சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 17, 2013

அக்கா வந்திருந்தாள்


வருடத்திற்கு ஒரு முறை
ஊருக்கு வந்து போகும்
மூத்த அக்கா
சிறுமியாய் மாறுவது
எங்கள் வீட்டில் தான்


காலையில் நீராகாரம்
குடித்து பெருங்கதை பேசி
வயலுக்கு செல்லும் அப்பாவுக்கு
பழைய சோறு கட்டிக் கொடுத்து
தான் பிரசவம் பார்த்த
எருமைகளை குளிப்பாட்டி

அண்ணனிடம் நுங்கு
பறித்து தரச் சொல்லி
ஆசையாய் தின்று மகிழும்
மதியம் சுடுசோறுடன்
மீன் குழம்பை குழைத்து
அள்ளித் தின்னும்

தான் நட்டு வைத்த
செம்பருத்தி செடியுடனே
மனம் விட்டு கதை பேசும்
மாலையிலே பம்புசெட்டுக்கு
தோழிகளுடன் குளிக்கச் செல்லும்

போகும் வழியில் குறி பார்த்து
கல்லெறிந்து கொடுக்காப்புளி
வீழ்த்தி ஆசையுடன் தின்று செல்லும்

அளவாக நீர் எடுத்து
பதமாக நெல் அவித்து
தங்கையுடன் காய வைத்து
அரிசியாகி கட்டி வைக்கும்
அந்திமாலைப் பொழுதுகள்
அக்காவிற்கு சொர்க்கமாய்

செல்லும் நாளன்று
கன்னுக்குட்டியுடன் முட்டி
விளையாடி உறவாடி
யாருமில்லா தருணத்தில்
மெல்லிய கண்ணீருடன்
சுற்றும் பார்க்கும்

விடுமுறை முடிந்து
புறநகர் சென்னைக்கு
வந்த பின்னால்
அத்தானுக்கு சோறுகட்டி
வேலைக்கு அனுப்பி வைத்து
நாள் முழுதும் தனிமையிலே
அடுத்த விடுமுறைக்கு
காத்திருக்கும் அக்காவே

பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பார்த்து பார்த்து மணமுடித்த
அப்பாவை குறை சொல்ல
நானும் நினைக்கிறேன்

என் வீடு கிராமம் என்று
எனை கட்ட மறுக்கும்
அத்தை பெண்ணை நினைத்து
நானும் தவிக்கின்றேன்

சொர்க்கம் இருக்குமிடம்
கிராமத்திலா நகரத்திலா
புரியாமலே சிரிக்கின்றேன்

ஆரூர் மூனா செந்தில்

27 comments:

  1. "என் வீடு கிராமம் என்று
    எனை கட்ட மறுக்கும்
    அத்தை பெண்ணை நினைத்து
    நானும் தவிக்கின்றேன்
    "

    Same Feeling... :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணபூபதி

      Delete
  2. அருமையான கவிதை! ஒவ்வொரு கிராமத்து அக்காக்களின் மனதை அருமையாக படம் பிடித்தீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  3. இந்த வாரம் விகடன்ல வந்ததா ? நல்லாயிருக்கு செந்தில். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அடங்கொப்புரானே, நான் இன்னைக்கு கரண்ட் இல்லாததால் மண்டைய குடைந்து எழுதியது. அசால்ட்டா சொல்டீங்களே.

      அப்புறம் இன்னொரு விஷயம் நான் விகடன் படிப்பதில்லை.

      Delete
  4. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  5. தம்பி . . .

    கவித . . . கவித . . .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே

      Delete
  6. Replies
    1. நன்றி செந்தில்

      Delete
  7. கலக்கீட்டீங்க...ரொம்ப பிடிச்சிருந்தது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா

      Delete
  8. இப்படியும் நிறைய எழுதுங்க...

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன்

      Delete
  9. இக்கரைக்கு அக்கரை பச்சை!
    அருமையாக எழுதுயுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன்

      Delete
  10. Arumai....Arumai...Miga Arumaiyaana varigal...Boss...
    Unarnthu Rasithaen....

    ReplyDelete
  11. Kalakkal..very touching lines. first of all I didnt expect a poem from you and it is surprisingly great. I suggest you to send this to some magazine.
    - SP

    ReplyDelete
  12. //சொர்க்கம் இருக்குமிடம்
    கிராமத்திலா நகரத்திலா
    புரியாமலே சிரிக்கின்றேன்//

    ------
    கீழே தொட்டுக்க நம்ம ஊறுகா கொஞ்சம்!

    சொர்க்கம் இருக்குமிடம்
    கிராமத்திலா நகரத்திலா
    என்று இன்றும்
    புரியாமலே சிந்திக்கிறேன்

    நரகமும் சொர்க்கமாகும்
    அமைத்துக் கொண்ட
    அன்பு மனைவி
    என்றும் அருகிலிருந்தால்!

    ReplyDelete
  13. Nice.ennavo pannuthu.realy touching

    ReplyDelete
  14. சொர்க்கம் இருப்பது கிராமங்களில் தான் சந்தேகம் வேண்டாம்.
    அக்காவை பற்றி எழுதிவிட்டு கிடைச்ச gapல அத்தை மகளுக்கு ரூட்டு விட்டீங்களே!! சூப்பர்

    ReplyDelete
  15. கலக்கல் கவிதைதான். செந்தில்.கி ராமப் பெண்களும் நகர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அதன் இன்னொரு பக்கம் உணராமல்.

    ReplyDelete
  16. என்னடா இவர் இப்டி கரடு முரடா இருக்காரேன்னு நினச்சேன்.....

    காட்டருவியில்
    காகித பூக்கள்-எப்போதும்
    மிதப்பதுஇல்லை....
    என்பதை நிருபித்து விட்டீர்கள்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...