிக அதிகமான புத்தக விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கும்.........
யாஸிர்.
என்னது... பொன்னியின் செல்வன் புத்தகமா வெளியாய்டுச்சா...? இவ்வளவு சீக்கிரம் விமர்சனம் எழுதிட்டீங்களே... வாழ்த்துக்கள்.
ReplyDeleteசார் உங்க பதிவுல விமர்சனமே இல்லையே. பொன்னியின் செல்வனின் கதை சுருக்கம் தான் இருக்கு. இது விமர்சனம் பண்ண வேண்டிய புத்தகம் இல்லை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புத்தகம். மேற்கோள் கட்ட வேண்டிய புத்தகம். முயற்சிக்கு வாழ்த்துக்கள். சின்ன புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?
ReplyDeleteஎன்னது இந்திரா காந்திய கொன்னுட்டன்களா...
ReplyDeleteதமிழின் தலை சிறந்த நாவல்களுள் ஒன்று. எனவே அது குறித்த உங்கள் விமர்சனத்தை நிறைய பேர் வாசிக்கிறார்கள்.
ReplyDeleteமற்றபடி புத்தக விமர்சனத்தை விரும்பி வாசிக்கிற மக்கள் கூட்டம் மிக மிக குறைவு (நான் 20-க்கும் மேல் புத்தக விமர்சனம் போட்டவன்; நிறைய பேர் வாசிக்கா விடினும் அவ்வப்போது போட்டு வருகிறேன் )
/// வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete850 பக்க நாவலுக்கு ஒரே பக்கத்தில் அருமையான கதை சுருக்கம் அளித்திருக்கிறீர்கள்..,
இது உங்கள் முதல் புத்தக விமர்சன பதிவு என்றால் நம்பிக்கையில்லை.., எழுத்தில் அருமையான நேர்த்தி .., தொடருங்கள் .. :) ///
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே
NAAI-NAKKS said...
ReplyDeleteநாங்க எல்லாம் இந்த ஐந்து பாகத்தையும்......
ஐந்தரை நாளில் சோறு தண்ணி இல்லாமல்....தூக்கம் இல்லாமல்....
படித்த....
ஆள்.....
எப்ப தெரியுமா....????
ENGG. நுழைவு தேர்வுக்கு பத்து நாள் இருக்கும்போது.....
அது கிடக்கட்டும்....
முன்பெல்லாம்....சுண்டல் வாங்கின பேப்பரை வைத்து....பதிவு தேத்துவீங்க....
இப்ப நாவலுக்கு வந்துடீன்களா,,,,,??????
இது என்ன வார்த்தைக்கு வார்த்தை 5 புள்ளி வச்சிக்கிட்டு நீங்க பேசாம சஸ்பென்ஸ் நாவல் எழுதலாம் தலைவரே
/// சரவணன் said...
ReplyDeleteSuperb !!! Short and Sweet!!! Keep it up... Write your views about books which all are reading by you.
-- Saran | INDIA ///
மிக்க நன்றி சரண்
/// வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteயோவ்! கல்கி நாவலை விமர்சனம் பண்ணற அளவுக்கு ஒர்த் ஆயிட்டியோ? பெரிய..பெரிய...எழுத்தாளர்களே ஜாக்கிரதையா விமர்சனம் பண்ணியதுய்யா?
ரசிகர்கள் அதிகம் இந்த நாவலுக்கு....விமர்சனம் என்பதுக்கு பதில் நான் வாசித்த சிறந்த புத்தகம் அப்படின்னு இருக்கனும் தம்பி! ///
ண்ணா சரிங்ணா, அடுத்தடுத்த புத்தக விமர்சனத்துல மாத்திடுறேங்கண்ணா.
/// மௌனகுரு said...
ReplyDeleteArticle is too good.... "ponniyin selvan vaasippanubavam" suits better ///
நன்றி மெளனகுரு
/// முஹம்மது யாஸிர் அரபாத் said...
ReplyDeleteநல்ல பதிவு, சினிமா விமர்சனத்தினை குறைத்துக் கொண்டு, புத்தக விமர்சனத்தினை எழுதுவதால் ஒரு மன நிறைவுகிடைக்கும்.
நானும் எழுத நினைத்ததுண்டு, ஆனால், முடியாமல் போனது.
வாழ்த்துக்கள். கண்டிப்பாக அதிக அதிகமான புத்தக விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கும்.........
யாஸிர். ///
நன்றி யாசீர்
/// Niranjanaa Bala said...
ReplyDeleteஎன்னது... பொன்னியின் செல்வன் புத்தகமா வெளியாய்டுச்சா...? இவ்வளவு சீக்கிரம் விமர்சனம் எழுதிட்டீங்களே... வாழ்த்துக்கள். ///
புத்தகத்தை நான் தாமதமாக படித்ததற்கு இவ்வளவு கலாய்ப்பா?
/// Raj Kumar said...
ReplyDeleteசார் உங்க பதிவுல விமர்சனமே இல்லையே. பொன்னியின் செல்வனின் கதை சுருக்கம் தான் இருக்கு. இது விமர்சனம் பண்ண வேண்டிய புத்தகம் இல்லை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புத்தகம். மேற்கோள் கட்ட வேண்டிய புத்தகம். முயற்சிக்கு வாழ்த்துக்கள். சின்ன புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே? ///
பொன்னியின் செல்வனை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் ஆளில்லைங்கண்ணா. அடுத்த விமர்சனத்திலிருந்து சரி பண்ணிடுறேன் ராஜ்குமார்.
/// VELAN said...
ReplyDeleteஎன்னது இந்திரா காந்திய கொன்னுட்டன்களா... ///
என்னங்க இதுக்கே இவ்வளவு ஜெர்க்கா? அப்படின்னா உங்களுக்கு காந்திய சுட்டது கூட தெரியாதா?
/// மோகன் குமார் said...
ReplyDeleteதமிழின் தலை சிறந்த நாவல்களுள் ஒன்று. எனவே அது குறித்த உங்கள் விமர்சனத்தை நிறைய பேர் வாசிக்கிறார்கள்.
மற்றபடி புத்தக விமர்சனத்தை விரும்பி வாசிக்கிற மக்கள் கூட்டம் மிக மிக குறைவு (நான் 20-க்கும் மேல் புத்தக விமர்சனம் போட்டவன்; நிறைய பேர் வாசிக்கா விடினும் அவ்வப்போது போட்டு வருகிறேன் ) ///
அண்ணா நன்றிங்கண்ணா
செந்தில் ஸார்! முதல் தடவையா ஒரு தளத்துக்கு வர்றப்ப கலாய்க்கற மாதிரி கமெண்ட் சொல்லிட்டமே, ஸாரி கேப்போம்னு வந்தேன். நீங்க ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டதுக்கு ஒரு சல்யூட்! இனி நீங்க என் ஃப்ரெண்ட்! தொடர்ந்து வர்றேன்! நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு. அப்படியே ஒரு நடை சாண்டில்யன் சரித்திரநாவல்கள் பக்கம் போய்வாருங்கள் தம்பி.
ReplyDeleteஅடிச்சு ஆடுங்க தல!சரித்திர நாவல்களின் வர்ணனைகளுக்கு இன்னுமொரு எழுத்தாளர் சாண்டில்யன்.ஒப்பீட்டளவில் பொன்னியின் செல்வனை மிஞ்சுவதற்கு எதுவுமில்லை.
ReplyDeleteரொம்ப அருமையா விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்... எனக்கும் கல்கியின் சரித்திரநாவல்கள்மீது தீராத காதல் .... பார்த்திபன் கனவு மற்றும் பொன்னியின் செல்வன் படித்து விட்டேன் இப்போது சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கிறேன்...... எனக்கு பொன்னியின் செல்வனை விட சிவகாமியின் சபதம் தான் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது.......
ReplyDeleteபொன்னியில் செல்வனுக்கு முன் பின் என்று தமிழ் சரித்திர நாவல்களை கல்கி பார்க்க வைத்திருக்கிறார். பாரம்பரிய புராணக்கதை மரபுகளை சந்தடியின்றி அகற்றி தமிழ் மண் மேன்மை மத நல்லிணக்கம் பக்தி இலக்கியம் போன்றவற்றை கொண்டு நிறுத்துகிறார். பாஷ்யம் அய்யங்கார் சரித்திர நாவல்களில் ராஜேஷ் குமார் என்பதை கவனத்தில் கொள்க
ReplyDelete