சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, July 5, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

படத்தின் டிரைலரை பார்க்கும் போதே சற்று வயித்தை கலக்கியது. ஓவர் டோஸாகி பாக்கிறவன்லாம் தெறிச்சி ஓடப்போறான்னு நினைச்சேன். இதுல சூர்யா வேற வாங்கலேன்னு மிரட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.


மற்ற எல்லாத் திரையரங்கங்களிலும் முன்பதிவு ஆரம்பித்து இருக்க நேற்று மாலை 6 மணிவரை ஏஜிஎஸ்ஸில் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. படம் போடலையோன்னு நினைச்சேன். 7 மணி வாக்கில தான் முன்பதிவு துவங்கியது. முதல் காட்சி 6 மணிக்கு என்றதும் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டேன். இருந்தாலும் சற்று பயமாகத் தான் இருந்தது.

காலையில் அரக்கப்பரக்க எழுந்து சென்றால் ஏஜிஎஸ்ஸில் உள்ள 5 திரையரங்கங்களிலும் காலை 6 மணிக்காட்சி இருந்ததால் 5.30 மணிக்கெல்லாம் தியேட்டரில் திருவிழாக் கூட்டம் தான்.


படத்திற்கு போவதற்கு முன் நான் என் மனதை ஒரு விஷயத்தில் நிறுத்திக் கொண்டேன். படம் பக்கா மசாலா தான். அதனால் லாஜிக், இப்படியெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சி கிளாஸ் ரசிகன் போல் படத்தை பார்த்து ரசித்து கைதட்டி விசிலடித்து என்ஜாய் செய்ய வேண்டும் என முடிவு செய்து தான் இருக்கையில் அமர்ந்தேன்.

படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார்.


அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.

சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.


இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)

சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.

அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.

அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.

படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.

முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது.

கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.

முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.

வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.

படம் பார்த்த விமர்சகர்கள், சில பதிவர்கள் படத்தினைப் பற்றி ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் அதனைப் பற்றி சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்ற சி கிளாஸ் ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்கள், அது தான் இந்த படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம்.

லாஜிக் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்கான படம் இது இல்லை. மற்றபடி மசாலா சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்து

ஆரூர் மூனா செந்தில்


23 comments:

  1. எதார்த்தமான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி

      Delete
  2. ஹரி எப்போதும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான இயக்குனர்,அதே நினைப்போடு தான் நாமும படம் பாக்கணும்,இல்லன்னா குத்தும் குடையும்.,
    நீங்க தப்பிச்சுட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோகுல்

      Delete
  3. எப்படியோ விறுவிறுப்பான படம்... பார்க்க வேண்டும்... பாடல்களைப் பற்றி எதுவும் சொல்லாத போதே புரிந்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  4. எனக்கு இப்ப எல்லாம் மசாலா படங்கள் பிடிப்பதில்லை விமர்சனம் சூப்பர் அண்ணே

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி

      Delete
  5. அண்ணா சூப்பர்ணா முதல் விமர்சனம் நீங்கதான் அருமை ஹரி திரைக்கதைக்கு ரொம்ப மெனக்கெட்டார்னு கேள்விப்பட்டேன்
    அதே மாதிரி படத்தை பாக்க நீங்க ரொம்ப மெனக்கெட்ருப்பிங்க போல. நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யபிரபு

      Delete
  6. மச்சி.. சுடச் சுட ரிசல்ட்டுல உன்னை அடிச்சிக்க முடியாது...

    கலக்குங்க...

    ஆக நம்மைப்போன்ற சி க்ளாஸ் ரசிகர்கள் நிச்சயம் போய் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மச்சி, நன்றி

      Delete
  7. அண்ணே மேல நம்பிக்கை வைச்சு தைரியமா படம் பார்க்கலாம் ம்ம்ம்......

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராபர்ட்

      Delete
  8. மச்சி அப்ப நமக்கான படம்ன்னு சொல்லு...

    ReplyDelete
  9. Dai not only movies da politics pathium brief explain pannu da un blog la engaluku useful irukkum

    ReplyDelete
  10. கலகலப்பான படம்! அப்போ பார்க்கலாம்! விமர்சனத்துக்கு நன்றி!

    ReplyDelete
  11. சத்தம் காதை பொளக்குதுனு சொன்னாங்களே!

    ReplyDelete
  12. எனக்கும் படம் பிடிச்சு இருந்தது, உங்களுக்கும் எனக்கும் கிட்ட தட்ட ஒரே டேஸ்ட்.

    ReplyDelete
  13. சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார்.\\ROLLING ON THE FLOOR AND LAUGHING.

    ReplyDelete
  14. விமர்சனம் படித்தால் ஹரி avm போல என தோணுகிறது!
    முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை போன்ற நல்ல படங்கள் வர ஆரம்பித்து தமிழ் படங்கள் உருப்படும் சாத்தியம் தெரியும்போது முரட்டுக் காளை / சகல கலா வல்லவன் படங்களை எடுத்து நல்ல படங்களை அழித்துவிட்டனர் avm நிறுவனத்தார். இப்போது தான் pizza , நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணம், சூது கவ்வும் போன்ற நல்ல படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது.இப்போது இது போன்ற படம்! அப்போது avm செய்த வேலையே இப்போது ஹரி செய்கிறார்! Let us see who wins this time!

    ReplyDelete
  15. சும்மா நச்சுன்னு நறுக்குன்னு இருக்கு பாஸ் உங்க விமர்சனம்....

    ReplyDelete
  16. பாஸ் விமர்சனம் நன்று ! இன்றுதான் வலை ஆரம்பித்தேன் !புதியவன் வாழ்த்துங்கள் --


    ந .சுவாமிநாதன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...