சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, May 30, 2012

பொன்னியின் செல்வன் - புத்தக விமர்சனம்

நான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தவன். சென்னை வந்த பிறகே புகழ்பெற்ற நாவல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிக்க ஆரம்பித்து வருடா வருடம் குறைந்தது 50 புத்தகங்களையாவது வாங்கி விடுவேன்.

பொதுவாக புத்தக விமர்சனம் எழுதும் பழக்கம எனக்கில்லை. நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததால் எழுதவில்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது பொன்னியின் செல்வன் நாவலும் காவல் கோட்டம் நாவலும் தான். ஏற்கனவே காவல் கோட்டத்தை படித்து முடித்து விட்டேன்.

20 நாட்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்தேன். LKM பப்ளிகேசனின் 5 பாகங்களும் அடங்கிய தொகுதி இது. மொத்தம் 850 பக்கங்களை கொண்டது. பொதுவாக சரித்திர நாவல்கள் கொஞ்சம் போரடிப்பது போல் எனக்கு தோன்றும். ஆனால் இதற்கு முன் படித்த பார்த்திபன் கனவு தான் போரடிக்காமல் படித்த சரித்திர நாவல்.

இந்த முறை பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்ததும் நானும் வல்லரையன் வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பப்பா என்ன வகையான நாவல் இது. கொஞ்சம் கூட போரடிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மனதோடு ஒன்றி விட்டது.

எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள். வந்தியத்தேவனில் தொடங்கி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பெரிய சம்புவரையர், கந்தன்மாறன், சேந்தன்அமுதன், கருத்திருமன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், நந்தினிதேவி, குந்தவை நாச்சியார், பூங்குழலி, வானதி தேவி, மணிமேகலை மற்றும் பலப்பல கதாப்பாத்திரங்கள். அவற்றிற்கான சிறப்பான குழப்பமில்லாத பாத்திரவடிவமைப்புகள் அசத்துகின்றன.

அதன் கதை சுருக்கம் இது தான். தஞ்சாவூரில் சோழ அரசர் சுந்தர சோழன் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரி்ன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டி வடபகுதியில் மற்ற படைகள் வந்துவிடாதபடி அரணாக இருக்கிறார். இளையமகன் அருள்மொழிவர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) இலங்கையில் படையெடுத்து சென்றுள்ள சோழப்படைக்கு தலைமையேற்று இருக்கிறான். ஒரே மகளான குந்தவை நாச்சியார் பழையாறை அரண்மனையில் இருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்கு அந்தரங்க நண்பனும் வாணர் குல வீரனுமான வல்லரையன் வந்தியத்தேவன் மூலமாக தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு ரகசிய செய்தி அனுப்புகிறான். ஆனால் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பு ஏற்றிருக்கும் சின்னப் பழுவேட்டரையரிடம் பல பொய்களைச் சொல்லி அரசரை சந்தித்து ஒலையை கொடுக்கிறார்.

வந்தியத்தேவன் பொய் சொல்லியிருப்பது சின்ன பழுவேட்டரையருக்கு தெரிய வரவே வந்தியத்தேவனை சிறைப்பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பித்து குந்தவை நாச்சியாரை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையரும் அவரது இளம் மனைவியான நந்தினி தேவியும் சேர்ந்து அரசரின் பெரியப்பா மகன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்ட சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கிறான்.

குந்தவை பழுவேட்டரையர்களுக்கு தெரியாமல் இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனிடம் இந்த செய்தியைச் சொல்லி அழைத்து வருமாறு கூறுகிறார். பல எதிர்ப்புகளை மீறி பூங்குழலி என்ற பெண்ணின் உதவியுடன் படகில் இலங்கை சென்று அருள்மொழிவர்மனை சந்தித்து விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறான். வழியில் புயலை கடந்து வருகிறார்கள்.

அதற்குள் பாண்டிய அரசினைச் சேர்ந்த நந்தினி தேவி மேலும பல பாண்டிய ஒற்றர்கள் மூலம் சோழ அரசை கவிழ்க்கவும் சோழ அரசரையும் அவரது மகன்களையும கொல்ல திட்டமிடுகிறார். நந்தினி தேவி திட்டமிட்டபடி நடந்ததா? யார் அடுத்த அரசாக பதவியேற்றார்கள்? குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை கைப்பிடித்தாரா? அரசரையை கைப்பிடிப்பேன் என்று சபதம் செய்த சாதாரண குலப்பெண் பூங்குழலி சபதத்தை நிறைவேற்றினாரா? அருள்மொழிவர்மனை திருமணம் செய்தாலும் சிங்காதனம் ஏறமாட்டேன் என்று சபதம் செய்த வானதி தேவியின் நிலை என்ன? மற்றும் பலப்பல என்ற கேள்விகளுக்கு விடை நாவலில் உள்ளது.

20 நாட்களும் சற்று போரடித்தால் உடன் சுறுசுறுப்பாக நாவலை படித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது படித்து முடித்து விட்டதால் சற்று சோகம் வந்ததென்னவோ நிஜம். நீங்களும் என்னைப் போல் நாவலைப் படித்து பரவசமடையுங்கள்.

இது நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் வந்தால் மேலும் 500 புத்தக விமர்சனங்கள் உறுதி. சற்று போரடிப்பதாக படிப்பவர்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்தப்படும்.

ஆரூர் மூனா செந்தில்


Friday, May 25, 2012

த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகள்


மிக சமீபத்தில் எனது நண்பரின் லேப்டாப்பில் இந்த புகைப்படத்தை காணநேர்ந்தது. அடப்படுபாவிகளா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?



இந்த லட்சணத்துல த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு ன்னு பஞ்ச் டயலாக் வேற. எல்லாப் பெருசுகளுக்கும் குறைந்தது அறுபத்தஞ்சு வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்த வயசுல இதெல்லாம் தேவையா?

எல்லாம் கலிகாலம்டா சாமி.

ஒரு சந்தேகம், ஒருவேளை த்ரிஷாவுக்கு வயசானப்புறம் அமலா பால் க்கு புதிய ரசிகர் மன்றம் ஒப்பன் பண்ணுவானுங்களோ.


ஆரூர் மூனா செந்தில்


Thursday, May 24, 2012

மக்கள் நாயகன் ராமராஜன்

ராமராஜன். மிகச்சில வருடங்களே தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த உச்சத்தை வைத்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர். என்னுடைய 10லிருந்து 13 வயதுக்குள் அந்த காலக்கட்டம் அடங்கும். அப்பொழுது எல்லாம் திருவாரூரைப் போன்ற சிறு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறப்பது என்பது ரசிகர்களிடையே மிகப்பிரபலமான விஷயம். எங்க ஊரு பாட்டுக்காரன் வந்தவுடனேயே எங்கள் தெரு அண்ணன்கள் எல்லாம் ராமராஜனுக்கு ரசிகர் மன்றம் திறக்க முடிவெடுத்தார்கள். எனக்கும் ராமராஜனைப் பிடிக்கும் என்பதால் அந்த வயதிலேயே மன்றத்தில் சேர்ந்து விட்டேன். பேனர் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்ததால் எனக்கு துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள்.

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர், எப்படியிருக்கு என் பதவியின் பெயர். அதன் பிறகு வந்த ஒவ்வொரு படங்களும் எங்களுக்கு திருவிழா தான். படம் வெளியாவதற்கு முன் தினம் தியேட்டரில் பேனர் கட்டுவது ஊரில் உள்ள முக்கிய சுவர்களில் ரசிகர் மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலையெல்லாம் எனக்கு தான். அவரது பிறந்த நாள் வந்தால் அன்றைய தினத்தின் இரவில் டி.வி, டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து ராமராஜனின் படங்களை வரிசையாக திரையிடுவது போன்ற கேளிக்கைகள் எல்லாம் வழக்கமாக நடக்கும். மனசுக்கேத்த மகாராசா படம் வந்த போது தியேட்டரை அதகளம் செய்து விட்டோம்.

கரகாட்டகாரன் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு ராமராஜன் வந்தார். அதற்கென லாட்டரி கடைக்கு சென்று பழைய லாட்டரிகளை பண்டல் பண்டலாக வாங்கி வந்து அவற்றை பொறுமையாக சுக்கு நூறாக கிழித்து மேடைக்கு மேல் ஐந்து பெட்டிகள் அமைத்து அவற்றில் நிரப்பி பெட்டியின் அடிப்பகுதியில் சிறு திறப்பு ஏற்படுத்தி அவற்றை நூலுடன் இணைத்து நூலை இழுத்தால் பெட்டியிலிருந்து பேப்பர்கள் அவரின் மீது விழும் படி செய்தோம். விழா முடிந்தவுடன் அது போல் செய்தது யாரென விசாரித்து எங்கள் மன்றத்தினர் அனைவரையும் அழைத்து பாராட்டி விட்டு சென்றார். அப்பொழுது எடுத்த போட்டோ வெகு நாட்களுக்கு மன்றம் இருந்த தியாகுவின் வீட்டு வெளிவராந்தாவில் இருந்து பிறகு நண்பன் சாம்பாரங்கனின் வீட்டு பரணில் கிடந்து பிறகு எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ராமராஜனின் அனைத்து படங்களுக்கும் முதல் நாள் திரையரங்குக்கு சென்று பார்த்து இருக்கிறேன். அதற்காக வீட்டில் எங்கப்பாவிடம் பெல்டால் அடியும் வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அவர் மீதான ஆர்வம் குறையவேயில்லை. அவரின் எல்லா படங்களின் பாட்டு புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அத்தனை பாடல் வரிகளும் பாடியவர் பெயர் விவரங்களும் பாடலின் ராக விவரங்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. காலம் மாறத் தொடங்கியது.

ராமராஜனுக்கு படங்கள் தோல்வியடையத் தொடங்கின. புதிய நடிகர்கள் அப்பொழுது சினிமாவில் நுழையத் தொடங்கினர். மன்றம் சோர்வடைய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல மன்றமே கலைக்கப்பட்டது. பிறகு அதே ரசிகர் மன்ற குழு வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தனர். நமக்கு சாதாரண மன்றங்கள் எல்லாம் வேண்டாம், மாவட்டத் தலைமை அல்லது நகரத் தலைமை ரசிகர் மன்றம் தான் வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்பொழுது பிரசாந்துக்கு எங்கள் பகுதியில் ரசிகர் மன்றமே இல்லாததால் நாம் ஆரம்பித்தால் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் கிடைக்கும் என்று முடிவு செய்து மன்றம் துவக்கினர். அது போலவே மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்திற்கான அனுமதியும் பிரசாந்திடம் இருந்து கிடைத்தது. எனக்கு பிரசாந்த் பிடிக்காததால் நான் வெளி வந்து ஏற்கனவே எங்கள் தெருவில் இருந்த கலைவேந்தன் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைந்து விட்டேன்.

அத்துடன் ராமராஜன் காலம் முடிவடைந்தாலும் எனக்கு வெகு நாட்களுக்கு அவரது படங்கள் மற்றும் பாடல்கள் நினைவில் இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல எல்லாம் மறந்து விட்டது. ஆனாலும் இப்போதும் எனது மிகச்சிறந்த இளையராஜா பாடல்கள் தொகுப்பில் ராமராஜனின் பாடல்களே அதிகம் இருக்கும். இப்பொழுதும் அந்த காலக்கட்டத்தைய ராமராஜன் படங்கள் டிவியில் போட்டால் படம் முடியும் வரை வேறு சேனல்கள் மாற்றாமல் பார்ப்பது என் வழக்கம்.

அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராமராஜனிடம் உதவியாளராக இருந்த எங்கள் தூரத்து சொந்த பெரியப்பா ராதாகிருஷ்ணனின் வீட்டு சுபகாரியத்திற்கு ராமராஜன் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்யாருமே சென்று அவரிடம் நலம் விசாரிக்காமல் இருந்தது மட்டுமல்லாமல் கண்டுகொள்ளாமலும் இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, நான் மட்டும் அவரிடம் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தேன். ஒரு மனிதனின் வீழ்ச்சி இந்த அளவுக்கா இருக்க வேண்டும்.

இன்றும் என் மனைவி காலம் மாறி விட்டது அஜித், விஜய், தனுஷ், சிம்பு ஆகியோர் வந்து விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் ராமராஜனின் ரசிகர் நிலையை மாற்றவேயில்லையே, நீங்கள் இன்னும் ராமராஜன் ரசிகர் என்று சொன்னால் உங்களை எல்லோரும் ஊர்நாட்டான் என்று கூறுவார்கள் என்று கூறி கிண்டலடிப்பாள். ஆனால் அந்த பால்ய வயதிலிருந்து பதின் வயதுக்குட்பட்ட காலங்களில் மனதை கொள்ளையடித்த ராமராஜனின் ரசிப்புத் தன்மையை என்னால் மாற்ற முடியவில்லையே


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நேற்றிரவு என் பெரியப்பாவுடன் குடும்ப விழாவுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக திரு. ராமராஜன் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். கொடுத்து விட்டு வந்து படுத்தபிறகும் அவரின் நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. அதற்காக தான் இந்த மீள் பதிவு.

Wednesday, May 23, 2012

சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 3மணிக்கு ஒரு நபரை அயனாவரம் அருகில் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலகம் சென்ற பின் தான் அவர் தாமதமாக மதிய உணவு சாப்பிட சென்றிருக்கிறார் என்றும் 4 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் தெரிந்தது.

நேரத்தை கடத்தலாம் என்னடா செய்யலாம் என்று யோசித்து சரி ஐசிஎப் கிரவுண்ட் சென்று உட்கார்ந்தால் கேலரியின் இருக்கைகள் கொதிக்கிறது. முடியவில்லை. எனவே எழுந்து வந்து வண்டியை எடுத்து அயனாவரம் பக்கம் விட்டேன். கோபிகிருஷ்ணாவில் இஷ்டம் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. சரி நேரத்தை கடத்த சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியை திரையரங்கத்திற்கு விட்டேன்.

திரையரங்க வளாகத்தில் கோபிகிருஷ்ணா, ராதா, ருக்மணி என மூன்று திரையரங்கங்கள் உள்ளன. இஷ்டம் படம் அடுத்த வாரம் தான் ரிலீஸ் என்று போட்டிருந்தது. கோபிகிருஷ்ணாவில் கண்டதும் காணாததும் என்ற படமும், ராதாவில் கலகலப்பும், ருக்மணியில் சிங்காரியின் கதை என்ற படமும் ஒடியது.

கலகலப்பு ஏற்கனவே பார்த்தாகி விட்டது. கண்டதும் காணாததும் பார்க்கக் கூடிய படமே இல்லை என முத்துராமலிங்கம் அவர்கள் ஓஹோ புரொடக்ஷன்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். நமக்கும் ஒரு மணிநேரத்தில் திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் சிங்காரியின் கதை படத்துக்கு டிக்கெட் எடுத்தேன். கில்மா படம் தியேட்டரில் பார்க்க வேண்டியது அவசியமானதில்லை. நமக்குத்தான் கம்ப்யூட்டரும் இணையமும் இருக்கிறதே, இருந்தாலும் ஒரு மணிநேரத்தை ஒட்ட வேண்டுமே என்பதற்காக தான் உள்ளே சென்றேன். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.

நான் அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டிருந்த 1997, 98 காலக்கட்டங்களில் கி்ல்மா படம் பார்க்க வேண்டுமென்றால் பெரம்பூர், ஐசிஎப், அயனாவரம் பகுதியில் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே தியேட்டர் அயனாவரம் ராதா தான். பிட்டுக்கு பயங்கர பேமஸ். நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒரு முறை சினிமாவுக்கு வந்து விடுவேன். பலமுறை நான் மொட்டை மாடியில் 10 மணிக்கெல்லாம் படுத்து தூங்கி விடுவேன். சில நாட்கள் தூங்கிய பின் திடீரென்று வந்து நண்பர்கள் எழுப்புவார்கள்.

ராதாவுக்கு படம் பார்க்கலாம் வா என்று அழைப்பார்கள். கீழே சென்று சட்டையை எடுக்க முடியாது. எனவே மொட்டை மாடியில் யார் சட்டை காய்ந்தாலும் எடுத்து மாட்டிக் கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன். ஒரு முறை மொட்டை மாடியில் துணிகளே காயவில்லை. பரவயில்லை என்று வெறும் லுங்கி மற்றும் உள்பனியனுடன் சென்ற காலமும் உண்டு. படிப்பு முடிந்த பிறகு நான் அந்த ஏரியாவை விட்டு சென்று விட்டபடியால் ராதா திரையங்கையே மறந்து விட்டேன். பிளாஷ்பேக் முடிந்து விட்டது.

டிக்கெட் எடுத்த பிறகு திரையரங்கினுள் சென்று அமர்ந்தால் என்னுடன் சேர்த்து படம் பார்த்தவர்கள் பத்து பேர் மட்டுமே. அனைத்தும் 50 வயதை கடந்த பெரிசுகள் தான். டீன்ஏஜ் பசங்கள் எல்லாம் இன்டர்நெட், செல் என ஏகமாய் வளர்ந்து விட்டதால் இந்த பக்கமே வருவதில்லை போல.

அப்பொழுது எல்லாம் இன்டர்வெல் முடிந்த பின் வரும் பிட்டு பயங்கர பேமஸ். இப்பொழுது என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை என்று ஆர்வத்துடனே உட்கார்ந்தேன். படம் துவங்கியது.

படத்தின் ஒன்லைன் என்ன? அம்மாவைத் தொடர்ந்து பொண்ணும் விபச்சார தொழிலுக்கு வரக்கூடாது என்பதை பல கூடாதுக்கு பிறகு முடிக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன? ஒரு விபச்சார விடுதியில் பலபெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் கீதா. அவருக்கு வயதாகி விட்டதால் விடுதியின் ஒனர் கீதாவின் மகளை இத்தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். கீதா தடுக்கவே அவரை இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கொலை குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார். அம்மா இல்லாததால் பொண்ணை தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் அம்மா சிறையில் இருந்து தப்பி வந்து விடுதியின் ஒனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போட்டுத்தள்ளி விட்டு பொண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைக்கிறார். உஸ் அவ்வளவு தாங்க கதை.

படத்தில் கில்மா காட்சிகளே இல்லை. இதுக்கு பேசாம SJ சூர்யாவின் நியு அல்லது அஆ பார்த்திருந்தாலே சற்று கூடுதலான கில்மா காட்சிகள் இருந்திருக்கும். ஒருமணிநேரம் நேரத்தை கடத்தியதை தவிர படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்வதற்கு நமக்கு ஞாபக சக்தியில்லை. இயக்குனருக்கு ஆலோசனைகளை சொல்லுமளவிற்கு அருகதையும் இல்லை. எனவே விமர்சனத்தை இத்துடன் முடிக்கிறேன்.

நான் உங்களுக்கு சொல்ல வரும் நீதி என்ன? இதுக்கு பேசாம இன்டர்நெட் சென்டருக்கே போய்விடுங்கள். பத்துரூபாயுடன் செலவு முடிந்து விடும்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, May 22, 2012

இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.



அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '

அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்

'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

இது எப்படி இருக்கு

சூழ்நிலைக்கேற்ப மெயிலில் வந்த நகைச்சுவை இது.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, May 19, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

டிகிரி முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்கு தேவை.

உணவு, தங்குமிடம் இலவசம்

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

----------------------

Bus Wiring and Electrical Work அல்லது BUS A/C Mechanism தெரிந்தவர்கள் DEEE, DECE மற்றும் ITI Electrician, A/C Mechanic முடித்தவர்கள் Venda Engineering and Trading Company, Singapore க்கு வேலைக்குத் தேவை

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

----------------------

வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை.

சம்பளம் : 400 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

வளைகுடா நாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 வகுப்பு முடித்தவர்கள் உதவியாளர் வேலைக்குத் தேவை.

உணவு, தங்குமிடம் இலவசம்

சம்பளம் : ரூ.35,000/- (முப்பத்தி ஐயாயிரம் ரூபாய்)

---------------------

மேலும் தமிழ்நாடு அரசு தேர்வானையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் குரூப் 4 பணிக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

கல்வி்த்தகுதி : பத்தாம் வகுப்பு

---------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்



Friday, May 18, 2012

உலகின் மிக வினோதமான சட்டங்கள் - தற்பொழுதும் நடைமுறையில் இருப்பவை

கலிபூர்னியா, பசிபிக் குரோவ்

பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்

கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்

நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.

ஃப்ளோரிடா, சரசோடா

பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்

இல்லினாய், சிக்காகோ

தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்

மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா

தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா

எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்

ஓஹையோ மாநிலம், அமெரிக்கா

நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்

கனடா டோரண்டோ மாநிலம்

ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்

க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்

வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்

அரிசோனா மாநிலம், அமெரிக்கா

ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்

அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா

ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்

மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா

குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்

அவினான், ஃப்ரான்ஸ்

சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்

ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்

விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா

துப்புவது சட்டப்படிகுற்றம்

இணையத்தில் படித்தது

ஆரூர் மூனா செந்தில்







LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...